Pages

Saturday, October 15, 2016

அந்தமில்லா சந்தம்

அண்மையில் மயக்கிய இரு இசை

இது நம்ம இந்தியா ஜுனியர் ஐடால் பாடகர்.

jaadhoo hai nasha hai.

இசை இலக்கியத்தின் அடித்தளம் . இதயத்தை நெகிழச்செய்யும்
வசந்த வாசல்.  குரல் வளம் அந்த வாசலின் தோரணம்.

அந்த வாசலின் உள் நுழையும் போது பன்னீர் புஷ்பங்கள் வாசம் வருவது போல் தோன்றத் தூண்டுகிறது இவர் குரல்.


நஹீத் அபிரின்



அடுத்து,

கவிஞனுமாய் இசை வல்லுநராகவும் திகழ்ந்தவர் பாப் டிலான்.
இசைக்கென , கவிதைக்கென ஒரு இலக்கண விதிகள் இருப்பது ஒரு பக்கம் எனினும் அந்தக் கவிதைகளில் சந்தம் இயல்பாக இருப்பின் மட்டுமே கவனத்தையும் இதயத்தையும் ஈர்க்க வல்லது.
வெற்றுச் சொற்கள் கலந்த வாக்கியங்கள் இலக்கியம் ஆகுமோ !!

ராமச்சரித மாநஸ் எழுதிய துளசிதாசர் கவிஞர்.
ஷிக்வா எழுதிய இக்பால் கவிஞர்.
அஷ்டபதி எழுதிய ஜெயதேவ் கவிஞர்.

இசையும் இலக்கியமும் ஒரு நேர்கோட்டில் அமைந்த படைப்புகள் அவை.

மொழி, நாடு, இனம் இவற்றினைக் கடந்த இசை மேதைகள் அவர்கள்.

அந்த பரந்த உலகத்தின் பெருமையைப் பறை சாற்றும் விதத்தில்,
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்று இருக்கும் பாப் டிலன் இசை.

இங்கே.

இந்த இசை இலக்கியம் ஆகுமா என்ற சர்ச்சை செய்யும்
இந்திரா பார்த்தசாரதி அவர்களின் பதிவும் கருத்தாழம் மிக்கதொன்றாம்.

bob Dylan : Blowing in the wind


 அந்தமில்லா சந்தம் இது.

போற்றுவோம்.

Sunday, October 2, 2016

காந்தி என்றொருவர் நம்மிடையே



காந்தி என்றொருவர் நம்மிடையே


Courtesy: rupan sharma. my web friend from Gowhati.
நன்றி: ரூபன் ஷர்மா. கௌஹாத்தி.



Tuesday, September 13, 2016

Monday, September 5, 2016

ஏகதந்தாய வக்ர துண்டாய

T

ஏகதந்தாய வக்ர துண்டாய 

The Four Lessons that Lord Ganesha Teaches us.
Courtesy: Rediff.news.

Click HERE.


இன்னிக்கு எங்க பார்த்தாலும் விநாயகன் புகழ் பாடும் மக்கள் கூட்டம் தான்.

வாதாபி கணபதி பஜே ..ஒரு பக்கம்.
நெஞ்சக்கனக்கல்லு இன்னொரு பக்கம்.

விநாயகனே வினை தீர்த்தவனே  சீர்காழி பாடுவார். 

தெரு முனை சந்து பொந்து எல்லாவற்றிலும் அருகம்புல்லில் எருக்கம் பூ வில் பால், தயிர் , பாகும் பருப்பு இவை தான் வேண்டும் என்று சொல்லாமல், எதை நைவேத்தியம் செய்தாலும் செய்யாவிட்டாலும் நமக்கு அருள் பாலிப்பவர் விநாயகப் பெருமான்.

மூஷிக வாகன மோதக ஹஸ்த
விநாயகனை இன்று மனமார வணங்குவோம்.



Wednesday, July 13, 2016

வாசலிலே பூத்திருக்கும் வண்ண மலர் உனக்காக







வாசலிலே பூத்திருக்கும் வண்ண மலர் உனக்காக 
என்று துவங்கும் இந்த பாடலை இயற்றியது யார் ?

அமெரிக்கா வாழ் தமிழ் ஆன்மீக பாடல் ஆசிரியர் .


இந்த பாடலை மேலும் படிக்க இங்கே செல்லுங்கள்.

பாடலை இயற்றியவர் மேடம் கவிநயா அவர்கள். அம்மன் பாட்டு என்னும் வலைத் தளத்திலே பதினைந்து ஆண்டுகளாக, ஓய்வில்லாது அம்மன் புகழ் பாடுகிறார். ஒவ்வொரு செவ்வாய் அன்றும் அவரது பாடலை சுப்பு தாத்தா கடந்த பத்து ஆண்டுகளாக பாடி வருகிறார். சுமார் 1000 பாடல்களுக்கு மேல் கவிநயா பாடல்களை இசை அமைத்து இருக்கிறார்.

இருந்தாலும் சுப்பு தாத்தா பாடகர் இல்லை. அவருக்கும் மிகவும் வயதாவதால்
குரலும் ஒத்துழைக்கவில்லை .

அப்போது தான் தாத்தாவின் இல்லத்துக்கு மனமுவந்து வருகை தந்தார்,  சுப்பு தாத்தா வை தாத்தா , தாத்தா எனக்கூப்பிடும் கீதா ரங்கன் அவர்கள்.

