Pages

Sunday, February 23, 2014

கணவன் மார்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி. சீரியல் லே முதல் எபிசொட்.

ஒரு புலிக்குக் கூட  நன்றாக பயிற்சி கொடுத்து விடலாம்.  நமது சொல்படி செய்ய வைத்து விடலாம்.

ஆனால் இந்த கணவன் மார்களுக்கு  டிரைனிங்கா ... ??ஊஹூம் ...
சுத்தமாக நம்ம வழிக்கு கொண்டு வர முடியாது என்று அலுத்துக் கொண்டாள் எதித்த வீட்டு எச்சுமி.

என்ன ஏன் அப்படி சொல்லிபோட்டே..
என்று இவள் கேட்க,
 இந்தாங்க,  முதல் லே இந்த வீடியோவை பாருங்க என்று டி.வி.டி.லே போட்டு காண்பித்தாள் 

சரிதான். நான் கொஞ்சம் சிரமபட்டால் புலியைக்கூட ட்ரைன் செய்து விடலாம். போல இருக்கே. என்றாள் இவள்.

ஆனால், ஹஸ்பன்ட் பால்ஸ் இன் எ டிப்பரண்ட் காடிகரி. இல்லையா..
 Husband falls in a different category 
அவரை டைகர் மாதிரி ட்ரீட் பண்ணி டிரைன் பண்ண முடியாது. இது எச்சுமி. 

 அப்படியா. ? ஹஸ்பண்டை டிரைன் செய்வதற்கு ரொம்ப கஷ்டபடுகிறீர்கள் என்று தோன்றுகிறது.

உங்களுக்குத் தெரியாதா என்று ஆரம்பித்த எச்சுமி , 

அடுத்த வீட்டுலே எதிர்த்த வீட்டுலே என்ன நடக்குரதுன்னெ கூட தெரியாம அப்படி என்ன தான் டி.வி. பார்ப்பீர்களோ தெரியல்ல  .

எனக் குறைப்பட்டுக் கொண்டாள் .

நானா ? டி.வி. லே காலைலே காபி சாப்பிட்டுக்கொண்டே வேளுக்குடி கேட்பேன். பத்துலெந்து பதினிரண்டு ஸ்டார் மூவீஸ். இல்லேன்னா ஏ  எக்ஸ். என். 

குக்கர்லே வைக்கறது அரிசி கழஞ்சு கொட்டறது, கறிகாய் நறுக்கி அதுலே வைக்கறது எல்லாமே  யாரு ?  அவரா ? நீங்களா ? இல்ல பிப்டி பிப்டி ஆ ?


நீங்க கேட்கிறதை பார்த்தா, ஏதோ நான் ஜாலியா இருக்கிற மாதிரி, உங்களுக்கு தோன்றது. நான் சும்மா ஒன்னும் உட்கார்ந்து இருக்கமாட்டேன். எனக்கு மட்டும் பொறுப்பு இல்லையா என்ன ?

அதானே பார்த்தேன்.

நடு நடுவிலே உப்பு புளி சாம்பார் பொடி எல்லாம் கரெக்டா இருக்கா அப்படின்னு போயி, செக் பண்ணிடுவேன். 

அப்படியா.

1 மணிக்கு லஞ்ச் வரும்.

 என்ன வருமா ?

ஆமாம். ரெடின்னு சொன்னவுடனே தான் போவேன் டேபிளுக்கு.

லஞ்ச் சாப்பிடுவீங்க..அப்பறம் ?

சாப்பிட்டபின், ஒரு தூக்கம் போட்டாத்தான், ஈவினிங் வாக் பிரிஸ்க் ஆ போக முடியும் இல்லையா.

ஸோ நைஸ் டு ஹியர். நீங்க மேன் மெனெஜ்மெண்டிலெ எம்.பி. ஏயா !!

அதெல்லாம் ஒன்னும் இல்ல. இருந்தாலும் எனக்கும் லேபர் ரூல்ஸ் எல்லாம் நன்னாவே தெரியும்.

என்ன ?

அட் நோ டயம்,  அஞ்சரை மணி நேரத்திற்கு மேலே தொடர்ந்து ஒர்க் பண்ண கூடாது என்று ஹஸ்பன்ட் கிட்டே ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லி இருக்கேன்.இந்த டொமஸ்டிக் வயலன்ஸ் மாதிரி எந்த குத்தமும் வந்துடக் கூடாது இல்லையா ??

