Pages

Wednesday, August 28, 2013

இன்று கண்ணன் பிறந்த நாள் . கோகுலாஷ்டமி.

 
Posted by Picasa

இன்று கண்ணன் பிறந்த நாள் .  கோகுலாஷ்டமி.


                     
Vasudeva sutham devam,
Kamsa Chanoora Mardhanam,
Devaki Paramanandam,
Krishnam Vande Jagat Gurum. 1

Salutations to the teacher of the world, Krishna,
Who is the God who is the son of Vasudeva,
Who killed Kamsa and Chanoora,
And who gave immense joy to Devaki.

Athasee pushpa sangasam,
Hara noopura Shobitham,
Rathna kankana keyuram,
Krishnam Vande Jagat Gurum. 2

Salutations to the teacher of the world, Krishna,
Who decorates himself with flowers of Athasee.
Who shines in garlands and anklets that he wears.
And who has a bangle made of jewels in his right hand.

Kutilalaka samyuktham,
Poorna chandra nibhananam,
Vilasath kundala dharam,
Krishnam Vande Jagat Gurum. 3

Salutations to the teacher of the world, Krishna,
Who is blessed with black curly hair,
Who is very similar to the full moon,
And who shines in his ear drops.

Mandhara gandha samyuktham,
Charuhasam chathurbhujam,
Barhi pinjava choodangam,
Krishnam Vande Jagat Gurum. 4

Salutations to the teacher of the world, Krishna.
Who has the sweet scent of mandara flowers,
Who has pretty smile and four arms,
And who decorates is hair with peacock feathers.

Uthfulla padma pathraksham,
Neela jeemutha sannibham,
Yadavaanaam siro rathnam,
Krishnam Vande Jagat Gurum. 5

Salutations to the teacher of the world, Krishna,
Who has eyes resembling the fully open lotus flowers,
Who has the blue colour of rich clouds,
And who is the chief gem of the clan of Yadavas.

Rukmani keli samyuktham,
Peethambara shobitham,
Avaptha thulasi gandham,
Krishnam Vande Jagat Gurum. 6

Salutations to the teacher of the world, Krishna,
Who is engaged in playing with Rukmani,
Who shines in yellow silks,
And who is attracted by scent of ocimum.

Gopikaanaam kucha dwandwam,
Kunkumankitha vakshasam,
Sriniketham maheshwasam,
Krishnam Vande Jagat Gurum. 7

Salutations to the teacher of the world, Krishna.
Who is embraced by the two busts of Gopis,
Whose chest has the marks of saffron,
Who lives with Lakshmi and has a big bow.

Sree vathsam mahoraskam,
Vanamala virajitham,
Sanka chakra dharam devam,
Krishnam Vande Jagat Gurum. 8

Salutations to the teacher of the world, Krishna,
Who has the mole Sri Vathsa on his chest and greatly enjoys,
Who is decorated by garlands of forest flowers,
And who holds the conch and the holy wheel.

Krishnashtakamidham punyam,
Prathar uthaya ya padeth,
Koti Janma krutham papam,
Smaranath thasya nasyathi.

If one reads this as soon as he awakes in the morning,
This divine octet of Lord Krishna without fail,
Sins committed in billions of lives,
Would be destroyed, if one thinks about him.



"Some artwork courtesy of The Bhaktivedanta Book Trust International, Inc. www.krishna.com. Used with permission"

Monday, August 12, 2013

உங்களுக்கு மூளை இருக்கா ?

ஒரு துறவி வெள்ளம் பொங்கி வரும் நதியோரம் சென்று கொண்டு இருந்தாராம். பின்னே வருவது வாய் பொத்தி கை கட்டி நடக்கும் அவரது சிஷ்யன்.
எதோ சத்தம் கேட்டு திரும்பியபோது, நதியில் ஒருவனோ ஒருவளோ தத்தளிக்கும் காட்சி.  அது அவனா அவளா என்று நினைக்கும் தருணமும் இல்லை.
துறவி நதியில் குதித்தார்.  ஒரே முயற்சியில் அவளைக் கரை  ஏற்றினார்.
பின் தன்வழியே செல்லலானார். 
பின்னால் வந்த சிஷ்யன் முனுமுனுத்துக்கொண்டே வருகிறான்.
அவனுக்கு மனசுக்குள்ளே சஞ்சலம். துறவி காஷாயம் உடுத்தியவர் உலகத்தை துறந்தவர் ஆசையை அறுத்தவர் பெண்ணை தொட்டுவிட்டாரே ????
துறவி திரும்பி பார்த்தார்.   சொன்னார்:
" நான் அப்போதே அவளை விட்டு விட்டேன். நீ இன்னுமா அவளை தூக்கிக் கொண்டு இருக்கிறாய் ?:
கதை என்ன நீதி சொல்கிறது ?
கடந்த கால நிகழ்வுகளில் நல்லவை, அல்லவை அனைத்துமே சங்கமம். தெரிந்தோ தெரியாமலோ செய்த உதவிகளும் அநேகம். செய்த உதவிகளால் நேர்ந்த உபத்ரவங்களும் அநேகம்.
சென்றவை சென்றுவிட்டன. கொட்டியது பால் எனினும் அதை திரும்ப அள்ள இயலாது.  ஆயினும் அதைக்குறித்து விசனப்படுவது , சினம் கொள்வது, சிந்தையை சிவன் பால் கொள்ளாது திசை மாறி தன்னையும் பிறரையும் நொந்துகொள்வது  எல்லாம் சரிதானா ?
ஆன்மீகக் கதை போதும் அய்யா என்று நீங்கள் சொல்வது எல்லாம் காதில் விழாமல் இல்லை.

கிழவனும் கிழவியும் பூங்காவில் அன்றாட வாக்கிங் போய்க்கொண்டு இருந்தார்கள்.





 நடுவில் ஏதோ ஒரு  கருத்து வேறுபாடு.  கிழவிக்கு கோபம் .

உங்களுக்கு மூளை இருக்கா என்று இரைந்தாள். 

கிழவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

பக்கத்தில் போகிறவர்கள் நின்று பார்த்தார்கள்.  புன்னகைத்தார்கள்.

" இதை நீ சத்தமாய் கேட்டுத்தான் ஆகவேண்டுமா ? இப்ப என்னவோ புதுசா கண்டு பிடித்தாற்போல் பேசுகிறாய். ?"  

எப்ப உன்னை கலியாணம் செய்து கொண்டேனோ அப்போதே உனக்குத் தெரிஞ்சு இருக்கணும் இல்லையா ?  ?  "


"போகப்போக உங்களுக்கு திமிர் ஜாஸ்தியாய் போயிடுத்து.." கொலச்டேரால் 350 க்கும் மேலே போயிடுத்தோ என்னவோ ? ஸ்டோர்வாஸ் சாப்பிடுகிறீர்களா இல்லையா ?  "

"  திமிர் வந்தது சகவாச தோஷம்.  அம்பது வருஷ பந்தம் இல்லையா..??"

"சரி, சரி,  சத்தமா பேசாதீக ... சீக்கிரம் வீட்டுக்குப்போய் ஒரு வாய்  டீ போட்டுத் தாங்க "

என்று ,

கிழவனின் வாயை அடக்கினாள் கிழவி.

"எஸ் மேடம் .." என்று அடங்கினார் கிழவர்.

( இது நாங்களா என்று பலர் ஐயப்பாடு கொண்டால் அதில் வியப்பு ஒன்றுமில்லை.  யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று யார் சொன்னாங்க... மறந்து போச்சே !!  இளங்கோ சார்! வாங்க ! +)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பின்னே வருவது நேற்று முந்தாநாள் நடந்த கதை அல்ல  இது.உண்மை.

எனது தஞ்சை நண்பரின் சதாப்தி விழா.  எண்பது வயதினைக் கடந்த நல்ல இதயம் படைத்த நண்பர்.