நீங்கள் இதை பாடுங்கள் என்று சொன்ன போது சென்ற செவ்வாய் அன்றும் நாட்டக்குறிஞ்சி யில் பாடினார்.  நேற்றும் வெளிவந்த இந்தப் பாடலை அவரே
வலஜி ராகத்தில் மெட்டமைத்து பாடுகிறார்.

வலஜி ராகத்தில் பாடுபவர் தில்லை அகத்து கர்னானிக்கல்ஸ்  தளத்தின் இணை ஆசிரியர். 

முறையாக இசை பயின்றவர் அவர். அதனால் தான் ராகத்தின் சிறப்புகள் தூக்கி நிற்கின்றன.

அவரை வாழ்த்துங்கள்.

 அதே பாடலை பாடுவது மறுபடியும் சுப்பு தாத்தா.

போனால் போகிறார். அவரை
மன்னித்து விடுங்கள்.

i



Wednesday, June 22, 2016

சரபோஜி மஹால், தஞ்சை ....புதிய வலைத்தளம்

சரபோஜி மஹால், தஞ்சை ....புதிய வலைத்தளம் 

தஞ்சை மன்னர்களின் சரித்திரம், மற்றும் அவர்களது அரண்மனை, சரஸ்வதி மஹால், மற்றும் தஞ்சைக்கு கோவில் பற்றிய சிறப்பான செய்திகளுடன் ஒரு புதிய வளைத் தளம் உருவாகியுள்ளது.

தஞ்சை அரண்மனை வளாகத்தில்  இருக்கும் பற்பல சித்திரங்கள், சிற்பங்கள் பற்றிய அறிய தொகுப்பு இது.

தஞ்சையை ஆண்ட
மன்னர் களின் வரலாறு இந்த தளத்தில் காணப்படுகிறது.

சிவாஜி மஹராஜ் முதல் இன்று உள்ள ஸ்ரீ பிரதாப் சிங் ராஜே போன்ஸ்லே (14 வது வாரிசாம் இவர் வெங்கோஜி மஹராஜ் அவர்களுக்கு)

இன்றைய தஞ்சை இளவரசர் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். , 

இந்த தளத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

வலைத்தளத்தைக் காண இங்கே சொடுக்குங்கள்.

வலைதளத்தின் முகப்பு இதோ. 

THE HINDU REPORTS TODAY:


Website has some rare photographs and details on Maratha Kings

A website on the Thanjavur Maratha Royals was launched here on Sunday by Prince Pratap Sinha Raje Bhosle, the 14th descendent of Maharajah Venkoji and the Sixth descendent of Maharajah Serfoji II.
The website Serfojimemorialhall.com is in the name of Serfoji Memorial hall at the Sadar Mahal Palace, a museum founded in 1997 on the Palace premises by Prince Tulajendra Rajah Bhosle, the grandfather of Pratap Sinha.
The website contains information and details on the museum, Maratha Kings of Thanjavur and old rare photographs of the royal family. Prince Pratap Sinha Raje Bhosle started with a Facebook page in 2013 in the name of the private museum where he got a good response while in the next year he started a blogger.


இந்த வலைத் தளத்தை உருவாக்கியது நான் எனச் சொல்லும்  ஸ்டிவன் யோகா அவர்களின்  இசையையும் ரசிப்போம். 

இன்று இந்த நல்ல தொரு வலைத்தளமும் கண்களில் பட்டது. தஞ்சையைச் சார்ந்த ஒருவரது இசையும், அதுவும் ஆண்டவன் புகழ் பாடும் அருமையான இசையும் , காதுகளில் ஒலித்தது.

மிகவும் நன்றாக இருக்கிறது. ஸ்டிவன்  . வாழ்த்துக்கள்.



 இந்த வலைத்தளம் தஞ்சையைப் பற்றிய செய்திகள், குறிப்பாக, தஞ்சை அரண்மனை வளாகத்தில், பெரிய கோவிலில் நடக்கும் சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் சிறந்த முறையில் எடுத்துச்  சொல்லும்
என எதிர்பார்ப்போம். 

Sunday, June 12, 2016

தீவுத்திடல்பு த்தக விழாவுக்கு போன கதை இங்கே.

முதலில் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்று.

ஒரு நாள் முல்லா நஸ்ருதீனோட அப்பா தன் வீட்டுப்புறக்கடையில் ஒரு லாண்டர்ன் விளக்கு எரிந்துகொண்டு இருப்பதைப் பார்த்தார்.  அது யாராக இருக்கும் என்ற யோசனையில் அங்கு சென்றார்.

அங்கே, முல்லா நஸ்ருதீன் நன்றாக உடுத்திக்கொண்டு, கையில் ஒரு விளக்குடன் எங்கேயோ புறப்பட்டுக் கொண்டு இருந்தார்.

"அது என்ன இந்த நேரத்தில் ? இந்த அழகாக டிரஸ் செய்து கொண்டு நாடு இரவில், ஒரு லாண்டர்ன் விளக்கோடு ? என்ன விஷயம் ?"

"அப்பா, நான் என்னுடைய காதலியைப் பார்க்க செல்கிறேன். காட்டு வழியே அல்லவா, இருட்டாக இருக்கும். அதனால் தான் கையில் விளக்கு ." என்று சமாதானம் சொன்னார் நஸ்ருதீன்.

