Pages

Thursday, September 3, 2015

காசு மாலை வேண்டாம் கருகமணியும் வேண்டாம்





 ஒரு ஐம்பது வருசத்துக்கு முன் என நினைக்கிறேன். தேவ் ஆனந்த் நடித்த படம்.  
திருச்சியில் கெயிட்டி தியேட்டரில் பார்த்த நினைவு. 
+Durai A 
அப்பாதுரை சார் தனது வலைப் பதிவில் என்னைப் பற்றி பாடல் ஒன்று எழுதியிருக்கிறார். 


அதைப் படித்தபின் இந்தப் பாடல் நினைவுக்கு ஏன் வந்தது ? புரியவில்லை.

பாடலின் மொழி பெயர்ப்பு :
********************************************************************
***********************************************************
*************************************************************8
காசு மாலை வேண்டாம் கருகமணியும் வேண்டாம்
கருமை நிறத்தானே நின் காலின் தூசி போதும்.
கரையும் காணவேண்டும் , நின் காலின் காட்சி வேண்டும்-நின் 
கருந்துளசி இதழில்  என் இதயம் ஈர்க்க வேண்டும்.

மோகம் மனதை முட்ட, லோபம் எனை ஆட்ட,

மோதி மோதி  சீறும் அந்த  நாகங்கள் சீண்ட
வேக வேகமாக விடம்  மனதில் உறையுமுன்னே
போகவேண்டும் நானும் ராமனடி காண 
உடல்  உயிரும் வேண்டாம்  ராம நாமம்  போதும்.
நான் இறக்க வேண்டும். என்னில் 
நான் இறக்க வேண்டும்.
ஹே ராமா .


நீர் வற்றிப்போச்சு, மண லும் காஞ்சுபோச்சு.

வெள்ளம் சொன்ன சேதி உண்மையாகிப் போச்சே. 
உள்ளம் விரிச்ச வலை மாயம் விளங்கிப் போச்சு.
செல்வதெங்கே இப்ப ? ராமனடி காண  ?
போவதெங்கே இப்போ
பூவுலகை விட்டு . 


கொண்டு வந்ததெதை ? எடுத்துப்போவதற்கு ?
மொண்டு செல்ல என்ன நின் புதையலிருந்து
கண்ட தெல்லாம் நேர்மை அப்  புதையல் சொல்லுமுண்மை.
!!
அந்தி நேரமிது பட்சி  பறந்து போகும்  நேரம்.
உந்தி விந்தி  நானும் வீடு  செல்வேன்.  

(வார்த்தைக்கு வார்த்தை அல்ல, மையக் கருத்து மட்டுமே மொழிபெயர்ப்பு    செய்திருக்கிறேன்.​)



****************************

ना मैं धन चाहूँ, ना रतन चाहूँ 
तेरे चरणों की धूल मिल जाए, तो मैं तर जाऊँ 
शाम तर जाऊँ, हे राम तर जाऊँ 

मोह मन मोहे लोभ ललचाए
कैसे कैसे ये नाग लहराए
इस से पहले की दिल उधर जाए
मैं तो मर जाऊँ, क्यों ना मर जाऊँ 

लाए क्या थे जो ले के जाना है
नेक दिल ही तेरा खज़ाना है
सांझ होते ही पंछी आ जाए
अब तो घर जाऊँ, अपने घर जाऊँ 

थम गया पानी, जम गई काई 
बहती नदियाँ ही साफ़ कहलाई 
मेरे दिलने ही जाल फैलाए 
अब किधर जाऊँ, मैं किधर जाऊँ 
*********************


Na Main Dhan Chaahuun, Na Ratan Chaahuun
Tere Charanon Ki Dhuul Mil Jaaye
To Main Tar Jaauun, Haan Main Tar Jaauun
He Raam Tar Jaauun
Moh Man Mohe, Lobh Lalachaaye
Kaise Kaise Ye Naag Laharaaye
Isase Pahale Ki Man Udhar Jaaye
MainN To Mar Jaauun, Haan Main Mar Jaauun
He Raam Mar Jaauun
Tham Gayaa Paanii, Jam Gayii Kaayii
Bahatii Nadiyaa Hii Saaf Kahalaayii
Mere Dil Ne Hii Jaal Phailaaye
Ab Kidhar Jaaun, Main Kidhar Jaauun - 2
Ab Kidhar Jaaun, Main Kidhar Jaauun
Laaye Kyaa The Jo Leke Jaanaa Hai
Nek Dil Hii Teraa Khazaanaa Hai
Shaam Hote Hi Panchi Aa Jaaye
Ab To Ghar Jaaun Apane Ghar Jaaun
Ab To Ghar Jaaun Apane Ghar Jaauun.

.

4 comments:

  1. மனம் தொட்ட பாடல் ஐயா!
    காணொளிக் காட்சியில் மொழி புரியாதுவிடினும்
    பாடும் பாவமும் இசையும் அள்ளிக்கொண்டு போகிறது மனதை!

    தமிழில் கீர்த்தனை அருமை!

    பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!

    ஐயா!.. எமது கவிதைகளை நீங்கள் பாடிப் பதிவிடும் உங்களின்
    வலைப்பதிவாகிய http://subbuthathacomments.blogspot.de/2015/08/blog-post_29.html
    இங்கு சென்று கருத்திட முடியவில்லை!
    கூகில் + இல் நான் இணைந்திருக்கவில்லை.
    மிக்க மிக்க நன்றி ஐயா! அங்கு எனது பாடலையும் அற்புதமாகப் பாடிப் பதிவிட்டமைக்கு!

    இன்னுமொரு நாட்டுப்புறப் பாடலும் முதல்முயற்சியாகப் பதிவிட்டிருந்தேன்!
    பார்த்தீர்களா ஐயா! இதோ அதன் இணைப்பு: http://ilayanila16.blogspot.com/2015/09/blog-post_63.html

    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  2. மொழிபெயர்ப்பாயினும் எதுகை மோனையோடு, கவிதை நடை அருமை.

    ReplyDelete
  3. அருமையான பாடலை அழகான நடையில் தந்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!