எல்லா வைதீக முறையான ஹோமங்களும் சிறப்பாக நடை பெற்றன. கண்டு களித்தோம்.   எங்களை விட என்னும் 8 வயது பெரியவர் அவர். அவர் மனைவி அவருக்கென்றே பிறந்தவர்.  தர்ம பத்னி என்பது அவருக்குத்தான் உண்மையாகப் பொருந்தும்.  அன்புக்கும் அறனுக்கும் சான்றாக விளங்கியவர் அவர். அவரால் நன்மை அடைந்த குடும்பங்கள் பல.

எனது தஞ்சை கால நண்பர்களை பார்க்க முடிந்தது .  நிழல்கள் ரவி, (எனது தஞ்சை அலுவலக 1962ம் வருஷ பாஸ் அவர்களின் புதல்வர், என் நண்பரின் உறவினர் ) வருவார் என நினைத்து இருந்தேன். அவர் வரவில்லை.  

சதாப்தி திருமணம் முதல் திருமண நிகழ்ச்சியைபோலவே இருந்தது.  மாலை மாற்றுதல், பழம் பால் தருதல், ஹோமங்கள், மாங்கல்ய தாரணம். எல்லாமே.
இந்த வருண ஜபம் செய்து அந்த நீரால் அபிஷேகம் செய்வது இந்த அறுபது, எழுபது, எண்பது திருமணங்களின் சிறப்பு .

ஆசிர்வாதம் பெற்று மகிழ்ந்தோம்.

அடுத்தது சாப்பாடு.  ஸ்ரீ பாதுகா காடரிங் வைஷ்ணவ சம்பிரதாய படி சாப்பாடு.
போளி, புளியோதரை, மெது வடை, க்ஷீரான்னம் , பாயசம் எல்லாமே பிரமாதம்.  +Tulsi Gopal  அவர்கள் அறுபது கல்யாண நிகழ்ச்சியிலே சாப்பிட்டது நினைவுக்கு வந்தது.

சாப்பிட்டபின் நண்பரின் மூத்த மகன் எங்களுக்கு ஒரு அன்புப்பரிசு தனியே வந்து என்னிடம் தந்தார்.
என்ன என்று பார்த்தேன்.  தேங்காய், வெற்றிலை பாக்கு, பக்ஷணம் தான் என நினைத்த எனக்கு, ஆச்சரியம்.
என் மனைவிக்கு ஒரு விலை உயர்ந்த புடவையும் எனக்கு ஒரு ஷர்ட் துணியும்.

ஆஹா. ஆஹா.  !!

நூறாவது வயது பங்க்ஷன் இன்னும்  ரொம்ப நாள் இருக்கா ? என்று விசாரித்தேன்.

என்ன யாரோ கூப்பிடுகிறார்கள் !!
சாட் ல் திரு +Gopalakrishnan Vai.  அழைக்கிறார். என்ன வென்று பார்க்கிறேன்.












Wednesday, July 31, 2013

சம்மர் சோனோடா

சம்மர் சோனோடா .. இன்னிக்கு போக்கப்போறோம் என்றாள் தர்ம பத்தினி.

அது என்ன சொனாடோ, சோன் பப்டி மாதிரி ..அது என்ன ரேசார்டா , என்ன சாப்பாடு என்று கேட்டேன்.

சாப்பாடா !!  மிகப்பெரிய விருந்து.. என்றாள்.

சேமியா பாயசம், புளியோதரை, பிசி பேலா ஹூளி, மெது வடை , சிப்ஸ் எல்லாம் இருக்குமோ ?

இல்லை ...இது இசை விருந்து.  நம்ம வீட்டுக்கு வரும் பியானோ மாஸ்டர் காரி மாடிசன் அவர்கள் தனது எல்லா சிஷ்ய புள்ளைங்களுடன் ஒரு ப்ரோக்ராம் பண்ணுகிறார் .  மத்தியானம் 1 மணிக்கு கிளம்பி போனால், கரெக்டா இருக்கும் என்றாள்.  எடிசன் பக்கத்திலே ஒரு பிரபல பியானோ கம்பெனி இதற்கான ஏற்பாட்டைச் செய்து இருக்கிறது.

தாமஸ் ஆல்வா எடிசனைத் தான் எனக்கு தெரியும். இது என்ன எடிசன் ? யோசித்துக்கொண்டு இருக்கும்போது !!!

என் பெண்ணோ என்னைக் கூர்ந்து கவனித்தாள்.  உன் ஹேர் ஸ்டைல் சரியா இல்ல. என் பிரண்ட்ஸ் எல்லாம் வருவாங்க.  அவங்களுக்கு உங்களை இன்ட்ரொடுயுஸ் பன்னனும்லே ... இது மாதிரி அசிங்கமா ஹேர் ஸ்டைல் ..!!1  எனக்கு மானம் போயிடும்.  போய் அர்ஜெண்டா ஒரு ஹேர் கட் பண்ணிண்டு வாங்க.  ஏங்க !!   இவரையும் நீங்க கூட்டிண்டு போய்ட்டு வாங்க அப்படின்னு அவ , பாவம் அவ ஆத்துக்காருக்கு , என் மாப்பிள்ளைக்கு ஒரு பிடி வாரான்ட் இஸ்யு பண்ணினாள்.

எனக்கு ஒன்னும் ஹேர் கட் வேண்டாம். ஹேர் சுத்தமா இல்ல. மொட்டையா இருக்கு. இதுலே அனாவசியமா ஒரு 15 டாலர் கொடுத்து என்ன ஸ்டைல் வேண்டி இருக்கு.?   நான் என்ன ஹன்சிகாவோடயா நடிக்கபோறேன் !!  ஒரு சங்கீத கச்சேரிக்கு போக இத்தனை கலாட்டாவா என்று இரைந்தேன்.

இது ஒன்னும் உங்க மைலாப்பூர் அகாடமி இல்ல. சொனோடா சம்மர். ஆபெரா சிங்கர்ஸ் எல்லாம் வந்திருப்பா. அப்பறம் சஞ்சுவோட ப்ரெண்ட்ஸ் அல்லாருமே அவாவா அப்பா அம்மா வோட வந்திருப்பாங்க... இவ்வளவு அசிங்கமா இருந்தா அவங்களுக்கு எப்படி உங்களை இன்ட்ரொட்யூஸ் பண்றது ?

அப்ப நான் வல்ல...என்று பேக் அடித்தேன்.

சரி.. போனாபோறது .. வரட்டும்.  ஆனா வந்தோமா சொனோடா கேட்டுட்டு சும்மா இருக்கணும்.  அனாவசிய அரட்டை கூடாது என்றாள்.

சுமார் 2 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது.


THE GREAT AMERICAN PIANO STORE  முன்பாக.

அது ஒரு பியானோக்கள் விற்பனை கூடம்.  அங்கு ஒவ்வொரு வாரமும் பியானோ வல்லுனர்கள் தங்கள் மாணவர்களுடன் அங்கு வந்து ஒவ்வொருவரும்  பர்பார்மன்ஸ் தருகிறார்கள்.

எடுத்த எடுப்பிலே அந்த கம்பெனி ஓனர் ஒரு பியானோவின் நுணுக்கத்தைப் பற்றி விளக்கினார்.   மேஜருக்கும் மைனருக்கும் ஒலி வித்தியாசம் எப்படி வருகிறது என்பது பற்றி பேசினார் என நினைக்கிறேன்.  அவரது அக்சென்ட் புரிவதற்குள் அவர் தனது பேச்சை முடித்து விட்டார்.

காரி மாடிசான் தனது பியானோ புலமையை ஒரு இரு 10 நிமிசத்திலே பிச்சு உதறி விட்டார்.


