Pages

Saturday, April 23, 2016

இது தான் முதல் பிறவியா !! ??

எச்சரிக்கை; (கடைசியில் இருக்கிறது.) 
அதைக் கடைசியாகப் படிக்கவும். 
********************************************************************************


உங்களுக்கும்  எனக்கும் இது தான் முதல் பிறவியா !! ??

இல்லே இதுக்கு முன்னாடி பல பிறவி எடுத்து இருப்போமா ?இந்த காணொளியில் காணப்படும் நிகழ்வுகள் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறதா?


ஒரு ஸ்லைட் ப்ரெசெண்டெசன் ஒளி ஒலி க்காணல் தொடர்கிறது.
இங்கே க்ளிக் செய்தும் பார்க்கலாம். 
SPEAKING TREE

(நன்றி: பேசும் மரம்) Courtesy: SPEAKING TREE.

இல்லே...இந்த தொடர்பை அப்படியே பிரௌசர் லே போட்டும் படிக்கலாம்.

http://www.speakingtree.in/slideshow/signs-your-soul-has-reincarnated-many-times-496489/266554

சொல்லி இருக்கிற விஷயங்கள் எல்லாம், கருத்துக்கள் எல்லாம் சரி என்று
சுப்பு தாத்தா என்டார்ஸ் செய்யவில்லை .

ஆனா இன்டரஸ்டிங் ஆக இருக்கிறது.

உதாரணமாக,

விபரீத கனவுகள்,

இது போன்ற நிகழ்வுகள்



திடிர்னு, பார்ப்பவைகளை, எங்கெயோ இதற்கு முன்னம் பார்த்திருப்பது போன்ற எண்ணம், (மதுமதி படம் )

முன்னம் தெரியாத, அறிந்திருக்க இயலாத, நபர் மீது நமக்கு ஏற்படும் பந்தம்,

நமது சம காலத்த்தவரை விட அதீத புத்திசாலியாக நமக்கே தோன்றுவது , அது மட்டும் அல்ல, அது எப்படி சாத்தியம் என்று தோன்றுவதும்,

பலருக்கு ஏற்படும் தேவையில்லாத பயம்,

இவை எல்லாவற்றிக்குமே பூர்வ ஜன்ம தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் பார்த்தால்,
ஞான சம்பந்தர் நாலு வயதிலே பாடல் எழுதினர்.
சுகர் பிறக்கும்போதே ஞானியாக இருந்தார்.
என்றெல்லாம் சொல்லப்படும் போது ........!!!

நம்ம மட்டும் ஏன் அந்த அளவுக்கு இல்லை என்ற போது ,

அப்பாதுரை சார் கதை லே வர பூசாரி மாதிரி ஒரு சோழி உருட்டுபவன் இல்லை, ஜோசியக்காரன்

நம் ஜாதக த்தில், ஐந்தாம் இடத்தைப் பார்த்து பூர்வ ஜன்ம வினைப்பயன் என்று அடிச்சு சொல்கிறான் ..


அதே போல், பதினிரண்டாம் இடத்தில் கேது இருந்தால் அவனுக்கு அடுத்த பிறவி இல்லை என்கிறார்கள்.  கேது ஞான காரகானாம். ஞானம் பிறந்துவிட்டது என்றால் அடுத்த பிறவி கிடையாதாம்.

இது ஒரு பக்கம் இருக்க, யதார்த்தத்திலே

இன்னிக்கு பல வீடுகளிலே சலித்துக் கொள்கிறார்கள்.

இந்த மாமியார் படுத்தற  கொடுமைக்கு, நான் போன ஜன்மத்திலே என்ன பாவம் செய்தேனோ ?


என்று புலம்பும் மருமகள் கள். ஒரு பக்கம். அதே போல், சலித்துக் கொள்ளும் மாமியார்கள் இன்னொரு பக்கம்.

கணவன்மார்களும், மனைவி மார்களும் இதற்கு விதி விலக்கில்லை .

சரி, தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது. ?

நம்ம வினையை நம்ம தானே அனுபவிச்சாவணும்...
இது கடைசி புலம்பல்.

பெருமாளின் மெய் காப்பாளர்கள் ஆன, ஜய , விஜய இரண்டு பேருமே , கடவுளுக்கு எதிரியாக மூன்று பிறவி எடுத்து, அவற்றில், பெருமாள் அவதாரத்தால் அழிக்கப்பட்டு, திரும்பவும், அதே வாட்ச் மென் உத்தியோகத்திற்கு வந்தார்கள் என்று துளசி கோபால் மேடம் வலைத் தளம் சொல்கிறது.



பாரதத்திலும் ராமாயணம் போன்ற இதிகாச புராணங்களும் முன்  பிறவி பற்றிப் பேசத்தான் செய்கின்றன.

அனுமனை சிவனின் அவதாரம் என்று சொல்வோரும் உண்டு.

(அதற்காக, கண்ணில் படும் குரங்குகளை எல்லாம் அனுமனாக எண்ணிட முடியுமா ?)

