Pages

Sunday, December 27, 2015

திருவாதிரை நடனம்

திருவாதிரை நடனம்

Thursday, December 24, 2015

எங்கும் எதிலும் ஏசு பிரான்

எங்கும் எதிலும் ஏசு பிரான்.


எனது வலை உலக நண்பர் திருமதி ரஞ்சனா அவர்கள் ஒரு அழகான பொம்மை சாண்டா டால் தன கரங்களாலே தயாரித்து இருக்கிரார்கள்.

அவர்களுடைய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் இங்கே. அவர்களது வலைக்குச் சென்று இந்த பொம்மையை எப்படி தயாரித்தார்கள் என்று பாருங்கள்.

 May this Christmas bring you happiness , peace , prosperity and of course lots of gifts. :-)


Love , laugh and live the life to the fullest,

-Ranjana
திருமதி ரஞ்சனா அவர்களுக்கு எமது நன்றியைச் சொல்லுவோம். 



Tuesday, November 10, 2015

UTHAREEYAM | Narakasura Vadham | Kathakali

நரகாசுரன் கதையும் தீபாவளியும்.  கதகளி நடனம்.




தீபாவளி பற்றிய பல புராணக் கதைகள் இருக்கின்றன.
நமது தேசத்தின் ஒவ்வொரு திசையிலும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு வெவ்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன.

வலைப்பதிவர் ராஜி அவர்கள் தனது வலையில் தீபாவளி பற்றிய அனைத்துக் கதைகளையும் தொகுத்துத் தருகிறார்கள்.
அங்கே நீங்கள் சென்று படிக்கவேண்டும்.

நான் அங்கு இட்ட பின்னூட்டம்.
தீபங்களும் பலவிதம்.
தீபாவளிகளும் பலவிதம்.
தின்னும் பக்ஷணங்கள் பலவிதம்.
திரும்பத் திரும்பப் படிக்கவைக்கும் பதிவோ
ஒரே விதம்.
நல்ல வர்ணனை.

எல்லோருக்கும்,
சுப்பு தாத்தா.வின்
 தீபாவளி வாழ்த்துக்கள்.

Friday, October 30, 2015

கலங்கும் நெஞ்சமே.

எனது இசை ஆசிரியர் ஜைகீ அவர்கள் இசை அமைத்த பாடல் இதோ.

கலங்கும் நெஞ்சமே..






Another composition
On Sayee of Shirdi.
ஷிர்டி சாய் பாபா மீது இன்னொரு
.பாடல்.


Wednesday, October 28, 2015

தாமோதர மாதம் பிறந்தது.



 தாமோதர மாதம் பிறந்தது.
கார்த்திகை மாதத்தில் வீடுகள் தோறும் தீபங்கள்.
அந்த மாதம் பௌர்ணமி  அன்றே  முதல் பிறப்பதாக ஐதீகம்.
இஸ்கான் கோவில்களில் , கௌட சம்பிரதாய வைஷ்ணவர்கள் விமரிசையாக கார்முகில் கண்ணனை உபாசிக்கும் மாதம் இது.

தினம் ஒரு நெய் விளக்கு ஏற்றி கண்ணனை பூஜிக்கும் மாதம் இதுவாகும்.

எத்தனை எத்தனை நீளக்கயிற்றினாலும் கட்ட முடியாத கண்ணன்
தானாக தனது அன்னை யசோதையின் அன்புக்குக் கட்டுப்பட்ட கதை
நேற்று  இஸ்கான் நடத்திய தாமோதர மாத சிறப்பு விழாவில் கேட்கக் கேட்க

வாழ்க்கையின் உண்மைப் பொருள் அன்பில் தான் அடங்கியுள்ளது என்பதை
அறிவுறுத்தவே

கண்ணன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்

என்றும் மனதில் தோன்றியது.

நம்மிடம் அன்பு செலுத்துவோரிடம் நாமும் அன்பாக இருப்பது உலக  இயல்பு.

நம்மிடம் வம்பு செய்வோரிடம் ??

ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது.

அது போல் ஒரு சூழ்நிலை ஏற்படும் சமயத்தில்,
கண்ணன் சொல்கிறான்.

தருமத்தைச் செய்.  அதர்மத்தை அழிப்பதில் துணையாக இரு.

அதுதான் உன் கருமம் .

என்கிறார்கள்

ஹரே கிருஷ்ணா ஹரே ராமா இயக்கத்தைச் சார்ந்த
கௌட மடத் துறவிகளும் அவர்களது சீடர்களும்.



Wednesday, October 21, 2015

வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்.

வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்.

எல்லோர் அகத்திலும் தாமரை மலர்க.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.


Tuesday, October 20, 2015

நாமகள் கலைமகள் சரஸ்வதி தேவி


நாமகள் கலைமகள் சரஸ்வதி தேவி பூஜை உலகம் முழுவதுமே கொண்டாடப்படும் நேரத்தில், சில நடனங்களைக் கண்டு களியுங்கள்.

சென்னையில் ஒரு சிறுமி, நடனம் ஆடுகிறாள். ஒரு கோவிலிலே .
 வெள்ளை தாமரை பூவினிலே.




அண்மை நாடு ஒன்றிலே சரஸ்வதி நடனம்.



சரஸ்வதி வந்தனா மத்திய பிரதேசம்.




At Sharjah
ஷார்ஜா விலே ஒரு நடன நிகழ்ச்சி.
வெள்ளைத் தாமரை இங்கும்.




கர்ண பிரகரணம் என்று நாட்டிய முத்திரைகள் அனைத்தையும்
எடுத்து சொல்கிறார் . நடன மாக.
டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள்.