அதர்குப்பின்னே செலஸ்டா மாண் ஒரு விசேட விருந்தினர். பிலெடெல்ப்பியா நகரத்தில் ஸ்பானிஷ் ரெபார்டையரில் சிறப்புடையவர்.  அவரது இரு பாடல்களும் வியக்க வைத்தது.


Tango de lo Menegilda (Federico Chueca)

Palomica aragonesa  Jose Serrano


எனக்குள்ளே ஒரு எண்ணம்.  நம்ம கச்சேரி எல்லாமே ஆரம்பிக்கும்போது ஒரு ஹம்சத்வனிலே வாதாபி கணபதிம் பஜே இல்லேன்னா நாட்டை லே ஒரு வர்ணம் பாடிட்டு தான் மத்த பாடல்கள். இங்கே எப்படி.?

அந்த கன்வென்ஷன் இங்கே கிடையாதாம்.


அதற்கு பின் ஒவ்வொருவராக காரி மாடிசன் அவர்களின் மாணவர்கள் தங்கள் பியானோ பாடங்களை வாசித்து காண்பித்தார்கள்.  ஒரு அஞ்சு வயது பையன் முதல் எனது பேத்தி வரை அவரவர்கள் துறையிலே லெவல் லே பியானோ வாய்பாட்டு என்று அடுத்த 2 மணி நேரத்திற்கு ஜமாய்த்தார்கள்.

அவங்க அப்பா அம்மா, தாத்தா பாட்டி எல்லோருக்கும் மகா சந்தோஷம்.  பலர் தனது காமிராவில் வீடியோ எடுத்துக்கொண்டும் கை தட்டியும் உச்சி முகர்ந்தும் பாராட்டினார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவிலும் கரகோஷம்.


இது போன்ற நிகழ்ச்சிகள் சென்னையில் நடை பெறுகிறதா என்று தெரியவில்லை.  லக்ஷ்மண் சுருதி செய்கிறார்கள் போல் தோன்றுகிறது.

எனது பேத்தியின் பர்பார்மென்ஸ் வழக்கம் போல மிக நன்றாக இருந்தது.

நீங்கள் இப்போது கேட்பது ஒரு இத்தாலியன் மொழி பாடல் 



O del mio dolce ardor
Bramato oggetto,
L'aura che tu respiri,
Alfin respiro.

O vunque il guardo io giro,
Le tue vaghe sembianze
Amore in me dipinge:
Il mio pensier si finge
Le più liete speranze;
E nel desio che così
M'empie il petto
Cerco te, chiamo te, spero e sospiro.
 
கிரிஸ்போர்டு வான் கலக் இசை அமைத்த பாடல் இது.  இவர் 18 ம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர். 


டிராய் நகர இளவரசன் பாரிஸ் , பாரிஸ் அண்ட் ஹெலன் என்னும் ஆபெரா வில்
பாடும் பாடல் இது.

கிரேக் இதிகாச காவியங்களில் ஹோமர் எழுதிய இலியட் . 
அந்த காவியத்தில் ஒரு காட்சி.

மூன்று தேவதைகள் பாரிஸ் முன்னே தோன்றி தம் மூவரில் மிகவும் அழகு 
யாரென கேட்கிறார்கள். தன்னை அழகு என்று சொன்னால் ஒரு பரிசு
தருவதாக அவர்கள் வாக்களிக்க, 

பாரிஸ் அவர்களில் அப்ரோடைட் எனும் பேருடைய காதல் தேவதை தான் மிக 
அழகு என்று உரைக்கிறான். 

பாரிஸ் க்கு பரிசாக உலகத்திலேயே மிகவும் அழகான பெண்ணான ஸ்பார்ட்டா 
ராஜ்யத்தின் ராணி ஹெலன் உறுதி அளிக்கப்படிக்கிறான். 

ஆபெரா துவங்கும்போது, பாரிஸ் ஸ்பார்டா ராஜிய கடற்கரைக்கு வந்து, 
தன கனவுக் கன்னி ஹெலனுக்காக காத்திருக்கும் நேரம் இப்பாடலைப் 
பாடுவதாக அமைந்திருக்கிறது.  



    O my  sweet ardor,and desired object.
    The air which you breathe,
    At last I breathe.
    
    Wherever I turn my glance
    Your lovely features
    Paint love for me:
    My thoughts imagine
    The most happy hopes,
    And in the longing which
    Fills my bosom
    I seek you, I call you, I hope, and I sigh.
    
    
    
    
    
    
    
    ஓ என் மனமிசைந்த மணமே !! 
    நான் விரும்பிய பொருளே !!
    
    
    நீ சுவாசித்த காற்றையே தானே பின் 
    நான் சுவாசிக்கின்றேன். 
    
    
    எங்கெலாம் நான் பார்க்கிறேனோ 
    அங்கேலாம் உனது அழகிய அங்கங்கள் 
    எனக்கென ஒரு காதல் ஓவியத்தை 
    தீட்டுகின்ற பொலிவு தான் என்னே !!
    
    
    எண்ணங்கள் எனது கற்பனையிலே 
    இன்ப எதிர்பார்ப்புகளை என் 
    இதயத்தில் நிரையச்செய்கின்றனவே. 
    
    
    நீ வேண்டுமென உன்னை நான் கூப்பிடும் குரலை 
    நீ கேளாயோ ?
    என் பெருமூச்சை நீ கேளாயோ 
    
    
    
    
    
    
    
    
    
    
    பாடல் காதலில் தோய்த்த சோக சங்கீதம். 
    சுகம். 
    நான் பாடாத பாட்டா அப்படின்னு நினைத்துக்கொண்டு வந்தேன். 
    *************************************************************

    முடிந்து வெளிலே வரும்போது வயிறு நானும் இருக்கேன் இருக்கேன் அப்படின்னு எல்லாருக்கும் சொன்னது.

    நேரே எடிசன் சரவணா பவன் போனோம்.  உள்ளே நான் தான் முதல்லே நுழைந்தேன்.

     அங்கே நம்ம தமிழ் பொண்ணு பார்த்தா சாப்ட் வேர் படித்த ஐ.டி. ப்ரோபசானல் மாதிரி ஒரு தோற்றம்.   ஜீன்ஸ் பாண்ட் பனியன் போட்டு, கையில் ஒரு குறிப்பு புத்தகம் பேனா இத்யாதி...

    என்னை வழி மறித்து எத்தனை பேர் என்றாள். முதலில் எனக்கு புரியவில்லை.  நான் ஒல்லியாத்தான்/இருக்கேன் என்னைப்பார்த்து எத்தனை பேர் அப்படின்னா என்ன அர்த்தம்?


    பிறகு மாப்பிள்ளை தான் சொன்னார். அவள் ஹோஸ்டஸ்
     யார் எங்கே உட்காரணும் அப்படின்னு சீட் ஆர்கனைசராம்.

    நான் அஞ்சு பேர் என்றேன்.  எங்களுக்கு ஒரு தனி டேபிள் ஒதுக்கப்பட்டது.

    எனக்கு  சப்பாத்தி, வூட்டுக்காரி மசால் தோசை, பெண் 14 சின்ன இட்லி , பேத்தி ஆனியன் தோசை, கூடவே  நான் இரண்டு மெது வடை, வூட்டுக்காரி தயிர் வடை மாப்பிள்ளை தோசை ,காபி,  எல்லாம் சாப்பிட்டோம்.   மொத்த பில் 80 டாலர் கிட்டத்தட்ட.. சீப் என்றாள் என் பெண். நான் இந்திய ரூபாயில் கணக்குப்போட்டேன். ரூபாய் 4800 ஆ பில் !!! தலை சுற்றியது. இன்னொரு காபி சாப்பிட்டேன். மைலாபூர் சரவணா பவன் போல இங்கும் சாப்பிட்டபின் சோம்பு கற்கண்டு மிக்சர்.

    வெளிலே வந்த உடனே நான்  எங்க இப்ப நெக்ஸ்ட். என்றேன்.

