Pages

Sunday, February 15, 2009

Married for 60 years and more !!!

http://www.time.com/time/photogallery/0,29307,1879220_1845040,00.html

TIME has published remarkable photos of couples married for well over 60 years.
To be happy and continue to be happy, see that your wife/husband is also happy with you !!

Good Luck.

Sunday, January 25, 2009

Politics, ethics and democracy அரசியல், ஜன நாயகம்

சென்னையிலிருந்து அமெரிக்காவில் உள்ள கனெக்டிகெட் ஸ்டாம்ஃபோர்டு வந்து ஒரு சில தினங்களே ஆகின்றன. இருந்தாலும் சென்னையை விட்டுப் பிரிந்துபோன உணர்வு மேல் நோங்கி நிற்கிறது.

என்ன காரணம் ? இங்கு உள்ள கடும் குளிரா ? வித்தியாசமான சாலைகளா ? இங்கு காணப்படும் ஒழுங்கு விதிகளா ?
இதெல்லாம் இல்லை. இதற்கு மேலே :

முதற்காரணம்: கிட்டத்தட்ட 50 வருடங்களாக எழுந்த உடனேயே கையில் எடுக்கும் எனது தினசரி ஹின்டு பேப்பர் எனப்புரிந்தது.

என்னதான், எனக்கு எனக்கு ஹின்டுவின் பக்கங்கள் முக்கிய சங்கதிகள் இன்டர்னெட் வழியாக படிக்கமுடிந்தாலும் பேப்பரைக் கையிலே ஃபிஸிகலா எடுத்து மேலும் கீழுமாக கண்களை உலவவிட்டு நமக்குப்பிடித்த பக்கங்களை முதலில் படித்து ஒரு மன அமைதி பெறுவதே தனி சுகம்.

இன்று காலை ஹின்டு வில் திரு நரேஷ் குப்தா அவர்கள் எழுதிய கட்டுரை மிகவும் கவர்ந்தது. ஆஃப் லேட் நான் ஹின்டு ஒர் பக்கமாக எழுதுகிறது என்று பலர் கூறுவதில் சிறிது உண்மை இருக்கிறது என்பது எனது கருத்து. இன்றைய கட்டுரை ஹின்டுவில் தானா என்றுகூட ஐயமாக இருந்தது.

எழுதிய திரு. நரேஷ் குப்தா அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ் நாடு. அண்மையில் அவரது செயல்பாடுகள் ஒரு சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் இருந்தன என்பது வெள்ளிடைமலை.

அவர் எழுதிய இந்தக் கட்டுரை படித்தபின் அவரது மன உணர்வுகள் புரியாமல் இல்லை. சாதாரணமாக, அரசியல் குறித்த பதிவுகள் எழுதுவதில்லை. ஆயினும் இது அரசியல் மட்டுமன்றி, அரசியல் சரித்திரம், எதிக்ஸ் உள்ளிட்டதாக‌ இருக்கிறது.

பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்திய நண்பர்கள் இக்கட்டுரையை அவசியம் படிக்கவேண்டும்.

காபி ரைட் கட்டுரையாக இருக்கிறது. இருந்தாலும் ஹின்டுவின் ஒரு 60 வருட வாசகன் என்ற முறையில் அதை நான் இத்துடன் இணைப்பதில் ஹின்டு நிர்வாகம் கோபமடையாது என எண்ணுகிறேன்.

Politics, ethics and democracy

Naresh Gupta

Democracy is at stake if the loudest voice counts as the voice of wisdom or when coercive pressures take the place of reason and persuasion

Democracy was never alien to India. In fact, India could be considered to have been the cradle of democracy. The roots of Indian democracy can be traced back to as early as the Vedic age. There was a time when India was studded with republics. Even where there were monarchies, they were either elected or limited. They had to function in accordance with dharma, or the rule of law. Pali texts provide interesting details of how the assemblies of republics in the post-Vedic period functioned like parliaments and followed highly sophisticated procedures. However, the parliamentary system in its modern connotation owes its origin and growth to India’s British connection for some two centuries.

The Indian Independence Act, 1947, provided for the setting up of two dominions of India and Pakistan with effect from August 15, 1947. It was, according to Lord Samuel, “an event unique in history — a treaty of peace without war.”

The Founding Fathers of the Constitution chose the system of representative parliamentary democracy with universal adult franchise. Freedom brings responsibility. Building on the traditions of the national movement, Indian leaders strengthened the foundations of democracy in the country by the manner of their functioning. They gave due importance to the institutional aspects of the democratic system and adhered not only to the forms of democratic institutions and procedures but also the spirit.

From an electorate of around 173 million in 1951 when India went to the polls for the first time under the Constitution, the number of electors swelled to nearly 672 million in 2004. The fair and peaceful conduct of elections periodically with a large turn-out of voters, especially of the rural folk and women, and the participation of all groups with differing ideology and religious faith, is an indication of the acceptance of the framework of the Constitution and the growing political awareness among the people. India is the largest democracy in the world. These elections have demonstrated that the democratic urge is very deep-rooted among the people of India and their faith in a constitutional system of government very strong.