Tuesday, October 13, 2015

நஸ்ரத் படே அலி கான்


உஸ்தாத் நஸ்ரத் படே அலி கான்
அவர்கள் பிறந்த நாள். இன்று .

இவரது கவ்வாலி இசை உலகப்பிரசித்தம்.இவர் கிளாசிகல் இசையிலும் வல்லவர் .

ன் கண்ணுக்குள்ளே குடி இருக்கும் என் காதலியே 
என்னோட எல்லாமே நீதானே. 
என்னோட உயிரை உன்கிட்ட கொடுக்கத்தானே 
இன்னமும் உயிருடன் இருக்கேன்.

உன் கண்ணைப் பாத்தேனே..மயங்கிப் போனேனே.
உலகமே மங்கிப் போச்சே. மை எதுனாச்சும் போட்டியா ??
உன்னைப் பாத்தா கடவுளும் காதலிப்பாரு 
உன் கை இரண்டும் அணைக்கப்போ 
உன் சுவாச வாசம் உணர்ந்தப்போ 
உலகத்தை மறந்தேனே.  இந்தக் காதலிலே என் 
உயிரையும் மறந்தேனே.  
வானத்தைத்தொட்டாப்போலே இருக்கு.
வாழ இனி என்ன இருக்கு ? 

Oh! Beloved Smiling in my eyes
Oh! Beloved Smiling in my eyes
Oh! Beloved residing in my heart
My life is yours
Before I die I wish to give you my lifeI looked at you and my eyes fell in love with you
My eyes were so mesmerized they forgot the whole world
I looked at you and my eyes fell in love with you
My eyes were so mesmerized they forgot the whole world
Even God must have fallen in love
Even God must have fallen in love
Even God must have fallen in love
Even God must have fallen in love
In your arms I lost myself
The fragrance of your breaths became a part of me
I forgot the whole world and let love take me away
I forgot the whole world and let love take me away
I feel like touching the sky
I feel like drowning in your love
What good is my living
What good is my living
If you are not by my side
We will live together and we will die together
We can't live without each other
We will live together and we will die together
We can't live without each other
Even God must have fallen in love
Even God must have fallen in love
Even God must have fallen in love
Even God must have fallen in love
As is the condition of fish without water
Such difficult has been my living without you
Long has been my wait, come and take me away with you
Long has been my wait, come and take me away with you
Loneliness has dispersed me straw by straw
These long separations from you have taken my life away
Day and night I am restless
Day and night I am restless
Oh! I have turned crazy
Even my pulse has started to stop
The last ray of hope seems to be leaving me too
Even my pulse has started to stop
The last ray of hope seems to be leaving me too
Even God must have fallen in love
Even God must have fallen in love
Even God must have fallen in love
Even God must have fallen in love

Nusrat Fateh Ali Khan

Monday, October 5, 2015

மனுசா ! உன்மனசைத் திற.

 

இந்த மாதிரி ஒரு குறும்படம் எடுக்கப் பாருங்களேன் !!

+Thulasidharan thillaiakathu  +Balasubramanian Ganesh 
 +Chellappa Yagyaswamy +Balu Sriram +Srinivasan Balakrishnan
மனுசா ! உன் மனசைத் திற.

Thursday, October 1, 2015

ஈன்ச்டீனும் அவரது டிரைவரும்.


Tuesday, September 29, 2015

Bhogale je duhkha - Asha Bhosle

News is to hand that Asha Bhonslet's second son just passed away at Scotland fighting cancer for the last five years.

LATAJI'S BIRTHDAY CELEBRATIONS STAND CANCELLED.

U HEAR ASHA SINGING . LYRIC BY SURESH BHAT.
COMPOSER IS HER SON .

Thursday, September 24, 2015

Dayananda Saraswati: The profound journey of compassion


To me ,
 his journey continues for ever and ever and ever and ever......
eternally.....
his voice will be heard by all mankind
ever and ever
and ever 

Sunday, September 20, 2015

மன்மதன் என்றாலே...........

எச்சரிக்கை: இது ஒரு ஜாலி பதிவு.  ரேடிங் : UA 

CONCEPTS SELDOM DIE

எனச் சொல்வது வழக்கம்.


மனிதர்கள் பிறப்பர் வாழ்வர் மரிப்ப்ர்
ஆயினும் சமூக
மனித  மனதிலே பதிந்துவிட்ட சில பல
கான்ச்செப்ட்
 ( கூகுள் மொழி பெயர்ப்பு கருத்து   தமிழில் சரியான வார்த்தை யாராச்சும் சொல்லுங்கப்பா)
மறைவதில்லை. மறந்துபோவதில்லை. யாரும் மறுப்பதும் இல்லை.

அத்தகைய ஒரு கன்செப்ட் இந்த மன்மத ரதி 
  திருப்பரங்குன்றம் கோவிலிலே மன்மத ரதி சிற்பம். 
(நன்றி: ப்ளிக்கர் )

அன்று முதல் இன்று வரை மன்மதன் ரதி கான்செப்ட்
அழிவில்லாதது.
ஆனந்தம் தரவல்லது.
இணையில்லாதது.
ஈடில்லா இன்பம் .
ஃ  வரைக்கும் போலாம்.

ஆனால், மன்மதன் வசப்பட்டவங்களுக்கு பொறுமை இருக்காது. ஒரு அம்பைப் போட்டு, காரியத்தை முடிச்சுப்பாங்க.
(சிவன் மேலே போட்ட அம்பைத் தான் நான் சொன்னேன். )
நன்றி; கூகிள் சிந்தாலா. பெயிண்டிங்.
இலக்கியத்திலும் சரி, இன்னிசையிலும் சரி,
இனிமையாகப் பொழுதைக் கழிக்க உதவும் சினிமாக்களும் சரி.