"என்ன நீ இப்படி இருக்கிறாய்" என்று அலுத்துக் கொண்ட அப்பா, " நான் அந்தக் காலத்துலே என் காதலியை அதாவது உன் அம்மாவைப் பார்க்கப்போகும்போதும் காட்டு வழி தான் சென்றேன். இருட்டு தான். ஆனால், கையில் விளக்கு எதுவும் எடுத்துச் செல்லவில்லையே " என்று
நகைத்தார்.

"அது எனக்குத் தெரியும் அப்பா. பார் ! உனக்கு எப்படி கிடைத்திருக்கிறது என்று ?" பதிலளித்தானாம் நஸ்ருதீன்.

************************************************************************
தீவுத்திடல்பு த்தக விழாவுக்கு போன கதை இங்கே. 






இந்த வீடியோ வை முகநூலில் பதிவிட்ட போது  ஸ்ரீராம் அவர்கள் கேட்டு இருந்தார்கள்;
அந்த ஓலா டாக்சிக்கு எத்தனை கொடுத்தீர்கள் ? என்று.

போகும்போது ரூபாய் 128
வரும்போது ரூபாய் 150
***********************************************************************************

நம் நாட்டு ஓவியர்களில் முதல் ஐந்து இடங்களில் முதன்மையாக இருப்பவர் ராஜா ரவி வர்மா அவர்கள்.

இந்த ஓவியரின் பெருமையை நாடறியும் என்று சொன்னாலும் நான் முழுவதும் அறிந்தது எனது வலை நண்பர் திரு மோகன்ஜி  அவர்கள் தனது வலையிலே ராஜா ரவி வர்மா பற்றி விரிவாக, விளக்கமாக, விமரிசையாக,
 எழுதியபின்பு தான் என்று சொன்னால்  மிகையில்லை.

அவர்களது பெயிண்டிங் இந்திய கலாசாரம், இந்தியர்கள் வணங்கும் கடவுளர் பற்றித்தான் என்று சொல்பவர்களுக்காக,

இங்கேயும் பாருங்கள் என்று சொல்லத்தான். 
இப்படியுமா வரைந்து இருக்கிறார் என்று ஆஆஆ ஆச்சரியப்படுவீர்கள்.
க்ளிக் செய்து பார்க்கவும்.

RAVI VARMA PAINTINGS.   மற்ற சில ஓவியர் படங்களும் இடைச்செருகலோ ?

TRADITIONAL
RAVI VARMA PAINTINGS.   எல்லாமே ரா. ரா. வ. ? ?????   இல்லை என்று எல்லாவற்றையும் பார்த்த பின்பு தான் தெரிகிறது.



****************************************************************

பக்கத்தில் யாரும் இல்லாதபோது பார்த்தால் ரசிக்கவும் முடியும்.

****************************************************************************
இன்று ஒரு புதிய வலைத் தளம் சென்றேன். தினமும் ஏதேனும் சில புதிய தளங்களுக்குச் சென்று பார்ப்பது எனது வழக்கம். இதற்கு மொழி எனக்கு ஒரு தடையாக கருதியது இல்லை.

இன்று நான் சென்றது ஒரு உருது /ஹிந்தி கவிதை வலைத் தளம்.

அதில் வருபவர் எல்லோருக்கும் ஒரு போட்டி வைத்திருக்கிறார்கள்.

அந்த போட்டியில் பங்கு எடுத்துக்கொள்பவர் ரிஜிஸ்தர் செய்யவேண்டும்.
காசு ஒன்றும் கிடையாது. உண்மையான நபர் தான் என்பதை உறுதி செய்து
கொள்வதற்காக.

பதிவு முடிந்ததும்,
ஒரு தலைப்பு தருகிறார்கள்.
ஐந்து நிமிடத்தில் ஒரு கவிதை எழுத வேண்டுமாம்.

எழுதினேன்.

என் கவிதை இதுவே. (हिन्दि लिपि में)

मैं ने इक ख़्वाब देखा.

रास्ते में जा रहा
कलियाँ तो बहुत मिली
कहानियाँ सुनाई
सुनते सुनते तो देखा
कलियाँ काली हो गयी.
काली रात छा गयी.

सपने के भीतर
वो होटों की मुस्कराहट
वो चहरे की इनायत
वो सफर कोई ज़न्नत की दरवाज़
वो पुकार ज्यों कोयल गाये

ख़्वाब अब नहीं. 
जागूँ है मैं. 
जी तरसता है 
शायद कहता है. 
ख़्वाब की वो चेहरा 
कभी तो आएगा ही. 

इक और दिन इधर 
इंतज़ार में . 

கவிதை எழுதி முடித்தாயிற்று. 
சப்மிட் என்று வருகிறது. க்ளிக் செய்தேன். 
பொறு வைட் என்று சொல்லிற்று. 

ஒரு நிமிடம் சென்றது. 

திக் திக் என்று மனம் அடித்துக்கொண்டது. 
என்ன முடிவு வருமோ என்றது. 

வந்தது. 
ஒரு ரோசாப்பூ 


இந்தக் கவிதையை யாரேனும் தமிழில் சொல்ல இயலுமா ?

நான் அழைப்பது:
+mohan gurumurthy       மோகன்ஜி   வானவில் மனிதன்.

+Raamalakshmi Rajan   திருமதி ராமலக்ஷ்மி  வலைத்தளம் முத்துச்சரம். 