Jawaharlal Nehru was quite amazed at democracy functioning so successfully in India. On the last day of the second Lok Sabha, he could say with some satisfaction on the floor of the House: “Democracy... is the hallmark of India at present. But democracy does not consist of 210 million people voting. Democracy, ultimately, is a way of life, a way of reacting to circumstances, a way of thinking and a way of putting with the things we dislike even. And I think we have done fairly well… and considering the state of the world today when every other day we read bout coup d’ etats in various countries, it is surprising how we have carried on in our normal way.”

If we are to live in peace and happiness, every nation, community, and the individual must envision universal and humanitarian ideals and must strive to practise them in thought, speech and action. Religion and even politics must be founded on moral and spiritual fundamentals. In ancient India, politics was regarded as a branch of ethics. Peace, justice and liberty for all were the prime purposes of politics.

Mahatma Gandhi recommended that politics should be a branch of ethics. While there has been considerable progress on the economic front, there has been regression of the values in the society and devaluation of the institutions.

The expectation at the time of Independence that public men would sacrifice their personal interest for public welfare has not been fulfilled. Mahatma Gandhi did not want the constructive workers, the men and women who had directed the several organisations over the years to remove untouchability, extend basic education, improve food cultivation, develop village industries and encourage hand spinning, to go into power politics. That would, he felt, spell ruin.

Democracy is at stake if the loudest voice counts as the voice of wisdom or when coercive pressures take the place of reason and persuasion. Referring to his tours, especially concerned with the general elections that were approaching at that time, Nehru wrote: “Elections were an inseparable part of the democratic process and there was no way of doing away with them. Yet, often enough, elections bring out the evil side of man and they do not always lead to the success of the better man.”

In his address on October 18, 1951, Nehru laid great emphasis on the importance of the right means to achieve right ends. He said: “... [I]f in our eagerness to win the elections, we compromise with something that is wrong, then we have lost the fight already and it matters little who tops the poll...”

(Naresh Gupta is an Indian Administrative Service officer serving as Chief Electoral Officer, Tamil Nadu.)

© Copyright 2000 - 2008 The Hindu

Courtesy: THE HINDU

Sunday, January 11, 2009

புக்கர் பரிசு இந்த வருஷம் ஒன்று கொடுத்தால்....



இதே போல் கலர் கலரா தினுசு தினுசா ஒரு பத்து பூ. கண்டு களிக்க செல்க:

http://thulasidhalam.blogspot.com

கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக இந்த ப்பதிவினில் புதிதாக ஏதும் எழுதவில்லை என்பதே மறந்து போன நிலையில் வடுவூர் குமார் கானடா ராகத்தை ரசித்துவிட்டுப் போன விவரம் அறிந்து மகிழ்ந்தேன். அந்தப்பாட்டு திரையில் வந்து வெகு காலமானாலும், மக்களின் மனதை விட்டுப் போகவில்லை. இனிமையென்றால் அப்படி ஒரு இனிமை அந்தப்பாட்டில்.
நிலா, நிலா எனத்துவங்கும் பாட்டு அது.

துளசி டீச்சர் பதிவு டாலியா பூக்களின் ஒரு சுந்தர வனமாகத் திகழ்கிறது. அப்பூக்களைப் பார்த்து மயங்காத ரசிகர் இல்லை. நான் என்ன செய்தேன், அவற்றில் சில , இல்லை பலவற்றை எடுத்துக் கொண்டு போய், மேடம் கவினயா திருவெம்பாவை பாட்டுடன் இணைத்து யூ ட்யூபில் வெளியிட்டேன். அதைப்பார்த்து துளசி டீச்சர் மகிழ்ந்தார். அவர் நன்றி கூறும் அழகே தனி. வார்த்தைகளை கையாள்வதில், தான் சொல்லவேண்டியதை, எளிமையாக, கோர்வையாக சொல்வதில் அவருடைய திறமைதனை வார்த்தைகளால் வர்ணிப்பது எளிதல்ல. தமிழ் வலையுலகத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் துவங்கினால் அவர்தான் முதல் வைஸ் சான்ஸலர் ஆவார்.

துளசிதளம் வலைப்பதிவுக்கு வருகை தந்திருந்த ( எனக்கு அறிமுகமாகாத ) ஒரு வலைப்பதிவுக்குச் சென்றேன். துளசிதளம் புஷ்பவனம். தெய்வ சுகந்தி அவர்களின் தளத்திலோ குருமா மணம். அப்படியே தூக்கி சாப்பிட்டு விடும் போல் இருக்கிறது.

இந்த வயதில் கொண்டக்கடலை, குருமா எல்லாம் வயிரு புடைக்க தின்றுவிட்டால், ஜீரணம் ஆகுமோ ஆகாதா என்றே தெரியவில்லை.