    இன்னிக்கு சனிக்கிழமை இல்லையா.  நவ க்ருஹம் சுத்தணும். ஹனுமார் தரிசிக்கணும். இப்ப நம்ம ச்வீடிஸ்போரோ என்ற ஒரு இடத்துக்கு போறோம். அங்க ஒரு ராஜ கணபதி கோவில் இருக்கிறது.  இன்னும் ஒரு மணி நேரத்திலே போயிடலாம் என்றார் மாப்பிள்ளை.

    எடிசன் லேந்து ஸ்வீடிஸ் போரோ ஒரு 50 மைல் இருக்கலாம். ஆடோ கியர்லே போட்டுட்டா அதுவே ட்ராபிக்குக்கு தகுந்தபடி அட்ஜச்ட் பண்ணிண்டு வேகமா கார் போகிரது.

    நான் காரிலேயே தூங்கிப்போய் விட்டேன்.


    தொடரும்.....

    SVEDESBORO, NEW JERSEY 
    ராஜ கணபதி கோவிலின் வலைத்தளம் இது.

    பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருங்கள்.


    Wednesday, July 24, 2013

    ஆனந்த நயாகரா வெள்ளம்

    நியூ ஜெர்சியிலிருந்து சிகாகோ வழியே நாங்கள் வந்த வான் வழிப் பயணத்தை பற்றி அறியாதவர்கள் இங்கே சென்று படித்துவிட்டு பிறகு இங்கே வரவும். 

    நயாகரா நகரம் பக்கத்துலே வரும்போது பார்த்த வியூ. 


    நாங்கள் தங்கிய ஹோட்டல்.


    கிட்டத்தட்ட ஒரு பதினிரண்டு மணி இரவு ஹாம்டன் இன் ஹோட்டலுக்குச் சென்றோம்.  ஏகப்பட்ட கார்கள். ஒரு வழியா பார்கிங் ஸ்லாட் கண்டுபிடித்து
    ஹோட்டலுக்கு உள்ளே நுழைந்தோம்.  நம்ம பக்கத்திலே போன உடனே கதவு தானா திறக்கிறது. உள்ளே போன பின்னே மூடிகொள்கிறது.  அந்தக் காலத்து மாயா பஜார் படம் நினைவுக்கு வந்தது.

    ரிசெப்ஷன் ஹாலில் அமர்ந்திருந்த நாட் ஸோ ஓல்டு லேடி எங்களை ஹாய் என்று வரவேற்றாள்.   ஏற்கனவே ஆன் லைனில் ரிசர்வ செய்யப்பட்டு இருந்ததால், ரூம் 213 என்று சொல்லி அதற்கான சாவி , அதுவும் ஒரு க்ரெடிட் கார்டு மாதிரி இருந்தது.  அதை ஸ்வைப் செய்ய கதவு திறந்தது.


    ரிசப்ஷன் ஹாலிலேயே காபி, சாக்லேட் மில்க், சாக்லேட் கோகோ,  டீ, என்று பலவிதமான ஐடம்கள். 

    எல்லாமே அவங்கவங்க அவங்க்கவளுக்கு தேவைப்படுவது போல தயார் பண்ணிக்கொள்ள வேண்டும்.பக்கத்திலே கப், மூடி, ஸ்பூன், டிஷ்யூ பேப்பர். சானிடைசர் எல்லாம் அடுக்கி அடுக்கி வைத்திருக்கிறார்கள்.  எத்தனை வேணுமானாலும் எடுத்துக்கலாம்.

    காபி என்னுடைய பேத்தி நிமிஷமா தயார் பண்ணி கொடுத்தாள். க்ரீம் மில்க், பாட் ப்ரீ மில்க் ,எது வேணும் என்றாள்.

    எனக்கு fat free மில்க் போடு, உன்னோட  பாட்டிக்கு கொழுப்பு ஜாஸ்தி. இருந்தாலும் க்ரீம் மில்க் போட்டு சக்கரை 2 தடவை போட்டு கொடு என்றேன். கொடுத்தாள்.கிழவி நன்னா தூங்கணும். அப்படிங்கற கவலை எனக்கு.

    ரூமுக்கு வந்தால், அங்கேயும் காபி மேகிங் மெஷின் பக்கத்துலே பால் பாக்கெட், கால்சியம் மில்க், பௌடர், டிகாஷன் அவங்கவளுக்கு வேண்டிய மாதிரி, இருந்தது.     அங்கேயும் இன்னொரு தரம் காபி சாப்பிட்டேன். கையை துடைச்சுக்க

    அல்ப்ராக்ஸ் சாப்பிட்டேனா இல்லையா என்று நினைவு இல்லை. இன்னிக்கு மட்டும் இன்னும் ஒன்னு சாப்பிட்டு விடுவோம் என்று அந்த மஞ்ச மாத்திரை முழுங்கினேன்.


    காலைல,  நம்மவே நம்ம ரெண்டல் கார் இருக்கே அதை எடுத்துட்டு நயாகரா போலாமா அல்லது ஹோட்டலிலே ஒரு டூரிஸ்ட் பஸ் போகிரது. அதில் போகலாமா என்று மாப்பிள்ளையும் பெண்ணும் டிஸ்கஸ் செய்துகொண்டார்கள். 

    எனக்கு தூக்கம் கண்ணை சுயற்றிற்று.  நான் தூங்கி போய்விட்டேன்.

    மறு நாள் காலை எழும்பொழுது மணி 7.  நன்றாக விடிந்திருக்கிறது.  இங்கே இப்பொழுது சம்மரில் காலை 5 மணிக்கே உதய சூரியன் உதயமாகிவிடுகிறான் . (ரொம்ப அவசரம் போல . 2014 லே எலக்சன் இல்லையா ??!!!) மாலை இல்லை இரவு 8.30 மணிக்குத் தான் சூரியன் அஸ்தமனம்.

    இந்த நயாகரா பால்ஸ் டவுன் லாடிட்யூட் 50க்கு மேலே.
    இன்னிக்காவது நல்ல நேரம் பார்த்து வலது காலை எடுத்து பயணத்தை ஆரம்பிக்கணும்.   ஆஹா. இன்னிக்கு சனிக்கிழமை.. காலைலேயே ராகுவோட காலமாச்சே !!!

    அப்ப  ராகு காலம் சூரிய உதயத்திலேந்து தான் கணக்கு பண்ணனும். இது தெரியாம, நம்ம நாட்டிலும் எல்லோரும் தி ச வெ பு வி செ ஞா அப்படின்னு  கணக்கு பண்றாக.fixed time ஒரு பார்முலா மட்டுமே. நம்மதான் லாட்டிடுட் லாஞ்சிடுட் எடுத்துண்டு கணக்கு போட்டுக்கணும்.

    சூரிய உதயத்திலேந்து ஒரு நாளைக்கு ப்ளேசுக்கு 1 1/2 மணி நேரம் கூட்டிக்கணும். ஸோ, சனிக்கிழமை அப்படிங்கறதாலே , ராகு காலம் உதய நேரம் 5.30 ப்ளஸ் 2 x 1 .30 .அதாவது 8.00 லேந்து 9.30 .  . நாட் 7.30 டு 9.00 .

    இன்னிக்கு சனிக்கிழமை, மகா பிரதோஷம் வேற.  பக்கத்துலே பபலோ ஊருக்குத் திரும்பி போய் , சிவன் கோவிலுக்கு சென்று வரலாம் என்றார் மாப்பிள்ளை.

    பஸ் 1 மணிக்கு கிளம்புகிறது.அதற்குள்ளே  நம்ம திரும்பி வர முடியாதே என்று வீடோ பவரை உபயோகப்படுத்துவேன் கோவிலுக்கு போவதை நிறுத்திவிடுவாளோ என்று பயமுறுத்தினாள் பேத்தி.

