Pages

Thursday, September 26, 2013

எல்லா அன்பும் எல்லா காதலும் என்னுள்ளே

ஆஹா...
நானும் அப்பாதுரை sir  போல் ஒரு கவிதையை
தமிழாக்கம் செய்துவிட்டேன். +A Durai

என்னது ?  காதில் வந்து யாரோ சொல்வது ?

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14



அது கிடக்கட்டும்.

சும்மா இரு, எனக்குத் தெரியும்.அப்பாதுரை சார் மாதிரி எழுதணும் அப்படின்ன்ன 
இன்னும் ஆறு ஜன்மம் ஆகும். 
இப்ப நீ இதைக் கேளு.


விட்னி ஹுஸ்டன் பாடுவதை முதலில் கேளுங்கள்.





Courtesy: WHITENEY HOUSTON LYRICS.

Sunday, September 22, 2013

கடவுள் போட்டுக்கொடுத்த காப்பி.,,,,சுப்பு தாத்தாவுக்கு .

என்னது ?  கடவுள் காப்பி போட்டு கொடுத்தாரா ?

ஆமாம். ஆமாம். 

இத பாருடா ...என்ன காபி தாத்தா ? நரசூஸ் காபி யா லியோ வா..?

தெரியாது..

பீபரி யா பிளான்டேஷன் ஏ யா ?

தெரியாது. 

பில்டர் காபியா இன்ஸ்டன்ட் காபியா ?

தெரியாது.

சிக்கிரி போட்டா போடாமயா 

தெரியாது. 

சக்கரை உண்டா இல்ல டயபெடிக் நீ அப்படின்னு தெரிஞ்சு கட் பண்ணிட்டாரா  ?

தெரியாது. 

அப்ப என்ன தான் தாத்தா சொல்றே உனக்குத் தெரியும்னு ?? 
எதுனாச்சும் பகல்கனவா?

தோ ...இங்கன போய் click நீயே பார்த்துக்க... (  காபி வரும்போது ஸ்க்ரோல் down செய்யணும் )
இந்த வயசுலே நான் ஒண்ணும் பொய் சொல்லவேணாம். 


போறேன். பொய் மட்டும் சொல்லி இருந்தே...பிச்சுபிடுவேன். பிச்சு. 

போயி, எனக்கும் இன்னொரு கப் வாங்கி வா. 


சுப்பு தாத்தாவுக்கு . மட்டும் 

கடவுள் போட்டுக்கொடுத்த காப்பி.


Sunday, September 15, 2013

ஒரு பதிவர் விழா

பதிவர் மா நாடு பற்றி எல்லோரும் எழுதி எது சரி எது சரியில்ல அப்படின்னு சொல்லிக்கிட்டு சரி, அடுத்த தடவை ஈரோட்டிலே நடக்கும்போது எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம் அப்படின்னு ஏற்பாடு பண்ணிய பிரபல பதிவர்கள் எல்லாமே சொல்லிட்டு இருக்கும்போது,

ஏன்யா பெரிசு .. உனக்கேதுனாச்சும் ஐடியா இருக்குதா அப்படின்னு +Chellappa Yagyaswamy +Balasubramaniam G.M  +Durai A  +kg gouthaman கேட்கராக. (நான் கேட்கவே இல்லயே அப்படின்னு துரை சார் சொல்றாரு.)


நாம ஒரு விழா நடத்தினா என்ன செய்யறது அப்படின்னு நினைசுக்கினே தூங்கிட்டேனா..  ஒரு விதமா

இந்த மாதிரி வரிசையா வந்துகினே கீது.


விழா நடப்பது பைவ் ஸ்டார் ஹோட்டல் தாஜ் கொரமாண்டல் மாதிரி.இருக்குது.

வர்றவங்க எல்லாம் முன்னமே சொல்லிப்புடனும்.  அப்பத்தான் வூட்டுக்கு கரெக்ட் நேரத்துக்கு இன்னோவா அனுப்பிச்சு பதிவர்களை கூட்டிக்கினு வர முடியும்  அப்படின்னு சொல்லிபோட்டாங்க போல. ஒவ்வொரு காரா போர்டிகோ விலே வந்து நிக்குது.

உள்ளே வருகையிலே ஒவ்வொருவருக்கும் ஒரு ரோஜா கொத்து தராங்க..


அதிலே வாங்கிகிட்டு உள்ளே போகும்போது அடுத்த கேட் லே , ஒரு கேள்வி கேட்கிறாங்க.

கேள்வி எதுவேணுமானாலும் இருக்கலாம்.

ஒரு சாம்பிள்:

அந்த ரோஜா கொத்திலே எத்தனை ரோஜா இருக்கிறது ?

உங்க வலைப்பதிவிலே இதுவரைக்கும் எத்தனை பேரு பின்னூட்டம் போட்டு இருக்காங்க ?
முள்ளும் மலரும் படத்திலே முதல் பாட்டு யாரு பாடறாங்க ?
போன பதிவர் மா நாட்டிலே மேடை ஏறி பேசினவங்கள் லே அதிக நேரம் பேசினது யாரு ?

சரியா சொல்றவங்க அடுத்த ரிஜிஸ்ட்ரேஷன் மேடைக்கு நேரே போவாங்க.. அங்கே உங்களுக்கு ஆரஞ்சு ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், எது வேணுமானாலும் எடுத்து குடிங்க..உங்கள் சாய்ஸ்.




உங்களுக்கு எதுவேணுமானலும் எடுத்துக்கிட்டு  விழா மேடையில்?இரண்டாவது வரிசைலே போய் உட்காருவாங்க.



எல்லா கேள்விக்கும் கரெக்ட் பதில் சொல்றவங்க விழா மேடை முதல் ரோ விலே இருப்பாக.

தப்பா சொல்றவங்க எல்லாரும் அடுத்த ஹாலுக்கு ஒரு மெடல் டிடெக்டார் வழியே போறாங்க..   ஏங்க நான் இது வழியா போகனும் அப்படின்னு ஒருவர் கேட்கறாரு. அவரை சுரேகா சார் கட் பண்ணி நீ என்னோட வலைப்பதிவு படிச்சப்பறம் வாங்க அப்படின்னு அன்போட சொல்றாரு.

அவரு சரியாத்தாங்க சொல்றாரு. புறம் ஒழிஞ்சாத்தான் அகம் சிறக்க முடியும்.
அப்படின்னு ரஞ்சனி அம்மா காதுக்கு பக்கத்திலே வந்து சொல்றாங்க.

ரமணி , பித்தன், சீனா எல்லாரும் ஆமா, ஆமா, அப்படின்னு ஜில், ஜில், அப்படின்னு ...

ஒத்துகிட்டு அது வழியா போறவங்களுக்கு, அங்கே

அவங்களுக்கு அங்கே டாடா டீ நிறுவனத்தாரின் துளசி, ஜிஞ்சர், போட்ட சூடான டீ  ஒரு கப்பிலே தர்றாங்க.    டீ  வாணாம் அப்படின்னு சொல்றவங்களுக்கு வசந்த பவன் காரங்க ஒரு டிகிரி காபி தர்ராங்கா.

சாப்பிட்டுட்டு, நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க.

{சார், நான் புதிய பதிவர் இந்த வருஷம் தான், சொல்லப்போனா போன மாதம் தான் முதல் பதிவே போட்டு இருக்கிறேன் என்று ஒரு ஜீன்ஸ் சொல்ல,  . அப்ப இவருக்கு காம்ப்ளான் கொடுப்பா என்று உத்தரவு மைக்கில் வந்தது. }


நானும் ஒரு சேர்லே உட்கார்ந்து டீயை குடிப்போம், அதுக்கு முன்னாடி, பேன் எங்கே அப்படின்னு பார்த்து உட்காரணும் அப்படின்னு யோசிச்சு,பாத்தா ஒரு பேன் fan  கூட இல்ல. என்னடா இது. அப்படின்னு மூளை காஞ்சு போனப்பறம் தான் ஞாபகம் வருது. அட ஏ சி. ஹால் லே இது. இங்கே எதுக்கு fan.

 தலைக்கு பின்னாடி கொஞ்சம் தட்டி விட்டுப் பின், மேலே பார்த்தா, அங்க ஒத்தரு ஆகாசத்துலேந்து வந்துக்கினு இருக்காரு.

வந்தவர் சும்மா சிவனேன்னு உட்காராம, நான் கொஞ்சம் கூட எதிர்பாராத நிலையிலே, "என்னைச் சிலுவையில் அறைந்தால் உயிர்க்கத்தேரியாது. விட்டு விடு என அவர்  அலற ஆரம்பிக்க, நான் அப்ப தான் கவனிச்சேன். மனுஷன்  சாக்ஷாத் பரமேச்வரன் சவாரி செய்த வாகனத்தில் வந்திருக்கிறார்.

விடமாட்டேன் என்று வெளிநாட்டில் இருந்து வந்த அவரது ரசிகை ஒரு தொல்காப்பிய நூலே பின்னூட்டமாக  எழுதி இல்லை, பேசிக்கொண்டு இருக்கிறார்.

அவர் என்னதான் பேசுகிறார் என்று பார்த்தேன். இல்லை. கேட்டேன்.

மஞ்சு பாஷிணி  எனக்கு குவைத் லே கிடைக்கிற  டீ தாங்க புடிக்கும் அப்படின்னு சொல்லிடராக.  அட, இதுக்கா இவ்வளவு பேசுறீங்க.. நீ ஒண்ணும் கவலைப்படாதே மஞ்சு, நான் மா நாடு நடத்தும்போது கம்ப ராமாயணத்தைப் பத்தி விரிவா பேசப்போறேன். அப்ப எல்லாருக்கும் பத்து நிமிசத்துக்கு ஒருகுவைத்  டீ தருவேன். என்கிறார் ஷைலஜா மேடம். 

  ஆஹா, இவர் மட்டும் கம்பனுக்காகவே ஒரு விழா எடுப்பதாக இருந்தால், அந்த விழாவுக்கு வரும் அத்தனை பேருக்கும் அறுசுவை உண்டி அந்த நடராசன் கையால் செய்து தரலாமே என நானும் அவருக்கு செல்லினேன்.

