Pages

Saturday, April 23, 2016

இது தான் முதல் பிறவியா !! ??

எச்சரிக்கை; (கடைசியில் இருக்கிறது.) 
அதைக் கடைசியாகப் படிக்கவும். 
********************************************************************************


உங்களுக்கும்  எனக்கும் இது தான் முதல் பிறவியா !! ??

இல்லே இதுக்கு முன்னாடி பல பிறவி எடுத்து இருப்போமா ?இந்த காணொளியில் காணப்படும் நிகழ்வுகள் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறதா?


ஒரு ஸ்லைட் ப்ரெசெண்டெசன் ஒளி ஒலி க்காணல் தொடர்கிறது.
இங்கே க்ளிக் செய்தும் பார்க்கலாம். 
SPEAKING TREE

(நன்றி: பேசும் மரம்) Courtesy: SPEAKING TREE.

இல்லே...இந்த தொடர்பை அப்படியே பிரௌசர் லே போட்டும் படிக்கலாம்.

http://www.speakingtree.in/slideshow/signs-your-soul-has-reincarnated-many-times-496489/266554

சொல்லி இருக்கிற விஷயங்கள் எல்லாம், கருத்துக்கள் எல்லாம் சரி என்று
சுப்பு தாத்தா என்டார்ஸ் செய்யவில்லை .

ஆனா இன்டரஸ்டிங் ஆக இருக்கிறது.

உதாரணமாக,

விபரீத கனவுகள்,

இது போன்ற நிகழ்வுகள்



திடிர்னு, பார்ப்பவைகளை, எங்கெயோ இதற்கு முன்னம் பார்த்திருப்பது போன்ற எண்ணம், (மதுமதி படம் )

முன்னம் தெரியாத, அறிந்திருக்க இயலாத, நபர் மீது நமக்கு ஏற்படும் பந்தம்,

நமது சம காலத்த்தவரை விட அதீத புத்திசாலியாக நமக்கே தோன்றுவது , அது மட்டும் அல்ல, அது எப்படி சாத்தியம் என்று தோன்றுவதும்,

பலருக்கு ஏற்படும் தேவையில்லாத பயம்,

இவை எல்லாவற்றிக்குமே பூர்வ ஜன்ம தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் பார்த்தால்,
ஞான சம்பந்தர் நாலு வயதிலே பாடல் எழுதினர்.
சுகர் பிறக்கும்போதே ஞானியாக இருந்தார்.
என்றெல்லாம் சொல்லப்படும் போது ........!!!

நம்ம மட்டும் ஏன் அந்த அளவுக்கு இல்லை என்ற போது ,

அப்பாதுரை சார் கதை லே வர பூசாரி மாதிரி ஒரு சோழி உருட்டுபவன் இல்லை, ஜோசியக்காரன்

நம் ஜாதக த்தில், ஐந்தாம் இடத்தைப் பார்த்து பூர்வ ஜன்ம வினைப்பயன் என்று அடிச்சு சொல்கிறான் ..


அதே போல், பதினிரண்டாம் இடத்தில் கேது இருந்தால் அவனுக்கு அடுத்த பிறவி இல்லை என்கிறார்கள்.  கேது ஞான காரகானாம். ஞானம் பிறந்துவிட்டது என்றால் அடுத்த பிறவி கிடையாதாம்.

இது ஒரு பக்கம் இருக்க, யதார்த்தத்திலே

இன்னிக்கு பல வீடுகளிலே சலித்துக் கொள்கிறார்கள்.

இந்த மாமியார் படுத்தற  கொடுமைக்கு, நான் போன ஜன்மத்திலே என்ன பாவம் செய்தேனோ ?


என்று புலம்பும் மருமகள் கள். ஒரு பக்கம். அதே போல், சலித்துக் கொள்ளும் மாமியார்கள் இன்னொரு பக்கம்.

கணவன்மார்களும், மனைவி மார்களும் இதற்கு விதி விலக்கில்லை .

சரி, தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது. ?

நம்ம வினையை நம்ம தானே அனுபவிச்சாவணும்...
இது கடைசி புலம்பல்.

பெருமாளின் மெய் காப்பாளர்கள் ஆன, ஜய , விஜய இரண்டு பேருமே , கடவுளுக்கு எதிரியாக மூன்று பிறவி எடுத்து, அவற்றில், பெருமாள் அவதாரத்தால் அழிக்கப்பட்டு, திரும்பவும், அதே வாட்ச் மென் உத்தியோகத்திற்கு வந்தார்கள் என்று துளசி கோபால் மேடம் வலைத் தளம் சொல்கிறது.



பாரதத்திலும் ராமாயணம் போன்ற இதிகாச புராணங்களும் முன்  பிறவி பற்றிப் பேசத்தான் செய்கின்றன.

அனுமனை சிவனின் அவதாரம் என்று சொல்வோரும் உண்டு.

(அதற்காக, கண்ணில் படும் குரங்குகளை எல்லாம் அனுமனாக எண்ணிட முடியுமா ?)

புத்தர் , மகா விஷ்ணு வின் , அவதாரங்களில் பத்தாவது அவதாரமாக கருதுகிறார்கள்.