மன்மதன் தொடர்ந்து இருக்கிறான். இளசுகளை  டிஸ்டர்ப் பண்ணிக்கொண்டே  இருக்கிறான்.

அவனை வெறும் ஒரு அழகா  கள்ளழகா  என்று ஒரு இரண்டு சொல்லில் மட்டும் சொல்லிவிட முடியாது. ஏன் என்றால்,மன்மதன்  என்பது ஒரு பர்சநாலடி. ஒரு இமேஜ்.


சிருங்காரம் என்று சொல்லை மன்மதன் இருக்கும் இடத்தில் சொல்ல முடியுமா ?  ஊஹும்.
காதல் முதல் காமம் வரை .
0 லேந்து இன்பினிட்டி வரை. ஒரு ஸ்கேல் இருந்தா,
அதில் மன்மதன் எந்த புள்ளி லே இருப்பான்?
ஒவ்வொருவரும் தனது மன நிலைக்கு ஏற்ப, இந்த மன்மதன் கன்செப்ட் ஐ
தனக்குப் புரிந்த அளவுக்கே பதில் சொல்வார்கள்.
மன்மதன் இப்படித்தான் என்றும் சொல்ல முடியாது.
காலத்துக்குத் தகுந்தாற்போல அவன் தோற்றமும், பேச்சும், ஆட்டமும் பாட்டமும்.
இதோ:
பழைய நூற்றாண்டின் மத்தியிலே
மன்மதன் எப்படி எங்கே இருக்கிறான் என்று பார்த்தேன்.

மன்மத லீலையைக் கண்டார் உண்டோ ? பாடுவது எம்.கே.டி. படம் ஹரிதாஸ்.
பாடுவது ஆடுவதோடு சரி. அந்த மன்மதன் உட்கார்ந்தே இருக்கிறான் (ர் ) பாடுகிறார்.அப்பப்ப பழ ரசம் குடிக்கிறார். அவ்வளவே !! முதல்லே பாட்டு டான்ஸ் எல்லாம் முடியட்டும். அப்பறம் தான் மத்தது எல்லாம் என்ற காலம் போல இருக்கு !!  . இப்ப எல்லாம் ரிவர்ஸ் லே இருக்கு இல்லையா !!
 
அந்த காலத்துலே நாகை லே சிவகவி தியேட்டர் லே இந்தப் படம் வந்ததா 1978 லே நான் சந்திச்ச ஒரு 90 வயசு பாட்டி சொன்னார். கண் முன்னாடியே இன்னும் எம்.கே.டி நிக்கிறாராம். அந்தப் படத்தையும் பாட்டையும் கேட்டுட்டுத் தான் நான் உசிரை விடுவேன் என்றார்.  படத்தை பார்த்தாரா, பாட்டைக் கேட்டாரா, இல்லை இன்னும் இந்த பிளானெட் டிலேயே அந்தக் கனவிலேயே தான் இன்னமும் உயிரோட இருக்காரா என்று தெரியவில்லை. 

  

C

(பல நேரத்திலே மனசுலே பதிஞ்சு போன உரு என்ன செய்தாலும் நீங்காது நிற்கும்.
லைப் லே மறக்கவேண்டியது மறக்காது. மறக்க கூடாதது மறந்து போயிடும். 
நம்முடைய இந்த பிரைன் பிகேவியர் நமக்கே ஒரு புரிபடாத ஒன்றாகும். )

வருடங்கள் கழிகின்றன.
அதே  கான்செப்ட் ஐ வைத்து படம் எடுக்கிறார்கள்.
 மன்மதன் நாற்பது ஐம்பது வருஷம் கழித்து வரும்போது
எப்படி இருக்கிறான் எந்தெந்த உணர்வுகளை தோற்றுவிக்கிறான் !!

இந்த மன்மதன் பாருங்கள்.
குதிரை சவாரி, கார் சவாரி
அதிசயம் கமல் உட்கார்ந்தால் எல்லாமே பின்னால் போகிறது !!

மன்மதன் மனசுக்குள்ளே உட்கார்ந்தால்
இன்னா இன்னா நடக்குமோ !!

இதை கமல் ஓல்டு மூவி என்று போட்டு இருக்கிறார்கள் யூ ட்யூபிலே
கமலைப் பார்த்தால் யங்காத்தானே இருக்கு !

கே. பாலச்சந்தர் பார்த்த மன்மதன்.
படம்: மன்மத லீலை.1976 ல் வந்த படம் என நினைக்கிறேன்.




இது மன்மத பாணம் . பானம் அல்ல.
பாணம் என்றால் அம்பு.
ரிவர்ஸ் டெக்னாலஜியில் எடுத்ததாம்.
மன்மதனில் என்ன ரிவர்ஸ் டெக்னாலஜி
சுப்பு தாத்தாவுக்குத் தெரியாம??  !!!!
அது தான்  பார்த்தேன்.
அப்பாதுரை சார் மாதிரி ஆர்தொடாக்ஸ் பீபிள் தயவு செய்து கண்ணை மூடிக்கொள்ளவும்.

இன்னும் ஐம்பது வருஷம் கழிகிறது.
21ம் நூற்றாண்டின் துவக்கத்தில்,
இந்த மன்மதன் கன்செப்ட் உருவே மாறிவிட்டது பாருங்கள்.
அந்த மன்மதன் வந்தே விட்டான்.
வந்தவன் சும்மாவா இருப்பான் ?