    போகலாமா, முடியாதா என்ற சர்ச்சை  மேட்டூர் அணைக்கு தண்ணீர் பிரச்னை மாதிரி தொடர , காரை கிளப்பினார் மாப்பிள்ளை.

    எங்கே போறோம் என்று கேட்கிறாள் பேத்தி. அவளுக்கு இந்த கோவில் சமாசாரம் இதெல்லாம் அவ்வளவு இஷ்டம் இல்லை.  வேற ஜோலி ஒண்ணும் இல்லேன்னா கோவிலுக்கு போலாம். இப்ப நயாகரா வந்திருக்கோம். அங்க போயிட்டு வரணும் இல்லையா.

    அவ சொல்றதுதான் சரி, என்கிறது இந்தக்கிழம்.  இத்தன நாள் தான் பிரதோஷத்துக்கு கோவிலுக்கு போயாச்சே. ஒரு தடவை போகலேன்னா என்ன ஆயிடும் அப்படின்னு அவ கட்சி.  இவ எப்ப எந்த சைடு இருப்பா அப்படின்னு எப்பவுமே எனக்கு சொல்ல முடியாது.  பா. ம. க.விலே மெம்பரா இருப்பா போல இருக்கு.

    மாப்பிள்ளை ஒன்னுமே சொல்லாம வண்டியை ஓட்டிட்டே இருக்கார். அடுத்த
    40 நிமிஷத்திலே கோவில் வாசல்லே கார் வந்து நின்னுடுத்து.

    நேரம் ரொம்ப ஆயிடுத்து.  நீங்களும் அப்பாவும் மட்டும் போயிட்டு வாங்க, நாங்க காரிலேயே காத்திருக்கோம் என்றாள் பெண்.. ஆமாம் என்கிறது கிழம்.

    நானும் மாப்பிள்ளையும் மட்டும் சிவன் கோவிலுக்குள் நுழைந்தோம்.

    அமெரிக்க கனடா எல்லையில் இத்தனை ஒரு அற்புதமான சிவன் கோவிலா ?




    நாங்கள் சென்ற நேரத்தில் ஒரு நவ க்ருஹ ஹோமம் நடை பெற்றுக்கொண்டு இருந்தது.

    பிரதோஷம் என்பதால், சிவ பெருமான் பாலிலே குளித்துக்கொண்டு இருந்தார்.

    இங்கு பால் இரண்டு வகை. ஒன்னு ஆர்கானிக் இன்னொன்று ரெகுலர். ஒவ்வொன்றிலும் நாலு வகை. அதுக்கு மேலே.  வளரும் புல்லை மட்டும் சாப்பிடும் பசுக்கள் பால் தான் ஆர்கானிக் மில்க்.  ரெகுலர் மில்க் தரும் பசு மாடுகள் ஹார்மோன்ஸ் உள்ளிட்ட உணவுகளையும் சாப்பிடுமாம்.
    ஸோ,சிவனுக்கு அபிஷேகம் பண்ர பால் ஆர்கானிக் பாலாகத் தான் இருக்கணும் .இல்லையா.   நம்ம நாட்டிலே அபிஷேகம் ஆவின் பால் தான் எல்லாத்துக்கும். . 

    ஏகப்பட்ட பேர் பஞ்ச கச்சம் கட்டி வட நாட்டுப்பேர் அதிகமாக இருந்தார்கள்.  நம்ம தமிழ் ஊர் காராரும் அதிகம் பேர் கண்ணில் பட்டனர்..  நானும் அந்த வட்டத்தில் ஒன்றாக இருக்க அவர்களுடன் அளவளாவ ஆவல் இருக்கத்தான் செய்தது.  இருந்தாலும், அவாவா ஆத்துக்காரி காரில் காளி மாதிரி காத்துக்கொண்டு இருப்பாள் என்ற பயம் இருந்து வந்ததால், சிவனுக்கு பை பை சொல்லிட்டு வெளிலே வந்தோம்.

    இருந்தாலும், வந்தோமா, கிளம்பினோமா என்றிருக்கனும் அப்படின்னு ஒரு
    அஞ்சே நிமிசத்திலே சிவா சிவா என்று சொல்லிட்டு கன்னத்திலே போட்டுண்டு கிளம்பினோம்.சக்கரை பொங்கல் அவ்வளவு பிரமாதம். இன்னொரு ஸ்பூன் எடுத்து வரக்கூட டயம் இல்லை. எனக்கு வேண்டாம் பேத்திக்கு தருவோம் என்று எடுத்து வந்தேன்.  என்னை தரிசிப்பவா தான் சாப்பிடணும் அப்படின்னு ஒரு 144 இல்லை . அத தெரிஞ்சுண்ட என் பொண்ணு ஒரே வாயிலே அத்தனையும் ஸ்வாஹா .

    சனிக்கிழமை ஹனுமார் தரிசனம் என்னைப்பொருத்த வரை ரொம்ப முக்கியம். அதுவும் ஹனுமத் கிருபையால் நடந்தேறியது.  அதுவே போதும். பிரசாதம் எல்லாம் மெட்ராஸ் போன உடனே ஆள்வார்பெட்டை அனுமார் கோவில் லே கிடைக்கும். சக்கரை பொங்கல், புளியோதரை எல்லாமே. அப்படி இல்லே அப்படின்னாலும் பக்கத்திலே வல்லி நரசிம்மன் அம்மா வீடு. தாயார் மாதிரி எப்ப போனாலும் ஒரு வாய் தயிர் சாதம் தராம இருப்பாளா என்ன ?

    அசாத்திய சாதக சுவாமின் அசாத்திய தவ கிம் வதா.

    முடியாது என்று நினைப்பதெல்லாம் முடித்துக்காண்பிக்கும் அனுமாரே, உன்னால் முடியாது தான் என்ன ? 

    நீங்கள் கீழே பார்ப்பது இந்த கோவிலில் ஒரு காட்சி.  இந்த வீடியோ நாங்கள் எடுத்தது அல்ல.

     சிவா பெருமான் கோவில் லே ஒரு காட்சி.
    Shiv Mandhir at Buffalo Airport Town, forty miles away from Niagara Falls City.




    இந்த வீடியோ பாருங்கள். 2 வது நிமிஷம் துவங்கும்போது ருத்ரம் சமகம் சொல்லி கார்த்திகை அன்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது.  ( இதுவும்நாங்கள்  எடுத்த வீடியோ அல்ல. )
    அதற்கெல்லாம் டயம் இல்லை.









    காரை திருப்பிக்கொண்டு அசாத்திய சாதகனை பார்த்தாச்சு , பிரதோஷத்தின் நாளன்று, சிவ தர்சனம் கிடைத்தாச்சு என்ற திருப்தியில் நயாகரா நகரை நோக்கி விரைந்தோம்.

    இரண்டு இடத்தில் நடுவில் டோல் செலுத்தும் இடம்.  கார்கள் இஞ்ச் இஞ்ச் ஆக
    நகருகின்றன.  பேத்தி எள்ளும் கொள்ளுமாக வெடிக்கிறாள். இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு, ஒன்பது, எட்டு, ஏழு ,ஆறு,......அவள் கௌண்டு டவுன்
    டயம் தர மாப்பிள்ளை கிட்டத்தட்ட 80 மெயில் ஸ்பீடு ஓட்டுகிறார்.

    எனக்கோ , நேத்திக்கு வானத்திலே பயம், இன்னிக்கு தரைலேயே பயம் அப்படி ஆயிடுத்து.