டீயை ஜூசை  சாப்பிட்டுட்டு எல்லோரும் அவங்களும் அடுத்த அடுத்த சீட்டிலே போய் நேரடியா உட்காராம,

தனக்கு ஏற்கனவே தெரியாத ஒரு ஐந்து பேரோட ஒரு ஐந்து நிமிஷம் பேசி அவங்க விவரம் எல்லாம் புரிஞ்சுக்கணும்.அப்படின்னு ஒலி பெருக்கிலே ஒரு அனௌன்ஸ் மென்ட் வருது.



 இந்த அஞ்சு பேரும் ஒரு குழுவா அறிமுகம் நேரம் வரும்போது மேடைக்கு போகணும்.

விழா துவங்கி வரவேற்புரை முடிஞ்சப்பறம் அஞ்சு அஞ்சு பேரா போகும்போது, ஒவ்வொருவரும் தன்னோட அறிமுகம் பண்ணாம, இன்னொருவருடைய அறிமுகம் செய்யணும். அவங்களோட சிறப்பு என்ன அப்படின்னு சொல்லணும். ஒரு நிமிஷம் தான் நேரம் தராங்கா.  ( அது சரிதானா என்று அறிமுகம் செய்யப்பட்டவர் சொல்லிவிட்டு, தான் அடுத்த இன்னொருவர் அறிமுகம் செய்யவேண்டும் )


விழாவிலே நீராரும் கடலுடுத்த பாடறாங்க.

மைக் அட்ஜஸ்ட் செய்யற வரைக்கும் பொறுமையா இருங்க.
குழந்தைங்க பாடுறாக இல்லையா..



அடுத்தபடியா, +Rajeswari Jaghamani அம்மா வந்து விநாயகன் பெருமை சொல்லும் அகவல் பாடுறாங்க.
விழா துவங்குது.

முன்னமே சொன்னது போல அஞ்சஞ்சு பேரா மேடைக்கு வந்து இன்னொருவருடைய சிறப்புகளை, பெருமைகளை ஒரு இரண்டு நிமிஷத்திலே எடுத்து சொல்றாக.

திண்டுகல் தனபாலன் பத்தி சுப்பு தாத்தா சொல்றாரு.
நீ உன்னை அறிந்தால் என்று சொல்லும்போது நம்ம  எம்.ஜி. ஆர். பாட்டு. எடுத்து விட்டேனா..அதுவே back ground லே கேட்குது. 



இது போல அறிமுக நிகழ்ச்சி அட்டகாசமா போவுது.

சில பேரு தன்னோட சாதனைகளை சொல்லணும் அப்படின்னு எந்திருச்சு  சொல்றாக. ஒவ்வொருவருக்கும் பத்து நிமிஷம் டைம் தறாங்க.














சுப்பு தாத்தாவுக்கு போர் அடிக்குது. ஒரு நாலு பேரை கூட்டிக்கிட்டு பக்கத்து ஹோட்டலுக்கு போயி, இன்னொரு காபி குடிச்சுட்டு வரலாம் அப்படின்னு போறாரு.

கூட வரும்   வேங்கட நாகராஜ் சார் எல்லாரையும் போடோ எடுக்கறாரு.

மஞ்சு பாடப்போறாங்க அப்படின்னு மைக்கிலே சொல்றாக.


{எங்கள் ப்ளாக்...லே பாடியிருக்காங்க.. அங்கேயிருந்து மைக் கனெக்ட் பண்ணியாச்சு.)


நேரம் பதினிரண்டு மணி ஆகப்போகிறதே...இன்னும் விழா நாயகர்  காணோமே என்று பார்த்தால், அவர் கரெக்டா நேரத்துக்கு வர்றாரு.

புத்தக ரிலீஸ் செய்யறாரு.




அதுக்குப் பின்ன, வலைப் பதிவாளர்களின் அன்புக்கு பாத்திரமான திருமதி துளசி கோபால் அவர்கள் கைங்கர்யமாக , ஒரு லஞ்சு ஏற்பாடு பண்றாங்க.
நாங்க மலேசியா பயணத்திலே இருக்கோம், இருந்தாலும், எங்க பெஸ்ட் பிரண்டு வல்லி அம்மா அரேஞ்சு செய்வாங்க அப்படின்னு போன் போட்டு பால கணேஷ் சார்கிட்டே சொல்றாங்க.

பால கணேஷ் மின்னல் போல துள்ளித் துள்ளி வேலை பார்க்கிறாரு.


ஆரூர் மூனா செந்தில் கையை மடிச்சுட்டு கிட்டு வராரு.

 என்ன விஷயம் அண்ணே அப்படின்னு kG கௌதமன்  கேட்கும்போ, அடுத்த ரூமிலே சுரேகா அண்ணன் ரத்த அன்பளிப்பு முகாம் ஒண்ணு ஏற்பாடு பண்ணி இருக்காரு இல்ல. அதுக்கு நான் ரத்தம் கொடுத்துட்டு வாரேன். என்கிறார்.

அப்ப நாங்க எல்லாரும் தர்றோம் அப்படின்னு ஒரு நூறு பேரூ அங்க கூட்டமா நுழையறாங்க.

லஞ்ச்சு முடிஞ்சப்பின்னே விழாவுக்கு இரண்டு சிறப்பு பேச்சாளர்கள் வர்றாங்க.

Solomon Pappiah




suki sivam Time Management



விழா முடியல்ல.

+Sasi Kala
மேடம் சசிகலா அவங்க தான் வெளியிட்ட புத்தகத்தை எல்லோருக்கும் ஒரு நினைவுப்பரிசாக தர்றாங்க..

அக்கா மகளே ரோசாப்பூ அப்படின்னு ஒரு கவிதை படிக்கராக. அப்படியே வரிக்கு வரி கர கோஷம். கை தட்டு.



நல்லாவே  இருக்கு அப்படின்னு புலவர் இராமானுசம் ஐயாவே சொல்றாரு. 

ஐயா உங்க மரபு கவிதையை படிச்சு பேச எனக்கும் ஒரு நாள் வேணுமுங்க.அத்தனை கருத்து அதுலே இருக்குல்ல என்கிறார்.
+கவிஞா் கி. பாரதிதாசன்

வாசல் கேட்டையே பார்த்துக்கொண்டு ஒருவர் இருந்தாற்போல் இருந்தது. அவரிடம் போய் கேட்டேன்.  உங்கள் பதிவின் பெயர் எனக்கு மறந்து போய் விட்டது. நீங்கள் தானே அந்த கம்பெனி லா எல்லாம் பற்றி கூட்டங்களிலே பேசுகிறீர்கள் என்றேன்.

ஆம்.ஆம். உங்களுக்கும் கம்பெனி லா தெரியுமா ? என்று கேட்க,
என்ன இது சரியாக மாட்டிக்கொண்டு விட்டோமே, அதெல்லாம் மறந்து போய், ஒரு பதினைந்து வருடம் ஆயிற்றே என்று நினைத்துக்கொண்டு, 
சார், எனக்கு என் மதர்  இன் லா ஒருவரைத் தான் தெரியும்.அது கிடக்கட்டும்.  நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.  என்றேன்.

நான் அறம் பொருள் இன்பம் மூன்றும் கண்டுவிட்டேன். இப்போ.....என்று இழுத்தார்.  

ஆஹா..இவர் நம்ம மோஹன் குமார் சார் அல்லவா என்று அதிசயித்தேன்.

அப்பைக்கினு பார்த்து இடி இடிக்குது, மின்னலோ மின்னல், மழையோ கொட்டு கொட்டு ன்னு கொட்டுது.  எங்க்கெந்தோ வந்த சுனாமி வெள்ளம் அப்படியே பதிவர்கள் இருந்த மா நாடு நடக்கும் இடம் எல்லாம் தண்ணீர் வெள்ளம். 

கரெண்ட் கட் ஆயிடறது. ஒரு பத்து செகண்டுக்கு எல்லாம் இருட்டு. .

அமைதி...அமைதி..அமைதி. அமைதி. அமைதி. அமைதி. அமைதி. அமைதி. 

  திடீர் அப்படின்னு ஒரு ஒளி வெள்ளம் ஆகாசத்துலே...   என்னன்னு பார்த்தா...

ஒரு சர்ப்ரைஸா,சூப்பர் ஸ்டார்  ரஜினி சார் மகள் சௌந்தர்யா வர்றாங்க.

 தமிழ் பதிவர்கள் எல்லோருக்கும் தனி ஷோ ஒண்ணூ கோச்சடையான் படத்துக்கு ஏற்பாடு பண்ணப்போறோம் என்று சொல்றாங்க.
கை தட்டு சத்தத்திலே ஹாலே அதிருது.

இப்போதைக்கு இந்த படத்தோட டிரைலர் பாருங்க. அப்படின்னு சொல்லிபோடராக.



  ஹாலே
சும்மா அதிருதுல்ல.

எல்லோரும் தேசீய கீதம் பாடராக.

எல்லோரும் கிளம்ப பார்க்கறாங்க. அப்ப மேடை லே வெளுப்பு புகை புகையா வருது. எல்லாருமே பயந்து போயிட்டாக.  எங்கனாச்சும் fire ஆயிடுச்சோ ?

அப்ப ஒரு சௌண்ட் மட்டும் வரது.

கோவை ஆவி வர்றாரு.  மேடைலேந்து ஒரு அனௌன்ஸ் பண்றாரு.

காரு, பைக் லே வராதவங்களுக்காக, நான் வேன் ஒன்னு ஏற்பாடு பண்ணி இருக்கேன். அதுலே போவலாம்.அப்படின்னு சொல்றாரு.  நான் இப்ப வலைச்சரத்திலே உலா வந்திட்டு இருக்கேன். எல்லோரும் அங்க வாங்க என அன்போடு அழைக்கிறார்.

சுப்பு தாத்தா அப்ப திடீர்னு கண்ணை முழிச்சு பார்க்கறாரு.

அடே கனவா இது ?

ஒரு பதிவர் விழா 

Monday, September 2, 2013

பிச்சை எடுத்தானாம் பெருமாள்

எப்ப நான் கோவிலுக்குச் சென்றாலும், குறிப்பாக விசேட நாட்களிலே  ஒரு காட்சி.