இப்ப எல்லாம்
மன்மதன்
என்றாலே
வேகம்
அசுர வேகம்.




எங்க இது போவப் போவதோ ????

எது எப்படியோ
இந்த மன்மதன் கன்செப்ட் க்கு முடிவில்லை.
அழிவில்லை.

எ கண்டின்யூட் ஜர்னி


Tuesday, September 15, 2015

காற்றோடு வந்த கீதம்

காற்றோடு வந்த கீதம்




காற்றுடன் கலந்த கீதம்



காற்றோடு மறைந்த கீதம்.

இனிய இசையின் இன்னொரு பெயர் எம். எஸ். அம்மா.
நாங்கள் மறந்தாலும்
நா மகள் மறக்க இயலாள்.


காற்று எங்களுடன் இப்புவியில் இருக்கும் வரை 
உங்கள் கீதமும் எங்களுடன் வரும்.


வலை நண்பர் திருமதி வல்லி நரசிம்மன் அவர்கள் வலை யில் இருந்து எம்.எஸ்.அம்மாவின் படங்கள் 
உதயமான கருத்துக்கள் தோன்றிய பாடல்கள்.
நன்றி. 



Friday, September 11, 2015

எங்களுக்கு எங்க மனசை

எங்களுக்கு எங்க மனசை 
எதிர்த்து நிற்க  வரம் அளி 
என் எதிரியை நான் வெல்லுமுன்னே  
என்னை வெல்ல வரமளி.  
 

உயர்வு தாழ்வு உணர்வு யாவும் வெளியே ஓடி  மறையட்டும். 
உண்மை நண்பர் தவறிழைப்பின் உடன் மனம் மன்னிக்கட்டும். என் 
வழியிலே புகல் உறவெதுவும்  வராதிருக்கட்டும் 
உண்மையே சுவாசமாக நெஞ்சு  நிறையட்டும்
   
இடர் வரினும் இயன்ற அறம் தொடர்ந்து செய்வோமே   
சுடர் ஒளியில் அற வழியில் என்றும் நடப்போமே 
நெஞ்சிலே உறுதி என்னும் நிலை நிறுத்துவோம். 
தீய கண்டு அஞ்சி ஓடும் எண்ணம் மறப்போம்

எவரை வெல்லு முன்னே நாம் 
நம்மை வெல்லுவோம். 
 
பாடலைப் பாடுபவர்: வாணி ஜெயராம் அவர்கள். 
படம் : குட்டி. GUDDI.  

  
 

 हम को मन की शक्ति देना, मन विजय करे
दूसरों की जय से पहले, खुद को जय करे  भेदभाव अपने दिल से साफ़ कर सके
दोस्तों से भूल हो तो माफ़ कर सके
झूठ से बचे रहे, सच का दम भरे
दूसरों की जय से पहले, खुद को जय करे
 
 मुश्किलें पड़े तो हम पे इतना कर्म कर
साथ दे तो धर्म का, चले तो धर्म कर
खुद पे हौसला रहे, बदी से ना डरे
दूसरों की जय से पहले, खुद को जय करे
 

Saturday, September 5, 2015

கிருஷ்ணக் கவிநயா

ஹாப்பி பர்த்டே டு யூ கண்ணா

கோகுலத்திற்கு  நாம் ஒரு நாள்.
விசிட் பண்ணி, கண்ணனுக்கு ஹாப்பி பெர்த் டே சொல்லணும் அப்படின்னு புறப்பட்டேன்.

எங்க புறப்பட்டீக..என்று குறுக்க வந்த தர்ம பத்தினியிடம்

இந்த பாரு, இத்தனை வருசத்துலே வருசா வருசா கிருஷ்ணன் பொம்மையை வச்சு வெண்ணை, பாயசம், வடை , எல்லாம் செஞ்சு நம்மவே சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்.

ஆமாம்.

ஒரு வருஷமாவது அந்த த்வாரகைக்கு சென்று அந்த கருமை நிறக்கண்ணா உனைக் காணாத கண் இல்லையே என்று பாடி அவனுக்கு


ஹாப்பி பர்த்டே டு யூ கண்ணா
சொல்லவேண்டாமோ என்று அவளைப்பார்த்தேன்.

போயிட்டு வாங்க என்று சட் னு உத்தரவு கொடுத்தாள் என்  பத்தினித் தங்கம்.

எல்லாத்தையும் பத்திரமா பாத்துக்க,  அஞ்சு நாள் லே திரும்பி வந்துடறேன். என்று கிளம்பினேன்.
 இந்தாங்க..என்று அழைத்தாள் இவள்.
 என்னது போகிறபோது நடுவிலே எதோ பேசுகிறாளே என்று அவள் முகத்தைக் கவனித்தபோது,
"திரும்பி வரும்போது, துவரம்பருப்பு , இதயம் நல்லெண்ணெய் ......" என்று இழுத்தாள்.
"நான் என்ன குசேலன் மாதிரி யா கிருஷ்ணனை பார்க்கபோறேன். நீ வேணும்னு நினைக்கிறத ஒரு செல் போட்டு அம்பிகா ஸ்டோர்ஸ் லே வாங்கிக்கயே.. டோர் டெலிவெரி இல்லையா.."