+revathi narasimhan      திருமதி ரேவதி நரசிம்மன்  வலைத்தளம் நாச்சியார். 



மற்றவர்களும் கலந்து கொள்ளலாம். 

வருக. வருக. உங்கள் கவிதையைக் காண்போமா !!

ஆங்கில எழுத்துக்களில் என் கவிதை. 

main ne ik kwaab dekha   
kaliyaan tho bahuth mili
kahaaniyaan bhi sunaayee
sunthe sunthe hi rahaa. 
kaliyaan khaali ho gayi. 


voh hoton ki muskuraahat 
voh chehre mein vo inaayath 
voh zindagi koyee zannath ki dharvaaza 
voh pukaar 

kwaab ab nahin 
jaagoon hai main.

kwaab jo dekha thaa 
kal bhi aayegaa uski 
inthzaar mein hoon. 



Saturday, June 11, 2016

Keshadipadam thozhunnen

Your views and Suggestions to enhance quality of this blog,The COMMENTS column is subject to MODERATION.

Monday, June 6, 2016

இப்போ அப்போ இதயத்திலே




                                    (அதே மெட்டில் பாடிப்பாருங்கள்.)
********************************************************************************************************************
+mohan gurumurthy நல்லாவே மொழிபெயர்ப்பு செய்கிறார். 
சிவகுமார் சூரர். 
இருந்தாலும் ஏழைக்கு ஏற்ற எள்ளுரண்டை என்று சொல்வது போல, 
எனக்குத் தெரிந்த உருது சாஹித்யம். எனக்குத் தெரிந்த தமிழில் வார்த்தைக்கு வார்த்தை 
மொழி பெயர்ப்பு இல்லை, ஒரு தினுசு ஆ அதே அதே பாவத்தில், 
*******************************************************************************************************************
இப்போ அப்போ இதயத்திலே  
இந்த எண்ணங்கள் சொல்லாமல் வருதே !

இந்த மண்ணில் எனக்கென்றே  உனை  
இறைவன் படைத்தானோ ?. 

தரைக்கு வருமுன்னே 

வானத்தில் நீ 
வண்ணத்தாரகையா இருந்தாயோ?

இரங்கி என் மேல்  எனக்காக 
இறங்கி வந்தாயோ 

இந்த நின் கரங்கள், இரு தோள்கள் 
இனி என் புதையல் எனச் சொல்வேன். 
இந்த நிழல் போலும்  நின் கருங்கூந்தல் -என் 
சொந்தமென நான் சொல்வேன். . 
இனிக்கு மி தழும் நின் அணைப்பு தரும் சுகமும் 
சொர்க்கம் எனச் சொல்வேன். 

இப்போ அப்போ என்றிலாது என் உள்ளே 
இந்த எண்ணங்கள். 

இனிய இரவில் இந்த   சாலை ஊடே   ஷஹநாயி சத்தம்  
இது தானோ என் முதல் இரவு திறந்து பார்ப்பேன் உன் முகக் கதவு. 

ஈதென்ன என் கைகளில் நீ 
குறுகி அமிழ்ந்து விட்டாய் 
ஈதென்ன நாணம் என்ன வெட்கம் 
என்னுள் குமைந்து மறைந்து விட்டாய். 

என்ன இது போல என்னை நீ 
எப்போதும் கொஞ்சுவாயா.....நின் 
கண்கள் இமை கள் மேல் நோக்கி எனைப் பார்க்கும் இக் 
காட்சி காலமெல்லாம் எனக்கா ...?

சென்ற காலம் எல்லாமே சோகம் தானே  என் வழியில் 
இன்று கண்டேன் புதிய  மோகம்  நான் உன் விழியில். 
இப்போ அப்போ இதயத்திலே  
இந்த எண்ணங்கள் வருது. 

Kabhi kabhi mere dil mein khyal aata hai
Kabhi kabhi mere dil mein khyal aata hai


Ke zindagi teri zulfon ki naram chhaaon mein guzarne paati
To shahdaab ho bhi sakti thi
Ye teergi jo meri zees ka mukkaddar hai
Teri nazar ki shuaaon mein kho bhi sakti thi
Ajab na tha ke main begaana-e-alam reh kar
Tere Jamaal ki raanaion mein kho rehta
Tere gudaas badan teri neembaand aankhein
Inhi haseen hassen fasaanon mein main kho rehta
Pukarti mujhe jab talkhiyan zamane ki
Tere labon se halaawat ke ghoont pi leta
Haya cheekthi firti barhe-na-sur 
Aur mein ghaneri zulfon ke saaye mein chhup ke jee leta
Magar yeh ho na saka aur ab yeh aalam hai
Ke tu nahi tera gam teri juus-t-juu bhi nahi
Guzar rahi kuchh is tarah se zindagi meri
Jaise isse kisi ke sahare ki aarzoo bhi nahi
Zamane bhar ke dukhon ko laga chukka hun gale
Guzar raha hun kuchh anjani reh-guzaron se

Sunday, May 22, 2016

பழைய பாடல்கள் ? ? ? புதிய புரிதல்கள். !!!

வீரருக்கும்  விரக்தி வரத்தான் செய்கிறது.

அதிர்ச்சி பின் விரக்தி 
போனால் போகட்டும் போடா .



விரக்திக்குபின்னே தெளிவு 
உலகே மாயம்.