நான் பார்த்திராத வலைப்பதிவு இது. ஜன்மம் எடுத்ததே சாப்பிடத்தானே ! நல்ல சாப்பாடு சாப்பிடவேண்டும், நல்ல பாட்டு கேட்கவேண்டும், நல்ல தூக்கம் தூங்க வேண்டும். இதைத் தவிர வேறு என்ன வேண்டும் ! அப்பப்ப , காதுக்கும் நல்லது கொஞ்சம் கேட்கவேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம், நான் ஜீவா அவர்களின் வலைப்பதிவு செல்வேன். அது பதிவு அல்ல. இசைக்கடல். அதில் முழுகிவிட்டால், அடுத்த வேளை மாத்திரை சாப்பிடவேண்டும் என்பது கூட மறந்து போகிறது. சமீபத்தில் தோடி ராகத்தில் ஒரு ராகம் தானம் பல்லவி. அப்பப்பா ! என்ன சுகம் என்ன சுகம் !!

சில மாதங்களாக எல்லா வலைகளிலும் பார்ப்பது :
follow me
விசிறிகள் தாங்கள் விசிட் செய்யும் வலையில் தங்கள் ஃபோட்டோக்களைப் பதிவு செய்ய சுலபமான வழி.
ஜீவா அவர்கள் இதை " பெரியோர் தொடர்பு" என நாகரீகமாகச் சொன்னதற்கு சிறியவனான நான் கடமைப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் ஒன்று பாருங்கள். ஒரு வலைப்பதிவாளர் ஏறத்தாள 53 பதிவுகளை ஃபாலோ செய்கிறாராம். அதில் எனது ஒன்பது பதிவுகளில் ஒன்றாவது இருக்குமென நினைத்து மேலும் கீழும் பன்முறை பார்த்தேன். கழுத்து வலித்ததுதான் மிச்சம். ஊஹூம். எனக்கு அந்த பாக்கியம் இல்லை. ஆண்டவனுக்கு நான் விசிறியாக முடியுமே தவிர ஆண்டவன் எனக்கு விசிறியாக முடியுமோ ? எனது பைத்தியக்கார பேராசையைப் பார்த்து எனக்கே சிரிப்பாக வந்தது.

இன்னும் பத்து நாட்களில் யூ.எஸ்ஸுக்குச் செல்லவேண்டும். அங்கு போய் அந்தக்குளிரில் எப்படி நடுங்கப்போகிறேன் என்று இப்போது வருணிக்க இயலாது. பல் கிடு கிடு என்று ஆடுமேன்னு தான் பல் செட்டே போட்டுக்கொள்ளவில்லை. அங்கிருந்து எனது பெண் தொலைபேசியில் இந்த கோதுமை ரவா என்னன்னு கேட்டால், இங்கே யாருக்கும் புரியவில்லை. உனக்கு தினம் கோதுமை சாதம் வேண்டுமல்லவா , அதனால், வரும்போது கொஞ்சம் ரவா எடுத்து வந்தால் அதைக்காண்பித்து அதை இங்கே வாங்கலாம் என்றாள். கோதுமை மாவு சப்பாத்திக்கு. க்ளுடன் என்பது அல்வா பண்ணுவதற்கு.அமெரிக்க தமிழர்கள்
கோதுமை ரவா உப்புமா எப்படி செய்கிறார்கள் ? கோதுமை ரவாவுக்கு அமெரிக்காவில், குறிப்பாக கனெக்டிகட்டில், new jersey ல் என்ன பெயர் ? தெரிந்தவர்கள் எழுதலாம். ஒருவேளை ஜீவா இதைப்படித்தால் E-மைல் போடுவார்.

இப்படி யோசித்துக்கொண்டே, வலைகளை வலம் வரும்போது, ராஜீஸ் கிச்சன் என்று ஒரு ஆங்கில வலை கண்ணில் பட்டது. கூகுளில் வீட் ரவா என்று தேடினேன். அப்போது,வீட்டில் வீட் ரவாவில் பாயசம் செய்வது எப்படி என்று ஒரு கிச்சன் வலை கண்ணில் பட்டது. ரவா பாயசத்தை வர்ணித்திருப்பது ரவா பாயசம் சாப்பிட்டது போலவே இருக்கிறது. மிந்திரி, திராட்சை எல்லாம் போட்டு, அதை ஃபோட்டோ பிடித்து போட்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்று புரியவில்லை. எல்லாவற்றையும் வர்ணித்துவிட்டு, இது காபி ரைட் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இன்டலக்சுவல் காபிரைட் என்பது அமெரிக்காவில் உண்டு என்பதை நானறிவேன். ஆனால், இவர்கள் சொன்னது போல‌ நான் ரவா பாயசம் செய்து அதில் ஒன்றிரண்டு டம்ளர் குடித்தபின், நீ காபிரைட்டை இன்ஃப்ரிஞ்சு செய்துவிட்டாய் என்று கேஸ் போட்டு விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. ஆனால் ஒன்று, மிந்திரிக்கு பதிலாக பாதாம் பருப்பைப் போட்டுவிட்டு, இது வேற என்று சமாளித்துக் கொள்ளலாம்.

எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றுவான்.

கடைசியில் துளசி டீச்சருடைய பதிலொன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதை மறுபடியும் மறுபடியும் படித்தேன்.

அது இதுவே:

"இயற்கையை மிஞ்சுனது ஏதும் உண்டா?

உண்மையாப் பார்த்தால் இதுதான் கடவுள். நாம்தான் அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தாற்போல் பேர் வச்சுருக்கோம்,சாமிக்கு."