"நேத்திக்கு மகா பாரதம் பாத்தீகளா...யமுனை வெள்ளத்திலே ஓடுது. குழ்ந்தை அப்ப தான் புறந்த குழ்ந்தை மேலே மழைத் துளி விழ, ஆதி சேஷன் வந்து குடை மாதிரி வர்றாரே... அதுவும் அந்தக்காலத்துலேந்து டோர் டெலிவர் இருக்குன்னு தெரியுது.."  என்றவள்,

அது சரி, இந்த த்வாரகை, உடுப்பி, குருவாயூர் எல்லாம் ஆன் லைன்லே பார்க்ககூடாதா :"  என்று என்னை முறைக்க,

"அம்மா தாயே .. இந்த தடவை மட்டும் பொறுத்துக்கோ . அஞ்சு நாள், அஞ்சே நாள்லே ஓடி வந்துடறேன்" அப்படின்னு வீட்டை விட்டு ஓடாத குறையா நடந்தேன்.

த்வாரகா சலோ...கிருஷ்ண காந்ஹா கோ தேகோ என்று மனசு ஒரு பக்கம் அடித்துக்கொள்கிறது.

மனசை அந்த மாயக்கண்ணன் பக்கம் திருப்ப, அந்த பாட்டை என் ஐ பாட லே டவுன் லோட் பண்ண துவங்கினால்,

அந்த கோவர்த்தன கிரிதாரி மாயக்கண்ணன் அல்லவா !!
அதனால் தானோ என்னவோ என்னதான் முயன்றும் அவனை இங்கே சிறைப்படுத்த முடியவில்லை.
அவனைப் பார்க்க கேட்க நீங்கள் தான் இங்கே போகவேண்டும்.

உடுப்பி சென்று கிருஷ்ண தர்சனம் செய்யப்போனால் நடுவிலே ஆர்ட் ஆப் லிவிங் நித்ய பிரக்ஞ்சா தடுத்து நிறுத்தி, நான் பாடுவதை நீங்கள் கேட்டு உங்கள் வலையில் போடவேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்.






பங்களூர் சாரி சாரி, பெங்களூரு இப்ப அந்த ஊர் பேரு, அங்கன பஸ் புடிச்சு உடுப்பி போலாம் அப்படின்னு எத்தனை நேரம் தான் காத்துக்கினே இருக்க முடியும் ?

டூரிஸ்ட் பஸ் ஒன்னு, கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெசல் ,குருவாயூர் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பும் என்று கன்னடத்தில் மாட்லாடியத்தை கேட்டேன். சரி, குருவாயூர் தான் போவோமே, என்று கிளம்பினேன்.

தர்சனம் சூப்பர். பாஞ்சஜன்யம் சாப்பாடும் நன்றாக இருந்தது. அங்கே சித்ரா பாட்டு ஒன்னு கேட்டேன் பாருங்க...ஹார்ட்டை சில்லுன்னு செய்யுது.

குருவாயூர் தரிசனம் முடிச்சுட்டு, கோவைக்கு பஸ் புடிச்சு வந்தா ,
அந்த பஸ் லேயும் கண்ணன் பாட்டு தான்.

பக்கத்து சீட் லே ஒரு சின்னஞ்சிறு கண்ணன் தூங்குகிறான் பாருங்க.




அப்ப தான் நினைவுக்கு வருது, ம்யூசிக் அகடமி லே யோ வேறு எங்கனவோ ஸ்ரேயா கோஷால் வந்து பாடப்போறதா ..

அவங்க பாடுவதே இல்லை. அவங்க குரலே கண்ணனின் குழல் .



ரொம்ப டயர்டா போய், வீட்டுக்குள்ளே நுழைஞ்சேன்.
வூட்டுக்காரி சொல்றா:
நீங்க உலகம் முழுக்க சுத்தி பார்க்க போன கண்ணன்
நம்ம மனசுக்குள்ளேயே இருக்கான்.
அவனை நமக்குள்ளே தேடனும்ங்க.
அது தான் கண்ணன் காட்டும் வழி.

அகத்துக்கு எஜமானி சொன்னால் அப்பீல் உண்டோ !!.

எல்லோருக்கும் எங்கள் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

Thursday, September 3, 2015

காசு மாலை வேண்டாம் கருகமணியும் வேண்டாம்





 ஒரு ஐம்பது வருசத்துக்கு முன் என நினைக்கிறேன். தேவ் ஆனந்த் நடித்த படம்.  
திருச்சியில் கெயிட்டி தியேட்டரில் பார்த்த நினைவு. 
+Durai A 
அப்பாதுரை சார் தனது வலைப் பதிவில் என்னைப் பற்றி பாடல் ஒன்று எழுதியிருக்கிறார். 


அதைப் படித்தபின் இந்தப் பாடல் நினைவுக்கு ஏன் வந்தது ? புரியவில்லை.

பாடலின் மொழி பெயர்ப்பு :
********************************************************************
***********************************************************
*************************************************************8
காசு மாலை வேண்டாம் கருகமணியும் வேண்டாம்
கருமை நிறத்தானே நின் காலின் தூசி போதும்.
கரையும் காணவேண்டும் , நின் காலின் காட்சி வேண்டும்-நின் 
கருந்துளசி இதழில்  என் இதயம் ஈர்க்க வேண்டும்.

மோகம் மனதை முட்ட, லோபம் எனை ஆட்ட,

மோதி மோதி  சீறும் அந்த  நாகங்கள் சீண்ட
வேக வேகமாக விடம்  மனதில் உறையுமுன்னே
போகவேண்டும் நானும் ராமனடி காண 
உடல்  உயிரும் வேண்டாம்  ராம நாமம்  போதும்.
நான் இறக்க வேண்டும். என்னில் 
நான் இறக்க வேண்டும்.
ஹே ராமா .


நீர் வற்றிப்போச்சு, மண லும் காஞ்சுபோச்சு.

வெள்ளம் சொன்ன சேதி உண்மையாகிப் போச்சே. 
உள்ளம் விரிச்ச வலை மாயம் விளங்கிப் போச்சு.
செல்வதெங்கே இப்ப ? ராமனடி காண  ?
போவதெங்கே இப்போ
பூவுலகை விட்டு . 


