Pages

Thursday, May 8, 2014

அம்மா உன் அன்பு இதுவா ?




அம்மா உன் அன்பு இதுவா ?
amma amma

உனக்கென்ன கோபம் ?



Thursday, April 3, 2014

கண்கள் இல்லாதவர் மட்டும் படிக்க



இன்று ஒரு அமுதமான பதிவு படித்தேன். அது ஆங்கில பதிவு. 

ஒரு பெண்.
பிறவியிலேயே அவள் குருடு இல்லை. எனினும் அவளுக்கு விவரம் தெரிந்தது முதல் அவள் உலகத்தைக் கண்டதே இல்லை.

அவளுக்கு, தான் குருடு என்பதாலேயே
உலகத்தார் எல்லாவற்றையும் காண்கையிலே

தான் மட்டும் காண இயலவில்லையே என்ற ஆதங்கம்.


கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை என்பதை புரியாத வயது.

தனக்கு இல்லாதது பார்வை. அது மற்றவர்களுக்கு இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் தன்னைக் காண வருபவர் அத்தனை பேரையும் வெறுத்தாள் .

ஒருவன் மட்டும் விதி விலக்கு . அவனும் அவள் வயதை ஒத்தவன்.
அவன் பேசுவது இதமாக இருந்தது. அவன் அருகாமை அவள் ஆதங்கத்தைக் குறைத்தது.

அவளுக்கு வேண்டுவது எல்லாம் அவன் மூலம் கிடைத்தது. அவன் அவள் கண்களாய் இருந்தான்.

அவனும் அவளும் ஒன்றாய் இருந்ததைக் கண்ட சுற்றம் உற்றம் அவளிடம் அவனிடம் சொல்லியது.

நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

கண்டிப்பாக செய்துகொள்கிறேன்.  மன்னவனே மனதுக்கு ஏற்ற வனே அவன் தானே .!!
ஆனால் ஒன்று
திருமணம் எனக்கு பார்வை கிடைத்த பின். என்றாள் அவள்.

அதைக் கேட்ட அவன் உலகெங்கும் சுற்றினான். தன பொருள் எல்லாம் கொட்டினான். வாரி இறைத்தான்.

அவன் பார்க்காத மருத்துவர், வணங்காத தெய்வம் இல்லை.

ஒரு நாள் ஒரு நாள் ...

அவளுக்கு பார்வை கிட்டியது.

ஆஹா என மகிழ்ந்தாள்.

என்ன ஒரு உலகம் !  என்ன அழகான உலகம். !!
என்ன அழகான வாலிபர்கள் !

உலகத்தின் அழகில் லயித்தாள் .
எதிரில் உள்ள கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.
தான் எத்தனை அழகு !!
தன் அழகிலே தானே மயங்கினாள்.

அந்த சமயத்தில், பக்கத்தில் இருந்த யாரோ ஒருவர், அவள் என்றோ இட்ட
வாக்குறுதியை நினைவு கூர்ந்தார்கள்.

ஆமாம். எனக்குப் பார்வை கிடைத்தால், எனக்கு இதுகாறும் உறுதுணையாய் இருந்தவனைத்  திருமணம் செய்வேன் என்று வாக்கு தந்தேன்.

அவன் எங்கே ?

இதோ வந்து விடுவான் என்றார் ஒருவர் .

அவன் வந்தான்.

இவள் திடுக்கிட்டாள்.

இவனையா திருமணம் செய்துகொள்வது ?
இவன் அழகில்லையே ?
எனக்கு நிகரில்லையே..!!

தன்னால் முடியாது என்று தீர்மானமாக நினைத்தாள்.
சொல்லிவிட்டாள்.
ஐ ஆம் சாரி.

அவன் சொன்னான்.

சரி. .
நீ கண்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்.

சொல்லி மறைந்தான்.

**************************************************************************
***********************************************************************
********************************************************************

.
கருத்து:
ஆவிஸ்  விச்வனாநாதன்.
http://avisviswanathan.blogspot.in/2014/04/when-you-give-give-without-expectations.html

Anything you gave, bounces back to you. What we gave, comes back to us. - Sri Sri Ravi Shankar
But not necessarily from the same person. 

Sunday, March 23, 2014

மணிராஜ்: மாங்குயிலே .. பூங்குயிலே..