சிவனை வலம் வரும் வழியிலே நின்று இருப்பார் யாராவது ஒரு பெண்மணி அல்லது முதியவர்.  நமது கவனத்தை அவர் பக்கம் திருப்புவதில் அவர் குரல் என்றைக்குமே துணை.

பெண்மணி ஆகப்பட்டவர் தனது புடவையின் தலைப்பை முன் நிறுத்தி , சன்ன குரலில் முந்தானையை   ஒரு பாத்திரம் போல நம் முன் விரித்து சொல்லுவார்:

என் பெண்ணுக்கு  பிச்சை எடுத்து திருமணம் செய்கிறேன். மாங்கல்ய தாரணத்துக்கு, தாலிக்கு பிச்சை தாருங்கள்.

  ஒரு இரண்டு மாதங்களுக்கு முன் நின்று கொண்டு இருந்த பெண்மணி அணிந்திருந்த நகைகள் பார்த்தால் ஏதோ தங்க மாளிகை விளம்பரம் போல கூட தோன்றியது.  ஆஹா, என்ன பக்தி, என்ன பக்தி, இப்பேர்பட்டபணக்கார  பக்தர்கள், பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் ஆனால், பிச்சை எடுத்து மாங்கல்யம் வாங்குகிறேன் என்று சபதம் இட்டு இருக்கிறார்களே என்று வியக்கும் படி இருந்தது. .

என்னைப்போல சில கிழவர்கள் , மிடில் ஏஜ் இன்னும் தாண்டாதவரும் கூட   தனது மேல் துண்டை விரித்து திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு இருக்கிறேன். பிச்சை எடுத்து  உன் சன்னதிக்கு வருகிறேன் என்று சூளுரைத்து இருக்கிறேன்.
என்று சொல்வதில் நம்மை நம்ப வைப்பதில் நிபுணராக இருக்கிறார்கள்.

அவர்கள் நீட்டி இருக்கும் புடவைத் தலைப்பிலோ அல்லது துண்டிலோ ஏற்கனவே ஒரு சில பத்து ரூபாய் நோட்டுக்கள், சில ஐந்து ரூபாய், ஒரு ரூபாய் நாணயங்கள் இருந்து,  உன் பர்ஸ் எப்போது திறக்கப்போகிறது என்று நம்மிடத்தில் கேட்பது போல் இருக்கும்.

கோவிந்தா, நாராயணா, வெங்கடேசா, திருப்பதி மலை வாசா என்று சேவித்து வரும்போது இப்படி ஒருவர் அல்லது ஒரு பெண்மணி கண்ணில் படும்போது, அவருக்கு நம்மால் இயன்றதை செய் என்று அந்த திருப்பதி பெருமாளே கட்டளை இட்டு இருக்கிறார் என்று நமக்கும் தோன்றுவது இயற்கையே.

உனக்கு ஒரு டெஸ்ட் வச்சுருக்கார் பெருமாள். பதில் சொல்லாம பத்து ரூபாய் மினிமமா போட்டு விடு என்று மனசுக்குள்ளேந்து ஏதோ ஒண்ணூ சொல்லும்.

அது என்று எதை நினைக்கிறோமோ   அதன் மேலே தான் அவ்வளவு நம்பிக்கை வைச்சு  பிச்சை கேட்பவர்களும் துணிந்து கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

 இவர்கள் உண்மையிலேயே மகளுக்கு திருமணம் நிச்சயித்து தாலி வாங்கப்பொன் வாங்கத்தான் பிச்சை எடுக்கிறார்களா ? நமது பத்து ரூபாயில் தான் அவர்கள் பையனின் உபநயனம் நடக்கப்போகிறதா, அல்லது அவர்கள் திருப்பதி பயணம் துவங்கியதா ? என்று நாம் எப்பவுமே கவனித்தது கிடையாது.

செய்த தர்மத்தை தொடர்ந்து கண்காணிப்பது கூடாது. என்று எப்பவோ எழுதப்பட்டு இருக்கும் வாக்கியம்.

கொடுத்ததை கொடுத்தேன் என்று சொல்லாதே.  மறந்து போ. என்றும் நீதி உரைப்பதும் உண்மையே.

ஆயினும், இது போன்ற ஆனால், தனக்காக இல்லாமல், பொது தர்ம கார்யங்களை நடத்துகிறோம் என்று வசூலிக்கும் நபர்கள் எத்தனை பேர் வந்த தொகையை எப்படி செலவு செய்தார்கள் என்று நாம் கவனிப்பது இல்லை.

குறிப்பாக, ஆன்மீக உலகில், அந்த யாகம் செய்கிறோம், இந்த ஹோமம் செய்கிறோம், லோக க்ஷேமத்தின் பொருட்டு செய்கிறோம், ஆயிரம்  பேருக்கு அமாவாசை அன்னிக்கு அன்ன தானம் செய்கிறோம், அந்தகூகிள் லேயே கண்டு  பிடிக்கமுடியாத ஒரு ஊர் பெயர் சொல்லி, அந்த இடத்தில் இருக்கும் ஒரு  பள்ளிக்கு ஒரு கட்டிடம் கட்டுகிறோம்.,அங்கு இருக்கும்  ஏழை குழந்தைகளுக்கு எள்ளுருண்டை வாங்கித் தருகிறோம், எள்ளுருண்டை வேண்டாம் அப்படின்னு சொன்னா லாப் டாப் வாங்கித் தருகிறோம் என்று  பலர் பலவிதமாகச் சொல்லும்போதெல்லாம் எனக்குத் தோன்றும்:

அடடா.. என்ன தர்மாத்மாக்கள் இத்தனை பேர் சடன்னா நம்ம நாட்டில் தோன்றி விட்டார்கள் ?

 எல்லாரையுமே குற்றம் சொல்வதற்கில்லை. ஆனால் எல்லா நிதி  திரட்டுபவர்களும் புறங்கையில் ஒட்டிய தேனைத் தான் நக்குகிரார்களா?
இல்லை, அத்தனையுமே அல்வா செய்து அமுக்கு விடுகிறார்களா என்றெல்லாம் ஐயம் இருக்கத்தான் செய்கிறது.

பல பொது நிறுவனங்கள் என்.ஜி.ஓ. என்றுபெயர் போட்டுக்கொண்டு  நிதி திரட்டுபவை.  ்இந்த நிருவனங்களின் வருடாந்திர கணக்கில் பார்த்தால் நிர்வாக செலவுகள், நிறுவனச் செலவுகள் என்று ஒரு கணிசமான விழுக்காடு தனை அந்த நிதியில் இருந்து விழுங்கி விடுகின்றன.

நான் எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரைச் சொல்லவும்  விரும்பவில்லை.  ஆயினும், எந்த ஒரு பொது என்.ஜி.ஓ. நிறுவனத்துக்கும்நிதி தருவதற்கு முன்பாக, அந்த நிறுவனம் அரசாங்கத்தாரால் அனுமதிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட நிறுவனமா, அவர்களது கணக்குகளுக்கு தணிக்கை முறை இருக்கிறதா, அந்த நிறுவனத்தில் டைரக்டர் , மேலாளர்களின் ஊதியம் என்ன ? அவர்களின் வருடாந்திர டிராவலிங் அலவன்ஸ் எத்தனை, எண்டர்டைன்மெண்ட் அலவன்ஸ் எத்தனை ? அவர்கள் என்னென்ன நிருவனங்கள் இந்த என்.ஜி.ஓ.உடன் தொடர்பு இருக்கிறது, நீங்கள் கொடுக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டா, அதற்கான சான்றிதழ் தருவார்களா என்றெல்லாம் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த பதிவு அதற்காக நான் போடவில்லை.என்னைப்போல வெங்காயம் கூட வாங்க முடியாதவனுக்கு வெங்கடேச பெருமாளை பார்க்க புறப்பட முடியுமா ,சொந்தக்காசில் சாத்தியமே இல்லை.

 காஸ் வாங்கவே காசு இல்லாதவன் கூட்டத்தில் என்னைப்போன்ற பல பென்சனர்கள் கூடிய விரைவில் இருக்கபோகிறோம் என்பது மட்டும் தெரிகிறது. தர்மத்துக்கும் நமக்கும் அவ்வளவு தொடர்பு இல்லை.

அது ஒரு பக்கம்.

அண்மையில் துண்டை நீட்டிய ஒருவரிடம் நான் விசாரித்தேன். எனக்கு வேண்டாத வேலை தான்.  இருந்தாலும் வேறு என்னதான் வேலை என்று நினைத்து  அவரிடம் கேட்டேன்.

பிச்சை எடுத்துத்தான் பெருமாளைப் பார்க்க போகவேண்டுமா ?

 ( மனசுக்குள்ளே நான் நினைத்துகொண்டதெல்லாம் . : எங்குமே அந்த பெருமாள் பிரசன்னமாக இருக்கிறார்.  என்று தானே எல்லா வேதமும் சொல்கிறது. மனசுக்குள்ளே பெருமாளே என்று ஆத்மார்த்தமாக பிரார்த்திக்கொண்டால் போதாதா ?)

அவர் என்னை முறைத்துப் பார்த்தார்.  அவர் பார்வையில் எனக்கு பல அர்த்தங்கள் தொனித்தன.

1.  யோவ் கசமாலம். உன்னால் முடியும்னா எதுனாச்சும் போடு. இல்லைன்னா உன் வழியை பாத்துகினு போவயா ...

2. நான் என்ன செய்யணும் அப்படின்னு உன்னைக் கேட்டுண்டு தான் செய்யணுமா ?

3. என் டயத்தை வேஸ்ட் பண்ணாதே.  உனக்கு பதில் சொல்ற நேரத்துலே கஸ்டமர் பத்து பேர் அதுக்குள்ளே காணாம போயிடுவாங்க...

இதெல்லாமே அவர் சொல்லவில்லை.  மாறாக,

பெருமாளே பிச்சைக் காரர் தானே.  அந்த பிச்சையை பார்க்க இந்த பிச்சை போறார்.  ,அதுலே தப்பு என்ன இருக்கு ? எங்க இருக்கு ?  என்றார்.

எனக்கு திடுக்கிட்டது.