இது எல்லாமே உடான்சு என்று சொல்பவர்கள் கருத்தையும் தள்ளி விட முடியாது.

ஒரு உயிர்லேந்து தான் இன்னொரு உயிர் பிறப்பு நடந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக ஒத்துக்கொண்டாலும் , அந்த பழைய உயிர் இன்னமாத்தான் வடிவம், குணம் கொண்டு இருந்தது என்று சொல்ல முடியாது.
இருந்தாலும், சில அபூர்வ நிகழ்வுகள் பி.பி. சி. தொலைக் காட்சி மூலம்:

தமது முன்பிறவிகளில் என்ன என்ன நடந்தது என்பதை எடுத்துச் சொன்ன சிலரைப் பற்றி பி.பி. சி. நிறுவனம் என்ன சொல்கிறது பாருங்கள்.







சிவபுராணம் சொல்கிறது.  டார்வின் தத்துவம் போல :

 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்...........

ஒன்றில் இருந்து இன்னொரு உயிர் வகைக்கு போக ஒரு வாய்ப்பு இருந்தது, இருக்கிறது .

ஜெனெடிக் முடேஷன் முறைப்படி, பரிணாம வளர்ச்சிப் படி, நாம் ஒரு செல் உயிரினங்களிலிருந்து குரங்கு வரை வந்து, சிம்பன்சி லேந்து மனிதன் ஆகி இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள இயல்கிறது.

ஆயினும் இதற்கு முன்பு எப்படி இருந்தோம் என்பதை ஒரு ஊகத்தினால் தான் இதுவரை கணிக்க முடிகிறது.

என் பாட்டி ஒரு முறை என்னிடம் சொன்னது (1948ல் ) இன்னமும் நினைவு  இருக்கிறது.  எதோ ஒரு புராணக் கதை சொல்லும்போது அவர் சொன்னது: இந்த ஜன்மத்திலே உன்னுடைய குணங்களிலே எந்த குணம் முன்னே நிற்கிறதோ
அது பெரிதும் உள்ள ஜீவ ராசியாகத்தான் நம்ம முன்ன ஜன்மத்திலே இருந்திருப்போம்.  

அப்படி பார்த்தா:
நான் எஸ்.சார். எஸ்.சார் என்று சர்விஸ் போது சொல்லிண்டு இருந்தேனாம் . ஹெச். ஆர்.மென்,,பாஸுக்கு வேற எப்படி சார் இருக்க முடியும் ?

அப்படின்னா நான் ஒன்னு
நாய் அல்லது காக்காய்.

நான் என்ன சொன்னாலும் புஸ. புஸ. என்று பொரிந்து தள்ளும் என் சக தர்மினி முன் ஜன்மத்திலே ராஜ நாகம்.

நான் எப்பவும் ஹோட்டலுக்கு போனா, பில் பணம் தரும் எனது நண்பர் ரங்கநாதன் பசு மாடு அதுவும் காம தேனு. அவுங்க வூட்டு அம்மா சாக்ஷாத் அன்ன பூரணி தேவி. ஒரு வாய் சாதம் போடாம திருப்பி அனுப்ப மாட்டாங்க.

சூப்பரா உங்க டி.வியை சரி செஞ்சுடுவேன் அப்படின்னு எங்கிட்ட ரூபாய் 4500 பிடிங்கிப் போய் , அடுத்த நாளே டி.வி. அவுட் ஆனபோது, அந்த  எலக்ட்ரானிக் எஞ்சினீர் நான் என்ன செய்ய முடியும். என்ற அவர்  ஒரு நரி. (நான் தந்தபோது நல்லாத்தானே சார் இருந்தது !! என்கிறார்.)


சொல்லிகிட்டே போலாம். 


பௌதீக அறிவியல் படி பார்த்தால், மூச்சு விட மறந்து போன உடனே ,
மி அண்ட்  யூ ஸீஸ் டு எக்சிஸ்ட்.
அண்ட் தட்ஸ் த எண்ட் .

உபனிஷத்திலோ அந்த பௌதீக உடல் லேந்து உயிர் பிரியற பொழுது வெளிப்படும்   ஒரு ஆன்மா வுக்கு
ஒரு தொடர்ச்சி இருப்பதாக சொல்லப்படுகிறது.

நம்ம மதங்கள் மட்டும் அன்றி, பிற மதங்களும் பொதுவாக இந்த தியரியை ஒத்துக் கொள்கின்றன.

எது சரி எது தப்பில்லாவிடினும் சரியில்ல. எது தப்பு ?


நான் படிக்கும் கிட்டத்தட்ட ஒரு 200 வலைத் தள ஆசிரியர்களுக்கு இதைப் பற்றிய திடமான கருத்தோ நம்பிக்கையோ இருக்கக்கூடும்.

அவர்களில் சிலராவது கருத்து சொல்வார்களா ?

*************************************************************************



இது ஒன்றும் ஆராய்ச்சி இல்லை. 
ஜஸ்ட்   RANDOM THOUGHTS and loud thinking.
தமிழிலே சொல்லப்போனால் உரத்த சிந்தனைகள். 