(மேலே கிளிக்குங்கள். கிளி சத்தம் குயிலு சத்தம் கேளுங்க.)


என்னங்க இன்னிக்கு இந்த பாட்ட கேட்டு கிட்டு சொக்கி போயி இருக்கீக ?

அடியே... இந்த குருவி குயிலு பற்றி ராஜேஸ்வரி மேடம் இன்னிக்கு இன்னா அழகா ஒரு பதிவு போட்டு இருக்காக.

அப்படியே பிரமிச்சு போயி இருக்கேனாக்கும்.






Christina Marie Vs Nathan Amzi: Battle Performance - The Voice UK 2014 -...

Sunday, February 23, 2014

கணவன் மார்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி. சீரியல் லே முதல் எபிசொட்.

ஒரு புலிக்குக் கூட  நன்றாக பயிற்சி கொடுத்து விடலாம்.  நமது சொல்படி செய்ய வைத்து விடலாம்.

ஆனால் இந்த கணவன் மார்களுக்கு  டிரைனிங்கா ... ??ஊஹூம் ...
சுத்தமாக நம்ம வழிக்கு கொண்டு வர முடியாது என்று அலுத்துக் கொண்டாள் எதித்த வீட்டு எச்சுமி.

என்ன ஏன் அப்படி சொல்லிபோட்டே..
என்று இவள் கேட்க,
 இந்தாங்க,  முதல் லே இந்த வீடியோவை பாருங்க என்று டி.வி.டி.லே போட்டு காண்பித்தாள் 

சரிதான். நான் கொஞ்சம் சிரமபட்டால் புலியைக்கூட ட்ரைன் செய்து விடலாம். போல இருக்கே. என்றாள் இவள்.

ஆனால், ஹஸ்பன்ட் பால்ஸ் இன் எ டிப்பரண்ட் காடிகரி. இல்லையா..
 Husband falls in a different category 
அவரை டைகர் மாதிரி ட்ரீட் பண்ணி டிரைன் பண்ண முடியாது. இது எச்சுமி. 

 அப்படியா. ? ஹஸ்பண்டை டிரைன் செய்வதற்கு ரொம்ப கஷ்டபடுகிறீர்கள் என்று தோன்றுகிறது.

உங்களுக்குத் தெரியாதா என்று ஆரம்பித்த எச்சுமி , 

அடுத்த வீட்டுலே எதிர்த்த வீட்டுலே என்ன நடக்குரதுன்னெ கூட தெரியாம அப்படி என்ன தான் டி.வி. பார்ப்பீர்களோ தெரியல்ல  .

எனக் குறைப்பட்டுக் கொண்டாள் .

நானா ? டி.வி. லே காலைலே காபி சாப்பிட்டுக்கொண்டே வேளுக்குடி கேட்பேன். பத்துலெந்து பதினிரண்டு ஸ்டார் மூவீஸ். இல்லேன்னா ஏ  எக்ஸ். என். 

குக்கர்லே வைக்கறது அரிசி கழஞ்சு கொட்டறது, கறிகாய் நறுக்கி அதுலே வைக்கறது எல்லாமே  யாரு ?  அவரா ? நீங்களா ? இல்ல பிப்டி பிப்டி ஆ ?


நீங்க கேட்கிறதை பார்த்தா, ஏதோ நான் ஜாலியா இருக்கிற மாதிரி, உங்களுக்கு தோன்றது. நான் சும்மா ஒன்னும் உட்கார்ந்து இருக்கமாட்டேன். எனக்கு மட்டும் பொறுப்பு இல்லையா என்ன ?

அதானே பார்த்தேன்.

நடு நடுவிலே உப்பு புளி சாம்பார் பொடி எல்லாம் கரெக்டா இருக்கா அப்படின்னு போயி, செக் பண்ணிடுவேன். 

அப்படியா.

1 மணிக்கு லஞ்ச் வரும்.

 என்ன வருமா ?

ஆமாம். ரெடின்னு சொன்னவுடனே தான் போவேன் டேபிளுக்கு.

லஞ்ச் சாப்பிடுவீங்க..அப்பறம் ?

சாப்பிட்டபின், ஒரு தூக்கம் போட்டாத்தான், ஈவினிங் வாக் பிரிஸ்க் ஆ போக முடியும் இல்லையா.