இரண்டே வாக்கியங்களில் உலக வானிலே அமைதி நிலா பரிணமிக்க பவனி வர‌ வழி ஒன்று சொல்லியிருக்கிறார்கள்.

புக்கர் பரிசு இந்த வருஷம் ஒன்று கொடுத்தால் அதை எங்கள் துளசி டீச்சருக்குத் தரவேண்டும்.

Monday, October 27, 2008

அருள் வாக்கு




என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், எப்படி எழுதவேண்டும் என்ற ஒரு அறிவுரை படிக்கும் வாய்ப்பு, இல்லை, பாக்கியம் கிடைத்தது. அதை நீங்களும் படியுங்கள்.

இன்றைய பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, வலையுலக எழுத்தாளர்களுக்கென
ஒரு நெறி நமக்கு நாமே வைத்துக்கொண்டால், அது இதுவாகத்தான் இருக்கும் என்பது திண்ணம்.



அருள் வாக்கு
இன்றைய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் கடமை, கன்ங்களுக்குப் பிடித்ததை
மட்டுமே சொல்வது என்று வைத்துக்கொள்ளக்கூடாது. அவர்களின் அறிவை, மனத்தை உயர்த்துகிற விஷயங்களையே எழுதவேண்டும். இதை சுவாரசியமாகச் செய்யவேண்டும். உத்தமமான விஷயங்களைப் புதுப்புது விதங்களில் உணர்த்த வேண்டும். பத்திரிகையாளர்கள் வாழ் நாள் முழுதும் மாணாக்கள்களாகவே இருந்தால்தான் தாங்களும் இப்படிப் புதுப்புது விஷயங்களை அறிந்து மற்றவர்களுக்குப் பிரசாரம் செய்ய முடியும்.

சத்தியத்தை, சர்க்கரைப் பூச்சிட்ட மாத்திரைகளாக்கித் தரவேண்டும். சக்கரைப் பூச்சுத்தானே ஒழிய, முழுக்கவும் சர்க்கரை ஆகிவிடக்கூடாது. வெறும் சர்க்கரை உடம்புக்கு நல்லதல்ல. வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாசாரங்களில்தான் ஜன்ங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிகொண்டு இவ்விதமே எழுதுவது சரியல்ல. ஜனங்களுக்கு ஆதம அபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இருதய பூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முனைந்தால், தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும். ' நம்மையும் உயர்த்திக்கொண்டு, நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும் " என்கிற கடமை உணர்ச்சியைப்பெற வேண்டும். இவ்விதம் ஆத்ம க்ஷேமம், லோக க்ஷேமம், சாந்தி, சுபிட்சம் எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெறவேண்டும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள்.

நன்றி: கல்கி இதழ். 07.09.2008

Thursday, October 2, 2008

What Gandhi Owed to Tagore

 

THE ABOVE ARTICLE APPEARS IN THE HINDU SUNDAY MAGAZINE SECTION DATE 28TH SEPTEMBER 2008

"THE ARTICLE DEALS ON THE DEBATE BETWEEN GANDHI AND TAGORE, MEN OF HUGELY DIFFERENT TEMPEARAMENTS AND WORLD VIEWS, ON NATIONALISM STILL MAKES FOR ABSORBING READING"

Written by Sri Ramachandra Guha, the article gives us an insight into what 'nationalism' stood for in the eyes of these great men .

Today, Gandhi's birthday, this article is worthy a gold coin for every letter in it.

Courtesy: THE HINDU, 28TH September 2008
Posted by Picasa


Where are these onlookers of this great conversation today?

Saturday, September 6, 2008

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ?

ரசித்துப் படிக்கும் வலைப்பதிவுகளில் இப்போதெல்லாம் அடிக்கடி எழுதமுடிவதில்லை.
வயது ஒரு காரணம் . இன்னொன்று impress ஆகி, ஆஹா என்று சொல்கிற‌
அளவிற்கு பதிவுகள் என் கண்களில் எதுவும் தென்படவில்லை.
( Possibly I have become too old to understand or appreciate things which the younger generation seek. I concede writers can never be at fault. They write what appeals to their immediate environment.)

அரைத்த மாவையே அரைப்பது அவ்வளவு உற்சாகப்படுத்தவில்லை.

ஏதேனும் புதிதாக செய்தால் என்ன என்று நினைக்கும்போது, ரசித்துப் படித்த‌
செய்திகளைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது.

இன்று யாஹூ செய்திகளில் ஒரு சம்பவம். தமிழ் நாட்டில் ஒரே நேரத்தில்
ஒரே மண்டபத்தில் நூற்றுக்கணக்கில் திருமணங்களை நடத்திவைப்பது
புதிய செய்தி அல்ல.

இருந்தாலும், அப்படிப்பட்ட mass marriages நடக்கும்போது திடீரென்று
தாலி கட்டும் நேரத்தில் மின்சாரம் நின்று போனால் என்ன ஆகும் என்று
இந்த சம்பவம் வருணிக்கிறது.