ஹெச் ஆர் மேனேஜர் அவர் இருந்தாரா நீங்களா ?

அவர்தான். ஆனா அந்த ஹெச்.ஆர். வேற ..

இது ?

ஹௌஸ் ரிகன்ஸ்டர்க்சன் பிராசஸ்.

சாயந்திரம் ?

வாக்கிங் போவேன். அதுக்கு முன்னாடி ஸ்ட்ராங் டீ போட்டுத் தருவார் பாருங்க.. சுகமோ சுகம்.

அவர் கூட வருவாரா??




சில நாளைக்கு கூட வருவார். இல்லேன்னா, அடுத்த நாள் என்னென்ன வேணும் அப்படின்னு கேட்டுகிட்டு சமத்தா மார்கெட்டுக்கு போயி வாங்கிண்டு வருவார்.  என்ன அவருக்கு பிடிக்குமோ அத அந்த பீல்ட் அவர் பார்த்துக்கலாம் அப்படின்னு அலௌ பண்ணிட்டேன். 

அப்ப அவரு அந்த நேரத்துலே அவர்  ஜோலியை பார்த்துக்கலாம் . இல்லையா...

எஸ். ஹீ வில் பி ஆன் ஹிஸ் ஓன் . .நோ ப்ராப்ளம். ஐ கிவ் ஹிம் புல் ப்ரீடம்.

பின்னே ?

அப்பறம் சாயந்திரம் தான் ஆறு மணிக்கு ராஜ் நியூஸ் , பின்னே, மண் வாசனை , கருத்தம்மா, தெய்வம் தந்த வீடு, ...

அதுக்கே 8 ஆகி விடுமே...

ஆமாம். நடு விலே அந்த ad  வர நேரம் பார்த்து குக்கர் லே திரும்பவும் எல்லாத்தையும் சுட வச்சுடுவேன்.  அது என்னோட ஜாப்,     ரிலேஷன் ஷிப் லே ஒரு    ஈக்விடி வேணும் இல்லையா.
சில நாளைக்கு மட்டும். இவரு பார்த்து பாரு.

அப்பறம் ?

சரவணன் மீனாட்சி, சூப்பர் சிங்கர் ...

அப்படியா...

அந்த டயத்திலே தட்டுலே இவர் எல்லாத்தையும் போட்டு கொண்டு வந்து வச்சுட்டு போயிடுவார். நான் போட்டதை , இருக்கறதை, வாயைத் திறக்காம, சூப்பர் சிங்கர் முடியறதுக்குள்ளே சாப்பிட்டு விட்டு , நானே என் தட்டை கழுவி வச்சுடுவேன். இவருக்கு ஒரு தொந்தரவு கொடுக்கக்கூட மனசு வராது. 

பிரமாதம்...என்னதான் இருந்தாலும் உங்க மனசு தங்கம் தான். அப்பறம்..?

ஆபீஸ்  சீரியல் வந்து விடும்.

கார்த்திக், ராஜி  காதல் சண்டை படு ஜோர் இல்ல.??

 ஆனா விஷ்ணு லக்ஷ்மி தான் செம நடிப்பு, போதாதா !! நடுவிலே அந்த காமெடி கூட்டம் வேற.  சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப் போயிடும்.

முடியறதுக்கு 11 ஆகிவிடுமே...

ஆமாம். ஆமாம்.  கண்ணை சுழற்றிண்டு வரும். அப்ப இவர் நான் கொஞ்சம் பி.பி.சி. பார்க்கரேனே அப்படின்னு கேட்பார்.  சரின்னு நானும் சொல்லிடுவேன்.

அப்படியா..

ஆமாம். காலைலேந்து கஷ்டப்படறார். கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னிண்டாத் தானே அடுத்த நாளைக்கு பிரிஸ்கா இருக்கலாம்.  காலைலே  6 1/2 க்கே இவருக்கு காபி வேணும். தானே போட்டுப்பார். எனக்கும் கலந்து வைப்பார்.

சரிதான்.  அப்ப  அவருக்கு நாள் முழுக்கத்தான்  வேலை அப்படின்னு சொல்லுங்க..