ஸோ நைஸ் டு ஹியர். நீங்க மேன் மெனெஜ்மெண்டிலெ எம்.பி. ஏயா !!

அதெல்லாம் ஒன்னும் இல்ல. இருந்தாலும் எனக்கும் லேபர் ரூல்ஸ் எல்லாம் நன்னாவே தெரியும்.

என்ன ?

அட் நோ டயம்,  அஞ்சரை மணி நேரத்திற்கு மேலே தொடர்ந்து ஒர்க் பண்ண கூடாது என்று ஹஸ்பன்ட் கிட்டே ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லி இருக்கேன்.இந்த டொமஸ்டிக் வயலன்ஸ் மாதிரி எந்த குத்தமும் வந்துடக் கூடாது இல்லையா ??

ஹெச் ஆர் மேனேஜர் அவர் இருந்தாரா நீங்களா ?

அவர்தான். ஆனா அந்த ஹெச்.ஆர். வேற ..

இது ?

ஹௌஸ் ரிகன்ஸ்டர்க்சன் பிராசஸ்.

சாயந்திரம் ?

வாக்கிங் போவேன். அதுக்கு முன்னாடி ஸ்ட்ராங் டீ போட்டுத் தருவார் பாருங்க.. சுகமோ சுகம்.

அவர் கூட வருவாரா??




சில நாளைக்கு கூட வருவார். இல்லேன்னா, அடுத்த நாள் என்னென்ன வேணும் அப்படின்னு கேட்டுகிட்டு சமத்தா மார்கெட்டுக்கு போயி வாங்கிண்டு வருவார்.  என்ன அவருக்கு பிடிக்குமோ அத அந்த பீல்ட் அவர் பார்த்துக்கலாம் அப்படின்னு அலௌ பண்ணிட்டேன். 

அப்ப அவரு அந்த நேரத்துலே அவர்  ஜோலியை பார்த்துக்கலாம் . இல்லையா...

எஸ். ஹீ வில் பி ஆன் ஹிஸ் ஓன் . .நோ ப்ராப்ளம். ஐ கிவ் ஹிம் புல் ப்ரீடம்.

பின்னே ?

அப்பறம் சாயந்திரம் தான் ஆறு மணிக்கு ராஜ் நியூஸ் , பின்னே, மண் வாசனை , கருத்தம்மா, தெய்வம் தந்த வீடு, ...

அதுக்கே 8 ஆகி விடுமே...

ஆமாம். நடு விலே அந்த ad  வர நேரம் பார்த்து குக்கர் லே திரும்பவும் எல்லாத்தையும் சுட வச்சுடுவேன்.  அது என்னோட ஜாப்,     ரிலேஷன் ஷிப் லே ஒரு    ஈக்விடி வேணும் இல்லையா.
சில நாளைக்கு மட்டும். இவரு பார்த்து பாரு.

அப்பறம் ?

சரவணன் மீனாட்சி, சூப்பர் சிங்கர் ...

அப்படியா...

அந்த டயத்திலே தட்டுலே இவர் எல்லாத்தையும் போட்டு கொண்டு வந்து வச்சுட்டு போயிடுவார். நான் போட்டதை , இருக்கறதை, வாயைத் திறக்காம, சூப்பர் சிங்கர் முடியறதுக்குள்ளே சாப்பிட்டு விட்டு , நானே என் தட்டை கழுவி வச்சுடுவேன். இவருக்கு ஒரு தொந்தரவு கொடுக்கக்கூட மனசு வராது. 

பிரமாதம்...என்னதான் இருந்தாலும் உங்க மனசு தங்கம் தான். அப்பறம்..?

ஆபீஸ்  சீரியல் வந்து விடும்.

கார்த்திக், ராஜி  காதல் சண்டை படு ஜோர் இல்ல.??

 ஆனா விஷ்ணு லக்ஷ்மி தான் செம நடிப்பு, போதாதா !! நடுவிலே அந்த காமெடி கூட்டம் வேற.  சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப் போயிடும்.

முடியறதுக்கு 11 ஆகிவிடுமே...

ஆமாம். ஆமாம்.  கண்ணை சுழற்றிண்டு வரும். அப்ப இவர் நான் கொஞ்சம் பி.பி.சி. பார்க்கரேனே அப்படின்னு கேட்பார்.  சரின்னு நானும் சொல்லிடுவேன்.

அப்படியா..