திடீர் என கரண்ட் போனதால், யார் பக்கத்தில் இருக்கிறார் எனக்கூடத் தெரியாமல்,
முகூர்த்த நேரத்தில் இன்னொருவர் கழுத்தில் இருவர் தாலி கட்டிவிட்டார்களாம் !
திரும்பவும் கரன்ட் வந்தபோது திடுக்கிட்டுப்போனார்களாம்

தாலி கட்டிய இருவர் மன நிலை
எப்படி இருக்கும் !!!தாலி கட்டிக்கொண்டவர் மன நிலை எப்படி இருக்கும் ?

அப்பாடி ! பிழைத்தோம் என்றிருக்குமோ !1
இல்லை !! இது செல்லாது !! நான் பார்த்தது அவளைத்தான். அவரைத்தான்
என்று இருக்குமோ ?

கட்டினா கட்டினதுதான். அதைக் கயட்ட முடியாது என்று "அந்த ஏழு நாட்கள்"
கதையாகிவிடுமோ ?


என்ன நடந்தது என மேலும் படித்தேன்.
ஒரு பரிகார பூஜை என செய்துவிட்டு, கட்டிய தாலியைக் கயட்டிவிட்டு,
சரியான நபரிடம் தாலி கட்டிக்கொண்டு அப்பாடா என பெருமூச்சு விட்டார்களாம்.
ஆல் இஸ் வெல் தட் என்ட்ஸ் வெல்.

Let us Bless the married couples and wish them all well.

A melody delights us.

கல்யாணத் தேன் நிலா
காய்க்காத பால் நிலா
Raag kanada




சுவையான செய்தியைப் படியுங்கள்.
நன்றி: யாஹூ செய்திகள்.


Married the wrong girl? Blame it on power cut
Fri, Sep 5 01:49 PM



Married the wrong girl? At least two grooms in Tamil Nadu can blame it on a power cut.

A black out at a crowded mass marriage venue In Theni at an auspicious moment when about 40 grooms had to simultaneously tie the 'mangal sutra' around their bride's neck led to a mix up with two of them missing the target.

Veerachamy, instead of tying the mangal sutra to Subbulakshmi, the bride, tied it around the neck of her friend, who was standing near her.

Similarly, Balamurugan tied the sacred thread around another girl's neck, instead of Sivakami.

The mix-up which took place at the Sri Subramaniaswamy temple complex at Periyakulam, however, was soon detected.

All ended well as elders, in a quick damage control exercise, removed the mangal sutras and made the grooms tie the tread to the right brides after a 'parikara pooja' (pooja for making amends).

Temple officials said as all the couples had gathered along with their relatives and their friends, leading to overcrowding on Wednesday night.

Friday, August 15, 2008

Vande Maatharam Enbom .. A song by Subramania Bharathi sung by his descendants



The descendants of Tamizh poet Bharathiyar -granddaughter Lalitha Bharathi, great grandson Rajkumar Bharathi and great great granddaughter Gayathri Bharathi sing Bharathiyar's version of Vande mataram

Wednesday, August 6, 2008

காமாக்ஷி என்றபெயர்



Courtesy: Madam Kavinaya

value="http://www.youtube.com/v/3Xfsom7Mth4&hl=en&fs=1">


Courtesy: Madam Kavinaya in
http://ammanpaattu.blogspot.com


மாங்காட்டுத் திருத்தலத்தில்
காமாக்ஷி என்றபெயர்
கொண்டபடி வீற்றிருக்கும் அம்மா!

பூங்காற்றுபோல நெஞ்சம்
தழுவுகின்ற கருணையினால்
எமைஆட்சி செய்திருக்கும் அம்மா!

அக்கினியின் நடுவினிலே
முக்கண்ணனை வேண்டி
உக்கிரமாய்த் தவம்செய்தாய் அம்மா!

ஒற்றைவிரல் ஒன்றுமட்டும்
ஊசி முனை தாங்கி நிற்க
உள்ளம்ஒன்றி உருகிநின்றாய் அம்மா!

பற்றனைத்தும் விட்டுவிட்டு
உன்னை மட்டும் பற்றிக் கொள்ள
பாவைஎனக் கருள்புரிவாய் அம்மா!

இற்றைக்கும் ஏழேழு
பிறவிக்கும் உன்னடிகள்
போற்றுகின்ற வரம்தருவாய் அம்மா!

மூவிரண்டு வாரங்கள்
மனமொன்றி வேண்டி நின்றால்
மறுக்காமல் அருள்கின்ற அம்மா!

நாவினிக்க உன்பெயரை
நாள்தோறும் பாடுகின்றேன்
நயந்தெனக்கு அருளிடுவாய் அம்மா!

This devotional song is set to Raag Anandha Bhairavi.


--கவிநயா
http://ammanpaattu.blogspot.com/

Sunday, July 20, 2008

அறிவு ஜீவிக‌ள் யோசித்துப்ப்பார்க்க‌வேண்டும்.

போன பதிவில் நான் நம்பிக்கை எனும் பொருள்படும் இரு சொல்கள் ஆங்கிலத்தில்
இருப்பினும்,( belief, faith) அவை எவ்வாறு வேறுபடும் என்று விளக்க
முயற்சித்திருந்தேன். இன்னமும், இந்த நம்பிக்கை ( belief ) ஏற்படுவதற்கே ஒரு அடித்தளம், perception என்றும் இது எவ்வாறு ஏற்படும் என்பதை பிறகு விளக்குகிறேன் எனவும் சொல்லியிருந்தேன்.