புத்தர் , மகா விஷ்ணு வின் , அவதாரங்களில் பத்தாவது அவதாரமாக கருதுகிறார்கள்.

இது எல்லாமே உடான்சு என்று சொல்பவர்கள் கருத்தையும் தள்ளி விட முடியாது.

ஒரு உயிர்லேந்து தான் இன்னொரு உயிர் பிறப்பு நடந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக ஒத்துக்கொண்டாலும் , அந்த பழைய உயிர் இன்னமாத்தான் வடிவம், குணம் கொண்டு இருந்தது என்று சொல்ல முடியாது.
இருந்தாலும், சில அபூர்வ நிகழ்வுகள் பி.பி. சி. தொலைக் காட்சி மூலம்:

தமது முன்பிறவிகளில் என்ன என்ன நடந்தது என்பதை எடுத்துச் சொன்ன சிலரைப் பற்றி பி.பி. சி. நிறுவனம் என்ன சொல்கிறது பாருங்கள்.







சிவபுராணம் சொல்கிறது.  டார்வின் தத்துவம் போல :

 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்...........

ஒன்றில் இருந்து இன்னொரு உயிர் வகைக்கு போக ஒரு வாய்ப்பு இருந்தது, இருக்கிறது .

ஜெனெடிக் முடேஷன் முறைப்படி, பரிணாம வளர்ச்சிப் படி, நாம் ஒரு செல் உயிரினங்களிலிருந்து குரங்கு வரை வந்து, சிம்பன்சி லேந்து மனிதன் ஆகி இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள இயல்கிறது.

ஆயினும் இதற்கு முன்பு எப்படி இருந்தோம் என்பதை ஒரு ஊகத்தினால் தான் இதுவரை கணிக்க முடிகிறது.

என் பாட்டி ஒரு முறை என்னிடம் சொன்னது (1948ல் ) இன்னமும் நினைவு  இருக்கிறது.  எதோ ஒரு புராணக் கதை சொல்லும்போது அவர் சொன்னது: இந்த ஜன்மத்திலே உன்னுடைய குணங்களிலே எந்த குணம் முன்னே நிற்கிறதோ
அது பெரிதும் உள்ள ஜீவ ராசியாகத்தான் நம்ம முன்ன ஜன்மத்திலே இருந்திருப்போம்.  

அப்படி பார்த்தா:
நான் எஸ்.சார். எஸ்.சார் என்று சர்விஸ் போது சொல்லிண்டு இருந்தேனாம் . ஹெச். ஆர்.மென்,,பாஸுக்கு வேற எப்படி சார் இருக்க முடியும் ?

அப்படின்னா நான் ஒன்னு
நாய் அல்லது காக்காய்.

நான் என்ன சொன்னாலும் புஸ. புஸ. என்று பொரிந்து தள்ளும் என் சக தர்மினி முன் ஜன்மத்திலே ராஜ நாகம்.

நான் எப்பவும் ஹோட்டலுக்கு போனா, பில் பணம் தரும் எனது நண்பர் ரங்கநாதன் பசு மாடு அதுவும் காம தேனு. அவுங்க வூட்டு அம்மா சாக்ஷாத் அன்ன பூரணி தேவி. ஒரு வாய் சாதம் போடாம திருப்பி அனுப்ப மாட்டாங்க.

சூப்பரா உங்க டி.வியை சரி செஞ்சுடுவேன் அப்படின்னு எங்கிட்ட ரூபாய் 4500 பிடிங்கிப் போய் , அடுத்த நாளே டி.வி. அவுட் ஆனபோது, அந்த  எலக்ட்ரானிக் எஞ்சினீர் நான் என்ன செய்ய முடியும். என்ற அவர்  ஒரு நரி. (நான் தந்தபோது நல்லாத்தானே சார் இருந்தது !! என்கிறார்.)


சொல்லிகிட்டே போலாம். 


பௌதீக அறிவியல் படி பார்த்தால், மூச்சு விட மறந்து போன உடனே ,
மி அண்ட்  யூ ஸீஸ் டு எக்சிஸ்ட்.
அண்ட் தட்ஸ் த எண்ட் .

உபனிஷத்திலோ அந்த பௌதீக உடல் லேந்து உயிர் பிரியற பொழுது வெளிப்படும்   ஒரு ஆன்மா வுக்கு
ஒரு தொடர்ச்சி இருப்பதாக சொல்லப்படுகிறது.

நம்ம மதங்கள் மட்டும் அன்றி, பிற மதங்களும் பொதுவாக இந்த தியரியை ஒத்துக் கொள்கின்றன.

எது சரி எது தப்பில்லாவிடினும் சரியில்ல. எது தப்பு ?


நான் படிக்கும் கிட்டத்தட்ட ஒரு 200 வலைத் தள ஆசிரியர்களுக்கு இதைப் பற்றிய திடமான கருத்தோ நம்பிக்கையோ இருக்கக்கூடும்.

அவர்களில் சிலராவது கருத்து சொல்வார்களா ?