ஆமாம். காலைலேந்து கஷ்டப்படறார். கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னிண்டாத் தானே அடுத்த நாளைக்கு பிரிஸ்கா இருக்கலாம்.  காலைலே  6 1/2 க்கே இவருக்கு காபி வேணும். தானே போட்டுப்பார். எனக்கும் கலந்து வைப்பார்.

சரிதான்.  அப்ப  அவருக்கு நாள் முழுக்கத்தான்  வேலை அப்படின்னு சொல்லுங்க..

வீட்டிலே இருக்கும் போதுதானே   வேலை.
 நான் வாக்கிங் போனா ஒன்னும் இல்லையே.. நீங்க அந்த பாயிண்ட் பார்க்கலையா ?

ஆமாம். 

நான் தான் கரெக்டா டிரைன் பண்ணி வச்சுருக்கேனே .. அப்பறம் என்ன கஷ்டம் ?

எப்படி ? எனக்கு  இந்த டிரைனிங் எப்படி ன்னு கொஞ்சம் சொல்லி தரக்கூடாதா...

நான் சொல்லித் தரதை விட நீங்களே இந்த வீடியோவை பார்த்து கத்துக்கலாம்.

அவரையும் பார்க்கச் சொல்லணும். பெருமாள் தான் அவருக்கு நல்ல புத்தி கொடுக்கணும்.

கண்டிப்பா கொடுப்பார். ஆனா ஒன்னு மட்டும் நினைவிலே வச்சுக்கணும்.
ச்  ச்  அப்படின்னு தொட்டதுக்கெல்லாம் இச் கொட்டுவார். கண்டுக்க கூடாது.

சரி. 

என்ன ,,,  எல்லா ஹஸ்பன்ட் ம்  முதல் ஒரு வாரத்துக்கு கஷ்டம் பீல் பண்ணுவாங்க  .அதைப்பார்த்து நானே பாத்துக்கறேன் என்று மட்டும் சொல்லி விடக்கூடாது. உங்க இலட்சியத்திலே நீங்க குறியா இருக்கணும்.

சரி. 

யூ ஷுட் பி லயன் ஹாரட்டட் .you should be lion-hearted

புரியல்ல. 

 நம்ம நெஞ்சத்த  கொஞ்ச நாளைக்கு அந்த கர்பக்ரஹத்துலே இருக்கிற ஈஸ்வரன் மாதிரி கல்லா வச்சுக்கணும் அப்படின்னு சொல்றேன்.

சரி. 

கொஞ்சம் கொஞ்சமா, எல்லாமே ஒரு வாரத்துலே  அட்ஜஸ்ட் ஆயிடும். அப்பறம் அதுவே ஜாப் ஆயிடுத்துன்னா நம்ம விட நம்ம கட்டிக்கிட்டவர் நன்னாவே சமைப்பார்.

ஆஹா. இதத்தான், இதத்தான் நானும் எதிர்பார்த்தேன்.

இது கணவன் மார்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி. சீரியல் லே முதல் எபிசொட்.

நாளைக்கே இந்த வீடியோவைப் பார்த்து விடறேன். ஆனா கொஞ்சம் விட்டுப் பிடிக்கனுமோ ?



விடாதே பிடி.
தும்பை விட்டுட்டு வாலை பிடிக்கிறது வேஸ்ட் ஆப் டைம்.

ரொம்ப தாங்க்ஸ் மாமி.


Monday, February 10, 2014

அஞ்சு .கண்டத்திலேயும் அம்மா பாட்டு அதே தான் !!

நான் பாடுறேன், நீ தூங்குடா கண்ணா என்று ஏதோ ஒரு மொழிலே
தன் செல்லக்குழந்தையை பாடி தூங்கவைக்க
எல்லாம்  அம்மாவும் நினைக்கிறாங்க . ஆனா எல்லாம் தூங்குதா என்ன !!




இந்த குழந்தை மனதில் என்னவெல்லாம் தோன்றும் ?

சிரிக்கிறது என்றால் ரோஜா வருமோ ?
அழறது என்றால் சிங்கம் வருமோ ??

அம்மாவின் பாட்டுக்கு என்னவா எக்ஸ்ப்ரெஷன் தருது !!  அதன் ஒவ்வொரு சினுங்கல் நம்மை என்னவெல்லாம் செய்கிறது !!