இந்த நம்பிக்கை தனி நம்பிக்கை எனவும் பொது நம்பிக்கை எனவும் வித்தியாசப்படும்.

தனி நம்பிக்கைதனை ஆங்கிலத்தில் individual perception பொது நம்பிக்கைதனை group or public perception எனவும் கூறலாம். (There is yet another social perception which is again a public perception but varies with the societal environment)

தனி நம்பிக்கைக்கு (individual perception )ஒரு உதாரணம்

ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த கதையல்ல. நிஜம்.

எனது தங்கை 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அவளது கவனம் அதிகம் இசை, மற்றும் விளையாட்டில் இருந்ததால் படிப்பில் மிகவும் சுமாராகவே இருந்தது. பல சமயங்களில் அவள் பாஸ் மார்க்குக்கும் குறைவாகவே வாங்கி இருந்தாள்.

இருந்தாலும் என் அம்மாவுக்கு தன் பெண்ணின் மேல் அபார நம்பிக்கை. எப்படியாவது நல்ல மார்க் வாங்கிவிடுவாள் என்று. எனக்கு எதிர் நம்பிக்கை.

ஒரு அரையாண்டுத் தேர்வு முடிந்திருந்தது. பள்ளியிலிருந்து வந்த தங்கை வரும்போதே சத்தமாக : அம்மா ! நான் 93 வாங்கிவிட்டேன். என்றாள். உடன் அங்கு வந்த என் அம்மா, என்னைப் பார்த்து நீ தான் அவளை எப்ப பார்த்தாலும் கரித்துக் கொண்டிருந்தாய். பார் ! அவள் 93 வாங்கி விட்டாள். நான் இன்னைக்கு பால் பாயசம் பண்ணப்போகிறேன் என்று சொல்லிவிட்டு செய்யவும் துவங்கிவிட்டாள்.

நான் பேசாது இருந்தேன். மதிய உணவு முடிந்தது. பால் பாயசம் அமக்களம்.
அம்மா அந்தப் பக்கம் போன உடன் என் தங்கையைப் பார்த்துக் கேட்டேன்: "உண்மையைச் சொல்லு. எத்தனை மார்க் ? "
அவள் பதில் சொன்னாள். " இதில் உண்மை, பொய் எங்கே இருக்கு ? 93 மார்க் தான்" என்றாள். என்னால் நம்ப முடியவில்லை. " ப்ரொக்ரஸ் ரிபோர்ட்டைக் காண்பி" என்றேன். காண்பித்தாள். 93 மார்க் தான். ஆனால், மொத்தம் 500 க்கு 93 மார்க்.
அவளைப்பார்த்தேன்.

" நான் சொன்னதில் தவறு ஒன்றுமில்லையே ! எத்தனைக்கு என்று நீ கேட்காதவரைக்கும் நானும் சொல்லவேண்டும் என்பதில்லையே ! " என்றாள்.

individual perception எப்படி மாறுபடுகின்றது என்பதற்கு இது ஓர் உதாரணம். அவ்வளவே. இப்பொழுது group perception கவனிப்போம்.

சில நம்பிக்கைகளை வரையறுக்க இயலாது. காலம் காலமாக மக்களிடம் ஊன்றிப்போன சம்பிரதாயங்கள் இவை. ஒன்றை இங்கே பார்ப்போம்.

இங்கே நெருப்பின் மேல் நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கிறார்கள்.

(What is it that moves men to walk on fire ?
Is it blind faith ? )



இன்னொரு காட்சி இங்கே.
சக்தி யாத்திரை




இதையும் கேட்போம்

nambinorai kaapavale muthumari sujatha Sri Bannari amman kushboo actress.

http://www.musicindiaonline.com/p/x/CAXgMbZD.9.As1NMvHdW/?done_detect


allopathy, homeopathy, ayurvedha, unani மருத்துவ ஆதாரங்களை
ஆய்வு செய்யும் ஒரு பதிவு கண்ணில் பட்டது.

http://nanoscience.blogspot.com

இவர் தனது பதிவில் ஹோமியோபதி ஒரு pseudo science or pseudo medical system எனச்சொல்லி அதற்கான பல்வேறு காரணங்களை விவரித்திருந்தார். தற்போது ஆயுர்வேதமும் இந்த நிலையே என்றும் சொல்கிறார்.

இவர் சொல்லும் முக்கிய காரணம் எந்த அளவிற்கு அல்லோபதி மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டு, பிறகு சோதனை செய்யப்படுகின்றதோ ( முதலில் மிருகங்களில், அடுத்தது மனிதர்களில் ) அதனின் நோய் குணப்படுத்துகிற தன்மை கண்டு பிடிக்கப் படுகிறதோ அதன் பின் தான் வணிகத்திற்கு உட்படுத்தப்பட்டு மருத்துவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு பொது வினியோகம் செய்யப்படுகிறதோ அதுபோன்று இந்திய புராதன மருத்துவமான ஆயுர்வேதமும் இல்லை. ஹோமியோபதியும் இல்லை
என்கிறார்.