ஞானம் 













எதிர்பார்ப்பு 

பூங்காற்று திரும்புமா.





******************************

இது மழைகாலம்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். #0380


விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?.சாலமன் பாப்பையா

பழைய பாடல்களுக்குள்   பு திய பொருள்   ????

பழைய பாடல்கள் ??  புதிய புரிதல்கள். !!!

Sunday, May 8, 2016

அம்மா ! விரைவில் பதில் போடு.



அம்மா !
என் நலம் அறிய இன்னமும் நீ அவாவுடன் தான் இருப்பாய்.
எங்கிருந்தாலும்.
நான்
நலம்.
நீ இருந்த வரையில் உன் நினைவில்லை.
நீ இட்ட அன்னத்தின் சுவையில் நான் திளைத்திருந்தேன்.
நீ பாடிய பாடல்களில் மனம் கவர்ந்திருந்தேன்.
நீ கொண்ட அன்பு வளையத்தில் நான் நானே முதல் என
 மகிழ்ந்திருந்தேன்.

.கண்ணை மூடிய நேரத்திலே நீ சொல்லாது சென்றாய்.
 நின் நினைவிலே இருப்பதா
 நீ பாடிய பாடல்களின் நினைவிலே இருப்பதா ?

  என்றைக்கு சிவ கிருபை வருமோ ?




சங்கீத ஞானமு பக்தி வினா





எப்போ வருவாரோ

Raag : Jonpuri



சரண கமலாலயத்தை...
திருப்புகழ்
sarana kamalaalayathai. Unnikrishnan





சீதா கல்யாணம் வைபோகமே




அன்று பல நாட்களில் எனக்கு  நீ பால்  சாதம் கையில் தருவாய்.
இன்று எனக்கு எல்லாமே பாலையாக இருக்கிறது.

என்று உன்னை அடைவேன் என காத்திருக்கிறேன் .


விரைவில் பதில் போடு.

உன் பதில் கிடைக்கும் வரை
இந்த கோஷ்டி கானத்தில் தான்
இந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாக
ஆடிக்கொண்டு இருக்கிறேன்.

ஆடும் வரை ஆட்டம். இல்லையா ...

உபசார மூலனு .....




Sunday, May 1, 2016

ஆட்டோ டிரைவர் அண்ணா துரை



இப்படியும் ஒரு ஆட்டோ டிரைவர்

ஆட்டோ டிரைவர் அண்ணா துரை 

An Inspirational tale of Annadurai who has re-defined customer satisfaction and keeps on challenging his own limits. Annadurai, 28, drives a share auto rickshaw in Chennai. The vehicle is Wi-Fi enabled and, if you're not carrying a laptop or smartphone to connect to the internet, Annadurai will slip you a 10-inch tablet or an iPad. He bags lot more things inside the auto. He is a motivation speaker too and been featured in TEDx twice. Listen him telling more about him and his auto, what all he has in the auto, how he came up with th e idea, how he manages to spend this much and how one can achieve its dreams. He is truly becoming an idol for many.





May Day Video

Saturday, April 23, 2016

இது தான் முதல் பிறவியா !! ??

எச்சரிக்கை; (கடைசியில் இருக்கிறது.) 
அதைக் கடைசியாகப் படிக்கவும். 
********************************************************************************


உங்களுக்கும்  எனக்கும் இது தான் முதல் பிறவியா !! ??

இல்லே இதுக்கு முன்னாடி பல பிறவி எடுத்து இருப்போமா ?இந்த காணொளியில் காணப்படும் நிகழ்வுகள் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறதா?


ஒரு ஸ்லைட் ப்ரெசெண்டெசன் ஒளி ஒலி க்காணல் தொடர்கிறது.
இங்கே க்ளிக் செய்தும் பார்க்கலாம். 
SPEAKING TREE

(நன்றி: பேசும் மரம்) Courtesy: SPEAKING TREE.

இல்லே...இந்த தொடர்பை அப்படியே பிரௌசர் லே போட்டும் படிக்கலாம்.

http://www.speakingtree.in/slideshow/signs-your-soul-has-reincarnated-many-times-496489/266554

சொல்லி இருக்கிற விஷயங்கள் எல்லாம், கருத்துக்கள் எல்லாம் சரி என்று
சுப்பு தாத்தா என்டார்ஸ் செய்யவில்லை .

ஆனா இன்டரஸ்டிங் ஆக இருக்கிறது.

உதாரணமாக,

விபரீத கனவுகள்,

இது போன்ற நிகழ்வுகள்



திடிர்னு, பார்ப்பவைகளை, எங்கெயோ இதற்கு முன்னம் பார்த்திருப்பது போன்ற எண்ணம், (மதுமதி படம் )

முன்னம் தெரியாத, அறிந்திருக்க இயலாத, நபர் மீது நமக்கு ஏற்படும் பந்தம்,

நமது சம காலத்த்தவரை விட அதீத புத்திசாலியாக நமக்கே தோன்றுவது , அது மட்டும் அல்ல, அது எப்படி சாத்தியம் என்று தோன்றுவதும்,

பலருக்கு ஏற்படும் தேவையில்லாத பயம்,

இவை எல்லாவற்றிக்குமே பூர்வ ஜன்ம தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் பார்த்தால்,
ஞான சம்பந்தர் நாலு வயதிலே பாடல் எழுதினர்.
சுகர் பிறக்கும்போதே ஞானியாக இருந்தார்.
என்றெல்லாம் சொல்லப்படும் போது ........!!!