அத்தை அடிச்சாளோ அமுதூட்டும் கையாலே
பாட்டி அடிச்சாளோ பால் வார்க்கும் கையாலே

அம்மாக்கள்  தங்கத் தமிழ் நாட்டிலே பாடுகிறோம்.

ஆராரோ ஆரியராரோ அம்புலிக்கு நீ 
அப்பாக்களும்  அப்பப்ப பாடுகிறோம் இல்லையா ?

அன்னிக்கு பேரனை தூங்க வைக்கும் பொறுப்பு   டர்ன் சட்டப்படி தர்மப்படி  என்னோடது.

அதனாலே பேரனை தூளி லே போட்டு,  தயார் செய்யும்பொழுது

புதுசா எதுன்னாச்சும் பாடுங்க
அப்படின்னு கிழவியோட கமாண்ட் வேற.
பெட்டர் ஹாப் கொடுமை இந்த 73 வயசுலேயுமா !!
தாங்கலேடா சாமி.

அத அப்பறம் பார்ப்போம்.
இப்ப குழந்தை தூங்கணும் . நம்ம பொறுப்பு இல்லையா..

இங்கே அங்கே எங்கேயும்
இப்புவியில் இருக்கும் அஞ்சு  கண்டங்களிலும்
அன்னை தன் செல்லக் குழந்தையை என்ன பாட்டு பாடி
தூங்க செய்கிறாள் ?
அது மாதிரி ஒரு டிராக் லே போவோம் .

கூகிள் ஆண்டவா துணை என்று பிரார்த்திக்கொண்டு
முதலில் ஜப்பானுக்கு சென்றேன்.

lullaby
ஜப்பானில் டாகேடா .

வேலைக்கு இருக்கும் ஒரு சிறிய பெண் எஜமானியின் குழந்தையை முதுகில் சுமந்தபடி வேலை செய்கிறாள். தன் மனக் கவலைகள் எல்லாத்தையும் இந்த கவிதையில் கொட்டித் தீர்க்கிறாள்.



ஆபிரிக்கா என்றாலே எனக்கு ட்ரம்ஸ் தான் நினைவுக்கு வரும்.
அங்கே ஒரு கிளாசிகல் சௌன்ட் இருக்கும் என்பதை என்னால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.
ஆப்பிரிக்கா நாட்டில் என்ன மாதிரி ஒரு வாத்சல்யம். !!
african lullaby




பிரெஞ்சு நாட்டில் பாரீசில் ஒரு அம்மாவுக்காக அதன் பாட்டி பாடுகிறாள்.
இந்த அம்மாக்களுக்கு மட்டும் அவங்களோட அம்மா இருந்துவிட்டால் கவலையே இல்லை. குழந்தையைப் பத்தி தொண்ணூறு பங்கு அவங்க கிட்ட கொடுத்துட்டு, அப்பாடி ரொம்ப டயர்டு என்று படுத்துக்கொண்டு விடுவார்கள். 
பிரான்ஸ் லேயும் அதே கதி தான். 
பாவம் பாட்டி மா.


 +Ananya Mahadevan        

  நான் சொல்றதை  அனன்யா மேடம் ஒத்துப்பாங்களா அப்படின்னு பொருத்துதான் பார்க்கணும். பழனி லேந்து வீபூதி வந்திருக்கு அப்படின்னு நீங்க எழுதியது படிச்சேன். சமயத்திலே வந்திருக்கே. .கொஞ்சம் வீபுதி தாங்க மேடம். குழந்தைக்கு இட்டு விடறேன். முருகா காப்பாத்து. இன்னிக்காவது நேரத்துக்கு தூங்க வை. 


French Lullaby பாடிப் பார்ப்போம்.

LET US RELAXA



ஊஹீம். நத்திங் டூஇங்க்
எனக்கு வேற பாட்டு பாடு அப்படிங்கறது செல்லம்.
SOUTH AMERICAN LULLABY இருக்காமே. அதை பாடுங்க என்று சொல்றா  கிழவி.

மெக்சிகோ நாட்டில் தாலாட்டு எப்படி அதையும் கேட்போம்.