இவர் சொல்வதை ஆராய்ந்து பார்த்தால், இவரது முடிவுக்குக் காரணம் ஒரு (public perception) நம்பிக்கை எனத் தெரிகிறது.

1. அலோபதி கம்பெனிகள் தங்கள் ஆராய்ச்சிக்குப்பின் தயார் செய்யும் மருந்துகளை
ஒரு பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்கள். முத‌லில் எலிக‌ள், குர‌ங்குக‌ள்,போன்ற‌ உயிரின‌ங்க‌ள், அடுத்த‌ததாக‌ human trials. முன்வ‌ரும் நோயாளிக‌ளுக்குக் கொடுத்து அவ‌ற்றின் விளைவுக‌ளைக் க‌ணிப்ப‌து. ( இவை பெரும்பாலும் ஒரு sample theory த‌னை ஒத்து இருக்கும். இது பெரும்பாலும் random sample அடிப்ப‌டையில் அமையும். )

2. அந்தப் பரிசோதனை தரும் விளைவுகள் எதிர்பார்த்தவையாக இருக்கும் பட்சத்தில் வணிகம் செய்ய, அனுமதி கோருகிறார்கள்.

3. மருந்து வணிகத்தைக் கட்டுப்படுத்தும் நிர்வாகமும் ( அரசாங்க க் கட்டுப்பாட்டுக்குள்)அமைந்தது) இவர்கள் செய்ததாகச் சொல்லப்படும் பரிசோதனைகளைக் கவனித்து பின் ஒப்புதல் அளிக்கிறார்கள்.

இவையெல்லாமே ஒரு சட்ட வரைமுறைகளுக்குள் இருப்பதாகத்தோற்றமளிக்கின்றனவே தவிர உண்மையிலே நூற்றுக்கு நூறு உண்மையா என யாருமே சொல்லிடுதல் கடினம்.

1960 வருடங்களிலேயே மெட்ரானிடசோல் எனச்சொல்லப்படும் டிசன்ட்ரிக்காகக்
கொடுக்கப்படும் மருந்து கார்சினோஜெனிக் என்று நிருபிக்கப்பட்ட பின்பும் கொடுக்கப்பட்டு வருகிறது. ப‌ல்வேறு ம‌ருந்துக‌ள் அமெரிக்காவில் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌பின்பும் ஆசியா, ஆப்பிரிக்கா நாடுக‌ளில் oTC drugs ஆக‌க்கிட‌க்கின்ற‌ன‌. உதார‌ண‌ம் : celecoxib , (pain killer) nimusalide போன்ற‌வை. இவையின் side effects அள‌வுக்கு மேற்ப‌ட்ட‌தாக‌ இருப்ப‌தாக‌ச்சொல்ல‌ப்ப‌டினும் இவை ம‌ருத்துவ‌ர்க‌ளால் த‌ர‌ப்ப‌டுகிற‌து.

ப‌ல்வேறு ஆங்கில‌ ம‌ருந்துக‌ள் குண‌ப்ப‌டுவ‌தை விட‌ வேறுவித‌மான இடைஞ்ச‌ல்க‌ளையும் பாதிப்புக‌ளையும் ஏற‌ப‌டுத்துகின்ற‌ன. இதுவும் ஒரு public perception.

பரிசோதனைகள் சரிவர நடத்தப்பட்டன என்பதையும் பரிசோதனைகளின் முடிவுகள் சரியாகவே கணிக்கப்பட்டுள்ளன என்றும் வியாதியுறும் பொது மக்களிடையேயும் இப்பரிசோதனையில் உட்படுத்தப்பட்ட‌ மருந்துகள் அதே மாதிரியான முடிவுகளைத் தரும் என்பதும் ஒரு perception தான். இதுபோன்று அறிமுகப்பட்ட பல மருந்துகள்
பல நோயாளிகளின் உயிரைக்குடித்தபின் அவை வணிக வளாகங்களிலிருந்து
வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன. (withdrawn from markets )ஆகவே சோதனைகள் முழுமையானவை இல்லை என்பதையும் அனுபவமே நிரூபிக்கிறது.

இருந்தும் இந்த உண்மையை நாம் மறந்து (அல்லது மறைத்து) நமக்கு நாமே ஒரு
பொய்த்தோற்றத்தை, அதாவது, ஆங்கில் வைத்திய மருந்துகள் அனைத்துமே
கண்டிப்பாக நோய் நீக்க வல்லதென்ற கணிப்பை வைத்திருக்கிறோம். This is what I call a group perception. ( a perception based on a process which is as incorrect as it is inadequate)

மாறாக, ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் பூண்டு, மஞ்சள்,வேப்பங்காய், துளசி, முருங்கை, பாகை, வெந்தயம், சீரகம்,மிளகு, அதி மதுரம், வசம்பு, ஆடு தொடா இலை,சிறியா நங்கை, வெங்காயம், சுண்ணாம்பு, sarpa gandhi, ஆகிய பலவும் பல நூறாண்டு காலமாக வெவ்வேறு நோய்களுக்குப் பயன் படுத்தப்படுகின்றன. இவையின் நோய் நீக்க சக்தி அனுபவத்தால் தெரியப்பட்டுள்ளது.