என்ன பெருமாள் பிச்சை காரரா ? என்றேன்.

 ஆமாம்.என்ன  சந்தேகம்.இல்லைன்னா ஏன் அவ்வளவு பெரிய உண்டியல் ?

அப்ப, இவங்க கிட்ட வாங்கி, அந்த உண்டியல் லே  போடப்போறீக... என்றேன்.

அப்படின்னு இல்லாட்டியும் அந்த பெருமாள் பிச்சை எடுக்கத்தான் செஞ்சார்.

என்ன அது ?

வாமனாவதாரத்துலே பலிட்டே பிச்சை கேட்டார்.  கொடுக்க முடியல்லே அப்படின்னு தெரிஞ்சுண்டு தலை மேல காலை வெச்சு க்ளோஸ் பண்ணிட்டார். 

அப்பறம்....

அது மட்டுமா...   பிராமணன் மாதிரி வேசத்தை போட்டுகிண்டு, கர்ணன் முன்னாடி போய், நீ செஞ்ச புண்ணியத்தை எல்லாம் கொடு அப்படின்னு அவனோட காது வளையத்தை பிச்சை கேட்டார்.. இல்லையா...

அது... அப்படின்னு ...இழுத்தேன்....

என்ன அது, இது, எது ?   பாண்டவர்களுக்காக, எதுன்னாச்சும் அஞ்சு கிராமமாவது கொடு அப்படின்னு துர்யொதனாதிகளிட்டேயே பிச்சை கேட்டாராமே ? 

என்னை பேச விடமாட்டார் போலத் தெரிந்தது.

மனுஷ்யனாப் புறந்தவன் எதுனாச்சும் ஒரு டயத்திலே பிச்சை எடுக்கத்தான் செய்யறான்.   பல தடவைகள் தெரியாம  பிச்சை எடுக்கிறான். சில தடவை தெரிஞ்சு பிச்சை எடுக்கிறான். 

வீட்டுக்காரிக்கு ிடி ரன்ஸ்பர் வேணும், பிரமோஷன் வேணும் அப்படின்னு ஏகப்பட்ட பேரு அலையறார்களே அதெல்லாம் பிச்சை இல்லையா...? 

அப்ப உங்க இந்த பிச்சை ஜஸ்டிபைட் அப்படின்னு சொல்றீக இல்லையா..

நாட் ஒன்லி தட்.  . யூ ஆர் பீயிங் பெனெபிட்டட் (not only that..U R being benefited.)

  எனக்கு பிச்சை போடரதுனாலே உங்களுக்குத் தான் புண்யம் போய் சேருகிறது. எனக்கு லாபம்  ஒண்ணுமில்ல. 

உண்மையிலே நீங்க தான் கருமம் செய்யறீங்க. அந்த பகவத் கைங்க்கர்யத்துலே கார்யத்துலே நான் ஒரு கருவி அவ்வளவு தான் ....

என்று திடீர் என்று ஒரு ப்ரும்மாஸ்திரத்தை வீசினார்.  

நான் அப்ப வர்றேன் என்று நழுவினேன்.

அடுத்த மாசம் .  அதே நபர்.  அதே துண்டு.  ஆனால் கோவில் வேற .இப்ப மைலாபூர்  பக்கம்.

காசிக்கு போறதா இருக்கேன். பிச்சை எடுத்துண்டு உன்னை தரிசிக்க வர்றேன் அப்படின்னு காசி விஸ்வநாதர் கிட்டே வேண்டிண்டு இருக்கேன்... என்று உடஞ்சு போன டேப் ரெகார்ட் மாதிரி சொல்லிக்கொண்டு இருந்தார். 

இந்த தடவை நான் அந்தப்பக்கம் போகவில்லை.அவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

 நம்ம தான் காசிக்கு போக முடியவில்லை. விருப்பப்படுபவர்களை  காசி விஸ்வநாதர் தனியா கூப்பிடும்போது நம்ம அதுலே நடுவிலே நிக்கறது சரியா படல. 

ஒன்ஸ் பிட்டன் ட்வைஸ் ஷை.

ஆனாலும் சிதம்பரத்திடம் சொல்லணும்.

சர்வீஸ் டாக்ஸ் அதுவும் TDS லே சார்ஜ் பண்ணறதுக்கு இன்னொரு சோர்ஸ் பாக்கி இருக்கிறது


Wednesday, August 28, 2013

இன்று கண்ணன் பிறந்த நாள் . கோகுலாஷ்டமி.

 
Posted by Picasa

இன்று கண்ணன் பிறந்த நாள் .  கோகுலாஷ்டமி.


                     
Vasudeva sutham devam,
Kamsa Chanoora Mardhanam,
Devaki Paramanandam,
Krishnam Vande Jagat Gurum. 1

Salutations to the teacher of the world, Krishna,
Who is the God who is the son of Vasudeva,
Who killed Kamsa and Chanoora,
And who gave immense joy to Devaki.

Athasee pushpa sangasam,
Hara noopura Shobitham,
Rathna kankana keyuram,
Krishnam Vande Jagat Gurum. 2

Salutations to the teacher of the world, Krishna,
Who decorates himself with flowers of Athasee.
Who shines in garlands and anklets that he wears.
And who has a bangle made of jewels in his right hand.

Kutilalaka samyuktham,
Poorna chandra nibhananam,
Vilasath kundala dharam,
Krishnam Vande Jagat Gurum. 3

Salutations to the teacher of the world, Krishna,
Who is blessed with black curly hair,
Who is very similar to the full moon,
And who shines in his ear drops.

Mandhara gandha samyuktham,
Charuhasam chathurbhujam,
Barhi pinjava choodangam,
Krishnam Vande Jagat Gurum. 4

Salutations to the teacher of the world, Krishna.
Who has the sweet scent of mandara flowers,
Who has pretty smile and four arms,
And who decorates is hair with peacock feathers.

Uthfulla padma pathraksham,
Neela jeemutha sannibham,
Yadavaanaam siro rathnam,
Krishnam Vande Jagat Gurum. 5

Salutations to the teacher of the world, Krishna,
Who has eyes resembling the fully open lotus flowers,
Who has the blue colour of rich clouds,
And who is the chief gem of the clan of Yadavas.

Rukmani keli samyuktham,
Peethambara shobitham,
Avaptha thulasi gandham,
Krishnam Vande Jagat Gurum. 6

Salutations to the teacher of the world, Krishna,
Who is engaged in playing with Rukmani,
Who shines in yellow silks,
And who is attracted by scent of ocimum.

Gopikaanaam kucha dwandwam,
Kunkumankitha vakshasam,
Sriniketham maheshwasam,
Krishnam Vande Jagat Gurum. 7

Salutations to the teacher of the world, Krishna.
Who is embraced by the two busts of Gopis,
Whose chest has the marks of saffron,
Who lives with Lakshmi and has a big bow.

Sree vathsam mahoraskam,
Vanamala virajitham,
Sanka chakra dharam devam,
Krishnam Vande Jagat Gurum. 8

Salutations to the teacher of the world, Krishna,
Who has the mole Sri Vathsa on his chest and greatly enjoys,
Who is decorated by garlands of forest flowers,
And who holds the conch and the holy wheel.

Krishnashtakamidham punyam,
Prathar uthaya ya padeth,
Koti Janma krutham papam,
Smaranath thasya nasyathi.

If one reads this as soon as he awakes in the morning,
This divine octet of Lord Krishna without fail,
Sins committed in billions of lives,
Would be destroyed, if one thinks about him.



"Some artwork courtesy of The Bhaktivedanta Book Trust International, Inc. www.krishna.com. Used with permission"

Monday, August 12, 2013

உங்களுக்கு மூளை இருக்கா ?

ஒரு துறவி வெள்ளம் பொங்கி வரும் நதியோரம் சென்று கொண்டு இருந்தாராம். பின்னே வருவது வாய் பொத்தி கை கட்டி நடக்கும் அவரது சிஷ்யன்.
எதோ சத்தம் கேட்டு திரும்பியபோது, நதியில் ஒருவனோ ஒருவளோ தத்தளிக்கும் காட்சி.  அது அவனா அவளா என்று நினைக்கும் தருணமும் இல்லை.
துறவி நதியில் குதித்தார்.  ஒரே முயற்சியில் அவளைக் கரை  ஏற்றினார்.
பின் தன்வழியே செல்லலானார். 
பின்னால் வந்த சிஷ்யன் முனுமுனுத்துக்கொண்டே வருகிறான்.
அவனுக்கு மனசுக்குள்ளே சஞ்சலம். துறவி காஷாயம் உடுத்தியவர் உலகத்தை துறந்தவர் ஆசையை அறுத்தவர் பெண்ணை தொட்டுவிட்டாரே ????
துறவி திரும்பி பார்த்தார்.   சொன்னார்:
" நான் அப்போதே அவளை விட்டு விட்டேன். நீ இன்னுமா அவளை தூக்கிக் கொண்டு இருக்கிறாய் ?:
கதை என்ன நீதி சொல்கிறது ?
கடந்த கால நிகழ்வுகளில் நல்லவை, அல்லவை அனைத்துமே சங்கமம். தெரிந்தோ தெரியாமலோ செய்த உதவிகளும் அநேகம். செய்த உதவிகளால் நேர்ந்த உபத்ரவங்களும் அநேகம்.
சென்றவை சென்றுவிட்டன. கொட்டியது பால் எனினும் அதை திரும்ப அள்ள இயலாது.  ஆயினும் அதைக்குறித்து விசனப்படுவது , சினம் கொள்வது, சிந்தையை சிவன் பால் கொள்ளாது திசை மாறி தன்னையும் பிறரையும் நொந்துகொள்வது  எல்லாம் சரிதானா ?
ஆன்மீகக் கதை போதும் அய்யா என்று நீங்கள் சொல்வது எல்லாம் காதில் விழாமல் இல்லை.

கிழவனும் கிழவியும் பூங்காவில் அன்றாட வாக்கிங் போய்க்கொண்டு இருந்தார்கள்.





 நடுவில் ஏதோ ஒரு  கருத்து வேறுபாடு.  கிழவிக்கு கோபம் .

உங்களுக்கு மூளை இருக்கா என்று இரைந்தாள். 

கிழவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

பக்கத்தில் போகிறவர்கள் நின்று பார்த்தார்கள்.  புன்னகைத்தார்கள்.

" இதை நீ சத்தமாய் கேட்டுத்தான் ஆகவேண்டுமா ? இப்ப என்னவோ புதுசா கண்டு பிடித்தாற்போல் பேசுகிறாய். ?"  

எப்ப உன்னை கலியாணம் செய்து கொண்டேனோ அப்போதே உனக்குத் தெரிஞ்சு இருக்கணும் இல்லையா ?  ?  "


"போகப்போக உங்களுக்கு திமிர் ஜாஸ்தியாய் போயிடுத்து.." கொலச்டேரால் 350 க்கும் மேலே போயிடுத்தோ என்னவோ ? ஸ்டோர்வாஸ் சாப்பிடுகிறீர்களா இல்லையா ?  "

"  திமிர் வந்தது சகவாச தோஷம்.  அம்பது வருஷ பந்தம் இல்லையா..??"

"சரி, சரி,  சத்தமா பேசாதீக ... சீக்கிரம் வீட்டுக்குப்போய் ஒரு வாய்  டீ போட்டுத் தாங்க "

என்று ,

கிழவனின் வாயை அடக்கினாள் கிழவி.

"எஸ் மேடம் .." என்று அடங்கினார் கிழவர்.

( இது நாங்களா என்று பலர் ஐயப்பாடு கொண்டால் அதில் வியப்பு ஒன்றுமில்லை.  யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று யார் சொன்னாங்க... மறந்து போச்சே !!  இளங்கோ சார்! வாங்க ! +)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பின்னே வருவது நேற்று முந்தாநாள் நடந்த கதை அல்ல  இது.உண்மை.

எனது தஞ்சை நண்பரின் சதாப்தி விழா.  எண்பது வயதினைக் கடந்த நல்ல இதயம் படைத்த நண்பர்.

எல்லா வைதீக முறையான ஹோமங்களும் சிறப்பாக நடை பெற்றன. கண்டு களித்தோம்.   எங்களை விட என்னும் 8 வயது பெரியவர் அவர். அவர் மனைவி அவருக்கென்றே பிறந்தவர்.  தர்ம பத்னி என்பது அவருக்குத்தான் உண்மையாகப் பொருந்தும்.  அன்புக்கும் அறனுக்கும் சான்றாக விளங்கியவர் அவர். அவரால் நன்மை அடைந்த குடும்பங்கள் பல.

எனது தஞ்சை கால நண்பர்களை பார்க்க முடிந்தது .  நிழல்கள் ரவி, (எனது தஞ்சை அலுவலக 1962ம் வருஷ பாஸ் அவர்களின் புதல்வர், என் நண்பரின் உறவினர் ) வருவார் என நினைத்து இருந்தேன். அவர் வரவில்லை.  

சதாப்தி திருமணம் முதல் திருமண நிகழ்ச்சியைபோலவே இருந்தது.  மாலை மாற்றுதல், பழம் பால் தருதல், ஹோமங்கள், மாங்கல்ய தாரணம். எல்லாமே.
இந்த வருண ஜபம் செய்து அந்த நீரால் அபிஷேகம் செய்வது இந்த அறுபது, எழுபது, எண்பது திருமணங்களின் சிறப்பு .

ஆசிர்வாதம் பெற்று மகிழ்ந்தோம்.

அடுத்தது சாப்பாடு.  ஸ்ரீ பாதுகா காடரிங் வைஷ்ணவ சம்பிரதாய படி சாப்பாடு.
போளி, புளியோதரை, மெது வடை, க்ஷீரான்னம் , பாயசம் எல்லாமே பிரமாதம்.  +Tulsi Gopal  அவர்கள் அறுபது கல்யாண நிகழ்ச்சியிலே சாப்பிட்டது நினைவுக்கு வந்தது.

சாப்பிட்டபின் நண்பரின் மூத்த மகன் எங்களுக்கு ஒரு அன்புப்பரிசு தனியே வந்து என்னிடம் தந்தார்.
என்ன என்று பார்த்தேன்.  தேங்காய், வெற்றிலை பாக்கு, பக்ஷணம் தான் என நினைத்த எனக்கு, ஆச்சரியம்.
என் மனைவிக்கு ஒரு விலை உயர்ந்த புடவையும் எனக்கு ஒரு ஷர்ட் துணியும்.

ஆஹா. ஆஹா.  !!

நூறாவது வயது பங்க்ஷன் இன்னும்  ரொம்ப நாள் இருக்கா ? என்று விசாரித்தேன்.

என்ன யாரோ கூப்பிடுகிறார்கள் !!
சாட் ல் திரு +Gopalakrishnan Vai.  அழைக்கிறார். என்ன வென்று பார்க்கிறேன்.












Wednesday, July 31, 2013

சம்மர் சோனோடா

சம்மர் சோனோடா .. இன்னிக்கு போக்கப்போறோம் என்றாள் தர்ம பத்தினி.

அது என்ன சொனாடோ, சோன் பப்டி மாதிரி ..அது என்ன ரேசார்டா , என்ன சாப்பாடு என்று கேட்டேன்.

சாப்பாடா !!  மிகப்பெரிய விருந்து.. என்றாள்.

சேமியா பாயசம், புளியோதரை, பிசி பேலா ஹூளி, மெது வடை , சிப்ஸ் எல்லாம் இருக்குமோ ?

இல்லை ...இது இசை விருந்து.  நம்ம வீட்டுக்கு வரும் பியானோ மாஸ்டர் காரி மாடிசன் அவர்கள் தனது எல்லா சிஷ்ய புள்ளைங்களுடன் ஒரு ப்ரோக்ராம் பண்ணுகிறார் .  மத்தியானம் 1 மணிக்கு கிளம்பி போனால், கரெக்டா இருக்கும் என்றாள்.  எடிசன் பக்கத்திலே ஒரு பிரபல பியானோ கம்பெனி இதற்கான ஏற்பாட்டைச் செய்து இருக்கிறது.

தாமஸ் ஆல்வா எடிசனைத் தான் எனக்கு தெரியும். இது என்ன எடிசன் ? யோசித்துக்கொண்டு இருக்கும்போது !!!

என் பெண்ணோ என்னைக் கூர்ந்து கவனித்தாள்.  உன் ஹேர் ஸ்டைல் சரியா இல்ல. என் பிரண்ட்ஸ் எல்லாம் வருவாங்க.  அவங்களுக்கு உங்களை இன்ட்ரொடுயுஸ் பன்னனும்லே ... இது மாதிரி அசிங்கமா ஹேர் ஸ்டைல் ..!!1  எனக்கு மானம் போயிடும்.  போய் அர்ஜெண்டா ஒரு ஹேர் கட் பண்ணிண்டு வாங்க.  ஏங்க !!   இவரையும் நீங்க கூட்டிண்டு போய்ட்டு வாங்க அப்படின்னு அவ , பாவம் அவ ஆத்துக்காருக்கு , என் மாப்பிள்ளைக்கு ஒரு பிடி வாரான்ட் இஸ்யு பண்ணினாள்.

எனக்கு ஒன்னும் ஹேர் கட் வேண்டாம். ஹேர் சுத்தமா இல்ல. மொட்டையா இருக்கு. இதுலே அனாவசியமா ஒரு 15 டாலர் கொடுத்து என்ன ஸ்டைல் வேண்டி இருக்கு.?   நான் என்ன ஹன்சிகாவோடயா நடிக்கபோறேன் !!  ஒரு சங்கீத கச்சேரிக்கு போக இத்தனை கலாட்டாவா என்று இரைந்தேன்.

இது ஒன்னும் உங்க மைலாப்பூர் அகாடமி இல்ல. சொனோடா சம்மர். ஆபெரா சிங்கர்ஸ் எல்லாம் வந்திருப்பா. அப்பறம் சஞ்சுவோட ப்ரெண்ட்ஸ் அல்லாருமே அவாவா அப்பா அம்மா வோட வந்திருப்பாங்க... இவ்வளவு அசிங்கமா இருந்தா அவங்களுக்கு எப்படி உங்களை இன்ட்ரொட்யூஸ் பண்றது ?

அப்ப நான் வல்ல...என்று பேக் அடித்தேன்.

சரி.. போனாபோறது .. வரட்டும்.  ஆனா வந்தோமா சொனோடா கேட்டுட்டு சும்மா இருக்கணும்.  அனாவசிய அரட்டை கூடாது என்றாள்.

சுமார் 2 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது.


THE GREAT AMERICAN PIANO STORE  முன்பாக.

அது ஒரு பியானோக்கள் விற்பனை கூடம்.  அங்கு ஒவ்வொரு வாரமும் பியானோ வல்லுனர்கள் தங்கள் மாணவர்களுடன் அங்கு வந்து ஒவ்வொருவரும்  பர்பார்மன்ஸ் தருகிறார்கள்.

எடுத்த எடுப்பிலே அந்த கம்பெனி ஓனர் ஒரு பியானோவின் நுணுக்கத்தைப் பற்றி விளக்கினார்.   மேஜருக்கும் மைனருக்கும் ஒலி வித்தியாசம் எப்படி வருகிறது என்பது பற்றி பேசினார் என நினைக்கிறேன்.  அவரது அக்சென்ட் புரிவதற்குள் அவர் தனது பேச்சை முடித்து விட்டார்.

காரி மாடிசான் தனது பியானோ புலமையை ஒரு இரு 10 நிமிசத்திலே பிச்சு உதறி விட்டார்.


அதர்குப்பின்னே செலஸ்டா மாண் ஒரு விசேட விருந்தினர். பிலெடெல்ப்பியா நகரத்தில் ஸ்பானிஷ் ரெபார்டையரில் சிறப்புடையவர்.  அவரது இரு பாடல்களும் வியக்க வைத்தது.


Tango de lo Menegilda (Federico Chueca)

Palomica aragonesa  Jose Serrano


எனக்குள்ளே ஒரு எண்ணம்.  நம்ம கச்சேரி எல்லாமே ஆரம்பிக்கும்போது ஒரு ஹம்சத்வனிலே வாதாபி கணபதிம் பஜே இல்லேன்னா நாட்டை லே ஒரு வர்ணம் பாடிட்டு தான் மத்த பாடல்கள். இங்கே எப்படி.?