Arriba del cielo hicieron tamales
Arriba del cielo hicieron tamales
Lo supo San Pedro y mandó a traer los reales
Lo supo San Pedro y mandó a traer los reales

A la rorrun niño a la rorron cha
A la rorrun niño a la rorron cha
Duermete niñito de mi corazón
Duermete niñito de mi corazón

Duermete niñito que tengo que hacer
Duermete niñito que tengo que hacer
Lavar tus pañales, y ponerme a coser
Lavar tus pañales, y ponerme a coser

A la rorrun niño a la rorron cha
A la rorrun niño a la rorron cha
Duermete niñito de mi corazón
Duermete niñito de mi corazón

ஏங்க  பையன் ஊருக்கு போய்விட்டு வந்தப்போ நம்ம ஒரு அரபியன் தாலாட்டு கேட்டோமே நினைவு இருக்கா ?

அதை பாடச் சொல்றியா.  சரி பாடறேன் என்று ஆரம்பித்தேன்.

ARABIAN LULLABY அரபு நாட்டில் தாலாட்டு. 



எனக்கு தூக்கம் அசத்துகிறது. பேரன் தூங்கவில்லை.
இந்த லல்லபி பாடுவோம். அந்த லல்லபி பாடுவோம் அப்படின்னு
பாடினால்
பாருடா...
இந்த கிழவி தான் தூங்கறா ..என்னமா குறட்டை விட்டுண்டு.


கடைசியா இத டிரை பண்ணுவோம்.
INDIAN LULLABY
ஓமனத் திங்கள் கடவோ .. அந்த
சின்னக் குயில் சித்ரா குரலில் என்ன மாயமோ !!




பாம்பே ஜெயஸ்ரீ
மன்னுபுகழ் கோசலை தன மணி வயிறு வாய்த்தவனே 

தாமரைக் கண்ணனாம் உரங்கீனம் சித்ரா பாடுவாளே அது ?

என்ன பாட்டு பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை.

அடுத்தது என்ன செய்யறது புரியல்ல.
மணி ஆல்ரெடி 1 ஆயிடுத்து.
இன்னும் 4 மணி நேரம் தான் இருக்கு.
எழுந்து கிழவிக்கு காபி போட்டு தரனும்.

பேராண்டி, !!!
என் செல்லப்பேரன் கடைசியில் இந்தப்பாட்டுக்குத்தான் தூங்குவானோ !!
உங்க ஆத்தாவுக்கு  அந்தக் காலத்துலே இதாண்டா பாடினேன். என்று துவங்கினேன்.




ஊஹூம்.  தூளி லே எழுந்துண்டு உட்கார்ந்து
கண் கொட்ட கொட்ட இன்னும்.. என்னை பார்த்து என்ன சிரிப்பு !!
எப்போடா நீ தூங்கப்போறே !!

அத்தை அடிச்சாரோ !! என்று பாட ஆரம்பித்தேன்.

  'இன்னும் நீ பாடினேன்னா நானே உன்னை அடிச்சுடுவேன். 
நீ படு.. எனக்குத் தூக்கம் வரும்போது தூங்குவேன்.            '


அஞ்சு .கண்டத்திலேயும் அம்மா பாட்டு தாலாட்டு அதே பாட்டு தான்

படும் பாடும் அதே தான்.

நீங்க படுங்க.. அவன் தூக்கம் வந்தா தானா தூங்குவான் என்கிறாள் கிழவி.

அத 10 மணிக்கே சொல்லி இருக்கலாம் இல்லையா...




Friday, February 7, 2014

சைலென்ட் மோடில் மனசை வச்சுக்கய்யா


மௌனம் என்பதை சொல்ல ஒவ்வொரு மொழியிலும் அழகான வார்த்தைகள்.
நெஞ்சம்  மௌனம். ஆயினும் பேசுகிறது.

நெஞ்சம் பேசியதை நா உரைத்தது எப்படி !!

முதலில் மலையாள மொழியில்




நம் தாய் மொழியாம் தமிழில்








இந்தியில்
நிலவு, வானம் , சூரியன், சந்திரன் ,நக்ஷத்திரம் எல்லாமே மௌனம் ஆனதே
என் மனம் மட்டும் ஆக வில்லையே...
வருந்துவது படத்தில் தேவ ஆனந்த்
பின் அணியில் பாடுவது எஸ்.டி. பரமன்.
ALL HAVE GONE SILENT
 .BUT NOT MY MIND. SINGS S.D.BURMAN.






ஆங்கிலத்தில்
the sound of silence



அதெல்லாம் இருக்கட்டும்.