கொண்டு வந்ததெதை ? எடுத்துப்போவதற்கு ?
மொண்டு செல்ல என்ன நின் புதையலிருந்து
கண்ட தெல்லாம் நேர்மை அப்  புதையல் சொல்லுமுண்மை.
!!
அந்தி நேரமிது பட்சி  பறந்து போகும்  நேரம்.
உந்தி விந்தி  நானும் வீடு  செல்வேன்.  

(வார்த்தைக்கு வார்த்தை அல்ல, மையக் கருத்து மட்டுமே மொழிபெயர்ப்பு    செய்திருக்கிறேன்.​)



****************************

ना मैं धन चाहूँ, ना रतन चाहूँ 
तेरे चरणों की धूल मिल जाए, तो मैं तर जाऊँ 
शाम तर जाऊँ, हे राम तर जाऊँ 

मोह मन मोहे लोभ ललचाए
कैसे कैसे ये नाग लहराए
इस से पहले की दिल उधर जाए
मैं तो मर जाऊँ, क्यों ना मर जाऊँ 

लाए क्या थे जो ले के जाना है
नेक दिल ही तेरा खज़ाना है
सांझ होते ही पंछी आ जाए
अब तो घर जाऊँ, अपने घर जाऊँ 

थम गया पानी, जम गई काई 
बहती नदियाँ ही साफ़ कहलाई 
मेरे दिलने ही जाल फैलाए 
अब किधर जाऊँ, मैं किधर जाऊँ 
*********************


Na Main Dhan Chaahuun, Na Ratan Chaahuun
Tere Charanon Ki Dhuul Mil Jaaye
To Main Tar Jaauun, Haan Main Tar Jaauun
He Raam Tar Jaauun
Moh Man Mohe, Lobh Lalachaaye
Kaise Kaise Ye Naag Laharaaye
Isase Pahale Ki Man Udhar Jaaye
MainN To Mar Jaauun, Haan Main Mar Jaauun
He Raam Mar Jaauun
Tham Gayaa Paanii, Jam Gayii Kaayii
Bahatii Nadiyaa Hii Saaf Kahalaayii
Mere Dil Ne Hii Jaal Phailaaye
Ab Kidhar Jaaun, Main Kidhar Jaauun - 2
Ab Kidhar Jaaun, Main Kidhar Jaauun
Laaye Kyaa The Jo Leke Jaanaa Hai
Nek Dil Hii Teraa Khazaanaa Hai
Shaam Hote Hi Panchi Aa Jaaye
Ab To Ghar Jaaun Apane Ghar Jaaun
Ab To Ghar Jaaun Apane Ghar Jaauun.

.

Friday, August 28, 2015

Onam Vanne.



A VERY HAPPY ONAM TO ALL MY FRIENDS FROM KERALA.

Wednesday, August 26, 2015

Hare Krishna - Jhoolana Yathra



Courtesy: Hindu Devvotional Blog 
THIS DAY IS THE MOST SACRED DAY FOR ALL KRISHNA DEVOTEES.
FOR ON THIS DAY THE JHOOLANA YATRA COMMENCES.





jhoolana yatra begins this Ekadasi 26th August 2015
at All Centres of 
 ISCON 
click above to know more about jhoolana yatra of Radhe krishna.

Friday, June 19, 2015

அன்புள்ள அப்பா (2)

அந்த ராமசாமிக்கு ரொம்ப சந்தோஷம்.

தான் செய்யமுடியாததை தன் மகன் செய்து விட்டானே !!

என்ற பெருமிதம்
அவர் இதயமெங்கும் கொப்பளித்தது போலும் !!

ஆம்.
தனது வாழ்நாளெங்கும் ஒரு நடிகனாக வாழ்ந்தார். பெரும் பொருள் சேர்த்தார்.

ஆயினும் தனது மகனை தான் நினைத்தது போல் ஒரு எஞ்சினீர் ஆகவோ டாகடர் ஆகவோ
அவர் கனவு பலிக்கவில்லை.
காலம் அது போல அமையவில்லை.

ஒரு நாள் அந்த மகன் அவர் முன்னே வந்து நின்று:

அப்பா என்றான்.

என்னடா...

உனக்குத் தெரியாதா என்ன ?

என்னடா !! நீயும் தன்னை நடிகன்னு, ஊரை சுத்திக்கினு, ஒரு சான்ஸ் கூட கிடைக்காம திணறிக்கிட்டு இருக்கிறே... அது தான் எனக்குத் தெரியும்.

இல்லப்பா...

ஏன்ன நொள்ள்ப்பா...

நான் நடிச்ச படம் ,
அது சின்ன குறும்படம் தான், ஆனா அது ஆஸ்கார் லே விருது வாங்கி இருக்குன்னு
நியூஸ் வந்திருக்கு...

அவருக்கு இதயம் நின்று போனது போல் இருந்தது.

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி..இவன்  தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

மகனே என்று அவனை ஆரத் தழுவிக் கொண்டார்.

உனைப் பெற்றதற்கு என்ன தவம் செய்தேனோ !! என்று கண்ணீர் வடித்தார்.

அப்பா.. நீ தாம்பா எனக்கு எப்பவுமே ஹீரோ... அது சரியில்ல, என்னை அந்த படிப்பு , இந்த வேலை என்று அனுப்பிச்சா எப்படி ?

தப்பு தப்பு தான் .
ஆனா என்னை ஹீரோ ஹீரோ என்று சொல்லி
பெரிய வார்த்தை பேசாதே...
நான் சாதாரண நகைச்சுவை நடிகன் தான் ...
என்றார்.