நம்ம மட்டும் ஏன் அந்த அளவுக்கு இல்லை என்ற போது ,

அப்பாதுரை சார் கதை லே வர பூசாரி மாதிரி ஒரு சோழி உருட்டுபவன் இல்லை, ஜோசியக்காரன்

நம் ஜாதக த்தில், ஐந்தாம் இடத்தைப் பார்த்து பூர்வ ஜன்ம வினைப்பயன் என்று அடிச்சு சொல்கிறான் ..


அதே போல், பதினிரண்டாம் இடத்தில் கேது இருந்தால் அவனுக்கு அடுத்த பிறவி இல்லை என்கிறார்கள்.  கேது ஞான காரகானாம். ஞானம் பிறந்துவிட்டது என்றால் அடுத்த பிறவி கிடையாதாம்.

இது ஒரு பக்கம் இருக்க, யதார்த்தத்திலே

இன்னிக்கு பல வீடுகளிலே சலித்துக் கொள்கிறார்கள்.

இந்த மாமியார் படுத்தற  கொடுமைக்கு, நான் போன ஜன்மத்திலே என்ன பாவம் செய்தேனோ ?


என்று புலம்பும் மருமகள் கள். ஒரு பக்கம். அதே போல், சலித்துக் கொள்ளும் மாமியார்கள் இன்னொரு பக்கம்.

கணவன்மார்களும், மனைவி மார்களும் இதற்கு விதி விலக்கில்லை .

சரி, தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது. ?

நம்ம வினையை நம்ம தானே அனுபவிச்சாவணும்...
இது கடைசி புலம்பல்.

பெருமாளின் மெய் காப்பாளர்கள் ஆன, ஜய , விஜய இரண்டு பேருமே , கடவுளுக்கு எதிரியாக மூன்று பிறவி எடுத்து, அவற்றில், பெருமாள் அவதாரத்தால் அழிக்கப்பட்டு, திரும்பவும், அதே வாட்ச் மென் உத்தியோகத்திற்கு வந்தார்கள் என்று துளசி கோபால் மேடம் வலைத் தளம் சொல்கிறது.



பாரதத்திலும் ராமாயணம் போன்ற இதிகாச புராணங்களும் முன்  பிறவி பற்றிப் பேசத்தான் செய்கின்றன.

அனுமனை சிவனின் அவதாரம் என்று சொல்வோரும் உண்டு.

(அதற்காக, கண்ணில் படும் குரங்குகளை எல்லாம் அனுமனாக எண்ணிட முடியுமா ?)

புத்தர் , மகா விஷ்ணு வின் , அவதாரங்களில் பத்தாவது அவதாரமாக கருதுகிறார்கள்.

இது எல்லாமே உடான்சு என்று சொல்பவர்கள் கருத்தையும் தள்ளி விட முடியாது.

ஒரு உயிர்லேந்து தான் இன்னொரு உயிர் பிறப்பு நடந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக ஒத்துக்கொண்டாலும் , அந்த பழைய உயிர் இன்னமாத்தான் வடிவம், குணம் கொண்டு இருந்தது என்று சொல்ல முடியாது.
இருந்தாலும், சில அபூர்வ நிகழ்வுகள் பி.பி. சி. தொலைக் காட்சி மூலம்:

தமது முன்பிறவிகளில் என்ன என்ன நடந்தது என்பதை எடுத்துச் சொன்ன சிலரைப் பற்றி பி.பி. சி. நிறுவனம் என்ன சொல்கிறது பாருங்கள்.







சிவபுராணம் சொல்கிறது.  டார்வின் தத்துவம் போல :

 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்...........

ஒன்றில் இருந்து இன்னொரு உயிர் வகைக்கு போக ஒரு வாய்ப்பு இருந்தது, இருக்கிறது .

ஜெனெடிக் முடேஷன் முறைப்படி, பரிணாம வளர்ச்சிப் படி, நாம் ஒரு செல் உயிரினங்களிலிருந்து குரங்கு வரை வந்து, சிம்பன்சி லேந்து மனிதன் ஆகி இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள இயல்கிறது.

ஆயினும் இதற்கு முன்பு எப்படி இருந்தோம் என்பதை ஒரு ஊகத்தினால் தான் இதுவரை கணிக்க முடிகிறது.

என் பாட்டி ஒரு முறை என்னிடம் சொன்னது (1948ல் ) இன்னமும் நினைவு  இருக்கிறது.  எதோ ஒரு புராணக் கதை சொல்லும்போது அவர் சொன்னது: இந்த ஜன்மத்திலே உன்னுடைய குணங்களிலே எந்த குணம் முன்னே நிற்கிறதோ
அது பெரிதும் உள்ள ஜீவ ராசியாகத்தான் நம்ம முன்ன ஜன்மத்திலே இருந்திருப்போம்.  

அப்படி பார்த்தா:
நான் எஸ்.சார். எஸ்.சார் என்று சர்விஸ் போது சொல்லிண்டு இருந்தேனாம் . ஹெச். ஆர்.மென்,,பாஸுக்கு வேற எப்படி சார் இருக்க முடியும் ?

அப்படின்னா நான் ஒன்னு
நாய் அல்லது காக்காய்.