    நின்னா பயம், நடந்தா பயம், ஓடினா பயம்.இன்னும் கொஞ்ச நேரத்திலே கொட்டற நீர் விழ்ச்சிக்கு கீழே இருக்கப்போறோம் அப்படின்னு நினைச்சாலே ஹார்ட் பக் பக்.   பக்கும் பக்கும் மாடப்புறா மாதிரி இல்லாம கொஞ்சம் வேகமா அடிக்கறது.  எதுக்கும் இருக்கட்டும் என்று ஒரு ஆஸ்பிரின் மாத்திரை எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.  இதய வலி வந்தால் என்ன செய்வது அப்படின்னு ஒரு புத்தகம் இருந்தது. அதை மறந்து சென்னையிலே வைத்து விட்டு வந்துவிட்டேன்.  வந்தால் பாத்துக்கலாம்.  அப்படின்னு ஒரு தைரியம்.

    பகவான் என்ன நினைச்சிண்டு இருக்கானோ அது தான் நடக்கும் என்று நினைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு

    சிவ சிவ என்றிருந்தேன்.

    ஹோட்டல் ஹாம்டன் இன் லே எங்களுக்காக அந்த பஸ் காத்திருக்கிறது.
    நாங்கள் தான் லாஸ்ட் .

    டிரைவர் கம் கைட் அழகா நயகார நகரை விவரித்துக்கொண்டே பஸ்ஸை ஓட்டத் துவங்குகிறார்.

    போகும் இடமெல்லாம் நயாகரா... ஆனந்த நயாகரா வெள்ளம்.  சில இடங்களில் பொங்குகிறது.  நதியாக. சில இடங்களில்  அருவியாக.

    A video from Canada Side: Courtesy: Youtube.




    காணக் கண்கோடி வேண்டும்.

    இரண்டு தான் இருக்கிறதா ?

    மிச்சத்தை நீங்கள் நாளைக்குள் கொண்டு வாருங்கள்.

    அந்த அடுத்த பதிவில் நீர் வீழ்ச்சியின் வேகத்தை பார்ப்போம்.

    மறக்காது வாருங்கள்.

    Saturday, July 13, 2013

    அனுமார் கிட்டே போய்...



    சின்மயா பால விஹார்

    ஆண்டோவர் என்னும் சிறிய டவுன் இது. பாஸ்டன் லிருந்து ஒரு 40 மைல் தொலைவு.


    இங்கு பூஜ்ய ஸ்ரீ  சின்மயாநந்தா அவர்கள் துவங்கி வைத்த பால விஹாரில் ஹனுமனை தரிசிக்க
     இது வரை ஒரு மூன்று தரம் போயிருப்பேன்.












    இந்த ஹனுமார் கோவில் இந்த பாஸ்டன் சுற்று வட்டாரத்தில் மிக பிரசித்தமாக இருக்கிறது.

    இந்த தளத்தில் கோவிலைக் கண்டு களியுங்கள்.
    பூஜ்ய ஸ்ரீ  தேஜோமயானந்தா, தயானந்த சரஸ்வதி குருகுலத்தைச் சார்ந்த துறவி.
    இந்த மாதம் 21ம் தேதி முதல் துளசி ராமாயணம் உபன்யாசம் செய்யப்போகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சம்பந்தமான ஐயங்களுக்கு அவர் பதில் அளிப்பாராம். 



    அத்துடன் இந்த  ஸ்தலம் மிகவும் அழகான ஆர்கிடேக்சரல் ப்யூடி. அமெரிக்க கட்டிட கலை இந்திய பண்பாட்டுடன் கலந்து காணப்படுகிறது.

    இதின் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை. அவர்கள்  சம்மதம் இன்றி எனக்கு புகைப்படம் எடுக்கவும் மனம் வரவில்லை.

    இருப்பினும் நேற்று
    மூன்றாவது மாடியில் இருக்கும் ஆடிடோரியம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
    அதை மனக்கண் மூலம் ஒரு போடோ எடுத்தேன்.

    மூன்றாவது தளத்தில் இங்கு வசிக்கும் பாரத நாட்டு மக்கள் கலாசார உணர்வினை எடுத்து வலியுறுத்தும் விதமாக,

    அவ்வப்போது ப்ல்வேறு  நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    பல்வேறு மொழிகள் கற்று தரப்படுகின்றன.  தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, சம்ஸ்க்ருதம், ஆகிய மொழிகளில் அவ்வப்போது வாலண்டியர்ஸ் வாரம் இரு முறை அல்லது மூன்று முறை மொழி மட்டும் அல்லாது மொழி பேசப்படும் மக்களின் பண்பாட்டினையும் போதிக்கிறார்கள்.

    இதைத் தவிர கணிதம் கற்று தரப்படுகிறது.
    செஸ் துவக்க வகுப்புகள், தமிழகத்தைச் சார்ந்த ஒரு பெண்மணியினால் நடத்தப் படுகின்றன.

    எனது பேரன் ஐ பாடில் செஸ் காயின்ஸ்களை வெகு வேகமாக மூவுகளைச் செய்கிறான்.

    செஸ்ஸில் யானைக்கு ரூர்க் என்று ஒரு பெயரும் உண்டல்லவா ?  அதற்கு மட்டும் யானையின் உருவம் ஏன் இல்லை என்று கேட்டான்.

    அது அப்படித் தாண்டா என்று சமாளித்தேன். 

    அதைப் பாரு, பில்லர் போல் இருக்கிறது இல்லையா ..   அது ராஜா பாலஸில் தூண் போன்றது . ரொம்ப ஸ்ட்ராங்.  அதனால், ராஜா வோடபரிவாரத்திலே குதிரை, சிப்பாய், பிஷப் போன்று எளிபெண்டும் உண்டு.  அதற்கு தான் அப்படி இருக்கிறது என்று சொல்லிவிட்டு, காலரை நிமித்திக்கொன்டேன்.

    என்ன தாத்தா.  பில்லர் அப்படின்னா எப்படி நகரும் ?

    சும்மா இருடா !! தாத்தா வை ரொம்ப தொந்தரவு செய்யக்கூடாது.. விஸ்வநாதன் ஆனந்திக் கேட்டு சொல்வார்  என்றார் மாப்பிள்ளை.

    அவர் இப்ப பார்ம்லே இல்ல. அவருக்கு எப்படித் தெரியும் எனக்கேட்கிறான் பிச்சை, என் பேரன்.

    அனுமார் கிட்டே போய்,

    அப்பனே , அசாத்திய சாதகன் அல்லவா நீ. 

    என்னை காபாத்துடா ...இந்த
    கேள்விக்கு என்ன பதில் ?

    அனுமான் என்ற உடன் ஜகமணி அவர்கள் வழிதான் நினைவுக்கு வருகிறது.
    இன்று சனிக்கிழமை. அவர தளத்திற்கு செல்லவேண்டும்.

    வேகத்திற்கு மட்டுமல்ல, விவேகத்திற்கும் அவன் பாதங்களே துணை.
    அவனோ கண்களை மூடிக்கொண்டு, கண்களிலே நீர் சுரக்க ராமா, ராமா என்று
    24  7 ராம ஜபம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்.

    அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம் பிரும்ம சாரினம்.

    துஷ்ட கிருக வினாசாயா ஹனுமந்தம் உபாஸ்மஹே.



    ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே.
    ரகுநாதாய நாதாய சீதாயாஃ பதயே நமஹ.



    அப்பனே ! ஆஞ்சனேயா.. 
    என் பேரக்குழந்தைகளை காப்பாற்று.
    உன்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை.

    இன்னிக்கு மதியம் 11 மணி அளவில் இந்த ஊரில் இருந்து திரும்பி ஜெர்சிக்கு
    செல்லவேண்டும்.

    பிரச்னைகளுக்கு தீர்வு காண்  என்ற தலைபபிலே இந்த பதிவை எழுதும்போது
    திரு ராஜ முகுந்த வல்லியூறான் அவர்களிடமிருந்து ஒரு செய்தி. அது என்ன ?
    அனுமார் அவர் மூலம் எதுனாச்சும் செய்தி எனக்கு அனுப்பி இருக்கிறாரோ ?