இதுவும் ஒரு பொது நம்பிக்கை.( public perception )

சீனாவின் அகுபங்க்சர் முறை இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ரத்த அழுத்தம், போன்ற நோய்களை ஒரு குண்டூசி குத்துவதின் மூலம்
சரியாக்க முடியும் எனச் சொல்கிறார்கள்.

ரீகி முறை. அண்டத்தில் இயற்கையாக உள்ள சக்தியை மாஸ்டர் தனது
கைகள் வழியாகக் கொண்டு வந்து வியாதியஸ்தரைக் குணப்படுத்துவதாக‌
நம்ப்படுகிறது. ப்ரானிக் ஹீலிங் என்று இன்னொரு முறை.

இங்கேயெல்லாம் எத்தனை எத்தனை verifiable experiments ந்டந்தன ?

(This apart, even amidst allopathy, a good amount of drugs are prescribed since the physicians found them to work, despite the process by which the molecules contained in the drug has not been subjected to adequate research. For instance, GABAPENTIN
a drug primarily given for grand mal and petit mal (fits ) is also given for depression. This works but ask for the literature as to how it cures, you do not get adequate information...This is mentioned only to bring home that even in Allopathy medicines which are not subject to verifiable experiments are prescribed. )


ஆக‌வே public perception ஐ அடிப்ப‌டையாக‌ வைத்துக்கொண்டு செய‌ல்ப‌டும் ஒரு குறிப்பிட்ட‌ செய‌ல்முறை ச‌ரியா த‌வ‌றா என‌ச் சொல்லிவிட‌இய‌லாது. ஒரு குறிப்பிட்ட‌ செய‌ல் விஞ்ஞான‌ ரீதியாக‌ச் ச‌ரியில்லை என‌ச்சொன்னாலும் அது ந‌ம்பிக்கைக்கு உட்ப‌ட்ட‌ செய‌ல் என்றால் அதைக் க‌ண்டிப்ப‌தில் பொருள் இல்லை. (உதார‌ண‌ம்: சூரிய‌ ச‌ந்திர கிரஹணங்கள் மனிதர்களை பாதிப்பதில்லை. சூரிய கிருஹணத்தின் போது சூரியனை நேரடியாகப்பார்ப்பது தான் கூடாது. இருப்பினும் அந்த நேரத்தில் லக்ஷக்கணக்கான பொது மக்கள் கடலில் நீராடுகிறார்கள், நீத்தோர் கடன் கழிக்கிறார்கள்.) இரண்டாவது, நம்பிக்கை faith. ( I have witnessed Professors of Astronomy lecturing in the classroom as to how an eclipse occurs, to return home later in the evening to do a Amavasya tharpana during Solar eclipse. For them there is no contradiction, as between their two acts, first based on scientific knowledge and the second based on social faith.)
இன்னொரு கோணத்தில் பார்ப்போம்.

கல்பனா சாவ்லாவை ஏற்றிச்சென்ற விண் மின்கலம் சோதனைக்குட்படுத்தப்படாமலேயா அண்டத்திற்குச் செலுத்தப்பட்டது ? ஏன் திரும்பி பூமிக்குள் திரும்பி வரும்போது பழுதாகிவிட்டது ? அது ஒரு gamble ஆ?

எத்தனை எத்தனை சோதனைகளுக்குப்பின்னும் திறந்த இதய வால்வு அறுவை சிகிச்சை தோல்வி அடைகிறது ? அதற்காக அதை வேண்டாம் என புறக்கணிக்கிறோமா ?

There have been verifiable experiments but these do not add up to a conclusion that will ever work. So,we always look at probabilities, as to what are the chances that such and such thing will work or will not work in specified circumstances.

( I have personally witnessed a case, where the body temperature of a person suffering from Malaria could not be reduced to manageable levels of under 101 or so with two tablets of paracetamol of 500 mg and maintained for four to five hours, but with a single dose of pherum phos (homeopathic dosage for an adult) the temperature not only gets reduced but got sustained at < 101 for well over 5 to 6 hours )
This is not to decry Allopathy, but stressing the need to choose the right system at the right place.

ஒருவ‌ருக்கு இருக்கும் perception இன்னொருவ‌ருக்கு faith ஆக‌வும் இருக்கும். ந‌ம்பிக்கை உள்ளோர் ( faithfuls) இட‌ம் சென்று verifiable experiments க்கு உட்ப‌டுத்திய‌பின்பு தான் நீங்க‌ள் தொடர்ந்து செய்ய‌வேண்டும் , இல்லையெனின் நீங்க‌ள் புத்திசாலியில்லை என‌ச் சொல்லிடுத‌ல் முடியுமோ ?

Things fail even after verifiable and verified experiments. அறிவு ஜீவிக‌ள் யோசித்துப்ப்பார்க்க‌வேண்டும்.

There comes one's intuitive power, which is possibly ahead of one's
reasoning power.

What is then intuition ?