நான் என்ன சொன்னாலும் புஸ. புஸ. என்று பொரிந்து தள்ளும் என் சக தர்மினி முன் ஜன்மத்திலே ராஜ நாகம்.

நான் எப்பவும் ஹோட்டலுக்கு போனா, பில் பணம் தரும் எனது நண்பர் ரங்கநாதன் பசு மாடு அதுவும் காம தேனு. அவுங்க வூட்டு அம்மா சாக்ஷாத் அன்ன பூரணி தேவி. ஒரு வாய் சாதம் போடாம திருப்பி அனுப்ப மாட்டாங்க.

சூப்பரா உங்க டி.வியை சரி செஞ்சுடுவேன் அப்படின்னு எங்கிட்ட ரூபாய் 4500 பிடிங்கிப் போய் , அடுத்த நாளே டி.வி. அவுட் ஆனபோது, அந்த  எலக்ட்ரானிக் எஞ்சினீர் நான் என்ன செய்ய முடியும். என்ற அவர்  ஒரு நரி. (நான் தந்தபோது நல்லாத்தானே சார் இருந்தது !! என்கிறார்.)


சொல்லிகிட்டே போலாம். 


பௌதீக அறிவியல் படி பார்த்தால், மூச்சு விட மறந்து போன உடனே ,
மி அண்ட்  யூ ஸீஸ் டு எக்சிஸ்ட்.
அண்ட் தட்ஸ் த எண்ட் .

உபனிஷத்திலோ அந்த பௌதீக உடல் லேந்து உயிர் பிரியற பொழுது வெளிப்படும்   ஒரு ஆன்மா வுக்கு
ஒரு தொடர்ச்சி இருப்பதாக சொல்லப்படுகிறது.

நம்ம மதங்கள் மட்டும் அன்றி, பிற மதங்களும் பொதுவாக இந்த தியரியை ஒத்துக் கொள்கின்றன.

எது சரி எது தப்பில்லாவிடினும் சரியில்ல. எது தப்பு ?


நான் படிக்கும் கிட்டத்தட்ட ஒரு 200 வலைத் தள ஆசிரியர்களுக்கு இதைப் பற்றிய திடமான கருத்தோ நம்பிக்கையோ இருக்கக்கூடும்.

அவர்களில் சிலராவது கருத்து சொல்வார்களா ?

*************************************************************************



இது ஒன்றும் ஆராய்ச்சி இல்லை. 
ஜஸ்ட்   RANDOM THOUGHTS and loud thinking.
தமிழிலே சொல்லப்போனால் உரத்த சிந்தனைகள். 









Monday, April 18, 2016

Sunday, April 17, 2016

பெரிசு ! புரிஞ்சுக்கய்யா...


வாழ்வின் அந்தி மாலையில் ஒரு நாள்.
பக்கத்தில் இருந்து ஒரு முனகல் சத்தம் கேட்டது.
திரும்பி யார் என்று பார்த்தேன்.

ஒரு பெரியவரும் பக்கத்தில் ஒரு நடுத்தர வயதினரும்.
பெரியவரின் சொந்தமாக இருக்குமோ ?
சொன்னதைக் கேட்டேன்.
"பெரிசு ! புரிஞ்சுக்கய்யா..."
"புரியுது.  மனசு ஒத்துக்கல்லெயே !"

"கவலைப் பட்டு இன்னா பிரயோஜனம் சொல்லு."

"தெரியுது."

வயசாயிக்கிட்டே போவுது.இல்லையா.."

அதுக்காவ, மனுசனை இப்படியா வாட்டுறது !
ஒரு நாளைக்கு வயிறு சரியில்ல. இன்னொரு நாளைக்கு கால் வலி தாங்கல்லே.

ஒரு நாளைக்கு காது வலி. அடுத்த நாள் ஜலதோஷம் .

டாக்டர் கிட்டே கேட்டா இதெல்லாம் வயசு சம்பந்தப்பட்டது அய்யா. என்கிறார்.


ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு ஒன்பது மாத்திரை.

"வயசாகும்போது என்னென்ன நமக்கு நம்ம உடம்பு பீல் பண்ணும்.

கொஞ்சம் இந்த கேள்வி பதில் பாருங்க.  இங்கன க்ளிக் பண்ணுங்க. 

ஆன்சர் பண்ணுங்க ப்ளீஸ்."

"இன்னாது !! இப்ப வோணாம்."

"வயசாகும்போது படிச்சுக்கறேன் அப்படின்னு சொல்றீகளா !

அதுவும் சரிதான். அப்ப இத  தினமும் காலைலே எழுந்த உடனே இதப் படிங்க.. 
சிரிச்சுகிட்டே இருக்கலாம். "
" பாக்கலாம்.  ஆனா,வீட்டுக்காரி படிச்சா கோவிச்சுப்பா."

"இதுவும் வேண்டாமா ? இதப் பாருங்க. "




இல்லேன்னா இதையாவது  பாருங்க.


Friday, April 8, 2016

Heartfulness Relaxation

யுகாதி புது வருஷ வாழ்த்துக்கள்.


என்னுடைய பல நண்பர்கள்  தெலுங்கு மொழி யைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள அனைவருக்கும் எனது

யுகாதி புது வருஷ வாழ்த்துக்கள்.

யாராவது ஓருவர் அவர்களில் இந்த பாட்டை தமிழில் மொழி பெயர்த்தால் நல்லது.