    Wednesday, June 26, 2013

    2012 Tony Awards - Book of Mormon Musical Opening Number - Hello



    அப்பாதுரை ஸ்பெஷல் அப்படின்னு ஏன் ஒரு லேபில் இதற்கு?

    இந்த பர்டிகுலர் ம்யுசிலை திரு அப்பாதுரை அவர்கள் தான் போய் பாருங்க அப்படின்னு ரெகமன்ட் பண்ணினார்.  அதுனாலே இந்த போஸ்டிங் அவருக்கு டெடிகேட் செய்யறேன்.  பதிவின் தலைப்பை கிளிக்கினால் அவரது மூன்றாம் சுழி வலைக்கு ஒரு வழி .

    டிக்கட் விலை யானை விலை. குதிரை விலை. ஆனா டிக்கட் சல்லிசா சில நாட்களிலே கிடைக்கும். அன்னிக்கு கொஞ்சம் கம்மியா அதாவது 100 டாலர் ரேஞ்சிலே வாங்கலாம் .








    என்ன தான் அப்படி இது என்று கூகிள் லே தேடினா , அப்பாதுரை ஒரு விஷயத்தை சிபாரிசு செஞ்சா எப்படி இருக்கும் அப்படின்னு புரிஞ்சது.

    ஏகத்துக்கும் அவார்ட் வாங்கின ம்யுசிகல் இது.  முதற்பாட்டே 2012 ம வருடத்திய டோனி ( இந்திய கிரிக்கட் காப்டன் தோனி அல்ல.) அவார்ட் வாங்கி இருக்கு.

    ஒரு நாலு சாங் கேட்டேன். சூப்பரோ சூப்பர்






    லேசா அந்த சவுண்ட் ஆப ம்யுசிக் பாட்டு மாதிரி இல்ல ?

    ஒரு ஒபெனிங் சாங் மட்டும் நேயர் விருப்பம்

    ஒரு சேஞ்சுக்கு நம்ம ஊரு விடல பசங்களுக்கு
    கொஞ்சம் என்ஜாய் பண்ணனும் இல்லையா ...

    நம்ம ஊரு ஒரு கோடி வருவாரு பாருங்க...
    அட்டகாசம் தான் போங்க..

    அம்புட்டு தானே அப்படின்னு நீங்க விட்டுட்டு போனீங்க அப்படின்னா நீங்க
    லக்கி இல்ல..

    ஏன்னா இரண்டாவது வீடியோ சூப்பருங்க...




    Saturday, June 22, 2013

    ARSHA VIDHYA MEDITATION CENTRE AT PENSYLVENIA.

    Last Saturday, we started on a spiritual Tour .
    மான் ஆட மயிலாட  மங்கை மீனாட்சியுடன் நானுமாட 

    இன்னிக்கு சனிக்கிழமை. வாங்க.. ஒரு ஆன்மீக பயணம் போவோம் என்று சொன்னார் எனது மூத்த மாப்பிள்ளை. ஆஹா..ஆஹா என்று ஆரவாரம் செய்துகொண்டே கிளம்பினேன்.

     ரொம்ப தூரமா என்று ஸ்டார்டிங்கிலெயே ட்ரபிள் கொடுத்தாள்.. அதெல்லாம் ஒண்ணுமில்லை. போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய், நீ வாராய் என்று அவளை கெஞ்சாத குறையாய் ஒரு வகையாய் காரில் ஏற்றினேன். 
      




    பூஜ்ய ஸ்ரீ தயானந்தா சரஸ்வதி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட

     அர்ஷ வித்யா குருகுலம், சேலர்ஸ்பர்க், பென்சில்வேனியா  

     குரு தக்ஷிணாமூர்த்தி ஆலமரத்தடியிலே அமர்ந்திருக்கும் காட்சி காணுவோம்.

    அதன்பிறகு சிருங்கேரி சாரதாம்பா மந்திர் செல்லுவோம்.அதன் பின்னே நேரம் இருந்தால் சாயீ பாபா ( சீரடி) மந்திருக்கும் செல்லுவோம். என்றார்.
    என்ன ஒரு பாக்கியம். உடனே கிளம்பிவிட்டேன். சகதர்மிணி யும் கூடவே.  . பேத்தி, மூத்த பெண், மாப்பிள்ளை அவர்களது காரில் உட்கார்ந்து புறப்பட்டோம்.



     பெல்ட் போட்டுக்கோ என்றாள் என் பெண்
    . நாப்பத்தி அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே எனக்கு உங்க அம்மா பெல்ட் போட்டு விட்டாச்சு. என்றேன்.
    பேத்தி ஹா ஹா ஹா .

     இந்த குருகுலத்திற்கு  போவதற்கு என்ன பாக்கியம்  செய்தேனோ 
     என நினைத்துகொண்டேன்.

    பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி வழியில் தீக்ஷை தரப்பட்டவர் தான்  
    சென்னையில் உள்ளவர் ஸ்வாமினி சத்யவ்ரதானந்தா அவர்கள்.

    சென்னை தி. நகர், கேசரி வித்யாலயாவில் நடக்கும்அவர்களது வேத வகுப்புகளுக்கு  தொடர்ந்து 2007,2008, ஆண்டுகளில் சென்று கொண்டு இருந்தேன். பின்னால் பல காரணங்களால் தொடர இயலவில்லை.
    அவரது துவக்க ஸ்லோகம் மனதில் உதித்தது.



    அர்ஷ வித்யா  குருகுலம் 
    குரு தக்ஷிணா மூர்த்தி 
    ஆலமர் கடவுள்

    ந ஹி ஞானேன சத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே 
    அறிவை விட புனிதம் கண்முன் காண்பது ஒன்றும் இங்கில்லை.
    na hi gnane na sadhrusam pavithram iha vidyathe.
    There is nothing that is purer than Knowledge.
    குரு பிரும்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேச்வரஹா
    குரு சாக்ஷாத் பரபிரும்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.

       GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESWARAHA
                                    ( கிளிக்கவும். )
       GURU SAAKSHAATH PARABRAHMA  THASMAISREE GURAVE NAMAHA.

       தாத்தா என்ன சொல்றார் என்று கேட்டாள் என் பேத்தி.
       அவருக்குத்  தெரிஞ்சதெல்லாம் சாமி கிட்ட சொல்வாரு 
        மூட் வந்திடுச்சுன்னா ஒரேடியா பாட ஆரம்பிச்சுடுவாரு .
        அதுவும் இரண்டு பேர் பக்கத்தில் இருந்தா மணிக்கணக்கில் .அப்படின்னு இவள் அதுக்கு பதில் சொல்றாள். .

    இந்த குருகுலத்தை நிறுவியவர் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள். இந்து தர்மம் என்ன , என்ன இல்லை என்பதை சொல்வதை கேட்டுகொண்டே இருக்கலாம்.
        


    விபூதி, குங்குமம், சந்தனம் என்று பிரசாதங்கள் தட்டுகளில்

       சம்ஸ்க்ருதம் சொல்லிகொடுக்கும் ஆசிரியர் ஒருவர் கண் முன் வருகிறார்.
    கோவையைச் சேர்ந்தவராம். சுப்பிரமணியம் என்று பெயராம்.  அவர் இந்த குருகுலத்தில் காலை முதல் மாலை வரை நடக்கும் எல்லாவற்றையும் பற்றி விளக்குகிறார்.
      எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியும் என்று எனது மாப்பிள்ளை சொல்ல, இவரோ சம்ச்க்ருதத்திலே பேச ஆரம்பித்தார்.  நமது மொழி இருக்க ஆங்கிலம் எதற்கு என்று வடமொழியில் துவங்க, எனக்கு நன்றா புரிந்தாலும், அதற்கு, திக்கி திக்கி ஒவ்வொரு வார்த்தையாக சம்ஸ்க்ருதத்தில் பதில் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

      நீங்கள் தமிழ் நாடு தானே. தமிழிலே பேசுவோமே..என்றேன். ஆஹா. என்றார்.