சரிடா.ராமசாமி..
என்றான் ஆஸ்கார் விருது பெற்ற நடிகன்.

சொல்லிவிட்டு சிரிக்கிறான்.



 அன்புள்ள அப்பா (2)


அப்பாவை நினைந்து உருகச்செய்யும்
பத்து அற்புத
கணங்கள்.
Incredible
Moments
When
Dad
Yours and Mine
Saved the Day
for Us.

Do we remember them ???
!!!

Monday, June 8, 2015

த்விஜாவந்தி

இந்த த்விஜா வந்தி ராகம் என்ன பாடு படுத்துகிறது நமது மனசை !!
இதை முன்னமே என்னுடைய சங்கீத வலையான மூவி ராகாஸ் ப்ளாக் ல் நான் விவரித்து இருந்தாலும் ஐரோப்பியர்களும் இந்த ராகத்தைப் பாராட்டிப் புகழ்வதை நேற்று தான் கவனித்தேன்.

ஹரி காம்போஜி ராக ஜன்யமான இந்த ராகத்தில் பல அறிய பாடல்கள், கிருதிகள் இருக்கின்றன.

அகிலாண்டேஸ்வரி எனத்துவங்கும் முத்துச்வாமி தீக்ஷதரின் சாஹித்யம் எனக்கு 1977 முதலிலே இருந்தே பரிச்சயம்.

அந்த ராகத்தில் நம் மனதை பிழிந்து எடுக்கும்
 மகாராஜபுரம் சந்தானம்,
ஜேசுதாஸ்,.
எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்.

மற்றும்
 சாருலதாவின் வர்ணனை
எல்லாமே சுகம் சுகம்.
இந்த ராகத்தில் தில்லானா அசாத்தியம் .
அதையும் செய்து நம்மை அசத்தி இருக்கிறார் பால முரளி அவர்கள்.
பால முரளியின் தில்லானா இங்கே.
கர்நாடக சங்கீத இசை இலக்கண மேதை டி .என். சேஷகோபாலன் த்விஜாவந்தி ராகத்தை பாடும்போது நமது உனர்வுகள் எப்படி இருக்கிறது?



தமிழ் இசைப் பெரியார் எனப் புகழ் பெற்ற

பெரியசாமி தூரன் எழுதிய பாடல்.

எங்கு நான் செல்வேன் அய்யா...?


எங்கு நான் செல்வேன் அய்யா
நீர் தள்ளினால்…
எங்கு நான் செல்வேன் அய்யா?




திங்கள் வெண் பிஞ்சினை, செஞ்சடை தாங்கிடும்
சங்கரா அம்பிகை தாய் வளர் மேனியார்

எங்கு நான் செல்வேன் அய்யா



அஞ்சினோர் இடர் எல்லாம் அழிய ஓர் கையினால் 

அபயமே காட்டிடும் அருட்பெரும் அண்ணலே
நஞ்சினை உண்டுமே வான் உளோர் நலமுற
நாடிடும் வள்ளலே, நான்மறை நாதனே எங்கு நான் செல்வேன் அய்யா

by Bombay Jayashree



உலக நாயகன் படமான
விஸ்வரூபத்தில் :


உனைக் காணாத நான் இன்று நானில்லையே ..

பாடுவது கமலும் சங்கர் மகாதேவனும்



இத்தனை நளினமான ராகத்தை விட ஐரோப்பியருக்கும் மனம் வரவில்லை போலும்.
இதன் ஸ்பெர்ரி மார்ட்டின் என்னும் புகழ் பெற்ற இசை வல்லுநர் இந்த ராகத்திலே ஒரு பள்ளி இசை அமைத்து அதையும் தனது கல்லூரி மாணவர்களால் பாடி அவையினரை மகிழ்வித்து இருக்கிறார்.
western classical


த்விஜாவந்தி ராகத்தை ஈதன் சபாரி அவர்கள் தந்து இருக்கும் வித்தை.

விஸ்வரூபத்திற்கு பிறகு வந்த ரஜினி படத்திலும் த்விஜாவந்தியின் சாயல் ஸ்ரீனிவாஸ் அவர்களின் பாடலில் தெரிந்தது. அதனுடன் சாமா என்னும் இன்னொரு ராகத்தையும் கலந்து,
நம்ம கீதா அம்மா செய்கிற அவியல் மாதிரி பாடியிருந்தார்.

அதுவும் மணக்கிறது.

Sunday, May 10, 2015

அம்மா !!

இன்னிக்கு அம்மாக்கள் தினம்  தெரிந்த உடன்

அம்மாவுக்கு இன்னிக்கு ஒரு பரிசு  கொடுப்போம்

ஓடி வந்து
இங்கே வந்து பார்த்தேன்.


ஜானகி அப்படிங்கற பேருலே
மூணு பேரு இருக்கிறார்கள் .

இவர்களிலே
யார் என் அம்மா ?
தெரியல்லையே !!

அம்மா !!



"லவா..." என்றொரு குரல் கேட்டுத் திரும்பினேன்.
என் அன்னை குரல் போல் அல்லவா இருக்கிறது !!

ஒருவருமே இல்லை.

பிரமையோ !!

புவி உள்ளிருந்து வந்ததோ !!

மாதா ச பார்வதி தேவி. பிதா தேவோ மகேச்வரஹ
பாந்தவா சிவ பக்தாஸ்ச ஸ்வதேசம் புவனத்ரயம். 


எல்லோருமே என் அன்னை தான். 