அந்த கன்வென்ஷன் இங்கே கிடையாதாம்.


அதற்கு பின் ஒவ்வொருவராக காரி மாடிசன் அவர்களின் மாணவர்கள் தங்கள் பியானோ பாடங்களை வாசித்து காண்பித்தார்கள்.  ஒரு அஞ்சு வயது பையன் முதல் எனது பேத்தி வரை அவரவர்கள் துறையிலே லெவல் லே பியானோ வாய்பாட்டு என்று அடுத்த 2 மணி நேரத்திற்கு ஜமாய்த்தார்கள்.

அவங்க அப்பா அம்மா, தாத்தா பாட்டி எல்லோருக்கும் மகா சந்தோஷம்.  பலர் தனது காமிராவில் வீடியோ எடுத்துக்கொண்டும் கை தட்டியும் உச்சி முகர்ந்தும் பாராட்டினார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவிலும் கரகோஷம்.


இது போன்ற நிகழ்ச்சிகள் சென்னையில் நடை பெறுகிறதா என்று தெரியவில்லை.  லக்ஷ்மண் சுருதி செய்கிறார்கள் போல் தோன்றுகிறது.

எனது பேத்தியின் பர்பார்மென்ஸ் வழக்கம் போல மிக நன்றாக இருந்தது.

நீங்கள் இப்போது கேட்பது ஒரு இத்தாலியன் மொழி பாடல் 



O del mio dolce ardor
Bramato oggetto,
L'aura che tu respiri,
Alfin respiro.

O vunque il guardo io giro,
Le tue vaghe sembianze
Amore in me dipinge:
Il mio pensier si finge
Le più liete speranze;
E nel desio che così
M'empie il petto
Cerco te, chiamo te, spero e sospiro.
 
கிரிஸ்போர்டு வான் கலக் இசை அமைத்த பாடல் இது.  இவர் 18 ம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர். 


டிராய் நகர இளவரசன் பாரிஸ் , பாரிஸ் அண்ட் ஹெலன் என்னும் ஆபெரா வில்
பாடும் பாடல் இது.

கிரேக் இதிகாச காவியங்களில் ஹோமர் எழுதிய இலியட் . 
அந்த காவியத்தில் ஒரு காட்சி.

மூன்று தேவதைகள் பாரிஸ் முன்னே தோன்றி தம் மூவரில் மிகவும் அழகு 
யாரென கேட்கிறார்கள். தன்னை அழகு என்று சொன்னால் ஒரு பரிசு
தருவதாக அவர்கள் வாக்களிக்க, 

பாரிஸ் அவர்களில் அப்ரோடைட் எனும் பேருடைய காதல் தேவதை தான் மிக 
அழகு என்று உரைக்கிறான். 

பாரிஸ் க்கு பரிசாக உலகத்திலேயே மிகவும் அழகான பெண்ணான ஸ்பார்ட்டா 
ராஜ்யத்தின் ராணி ஹெலன் உறுதி அளிக்கப்படிக்கிறான். 

ஆபெரா துவங்கும்போது, பாரிஸ் ஸ்பார்டா ராஜிய கடற்கரைக்கு வந்து, 
தன கனவுக் கன்னி ஹெலனுக்காக காத்திருக்கும் நேரம் இப்பாடலைப் 
பாடுவதாக அமைந்திருக்கிறது.  



    O my  sweet ardor,and desired object.
    The air which you breathe,
    At last I breathe.
    
    Wherever I turn my glance
    Your lovely features
    Paint love for me:
    My thoughts imagine
    The most happy hopes,
    And in the longing which
    Fills my bosom
    I seek you, I call you, I hope, and I sigh.
    
    
    
    
    
    
    
    ஓ என் மனமிசைந்த மணமே !! 
    நான் விரும்பிய பொருளே !!
    
    
    நீ சுவாசித்த காற்றையே தானே பின் 
    நான் சுவாசிக்கின்றேன். 
    
    
    எங்கெலாம் நான் பார்க்கிறேனோ 
    அங்கேலாம் உனது அழகிய அங்கங்கள் 
    எனக்கென ஒரு காதல் ஓவியத்தை 
    தீட்டுகின்ற பொலிவு தான் என்னே !!
    
    
    எண்ணங்கள் எனது கற்பனையிலே 
    இன்ப எதிர்பார்ப்புகளை என் 
    இதயத்தில் நிரையச்செய்கின்றனவே. 
    
    
    நீ வேண்டுமென உன்னை நான் கூப்பிடும் குரலை 
    நீ கேளாயோ ?
    என் பெருமூச்சை நீ கேளாயோ 
    
    
    
    
    
    
    
    
    
    
    பாடல் காதலில் தோய்த்த சோக சங்கீதம். 
    சுகம். 
    நான் பாடாத பாட்டா அப்படின்னு நினைத்துக்கொண்டு வந்தேன். 
    *************************************************************

    முடிந்து வெளிலே வரும்போது வயிறு நானும் இருக்கேன் இருக்கேன் அப்படின்னு எல்லாருக்கும் சொன்னது.

    நேரே எடிசன் சரவணா பவன் போனோம்.  உள்ளே நான் தான் முதல்லே நுழைந்தேன்.

     அங்கே நம்ம தமிழ் பொண்ணு பார்த்தா சாப்ட் வேர் படித்த ஐ.டி. ப்ரோபசானல் மாதிரி ஒரு தோற்றம்.   ஜீன்ஸ் பாண்ட் பனியன் போட்டு, கையில் ஒரு குறிப்பு புத்தகம் பேனா இத்யாதி...

    என்னை வழி மறித்து எத்தனை பேர் என்றாள். முதலில் எனக்கு புரியவில்லை.  நான் ஒல்லியாத்தான்/இருக்கேன் என்னைப்பார்த்து எத்தனை பேர் அப்படின்னா என்ன அர்த்தம்?


    பிறகு மாப்பிள்ளை தான் சொன்னார். அவள் ஹோஸ்டஸ்
     யார் எங்கே உட்காரணும் அப்படின்னு சீட் ஆர்கனைசராம்.

    நான் அஞ்சு பேர் என்றேன்.  எங்களுக்கு ஒரு தனி டேபிள் ஒதுக்கப்பட்டது.

    எனக்கு  சப்பாத்தி, வூட்டுக்காரி மசால் தோசை, பெண் 14 சின்ன இட்லி , பேத்தி ஆனியன் தோசை, கூடவே  நான் இரண்டு மெது வடை, வூட்டுக்காரி தயிர் வடை மாப்பிள்ளை தோசை ,காபி,  எல்லாம் சாப்பிட்டோம்.   மொத்த பில் 80 டாலர் கிட்டத்தட்ட.. சீப் என்றாள் என் பெண். நான் இந்திய ரூபாயில் கணக்குப்போட்டேன். ரூபாய் 4800 ஆ பில் !!! தலை சுற்றியது. இன்னொரு காபி சாப்பிட்டேன். மைலாபூர் சரவணா பவன் போல இங்கும் சாப்பிட்டபின் சோம்பு கற்கண்டு மிக்சர்.

    வெளிலே வந்த உடனே நான்  எங்க இப்ப நெக்ஸ்ட். என்றேன்.

    இன்னிக்கு சனிக்கிழமை இல்லையா.  நவ க்ருஹம் சுத்தணும். ஹனுமார் தரிசிக்கணும். இப்ப நம்ம ச்வீடிஸ்போரோ என்ற ஒரு இடத்துக்கு போறோம். அங்க ஒரு ராஜ கணபதி கோவில் இருக்கிறது.  இன்னும் ஒரு மணி நேரத்திலே போயிடலாம் என்றார் மாப்பிள்ளை.

    எடிசன் லேந்து ஸ்வீடிஸ் போரோ ஒரு 50 மைல் இருக்கலாம். ஆடோ கியர்லே போட்டுட்டா அதுவே ட்ராபிக்குக்கு தகுந்தபடி அட்ஜச்ட் பண்ணிண்டு வேகமா கார் போகிரது.

    நான் காரிலேயே தூங்கிப்போய் விட்டேன்.


    தொடரும்.....

    SVEDESBORO, NEW JERSEY 
    ராஜ கணபதி கோவிலின் வலைத்தளம் இது.

    பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருங்கள்.


    Wednesday, July 24, 2013

    ஆனந்த நயாகரா வெள்ளம்

    நியூ ஜெர்சியிலிருந்து சிகாகோ வழியே நாங்கள் வந்த வான் வழிப் பயணத்தை பற்றி அறியாதவர்கள் இங்கே சென்று படித்துவிட்டு பிறகு இங்கே வரவும். 

    நயாகரா நகரம் பக்கத்துலே வரும்போது பார்த்த வியூ. 


    நாங்கள் தங்கிய ஹோட்டல்.


    கிட்டத்தட்ட ஒரு பதினிரண்டு மணி இரவு ஹாம்டன் இன் ஹோட்டலுக்குச் சென்றோம்.  ஏகப்பட்ட கார்கள். ஒரு வழியா பார்கிங் ஸ்லாட் கண்டுபிடித்து
    ஹோட்டலுக்கு உள்ளே நுழைந்தோம்.  நம்ம பக்கத்திலே போன உடனே கதவு தானா திறக்கிறது. உள்ளே போன பின்னே மூடிகொள்கிறது.  அந்தக் காலத்து மாயா பஜார் படம் நினைவுக்கு வந்தது.

    ரிசெப்ஷன் ஹாலில் அமர்ந்திருந்த நாட் ஸோ ஓல்டு லேடி எங்களை ஹாய் என்று வரவேற்றாள்.   ஏற்கனவே ஆன் லைனில் ரிசர்வ செய்யப்பட்டு இருந்ததால், ரூம் 213 என்று சொல்லி அதற்கான சாவி , அதுவும் ஒரு க்ரெடிட் கார்டு மாதிரி இருந்தது.  அதை ஸ்வைப் செய்ய கதவு திறந்தது.


    ரிசப்ஷன் ஹாலிலேயே காபி, சாக்லேட் மில்க், சாக்லேட் கோகோ,  டீ, என்று பலவிதமான ஐடம்கள். 