      நமது பாரம்பரியங்களை பண்பாடுகளை மொழியை கலாசார நிகழ்ச்சிகளை இந்தக்காலத்து குழந்தைகளுக்கு போதிக்கும் ஆஸ்ரமம் இது.

    கட்டணம் எதுவும் இல்லை. உணவு தங்கும் இடம் உட்பட.  வருபவர்கள் ஏதேனும் நன்கொடைகள் தந்தால் நன்கொடைகளை பெற்றுக்கொண்டு அதற்கான ரசீதும் தருகிறார்கள்.

      இந்த குருகுலம் எல்லோருக்குமே உடல் நலம் குறித்த புது கலையை கற்று கொடுக்கிறது.

    போடோபயடன் தெரபி என்று இதை சொல்கிறார்கள். 

    உடம்பிலே ஏகப்பட்ட செல்கள் வெளிச்சத்தை அவ்வப்போது வெளிவிடுகின்றனவாம்.
    உடம்பில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் உயிர் அணுக்கள் வெளியிடும் மின்சார சக்தி வெளிச்சத்தில் இருந்து, நோய்வாய்ப்பட்ட செல்களை குணப்படுத்த இயலும் என இவர்கள் சொல்கிறார்கள். கேன்சர், ஆஸ்துமா, போன்ற வியாதிகள் குணமாகும் என்று சொல்கிறார்கள். 

     

                                                              MORE ABOUT THIS HERE.
















    மேறகொண்டு என் மனைவி தொடருகிறாள்.

       அந்தப்பக்கம் என் பெண்ணும் மாப்பிள்ளையும் அர்ஷ வித்யா என்றால் என்ன என்று அந்த போர்டை உத்து பாக்கறாங்க.
    இவரு, இந்த பக்க டைனிங் ஹாலிலே என்ன மெனு அப்படின்னு 
    உத்து பார்த்துகிட்டு இருக்காரு. 

    எனக்கு சிரிப்பு தான் வந்துகிச்சு.  சத்தமா சிரிக்க முடியுமா ?
    இருந்தாலும் இவரு நான் சிரிக்கிறத பாத்துட்டாரு. பாயசம்,   
    என்ன சிரிக்கிற ? என்றார். 

    வயிறு முக்கியமில்லையா. என்றேன்.
    ஆமாம். ஆமாம். எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம். பப்ளிக்கா ஆமாம் போட்டார். 

    இன்னிக்கு என்ன அன்ன தானம் ? என்று பார்க்கு முன் ,

    இரண்டு சப்பாத்தி,சாதம்,  ரவா கேசரி, சாம்பார் , பருப்பு,உருளை பொரியல் ,  
    பாயசம், தயிர், இத்தனையும் இரண்டு பேப்பர் ப்ளேட், கப், இவற்றில் ரொப்பி, எங்க  முன் கொண்டு வைத்தார் .மாப்பிள்ளை.

    அடுத்தது சொல்வது நான்.

    அகண்ட மண்டலாகாரம் என்று ஆரம்பித்தேன்.
    குரு க்ஷேத்திரத்திலே குரூ ஸ்தோத்ரம் கொஞ்சமாவது சொல்லணும் இல்லையா ?

    அக்கம் பக்கத்திலே எல்லாமே உங்களை பாக்கிறாங்க.
    முதல்லே சாதம் ஆரிப்போரதுக்கு முன்னாடி சாப்பிடுங்க. ஒன்னரை மணிக்கு ஹாலை மூடிடுவாங்க....





    மாமா !! மெதுவா சாபிடுங்கோ. 
    நல்ல ஹைஜீனிக் உணவு.  வீட்டு சாப்பாடு மாதிரியே இருக்கு இல்ல. என்றார் மாப்பிள்ளை. 
    ஆமாம்.ஆமாம். அந்த பாயசம் தீந்து போச்சா இன்னும் இருக்கா ?
    என்ன விஷயம் ! ஏற்கனவே தான் இரண்டு கப் குடிச்சாசே !! இவள் இன்டர்ரப்ட் செய்தாள். 
    இல்ல. ரொம்ப நன்னா இருக்கு. பார்செலா எடுத்துண்டு போனா போற வழியெல்லாம் குடிச்சுண்டு போலாம். 

    போற வழிக்கு புண்ணியத்தைத் தேடணும்  அப்படின்னு சொல்லிட்டு வந்த மனுஷன் இங்கே என்ன தேடறாரு, பேசறார் பாத்தியா நீ ? 
    என்று என் மகளைக் கெட்டாள் வீட்டு எசமானி.


    என்ன நல்லா  வந்திருக்கா அப்படின்னு போடோ எடுத்த பின்னே கேட்டேன்.
    ஆஹா. கோவில் மிக அழகா வந்திருக்கு...என்றார் இவர். 
    நான் ?
    என்று பாடறாரே. பொது இடம் அப்படின்னு தெரிய வேண்டாமோ ?

    இந்த  ஆசரமத்திலே  ஒரு மெடிடேஷன் சென்டர் இருக்கிறது. அதைத் தவிர சின்மயானந்த ஆஸ்ரமம் வெளியிட்ட பல நூல்களும் இருக்கின்றன. எல்லாமே யானை விலை. டாலரில் 10, 15 என்று போட்டு இருக்கிறார்கள். ரூபாயில் மாற்றி கணக்கு போட்டால் மயக்கம் வந்துவிடும். 
    வாங்க வேண்டிய தேவை இல்லை. எல்லா புத்தகங்களும் என்னிடம் இருக்கின்றது. 




    என்ன அழகா இருக்கு பாருங்க..s
     
    கோவில் இதுவுங்க. இந்த டூயட் எல்லாம் இங்கன பாட கூடாதுங்க..
    அப்ப இத பாடுவோம்.

    இந்த இடத்தை விட்டு நகரவே மனசில்லே. இருந்தாலும் சிருங்கேரி சாரதாம்பா கோவிலுக்கு சீக்கிரமே போகணும்.வாருங்கள். என்று 
    எல்லோரையும் கூட்டிக்கொண்டு காருக்கு விரைந்தார் மாப்பிள்ளை.

    Thursday, June 20, 2013

    சகிக்க வில்லை இவங்க அடிக்கிற கூத்து ...

    சகிக்க வில்லை இவங்க அடிக்கிற கூத்து ...
    இருந்தாலும் என்ன செய்வது.?
    சங்கீதம் ஆயிற்றே...

    சுருதி சுத்தமா இருக்கு..?
    எது அப்படின்னு கேட்க்க கூடாது.

    அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க வயசுக்கு தகுந்தபடி
    புரியும்.







    எதுக்கும் ஒரு பிராயச்சித்தம் அப்படின்னு ஒன்னு இருக்கும். அதுக்காவ
    இதை போட்டு இருக்கேன். அதுவும் இதுவும் ஒண்ணேதான்.



    எதுலே ஸ்வாமி !!
    ராகத்திலே!
    வட நாட்டிலே இத மால்கௌன்ஸ்  அப்படின்னு சொல்றாக.

    நம்ம ஹிந்தோளம் அப்படின்னு சொல்வோம்.

    balama maane naa
    bairee chup naa rahe, lagee mann kee kahe
    paake akelee mujhe, moree bahiya dhare
    
    jab jab palatu gagar bhar ke aa
    lat rah jaaye mukh pe bikhar ke
    baat kare aisee dilvaala, tadape aur tadapaaye
    balama maane naa
    
    ghunghat daaru nain churaau, ghabaraahat me raah naa paau
    woh baanka rasiya matvaala, sune naa moree apanee hee kahe
    balama maane naa