நெஞ்சில் மௌனத்தை எப்படி கொணர்வது ?




மனதிற்குள் இருக்கும் செல்லை சைலென்ட் மோடில் போட்டு விடுங்கள்.

PRACTISE SILENCE AS AN ART TO CONSERVE YOUR ENERGY.

Tuesday, January 21, 2014

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன





இன்னிக்கு கல்யாண சாப்பாடு, 


காரட் பொரியல் , கதம்ப சாம்பார், சௌ சௌ கூட்டு, ஆப்பிள் பச்சடி, சேமியா பாயசம், மெது வடை,, அப்பளம், மைசூர் ரசம், பொடடோ சிப்ஸ், சோன் பப்டி, எல்லாமே 

கிழவி , உண்ட மயக்கம் ரொம்ப இருக்குது போல. கொஞ்சம் தூங்கிட்டு வரேன் என்று கிளம்பினாள் 

என்ன அவசரம் !!

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன 

என்று பாட ஆரம்பித்தேன். 

என்ன இது ? எழுபத்தி இரண்டு முடிஞ்சுடுத்து. 22 ஞாபகம் வருதோ ??
என்று சிரித்தாள் கிழவி. 

இல்லேடி, இந்த சரத் பாடினதை சொன்னேன். 




காலிங் பெல் அடிக்குது.  டிரிங்....டிரிங்.....


ஹாப்பி வெட்டிங் டே  

அப்படின்னு பாடிக்கினெ
தாத்தா பாட்டி 46வது திருமண நாள் அப்படின்னு நினைவு வச்சுக்கிட்டு,
சோனியா வும் சரத் சந்தோஷும்  வர்றாங்க.



தாத்தா பாட்டி, 

நாங்க உங்களுக்காக ஒரு பாட்டு பாடப்போறோம் 



அடடா // இன்னிக்கு ஒரு கச்சேரி வேறயா ...

ஜமாயுங்க. என்றேன் நான். 


அதுக்கு முன்னாடி இந்த ஐஸ் சாக்கலேட் கேக் சாப்பிடுங்க என்றேன்.






sonia and
sarath santhosh.
together
தில்லானா தில்லானா  




சரத், சோனியா. உள்ளிட்ட 

சூப்பர் சிங்கர் 4 லே தேர்ந்து எடுக்கப்பட்ட பைனலிஸ்ட் ஐந்து பேருக்கும்  


எங்களது இதயங்கனிந்த பாராட்டுக்கள்.  நல வாழ்த்துக்கள்


திவாகர் , பார்வதி, சுபான், சரத், சோனியா 

இவர்கள் எல்லோருமே 

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இசை வானில் 

மின்னப்போகும் 

நட்சத்திரங்கள்


ஆனா இதிலே பைனல்சிலெ யார் பர்ஸ்ட் வருவாங்க..யார் செகண்ட் ? 

எல்லாமே மக்கள் கையிலே தான் இருக்கு. 

இருந்தாலும் ...அப்படின்னு வூட்டு கிழவி  இழுக்குது. 


நான் சொன்னேன்;

பைனல்ஸ் லே 
என்னோட  சாய்ஸ். 


சோனியா, பார்வதி, சரத் .  

நோ. நோ. அப்படின்னு சத்தம் போட்டாள்  கிழவி.  

பின்னே எப்படி? உன்னோட  சாய்ஸ் என்ன ?  என்றேன் நான்  

சரத், பார்வதி, சோனியா. 

இல்லேன்னா 

சரத், பார்வதி, சுபான். 

என்றாள் இவள். 

அப்ப திவாகர் ?

அவரு தனி உலகம் ..  அதுக்கு யாருமே நிகர் இல்லைங்க.

அன்னி தேதி சி.எஸ்.ஜெயராமன், பி.யூ.சின்னப்பா  போல குரலுங்க... அதுக்கு ஒரு 
ஸ்பெசலா அவார்டு தரனுங்க.  ரஹ்மான் சார் மனசு வச்சார் அப்படின்னா இவரு எங்கேயோ போயிடுவாரு.  இவரோட உழைப்புக்காகவே இவருக்கு ஒரு தனி ரிகக்னிஷன் தரனும். 

அப்ப சோனியா என்ன ஆறது ? என்று இறைந்தேன் நான். 