*************************************************************************



இது ஒன்றும் ஆராய்ச்சி இல்லை. 
ஜஸ்ட்   RANDOM THOUGHTS and loud thinking.
தமிழிலே சொல்லப்போனால் உரத்த சிந்தனைகள். 









Monday, April 18, 2016

Sunday, April 17, 2016

பெரிசு ! புரிஞ்சுக்கய்யா...


வாழ்வின் அந்தி மாலையில் ஒரு நாள்.
பக்கத்தில் இருந்து ஒரு முனகல் சத்தம் கேட்டது.
திரும்பி யார் என்று பார்த்தேன்.

ஒரு பெரியவரும் பக்கத்தில் ஒரு நடுத்தர வயதினரும்.
பெரியவரின் சொந்தமாக இருக்குமோ ?
சொன்னதைக் கேட்டேன்.
"பெரிசு ! புரிஞ்சுக்கய்யா..."
"புரியுது.  மனசு ஒத்துக்கல்லெயே !"

"கவலைப் பட்டு இன்னா பிரயோஜனம் சொல்லு."

"தெரியுது."

வயசாயிக்கிட்டே போவுது.இல்லையா.."

அதுக்காவ, மனுசனை இப்படியா வாட்டுறது !
ஒரு நாளைக்கு வயிறு சரியில்ல. இன்னொரு நாளைக்கு கால் வலி தாங்கல்லே.

ஒரு நாளைக்கு காது வலி. அடுத்த நாள் ஜலதோஷம் .

டாக்டர் கிட்டே கேட்டா இதெல்லாம் வயசு சம்பந்தப்பட்டது அய்யா. என்கிறார்.


ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு ஒன்பது மாத்திரை.

"வயசாகும்போது என்னென்ன நமக்கு நம்ம உடம்பு பீல் பண்ணும்.

கொஞ்சம் இந்த கேள்வி பதில் பாருங்க.  இங்கன க்ளிக் பண்ணுங்க. 

ஆன்சர் பண்ணுங்க ப்ளீஸ்."

"இன்னாது !! இப்ப வோணாம்."

"வயசாகும்போது படிச்சுக்கறேன் அப்படின்னு சொல்றீகளா !

அதுவும் சரிதான். அப்ப இத  தினமும் காலைலே எழுந்த உடனே இதப் படிங்க.. 
சிரிச்சுகிட்டே இருக்கலாம். "
" பாக்கலாம்.  ஆனா,வீட்டுக்காரி படிச்சா கோவிச்சுப்பா."

"இதுவும் வேண்டாமா ? இதப் பாருங்க. "




இல்லேன்னா இதையாவது  பாருங்க.


Friday, April 8, 2016

Heartfulness Relaxation

யுகாதி புது வருஷ வாழ்த்துக்கள்.


என்னுடைய பல நண்பர்கள்  தெலுங்கு மொழி யைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள அனைவருக்கும் எனது

யுகாதி புது வருஷ வாழ்த்துக்கள்.

யாராவது ஓருவர் அவர்களில் இந்த பாட்டை தமிழில் மொழி பெயர்த்தால் நல்லது.

Goreti Venkanna அவர்கள் மூச்சு விடாமல் பாடுகிறார்கள்.

இதே போல எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் ஒன்று கேட்டு இருக்கிறோம்.




Yukati తెలుగు నూతన సంవత్సరం.

(கூகிள் மொழி பெயர்ப்பு)


Another song Breathless.





Sunday, April 3, 2016

ஹார்ட் ப்ராப்ளம் இருக்கிறவங்க படிக்க வோணாம்.

கனவில் வந்தாலும் பயமுறுத்தும் காட்சிகள்.

நான் ரொம்ப தைரியசாலியாக்கும் , எதுக்கும் பயப்பட மாட்டேன் என்று

சொல்லும் நண்பர்கள் எல்லாம் முதலில் இதைப் பார்க்கட்டும்.

இங்கு க்ளிக் செய்து பாருங்கள்.


முதலில் நீங்கள் பார்ப்பது ஒரு பொம்மை.
1970 ம் வருடம் இதை தனது பெண்ணுக்காக வாங்கி வந்தாராம்.
அடுத்த நாள் இந்த பொம்மையின் வாயில் இருந்து ரத்தம் வந்ததாம்.

பயந்து போய், ரொம்ப தூரத்தில் தூக்கி எறிந்தாராம்.

அடுத்த நாள் காலைலே வூட்டிலே அதே இடத்திலே
இருந்ததாம்.

இது மாதிரி 10 ஆமாம். பத்தே பத்து நிகழ்வுகள்.

ஹார்ட் ப்ராப்ளம் இருக்கிறவங்க படிக்க வோணாம்.
பார்த்துட்டு உன்னாலே தான்யா ஆச்சு, அப்படின்னு
இந்த சுப்பு கிழவன் கிட்டே சண்டைக்கு வராதீக.

Courtesy: Speaking Tree. 

Friday, April 1, 2016

April 1


கிளாசிகலி யுவர்ஸ்.








shreya goshal classical


classical from kerala

Western classical here: Fantastic indeed.





Classical outclassing !!!or Am I just joking ?? !!!