    எல்லாமே அவங்கவங்க அவங்க்கவளுக்கு தேவைப்படுவது போல தயார் பண்ணிக்கொள்ள வேண்டும்.பக்கத்திலே கப், மூடி, ஸ்பூன், டிஷ்யூ பேப்பர். சானிடைசர் எல்லாம் அடுக்கி அடுக்கி வைத்திருக்கிறார்கள்.  எத்தனை வேணுமானாலும் எடுத்துக்கலாம்.

    காபி என்னுடைய பேத்தி நிமிஷமா தயார் பண்ணி கொடுத்தாள். க்ரீம் மில்க், பாட் ப்ரீ மில்க் ,எது வேணும் என்றாள்.

    எனக்கு fat free மில்க் போடு, உன்னோட  பாட்டிக்கு கொழுப்பு ஜாஸ்தி. இருந்தாலும் க்ரீம் மில்க் போட்டு சக்கரை 2 தடவை போட்டு கொடு என்றேன். கொடுத்தாள்.கிழவி நன்னா தூங்கணும். அப்படிங்கற கவலை எனக்கு.

    ரூமுக்கு வந்தால், அங்கேயும் காபி மேகிங் மெஷின் பக்கத்துலே பால் பாக்கெட், கால்சியம் மில்க், பௌடர், டிகாஷன் அவங்கவளுக்கு வேண்டிய மாதிரி, இருந்தது.     அங்கேயும் இன்னொரு தரம் காபி சாப்பிட்டேன். கையை துடைச்சுக்க

    அல்ப்ராக்ஸ் சாப்பிட்டேனா இல்லையா என்று நினைவு இல்லை. இன்னிக்கு மட்டும் இன்னும் ஒன்னு சாப்பிட்டு விடுவோம் என்று அந்த மஞ்ச மாத்திரை முழுங்கினேன்.


    காலைல,  நம்மவே நம்ம ரெண்டல் கார் இருக்கே அதை எடுத்துட்டு நயாகரா போலாமா அல்லது ஹோட்டலிலே ஒரு டூரிஸ்ட் பஸ் போகிரது. அதில் போகலாமா என்று மாப்பிள்ளையும் பெண்ணும் டிஸ்கஸ் செய்துகொண்டார்கள். 

    எனக்கு தூக்கம் கண்ணை சுயற்றிற்று.  நான் தூங்கி போய்விட்டேன்.

    மறு நாள் காலை எழும்பொழுது மணி 7.  நன்றாக விடிந்திருக்கிறது.  இங்கே இப்பொழுது சம்மரில் காலை 5 மணிக்கே உதய சூரியன் உதயமாகிவிடுகிறான் . (ரொம்ப அவசரம் போல . 2014 லே எலக்சன் இல்லையா ??!!!) மாலை இல்லை இரவு 8.30 மணிக்குத் தான் சூரியன் அஸ்தமனம்.

    இந்த நயாகரா பால்ஸ் டவுன் லாடிட்யூட் 50க்கு மேலே.
    இன்னிக்காவது நல்ல நேரம் பார்த்து வலது காலை எடுத்து பயணத்தை ஆரம்பிக்கணும்.   ஆஹா. இன்னிக்கு சனிக்கிழமை.. காலைலேயே ராகுவோட காலமாச்சே !!!

    அப்ப  ராகு காலம் சூரிய உதயத்திலேந்து தான் கணக்கு பண்ணனும். இது தெரியாம, நம்ம நாட்டிலும் எல்லோரும் தி ச வெ பு வி செ ஞா அப்படின்னு  கணக்கு பண்றாக.fixed time ஒரு பார்முலா மட்டுமே. நம்மதான் லாட்டிடுட் லாஞ்சிடுட் எடுத்துண்டு கணக்கு போட்டுக்கணும்.

    சூரிய உதயத்திலேந்து ஒரு நாளைக்கு ப்ளேசுக்கு 1 1/2 மணி நேரம் கூட்டிக்கணும். ஸோ, சனிக்கிழமை அப்படிங்கறதாலே , ராகு காலம் உதய நேரம் 5.30 ப்ளஸ் 2 x 1 .30 .அதாவது 8.00 லேந்து 9.30 .  . நாட் 7.30 டு 9.00 .

    இன்னிக்கு சனிக்கிழமை, மகா பிரதோஷம் வேற.  பக்கத்துலே பபலோ ஊருக்குத் திரும்பி போய் , சிவன் கோவிலுக்கு சென்று வரலாம் என்றார் மாப்பிள்ளை.

    பஸ் 1 மணிக்கு கிளம்புகிறது.அதற்குள்ளே  நம்ம திரும்பி வர முடியாதே என்று வீடோ பவரை உபயோகப்படுத்துவேன் கோவிலுக்கு போவதை நிறுத்திவிடுவாளோ என்று பயமுறுத்தினாள் பேத்தி.

    போகலாமா, முடியாதா என்ற சர்ச்சை  மேட்டூர் அணைக்கு தண்ணீர் பிரச்னை மாதிரி தொடர , காரை கிளப்பினார் மாப்பிள்ளை.

    எங்கே போறோம் என்று கேட்கிறாள் பேத்தி. அவளுக்கு இந்த கோவில் சமாசாரம் இதெல்லாம் அவ்வளவு இஷ்டம் இல்லை.  வேற ஜோலி ஒண்ணும் இல்லேன்னா கோவிலுக்கு போலாம். இப்ப நயாகரா வந்திருக்கோம். அங்க போயிட்டு வரணும் இல்லையா.

    அவ சொல்றதுதான் சரி, என்கிறது இந்தக்கிழம்.  இத்தன நாள் தான் பிரதோஷத்துக்கு கோவிலுக்கு போயாச்சே. ஒரு தடவை போகலேன்னா என்ன ஆயிடும் அப்படின்னு அவ கட்சி.  இவ எப்ப எந்த சைடு இருப்பா அப்படின்னு எப்பவுமே எனக்கு சொல்ல முடியாது.  பா. ம. க.விலே மெம்பரா இருப்பா போல இருக்கு.

    மாப்பிள்ளை ஒன்னுமே சொல்லாம வண்டியை ஓட்டிட்டே இருக்கார். அடுத்த
    40 நிமிஷத்திலே கோவில் வாசல்லே கார் வந்து நின்னுடுத்து.

    நேரம் ரொம்ப ஆயிடுத்து.  நீங்களும் அப்பாவும் மட்டும் போயிட்டு வாங்க, நாங்க காரிலேயே காத்திருக்கோம் என்றாள் பெண்.. ஆமாம் என்கிறது கிழம்.

    நானும் மாப்பிள்ளையும் மட்டும் சிவன் கோவிலுக்குள் நுழைந்தோம்.

    அமெரிக்க கனடா எல்லையில் இத்தனை ஒரு அற்புதமான சிவன் கோவிலா ?




    நாங்கள் சென்ற நேரத்தில் ஒரு நவ க்ருஹ ஹோமம் நடை பெற்றுக்கொண்டு இருந்தது.

    பிரதோஷம் என்பதால், சிவ பெருமான் பாலிலே குளித்துக்கொண்டு இருந்தார்.

    இங்கு பால் இரண்டு வகை. ஒன்னு ஆர்கானிக் இன்னொன்று ரெகுலர். ஒவ்வொன்றிலும் நாலு வகை. அதுக்கு மேலே.  வளரும் புல்லை மட்டும் சாப்பிடும் பசுக்கள் பால் தான் ஆர்கானிக் மில்க்.  ரெகுலர் மில்க் தரும் பசு மாடுகள் ஹார்மோன்ஸ் உள்ளிட்ட உணவுகளையும் சாப்பிடுமாம்.
    ஸோ,சிவனுக்கு அபிஷேகம் பண்ர பால் ஆர்கானிக் பாலாகத் தான் இருக்கணும் .இல்லையா.   நம்ம நாட்டிலே அபிஷேகம் ஆவின் பால் தான் எல்லாத்துக்கும். . 

    ஏகப்பட்ட பேர் பஞ்ச கச்சம் கட்டி வட நாட்டுப்பேர் அதிகமாக இருந்தார்கள்.  நம்ம தமிழ் ஊர் காராரும் அதிகம் பேர் கண்ணில் பட்டனர்..  நானும் அந்த வட்டத்தில் ஒன்றாக இருக்க அவர்களுடன் அளவளாவ ஆவல் இருக்கத்தான் செய்தது.  இருந்தாலும், அவாவா ஆத்துக்காரி காரில் காளி மாதிரி காத்துக்கொண்டு இருப்பாள் என்ற பயம் இருந்து வந்ததால், சிவனுக்கு பை பை சொல்லிட்டு வெளிலே வந்தோம்.

    இருந்தாலும், வந்தோமா, கிளம்பினோமா என்றிருக்கனும் அப்படின்னு ஒரு
    அஞ்சே நிமிசத்திலே சிவா சிவா என்று சொல்லிட்டு கன்னத்திலே போட்டுண்டு கிளம்பினோம்.சக்கரை பொங்கல் அவ்வளவு பிரமாதம். இன்னொரு ஸ்பூன் எடுத்து வரக்கூட டயம் இல்லை. எனக்கு வேண்டாம் பேத்திக்கு தருவோம் என்று எடுத்து வந்தேன்.  என்னை தரிசிப்பவா தான் சாப்பிடணும் அப்படின்னு ஒரு 144 இல்லை . அத தெரிஞ்சுண்ட என் பொண்ணு ஒரே வாயிலே அத்தனையும் ஸ்வாஹா .

    சனிக்கிழமை ஹனுமார் தரிசனம் என்னைப்பொருத்த வரை ரொம்ப முக்கியம். அதுவும் ஹனுமத் கிருபையால் நடந்தேறியது.  அதுவே போதும். பிரசாதம் எல்லாம் மெட்ராஸ் போன உடனே ஆள்வார்பெட்டை அனுமார் கோவில் லே கிடைக்கும். சக்கரை பொங்கல், புளியோதரை எல்லாமே. அப்படி இல்லே அப்படின்னாலும் பக்கத்திலே வல்லி நரசிம்மன் அம்மா வீடு. தாயார் மாதிரி எப்ப போனாலும் ஒரு வாய் தயிர் சாதம் தராம இருப்பாளா என்ன ?