வீட்டிலே இருக்கும் போதுதானே   வேலை.
 நான் வாக்கிங் போனா ஒன்னும் இல்லையே.. நீங்க அந்த பாயிண்ட் பார்க்கலையா ?

ஆமாம். 

நான் தான் கரெக்டா டிரைன் பண்ணி வச்சுருக்கேனே .. அப்பறம் என்ன கஷ்டம் ?

எப்படி ? எனக்கு  இந்த டிரைனிங் எப்படி ன்னு கொஞ்சம் சொல்லி தரக்கூடாதா...

நான் சொல்லித் தரதை விட நீங்களே இந்த வீடியோவை பார்த்து கத்துக்கலாம்.

அவரையும் பார்க்கச் சொல்லணும். பெருமாள் தான் அவருக்கு நல்ல புத்தி கொடுக்கணும்.

கண்டிப்பா கொடுப்பார். ஆனா ஒன்னு மட்டும் நினைவிலே வச்சுக்கணும்.
ச்  ச்  அப்படின்னு தொட்டதுக்கெல்லாம் இச் கொட்டுவார். கண்டுக்க கூடாது.

சரி. 

என்ன ,,,  எல்லா ஹஸ்பன்ட் ம்  முதல் ஒரு வாரத்துக்கு கஷ்டம் பீல் பண்ணுவாங்க  .அதைப்பார்த்து நானே பாத்துக்கறேன் என்று மட்டும் சொல்லி விடக்கூடாது. உங்க இலட்சியத்திலே நீங்க குறியா இருக்கணும்.

சரி. 

யூ ஷுட் பி லயன் ஹாரட்டட் .you should be lion-hearted

புரியல்ல. 

 நம்ம நெஞ்சத்த  கொஞ்ச நாளைக்கு அந்த கர்பக்ரஹத்துலே இருக்கிற ஈஸ்வரன் மாதிரி கல்லா வச்சுக்கணும் அப்படின்னு சொல்றேன்.

சரி. 

கொஞ்சம் கொஞ்சமா, எல்லாமே ஒரு வாரத்துலே  அட்ஜஸ்ட் ஆயிடும். அப்பறம் அதுவே ஜாப் ஆயிடுத்துன்னா நம்ம விட நம்ம கட்டிக்கிட்டவர் நன்னாவே சமைப்பார்.

ஆஹா. இதத்தான், இதத்தான் நானும் எதிர்பார்த்தேன்.

இது கணவன் மார்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி. சீரியல் லே முதல் எபிசொட்.

நாளைக்கே இந்த வீடியோவைப் பார்த்து விடறேன். ஆனா கொஞ்சம் விட்டுப் பிடிக்கனுமோ ?



விடாதே பிடி.
தும்பை விட்டுட்டு வாலை பிடிக்கிறது வேஸ்ட் ஆப் டைம்.

ரொம்ப தாங்க்ஸ் மாமி.


Monday, February 10, 2014

அஞ்சு .கண்டத்திலேயும் அம்மா பாட்டு அதே தான் !!

நான் பாடுறேன், நீ தூங்குடா கண்ணா என்று ஏதோ ஒரு மொழிலே
தன் செல்லக்குழந்தையை பாடி தூங்கவைக்க
எல்லாம்  அம்மாவும் நினைக்கிறாங்க . ஆனா எல்லாம் தூங்குதா என்ன !!




இந்த குழந்தை மனதில் என்னவெல்லாம் தோன்றும் ?

சிரிக்கிறது என்றால் ரோஜா வருமோ ?
அழறது என்றால் சிங்கம் வருமோ ??

அம்மாவின் பாட்டுக்கு என்னவா எக்ஸ்ப்ரெஷன் தருது !!  அதன் ஒவ்வொரு சினுங்கல் நம்மை என்னவெல்லாம் செய்கிறது !!

அத்தை அடிச்சாளோ அமுதூட்டும் கையாலே
பாட்டி அடிச்சாளோ பால் வார்க்கும் கையாலே

அம்மாக்கள்  தங்கத் தமிழ் நாட்டிலே பாடுகிறோம்.

ஆராரோ ஆரியராரோ அம்புலிக்கு நீ 
அப்பாக்களும்  அப்பப்ப பாடுகிறோம் இல்லையா ?