Goreti Venkanna அவர்கள் மூச்சு விடாமல் பாடுகிறார்கள்.

இதே போல எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் ஒன்று கேட்டு இருக்கிறோம்.




Yukati తెలుగు నూతన సంవత్సరం.

(கூகிள் மொழி பெயர்ப்பு)


Another song Breathless.





Sunday, April 3, 2016

ஹார்ட் ப்ராப்ளம் இருக்கிறவங்க படிக்க வோணாம்.

கனவில் வந்தாலும் பயமுறுத்தும் காட்சிகள்.

நான் ரொம்ப தைரியசாலியாக்கும் , எதுக்கும் பயப்பட மாட்டேன் என்று

சொல்லும் நண்பர்கள் எல்லாம் முதலில் இதைப் பார்க்கட்டும்.

இங்கு க்ளிக் செய்து பாருங்கள்.


முதலில் நீங்கள் பார்ப்பது ஒரு பொம்மை.
1970 ம் வருடம் இதை தனது பெண்ணுக்காக வாங்கி வந்தாராம்.
அடுத்த நாள் இந்த பொம்மையின் வாயில் இருந்து ரத்தம் வந்ததாம்.

பயந்து போய், ரொம்ப தூரத்தில் தூக்கி எறிந்தாராம்.

அடுத்த நாள் காலைலே வூட்டிலே அதே இடத்திலே
இருந்ததாம்.

இது மாதிரி 10 ஆமாம். பத்தே பத்து நிகழ்வுகள்.

ஹார்ட் ப்ராப்ளம் இருக்கிறவங்க படிக்க வோணாம்.
பார்த்துட்டு உன்னாலே தான்யா ஆச்சு, அப்படின்னு
இந்த சுப்பு கிழவன் கிட்டே சண்டைக்கு வராதீக.

Courtesy: Speaking Tree. 

Friday, April 1, 2016

April 1


கிளாசிகலி யுவர்ஸ்.








shreya goshal classical


classical from kerala

Western classical here: Fantastic indeed.





Classical outclassing !!!or Am I just joking ?? !!!

Wednesday, March 16, 2016

Mozart - மேஜிக் ப்ரூட்.



மொசார்ட் இசை வல்லுனரின் மேஜிக் ப்ரூட்.

ஒரு காவியம் உயிர்ப்பித்து எழுந்து தனது கண்களை விரிக்க, நம் இதயமோ வியக்கிறது.




Friday, March 11, 2016

நம்ம ஊர் பூனை பிழைச்சுக்கிச்சு டோய் !!



நம்ம ஊர் பூனை பிழைச்சுக்கிச்சு டோய் !!!

Friday, February 26, 2016

சின்னச் சின்ன ஆசை.



சின்னச் சின்ன ஆசை.

கடம் வாசிப்பது  சுரேஷ்

சுரேஷ் ஒரு மேதை.
சுப்பு தாத்தா வின் அத்தையின் பேரன். இதுவரை நூறு தேசங்களுக்கு மேல் சென்று தனது வித்வத்தைப் பிரதர்சனம் செய்து இருக்கும் சுரேஷுக்கு எங்கள் ஆசிர்வாதங்கள்.

ஆன் லைனில் கடம் மற்றும் கொன்னக்கோல் வகுப்புகள் நடத்துகிறார்.

காரைக்குடி மணி மிருதங்கம் சுரேஷ் கடம் தனி ஆவர்த்தனம் இங்கே.
நி.14.23 முதல் சுரேஷ் கடம். 


Sunday, February 14, 2016

.கி.மு. 2016 முதல் கி.பி .2016 வரை.

இன்னிக்கு எதுக்காவ இந்தப் பாட்டு போடறீக ?

கி.மு. 2016 முதல் கி.பி .2016 வரை. ஒரே கதை தான்.




வசீகரா...






manase maine varu


Thursday, January 14, 2016

பொங்கலோ பொங்கல்.

இன்று பொங்கல் திருநாள்.

நம் இந்தியா முழுவதும் இந்த திருநாள் வெவ்வேறு பெயர்களிலே கொண்டாடுவதை நாம் இப்போது கண்டு களிக்கலாம்.



MAKAR SANKRANTHI AS OBSERVED IN VARIOUS PARTS OF OUR COUNTRY AND ALSO ABROAD.

அஸ்ஸாம் மாநிலத்தில் மேஜி திருவிழா.

MEJI FESTIVAL IN ASSAM


வட இந்தியா பல் வேறு நகரங்களில் நதிகளில் நீராடும் திருவிழா கோலம்.

IN NORTH INDIA, DEVOTEES TAKE A HOLY DIP DURING SANKRANTHI FESTIVAL.



IT IS UTHARAYAN FESTIVAL AT GUJARATH
குஜராத் மாநிலத்தில் உத்தராயன் திருவிழா.



IT IS LOHRI FESTIVAL IN PUNJAB.
பஞ்சாபில் லோஹ்ரி.


RANGOLI IN TELUGU LAND.
தெலுங்கு பேசப்படும் பிரதேசங்களில் ரங்கோலி மகர் சங்கராந்தி.


IN OUR TAMIL NADU, IT IS PONGAL.
நமது தமிழகத்தில் பொங்கல் திருவிழா.


PONGALO PONGAL.
பொங்கலோ பொங்கல்.

HAPPY PONGAL GREETINGS TO ALL.

எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.