சோனியாவுக்கு நோ சான்ஸ். என்று உள்ளே நுழைந்தார் என் நண்பர் வெங்கடராமன்.

அவர் சொல்ற சோனியா வேற சோனியா என்று கிசு கிசுத்தாள் வூட்டுக் கிழவி.

என்ன சண்டை இன்னிக்கு என்று உள்ளே நுழைந்தார் வெங்கடராமன், என் பிரண்டு. 

நீங்க சொல்லுங்க நியாயத்தை என்று ஆரம்பித்தேன். 
ஆதியோட அந்தமா அரை மணி நேரத்திற்குள்ளாகவே என் பிரசங்கத்தை .
முடித்தேன்.என் வாதத்தை.

நோ நோ.  இதெல்லாமே இல்லை. என்றார் காலனி பிரண்டு. 

பின்னே எப்படி ?

பேப்பர் லே வேற இல்ல போட்டு இருக்கு என்று ஹா ஹா என்று சிரித்தார். 

என்ன ?

நாடு முழுக்க சர்வே பண்ணினதிலே 
இன்னிக்கு தேதியிலே 

மோடி, கஜ்ரிவால், சோனியா தான். 

அப்படித்தான் இல்லையா 
எல்லா டி.வி. யும் சொல்லுது. 
முக்கியமா ஐ.பி. என். டி.வி. சொல்லுது. 

சரிதான். 
ஆனா இது நமக்கு வேணாம் ங்க  ...

நம்ம இந்த இசை உலகத்துலேயே இருந்துடுவோம். 







Friday, January 10, 2014

Vijay TV அனந்த் சார் கிட்டே ஒன்னு கேட்கணும்.

அனந்த் சார் கிட்டே ஒன்னு கேட்கணும்.

எனக்கு ஒரு உண்மை தெரியனும்க....

நயாகரா ஏன் உறைஞ்சு  போயிடுத்து.

எப்படி இந்த மாதிரி பனி பாறையா  ஆயிடுச்சு ?







நாங்க ஜூலை 2013 லே நேரடியா பார்த்தபோது இப்படி இல்ல இருந்துச்சு!!



இந்த கொட்டுகின்ற நயாகரா நீர்விழ்ச்சி கூட நின்னு போய்,
ஸ்தம்பிச்சு போய் பனிக்கட்டி யா போயிடுச்சே !  ஏன் ??

இந்த விஜய் டி.வி.லே சோனியா பாடல்
கேட்டபின்னே தான்
தெரிய வருது.

ஒரு வேளை இந்தனை வெள்ளமும், அருவியா பாஞ்ச நீர் வீழ்ச்சியும் சோனியா பாட்டை கேட்டு பிரமிச்சு போய், அப்படியே நிக்குது போல .. ?




niagara


ra ra

ra ra



ஆர்க்டிக்லேந்து வந்த குளிர் காற்றுலே இறுகிப்போன நீர் வெள்ளம் அங்கே.  இசையிலே கூட உருகாத பனிக்கட்டிகள் இங்கேயா ??




ஆனா, இந்த பனிக்கட்டி எல்லாமே  உருகி திரும்பவும் வெள்ளம் போல நீர்
பெருகி வரும்.
திரும்பவும் அந்த நயாகரா ஒரு நாள்  பார்க்க முடியும்.





இன்னும் கொஞ்ச நாட்களிலே வெய்யில் அடிக்கும்.
இந்த பனிக்கட்டி எல்லாமே கரைஞ்சு போயி,
முன்னம் போலேநயாகராவிலே  நீர் பாயும்.

ஆனா, மனுசங்க மனசு கரைஞ்சு உருகி, சோனியாவுக்கு வோட்டு போடுவங்களா ?

தெரியலயே !!

அனந்து ஸாரு என்ன சொல்வாரு ?

இசை வாழ்க.


Tuesday, December 31, 2013

சதமானம் பவதி Happy New year.


HAPPY NEW YEAR  2014

புத்தாண்டு 
 புதிய திருப்பங்களைத் தரட்டும்.

சதமானம் பவதி. 

எ வெரி ஹாப்பி நியூ இயர் 

நூறு வயது வாழ வாழ்த்துகிறோம் 

சுப்பு தாத்தா.
மீனாச்சி பாட்டி. 

பெரிய வாழ்த்து மடல் பெற இங்கே செல்க.