அன்னிக்கு பேரனை தூங்க வைக்கும் பொறுப்பு   டர்ன் சட்டப்படி தர்மப்படி  என்னோடது.

அதனாலே பேரனை தூளி லே போட்டு,  தயார் செய்யும்பொழுது

புதுசா எதுன்னாச்சும் பாடுங்க
அப்படின்னு கிழவியோட கமாண்ட் வேற.
பெட்டர் ஹாப் கொடுமை இந்த 73 வயசுலேயுமா !!
தாங்கலேடா சாமி.

அத அப்பறம் பார்ப்போம்.
இப்ப குழந்தை தூங்கணும் . நம்ம பொறுப்பு இல்லையா..

இங்கே அங்கே எங்கேயும்
இப்புவியில் இருக்கும் அஞ்சு  கண்டங்களிலும்
அன்னை தன் செல்லக் குழந்தையை என்ன பாட்டு பாடி
தூங்க செய்கிறாள் ?
அது மாதிரி ஒரு டிராக் லே போவோம் .

கூகிள் ஆண்டவா துணை என்று பிரார்த்திக்கொண்டு
முதலில் ஜப்பானுக்கு சென்றேன்.

lullaby
ஜப்பானில் டாகேடா .

வேலைக்கு இருக்கும் ஒரு சிறிய பெண் எஜமானியின் குழந்தையை முதுகில் சுமந்தபடி வேலை செய்கிறாள். தன் மனக் கவலைகள் எல்லாத்தையும் இந்த கவிதையில் கொட்டித் தீர்க்கிறாள்.



ஆபிரிக்கா என்றாலே எனக்கு ட்ரம்ஸ் தான் நினைவுக்கு வரும்.
அங்கே ஒரு கிளாசிகல் சௌன்ட் இருக்கும் என்பதை என்னால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.
ஆப்பிரிக்கா நாட்டில் என்ன மாதிரி ஒரு வாத்சல்யம். !!
african lullaby




பிரெஞ்சு நாட்டில் பாரீசில் ஒரு அம்மாவுக்காக அதன் பாட்டி பாடுகிறாள்.
இந்த அம்மாக்களுக்கு மட்டும் அவங்களோட அம்மா இருந்துவிட்டால் கவலையே இல்லை. குழந்தையைப் பத்தி தொண்ணூறு பங்கு அவங்க கிட்ட கொடுத்துட்டு, அப்பாடி ரொம்ப டயர்டு என்று படுத்துக்கொண்டு விடுவார்கள். 
பிரான்ஸ் லேயும் அதே கதி தான். 
பாவம் பாட்டி மா.


 +Ananya Mahadevan        

  நான் சொல்றதை  அனன்யா மேடம் ஒத்துப்பாங்களா அப்படின்னு பொருத்துதான் பார்க்கணும். பழனி லேந்து வீபூதி வந்திருக்கு அப்படின்னு நீங்க எழுதியது படிச்சேன். சமயத்திலே வந்திருக்கே. .கொஞ்சம் வீபுதி தாங்க மேடம். குழந்தைக்கு இட்டு விடறேன். முருகா காப்பாத்து. இன்னிக்காவது நேரத்துக்கு தூங்க வை. 


French Lullaby பாடிப் பார்ப்போம்.

LET US RELAXA



ஊஹீம். நத்திங் டூஇங்க்
எனக்கு வேற பாட்டு பாடு அப்படிங்கறது செல்லம்.
SOUTH AMERICAN LULLABY இருக்காமே. அதை பாடுங்க என்று சொல்றா  கிழவி.

மெக்சிகோ நாட்டில் தாலாட்டு எப்படி அதையும் கேட்போம்.


Arriba del cielo hicieron tamales
Arriba del cielo hicieron tamales
Lo supo San Pedro y mandó a traer los reales
Lo supo San Pedro y mandó a traer los reales

A la rorrun niño a la rorron cha
A la rorrun niño a la rorron cha
Duermete niñito de mi corazón
Duermete niñito de mi corazón

Duermete niñito que tengo que hacer
Duermete niñito que tengo que hacer
Lavar tus pañales, y ponerme a coser
Lavar tus pañales, y ponerme a coser

A la rorrun niño a la rorron cha
A la rorrun niño a la rorron cha
Duermete niñito de mi corazón
Duermete niñito de mi corazón

ஏங்க  பையன் ஊருக்கு போய்விட்டு வந்தப்போ நம்ம ஒரு அரபியன் தாலாட்டு கேட்டோமே நினைவு இருக்கா ?