11 comments:

  1. >>> இந்த ஜன்மத்திலே உன்னுடைய குணங்களிலே எந்த குணம் முன்னே நிற்கிறதோ அது பெரிதும் உள்ள ஜீவ ராசியாகத்தான் நம்ம முன்ன ஜன்மத்திலே இருந்திருப்போம்.<<<

    ஏனெனில், வள்ளுவப் பெருமானே சொல்கின்றார் - ஏழு பிறப்புகளைப் பற்றி..

    ஏழு ஜன்மங்களிலும் இந்த குணங்களின் தாக்கம் கண்டிப்பாக இருக்கும்..

    இன்னும் சொல்லலாம்.. ஆனால் சிலர் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும்..

    நல்ல விஷயங்களை சிந்திக்கச் செய்தமைக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வள்ளுவனை மேற்கோள் காட்ட ஏன் மறந்து போனேன் ?
      மிக்க
      நன்றி .
      எங்க அப்பா சொல்வார். வள்ளுவனை விஞ்சிய வேதம் கிடையாது என.

      Delete
  2. இது நமக்கு எத்தனாவது பிறவியாக இருந்தால் என்ன? நாம் நம் முற்பிறவியை அறிந்தவர்களல்ல. அடுத்த பிறவியைப் பற்றிய பிரக்ஞையும் இல்லை. இருட்டு ஊட்டுக்குள்ளே இல்லாத கருப்புப் பூனையை தேடறதை விட்டு விட்டு இன்று நாம் வாழும் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்வோம்.

    ReplyDelete
    Replies
    1. //இன்று நாம் வாழும் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்வோம்.//

      யதார்த்தம்.
      சிம்ப்ளி சூப்பர்

      Delete
  3. இருநூறு வலைத்தளங்கள் படிக்கிறீங்களா? எனக்கு இதுவே பயம் குடுக்குதே சார்?

    ஹ்ஹி.. எல்லாமே உடான்சு தான்.

    ReplyDelete
    Replies
    1. எனது வாசிப்பில் தமிழில் 100 முதல் 150
      இந்தியில் 20
      ஆங்கிலத்தில் 50
      வலைத் தளங்கள் இருக்கின்றன.

      எந்தப் புதிய பதிவு அவைகளில் வரும்போது எனக்குத்
      தகவல் வந்துவிடும்.

      ரீடர் வழியாக.

      Delete
  4. எல்லாமே உடான்சுனு சொன்னதும் நினைவுக்கு வருது. டிவியில் பரபரப்பாக வந்த சமாசாரம். LAவில் கொஞ்ச நாள் இருந்தப்ப நடந்த விஷயம். எங்க பக்கத்து வீட்டுக்காரருக்கு ஆறு வயசுல ஒரு பையன். english-chinese bilingual ஸ்கூல்ல சேர்த்ததும் முதல் நாளே பையன் திரும்பி வந்து சரளமாக cantonese பேசினான். பள்ளிக்கூடத்தில் சீன பாஷை முதல் நாள் சொல்லித் தரவில்லை. சொல்லிக் கொடுத்திருந்தாலும் அங்கே பாடம் எடுப்பதோ mandarin மட்டுமே. பையனின் class teacher மட்டும் cantonese பழகிய hongkongகாரர் என்பது சுவாரசியமான விஷயம்.

    ஆக.. எல்லாமே உடான்சு என்ற என் ஆணவத்தை மன்னிக்கணும். எல்லாமே உடான்சில்லை. (கடவுள் மட்டும் தான் உடான்சு)

    ReplyDelete
    Replies
    1. கடவுள் தான்எல்லாம் (என்பது முதல் ஸ்டேட்மென்ட் .)
      கடவுள் உடான்ஸ் .
      அப்ப எல்லாம் உடான்ஸ் .

      ரிவர்ஸ் லாஜிகல் faலசி.

      எல்லாம் என்று எதை நீங்கள் சொல்கிறீர்களோ அதில் கடவுள் இல்லை.
      (கடவுள் மட்டும் உடான்ஸ் என்று உங்கள் கூற்றுப் படி )
      கடவுள் அல்லது கடவுளைப் பற்றிய சிந்தனை எதுவும் இல்லை, உங்களது "எல்லாம் " லே.
      அப்ப , எல்லாம் என்று நீங்கள் சொல்வது என்ன? (That which excludes something , say x, can never be எல்லாம்.

      sounds paradoxical !

      ஹி ...ஹி ...

      இருந்தாலும் நசிகேதனை வர்ணித்தவர் இப்படி சொல்லி இருந்தால்
      நான் ஹாட்ஸ் ஆப் ஃ டு யூ என்றிருப்பேன்.

      மரணமே உடான்ஸ். அப்படி இருக்கும்போது
      இன்னாது முன் பிறவி, அடுத்த பிறவி ??

      Delete
  5. //நான் என்ன சொன்னாலும் புஸ. புஸ. என்று பொரிந்து தள்ளும் என் சக தர்மினி முன் ஜன்மத்திலே ராஜ நாகம்.

    lol

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!