    அசாத்திய சாதக சுவாமின் அசாத்திய தவ கிம் வதா.

    முடியாது என்று நினைப்பதெல்லாம் முடித்துக்காண்பிக்கும் அனுமாரே, உன்னால் முடியாது தான் என்ன ? 

    நீங்கள் கீழே பார்ப்பது இந்த கோவிலில் ஒரு காட்சி.  இந்த வீடியோ நாங்கள் எடுத்தது அல்ல.

     சிவா பெருமான் கோவில் லே ஒரு காட்சி.
    Shiv Mandhir at Buffalo Airport Town, forty miles away from Niagara Falls City.




    இந்த வீடியோ பாருங்கள். 2 வது நிமிஷம் துவங்கும்போது ருத்ரம் சமகம் சொல்லி கார்த்திகை அன்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது.  ( இதுவும்நாங்கள்  எடுத்த வீடியோ அல்ல. )
    அதற்கெல்லாம் டயம் இல்லை.









    காரை திருப்பிக்கொண்டு அசாத்திய சாதகனை பார்த்தாச்சு , பிரதோஷத்தின் நாளன்று, சிவ தர்சனம் கிடைத்தாச்சு என்ற திருப்தியில் நயாகரா நகரை நோக்கி விரைந்தோம்.

    இரண்டு இடத்தில் நடுவில் டோல் செலுத்தும் இடம்.  கார்கள் இஞ்ச் இஞ்ச் ஆக
    நகருகின்றன.  பேத்தி எள்ளும் கொள்ளுமாக வெடிக்கிறாள். இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு, ஒன்பது, எட்டு, ஏழு ,ஆறு,......அவள் கௌண்டு டவுன்
    டயம் தர மாப்பிள்ளை கிட்டத்தட்ட 80 மெயில் ஸ்பீடு ஓட்டுகிறார்.

    எனக்கோ , நேத்திக்கு வானத்திலே பயம், இன்னிக்கு தரைலேயே பயம் அப்படி ஆயிடுத்து.

    நின்னா பயம், நடந்தா பயம், ஓடினா பயம்.இன்னும் கொஞ்ச நேரத்திலே கொட்டற நீர் விழ்ச்சிக்கு கீழே இருக்கப்போறோம் அப்படின்னு நினைச்சாலே ஹார்ட் பக் பக்.   பக்கும் பக்கும் மாடப்புறா மாதிரி இல்லாம கொஞ்சம் வேகமா அடிக்கறது.  எதுக்கும் இருக்கட்டும் என்று ஒரு ஆஸ்பிரின் மாத்திரை எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.  இதய வலி வந்தால் என்ன செய்வது அப்படின்னு ஒரு புத்தகம் இருந்தது. அதை மறந்து சென்னையிலே வைத்து விட்டு வந்துவிட்டேன்.  வந்தால் பாத்துக்கலாம்.  அப்படின்னு ஒரு தைரியம்.

    பகவான் என்ன நினைச்சிண்டு இருக்கானோ அது தான் நடக்கும் என்று நினைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு

    சிவ சிவ என்றிருந்தேன்.

    ஹோட்டல் ஹாம்டன் இன் லே எங்களுக்காக அந்த பஸ் காத்திருக்கிறது.
    நாங்கள் தான் லாஸ்ட் .

    டிரைவர் கம் கைட் அழகா நயகார நகரை விவரித்துக்கொண்டே பஸ்ஸை ஓட்டத் துவங்குகிறார்.

    போகும் இடமெல்லாம் நயாகரா... ஆனந்த நயாகரா வெள்ளம்.  சில இடங்களில் பொங்குகிறது.  நதியாக. சில இடங்களில்  அருவியாக.

    A video from Canada Side: Courtesy: Youtube.




    காணக் கண்கோடி வேண்டும்.

    இரண்டு தான் இருக்கிறதா ?

    மிச்சத்தை நீங்கள் நாளைக்குள் கொண்டு வாருங்கள்.

    அந்த அடுத்த பதிவில் நீர் வீழ்ச்சியின் வேகத்தை பார்ப்போம்.

    மறக்காது வாருங்கள்.

    Saturday, July 13, 2013

    அனுமார் கிட்டே போய்...



    சின்மயா பால விஹார்

    ஆண்டோவர் என்னும் சிறிய டவுன் இது. பாஸ்டன் லிருந்து ஒரு 40 மைல் தொலைவு.


    இங்கு பூஜ்ய ஸ்ரீ  சின்மயாநந்தா அவர்கள் துவங்கி வைத்த பால விஹாரில் ஹனுமனை தரிசிக்க
     இது வரை ஒரு மூன்று தரம் போயிருப்பேன்.












    இந்த ஹனுமார் கோவில் இந்த பாஸ்டன் சுற்று வட்டாரத்தில் மிக பிரசித்தமாக இருக்கிறது.

    இந்த தளத்தில் கோவிலைக் கண்டு களியுங்கள்.
    பூஜ்ய ஸ்ரீ  தேஜோமயானந்தா, தயானந்த சரஸ்வதி குருகுலத்தைச் சார்ந்த துறவி.
    இந்த மாதம் 21ம் தேதி முதல் துளசி ராமாயணம் உபன்யாசம் செய்யப்போகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சம்பந்தமான ஐயங்களுக்கு அவர் பதில் அளிப்பாராம். 



    அத்துடன் இந்த  ஸ்தலம் மிகவும் அழகான ஆர்கிடேக்சரல் ப்யூடி. அமெரிக்க கட்டிட கலை இந்திய பண்பாட்டுடன் கலந்து காணப்படுகிறது.

    இதின் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை. அவர்கள்  சம்மதம் இன்றி எனக்கு புகைப்படம் எடுக்கவும் மனம் வரவில்லை.

    இருப்பினும் நேற்று
    மூன்றாவது மாடியில் இருக்கும் ஆடிடோரியம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
    அதை மனக்கண் மூலம் ஒரு போடோ எடுத்தேன்.

    மூன்றாவது தளத்தில் இங்கு வசிக்கும் பாரத நாட்டு மக்கள் கலாசார உணர்வினை எடுத்து வலியுறுத்தும் விதமாக,

    அவ்வப்போது ப்ல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    பல்வேறு மொழிகள் கற்று தரப்படுகின்றன.  தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, சம்ஸ்க்ருதம், ஆகிய மொழிகளில் அவ்வப்போது வாலண்டியர்ஸ் வாரம் இரு முறை அல்லது மூன்று முறை மொழி மட்டும் அல்லாது மொழி பேசப்படும் மக்களின் பண்பாட்டினையும் போதிக்கிறார்கள்.

    இதைத் தவிர கணிதம் கற்று தரப்படுகிறது.
    செஸ் துவக்க வகுப்புகள், தமிழகத்தைச் சார்ந்த ஒரு பெண்மணியினால் நடத்தப் படுகின்றன.

    எனது பேரன் ஐ பாடில் செஸ் காயின்ஸ்களை வெகு வேகமாக மூவுகளைச் செய்கிறான்.

    செஸ்ஸில் யானைக்கு ரூர்க் என்று ஒரு பெயரும் உண்டல்லவா ?  அதற்கு மட்டும் யானையின் உருவம் ஏன் இல்லை என்று கேட்டான்.

    அது அப்படித் தாண்டா என்று சமாளித்தேன். 

    அதைப் பாரு, பில்லர் போல் இருக்கிறது இல்லையா ..   அது ராஜா பாலஸில் தூண் போன்றது . ரொம்ப ஸ்ட்ராங்.  அதனால், ராஜா வோடபரிவாரத்திலே குதிரை, சிப்பாய், பிஷப் போன்று எளிபெண்டும் உண்டு.  அதற்கு தான் அப்படி இருக்கிறது என்று சொல்லிவிட்டு, காலரை நிமித்திக்கொன்டேன்.

    என்ன தாத்தா.  பில்லர் அப்படின்னா எப்படி நகரும் ?

    சும்மா இருடா !! தாத்தா வை ரொம்ப தொந்தரவு செய்யக்கூடாது.. விஸ்வநாதன் ஆனந்திக் கேட்டு சொல்வார்  என்றார் மாப்பிள்ளை.

    அவர் இப்ப பார்ம்லே இல்ல. அவருக்கு எப்படித் தெரியும் எனக்கேட்கிறான் பிச்சை, என் பேரன்.

    அனுமார் கிட்டே போய்,

    அப்பனே , அசாத்திய சாதகன் அல்லவா நீ. 

    என்னை காபாத்துடா ...இந்த
    கேள்விக்கு என்ன பதில் ?

    அனுமான் என்ற உடன் ஜகமணி அவர்கள் வழிதான் நினைவுக்கு வருகிறது.
    இன்று சனிக்கிழமை. அவர தளத்திற்கு செல்லவேண்டும்.

    வேகத்திற்கு மட்டுமல்ல, விவேகத்திற்கும் அவன் பாதங்களே துணை.
    அவனோ கண்களை மூடிக்கொண்டு, கண்களிலே நீர் சுரக்க ராமா, ராமா என்று
    24  7 ராம ஜபம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்.

    அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம் பிரும்ம சாரினம்.

    துஷ்ட கிருக வினாசாயா ஹனுமந்தம் உபாஸ்மஹே.



    ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே.
    ரகுநாதாய நாதாய சீதாயாஃ பதயே நமஹ.



    அப்பனே ! ஆஞ்சனேயா.. 
    என் பேரக்குழந்தைகளை காப்பாற்று.
    உன்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை.

    இன்னிக்கு மதியம் 11 மணி அளவில் இந்த ஊரில் இருந்து திரும்பி ஜெர்சிக்கு
    செல்லவேண்டும்.

    பிரச்னைகளுக்கு தீர்வு காண்  என்ற தலைபபிலே இந்த பதிவை எழுதும்போது
    திரு ராஜ முகுந்த வல்லியூறான் அவர்களிடமிருந்து ஒரு செய்தி. அது என்ன ?
    அனுமார் அவர் மூலம் எதுனாச்சும் செய்தி எனக்கு அனுப்பி இருக்கிறாரோ ?