அதை பாடச் சொல்றியா.  சரி பாடறேன் என்று ஆரம்பித்தேன்.

ARABIAN LULLABY அரபு நாட்டில் தாலாட்டு. 



எனக்கு தூக்கம் அசத்துகிறது. பேரன் தூங்கவில்லை.
இந்த லல்லபி பாடுவோம். அந்த லல்லபி பாடுவோம் அப்படின்னு
பாடினால்
பாருடா...
இந்த கிழவி தான் தூங்கறா ..என்னமா குறட்டை விட்டுண்டு.


கடைசியா இத டிரை பண்ணுவோம்.
INDIAN LULLABY
ஓமனத் திங்கள் கடவோ .. அந்த
சின்னக் குயில் சித்ரா குரலில் என்ன மாயமோ !!




பாம்பே ஜெயஸ்ரீ
மன்னுபுகழ் கோசலை தன மணி வயிறு வாய்த்தவனே 

தாமரைக் கண்ணனாம் உரங்கீனம் சித்ரா பாடுவாளே அது ?

என்ன பாட்டு பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை.

அடுத்தது என்ன செய்யறது புரியல்ல.
மணி ஆல்ரெடி 1 ஆயிடுத்து.
இன்னும் 4 மணி நேரம் தான் இருக்கு.
எழுந்து கிழவிக்கு காபி போட்டு தரனும்.

பேராண்டி, !!!
என் செல்லப்பேரன் கடைசியில் இந்தப்பாட்டுக்குத்தான் தூங்குவானோ !!
உங்க ஆத்தாவுக்கு  அந்தக் காலத்துலே இதாண்டா பாடினேன். என்று துவங்கினேன்.




ஊஹூம்.  தூளி லே எழுந்துண்டு உட்கார்ந்து
கண் கொட்ட கொட்ட இன்னும்.. என்னை பார்த்து என்ன சிரிப்பு !!
எப்போடா நீ தூங்கப்போறே !!

அத்தை அடிச்சாரோ !! என்று பாட ஆரம்பித்தேன்.

  'இன்னும் நீ பாடினேன்னா நானே உன்னை அடிச்சுடுவேன். 
நீ படு.. எனக்குத் தூக்கம் வரும்போது தூங்குவேன்.            '


அஞ்சு .கண்டத்திலேயும் அம்மா பாட்டு தாலாட்டு அதே பாட்டு தான்

படும் பாடும் அதே தான்.

நீங்க படுங்க.. அவன் தூக்கம் வந்தா தானா தூங்குவான் என்கிறாள் கிழவி.

அத 10 மணிக்கே சொல்லி இருக்கலாம் இல்லையா...




Friday, February 7, 2014

சைலென்ட் மோடில் மனசை வச்சுக்கய்யா


மௌனம் என்பதை சொல்ல ஒவ்வொரு மொழியிலும் அழகான வார்த்தைகள்.
நெஞ்சம்  மௌனம். ஆயினும் பேசுகிறது.

நெஞ்சம் பேசியதை நா உரைத்தது எப்படி !!

முதலில் மலையாள மொழியில்




நம் தாய் மொழியாம் தமிழில்








இந்தியில்
நிலவு, வானம் , சூரியன், சந்திரன் ,நக்ஷத்திரம் எல்லாமே மௌனம் ஆனதே
என் மனம் மட்டும் ஆக வில்லையே...
வருந்துவது படத்தில் தேவ ஆனந்த்
பின் அணியில் பாடுவது எஸ்.டி. பரமன்.
ALL HAVE GONE SILENT
 .BUT NOT MY MIND. SINGS S.D.BURMAN.






ஆங்கிலத்தில்
the sound of silence



அதெல்லாம் இருக்கட்டும்.

நெஞ்சில் மௌனத்தை எப்படி கொணர்வது ?




மனதிற்குள் இருக்கும் செல்லை சைலென்ட் மோடில் போட்டு விடுங்கள்.

PRACTISE SILENCE AS AN ART TO CONSERVE YOUR ENERGY.