(இதை சுட்டி என்ன அன்னைக்கு என்ன பரிசு என்று பாருங்கள் என்றேன். ​)





Saturday, May 2, 2015

இளசுகளின் பிதற்றல்கள்

இளசுகளின் பிதற்றல்கள்
இருப்பினும் அதில் என்ன
அற்புதங்கள் !!!

படம்   ஆஷிக் 2
 இசை : மிதுன்
 பாடுபவர்: அரிஜித் சிங்.

முதல் முறை இந்த பாட்டை கேட்கையில் அவ்வளவா ஈர்க்காது .
ஒரு சில தடவைகள் கெட்டுவிட்டாலோ நெஞ்சை விட்டு அகலாது.

ட்யூன் அதாவது மெலடி அதாவது இசை
மனதுக்கு இசைவு தந்தபோதிலும்
இந்த பாடலுக்குள்ளே நெஞ்சை ஈர்க்கும் கருத்து ஏதேனும் உளதா

வெறும்
இளசுகளின் பிதற்றல் போன்று தோன்றுகிறது.

இருந்தாலும்
இருபதுகளின் சிந்தனைகள் பற்றி
எழுபதுகள் என்ன சொல்ல முடியும் !!

பாட்டு கருத்து இதுவே:



நீ இலாது என் உயிரும் இல்லை
நீ இலா இவ்வாழ்வும் என்ன ?

நினைப் பிரிந்து நான் வாழ்வேன் எனின்
எனைப் பிரிந்தே நான் இருப்பேனோ ?

நீ ஒருத்தியே இருப்பதால்
நீயே என் உலகு என்பேன்.
உயிர் என்பேன். வாழ்வு என்பேன்.
உள்ளத்தே உறைந்துள்ள  அமைதி என்பேன்.
உணரும் வலியும்  நீயே என்பேன்.
உள்ளத்தில் உறைந்த காதலி நீயே.

நமது உறவு தான் என்னே
ஒரு கணம் கூட விலகி இருக்காத
உறவு தான் என்னே!
ஒவ்வொரு  உனக்கென வாழும்
ஒவ்வொரு கணமும் உனதே உனதே !!



உனக்காக வாழ்ந்தேன் நான்.
உனக்கே என என்னையும் தந்தேன். 
 உன் காதல்  ஒன்றே தான் என்னையும் காத்து 
 என்னுள் இருந்த வலியெல்லாம் நீர்த்தது.


Hum tere bin ab reh nahin sakte
Tere bina kyaa vajood meraa
Kyonki tum hi ho
Ab tum hi ho
Zindagi, ab tum hi ho
Chain bhi, meraa dard bhi
Meri aashiqui ab tum hi ho

Tujh se judaa gar ho jaayenge
To khud se hi ho jaayenge judaa


Teraa meraa rishtaa hai kaisaa
Ik pal door gawaaraa nahi
Tere liye har roz hain jeete
Tujh ko diyaa meraa waqt sabhi
Koi lamhaa meraa naa ho tere binaa
Har saans pe naam teraa


Tere liye hi jiyaa main
Khud ko jo yoon de diya hai
Teri wafaa ne mujh ko sambhaalaa
Saare ghamon ko dil se nikaala
Tere saath mera hai naseeb juDaa
Tujhe paa ke adhoora naa raha

வள வளா ன்னு சத்தம் போடாம, படத்தை போடுங்க....
இந்தபக்கம் கோவை ஆவி, அந்தப்பக்கம் அப்பாஜி சத்தம் போடுவது கேட்கிறது. 
சுப்பு தாத்தா த்யேட்டர் லே 
விசில் சத்தம் தாங்க முடியல்ல.
போட்டுட்டேன். 
நீங்க பாருங்க..
கடைசிலே அந்த பொண்ணு பாடும்போது 
ஹார்ட் வெடிச்சு மௌத் 
ஆகிவிட்டீங்க அப்படின்னா 
தாத்தா பொறுப்பில்ல.
  • என்ன இந்த பாட்டிலே அத்தனை மோகம் ?
  • என்று தானே கேட்கிறீர்கள் ?
  • சுப்பு தாத்தா நேற்று தான் இந்த பாட்டை கீ போர்டிலே கற்றுக் கொண்டார்.
  • எங்கேன்னு தானே கேட்கிறீக...
Beethoven Music School,
Vanchinathan Street , Alwar thirunagar, Valasaravakkam
key board Master
+Music Director Jaikeey

(near Kalyani Mahal)

Thursday, January 15, 2015

ஸ்ரீரங்கத் தெருக்களிலே சுந்தரக் கோலங்கள்

எனது அருமை நண்பர் திரு வேங்கட நாகராஜ் அவர்கள், திருவரங்கத்து தெரு வீதிகளில், பொங்கல் திருநாள் , போகி அன்று போடப்பட்டு இருந்த கோலங்களை, புகைப்படங்கள் எடுத்து அட்டகாச பிரசுரம் செய்து இருக்கிறார் தன வலையில்.
அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஒரு பானை அளவு சக்கரை பொங்கலை எடுத்து அவருக்கு அன்பளிப்பாக தரவேண்டும் .
அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துகள்.

Beautiful Kolams on the streets of Srirangam on the Pongal Festival Day.
Courtesy: Venkatanagaraj.of Photography fame.
A few kolams are from my favourite kolam blog of Mrs.Vani Muthukrishnan also. Thank U madam.



பொங்கல் திருவிழா . யுனைடெட் அரப் எமிரேட்ஸ் இல் இருந்து.
உலகமெல்லாம் இருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும்
எங்கள் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.


ALSO A PEACOCK DANCE FROM U.A.E.