Pages

Sunday, June 29, 2014

அத லவ்வு என்பாக.

பாரஸ்மானி என்னும் படத்துலே 1963 லே வந்தது.
முகேசும் லதா அம்மாவும் பாடுறாக.




முன்னுரை.


சென்னை அடுத்த  குப்பத்து  கடற்கரையில் தனியே உட்கார்ந்து யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம, ஆனா சத்தமாக பாடிக்கொண்டிருந்தேன்.  அங்கு என்னை எதிர்கொண்ட குடிமகன் ஒருவர் தனியே 
இன்னாய்யா பாடுறே பெரிசு !! நேக்கு புரியராப்போலே சொல்லு என்று  சீறியதன்  விளைவு இந்த மொழி பெயர்ப்பு. 

சென்னைத் தமிழில் ஒரு மொழி பெயர்ப்பு 
புலவர் இராமானுசம் மன்னிப்பாராக.

பொறுங்க . இதாங்க அவுக அதாங்க டாவ் அடிக்கரவக பெசிக்கராக. 
என்றேன்.

டாவ் அடிச்ச புராணம். 

திருட்டுத் தனமா சந்திச்சதெல்லாம்
தெரிஞ்சு போயிடும் சீக்கிரம் .
தெரிஞ்சு போயிடும்.
ஊர் சனம்
கூடி கூடி
என்ன சொல்வாக .. நம்ம
மக்காஸ் என்ன சொல்வாக ?

அத லவ்வு  என்பாக.

ஊர் முழுக்க சீக்கிரமே
வம்படிப்பாக.
வாய்க்கு வாய் பேசுவாக . அவுக
என்ன  சொல்வாக ?

அத லவ்வு  என்பாக .



உன்னைப் பத்தி
என் மனசு
எப்ப நினைச்சதோ
கால் நிக்கல்லே. கையும் ஓடல்லே
காசில்லாம  க்வார்ட்டர் குடிச்ச
போதை வந்துச்சே.

பேரம் பேசி
மனசைத்தந்து ஒன்
மனசை   வாங்கி வச்சேன்.

போகப்போக   சனங்களுக்குப்
புரிஞ்சு போயிடும்.
நம்ம சோலி புரிஞ்சு போயிடும். எங்க
மக்காஸ் என்ன சொல்வாக ?

அத  லவ்வு என்பாக.

இன்னா குத்தம் செஞ்சுட்டேன் நான்
உன்னை சந்திச்சேன்.
இன்னா பயம் இங்கன இருந்திச்சோ
அதுலே மாட்டிகிட்டேன்.

ஆசை பெருகிச்சு. தாகம் உண்டாச்சு.
மேகமாயிடுச்சு
மழையாய் பெஞ்சு
நெஞ்சு நனைச்சிச்சு .

நீயி நானு ஒன்னு விடாமே
உளறிப்போட்டோமே
விட்டுத் தள்ளு,
இந்த ஜொள்ளு லொள்ளு .
அந்தாண்ட
என்ன சொல்வாக - ஊர்
மக்காஸ் இன்னா சொல்வாக. ?

இத லவ்வு ன்னு சொல்வாக. 




चोरी-चोरी जो तुमसे मिली तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे
गली गली ये बात चली तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे 


तेरा ख्याल मेरे दिल में जब से आया है
क़दम स.म्भलते नहीं और नशा सा छाया है
क़रार खो के ही दिल ने क़रार पाया है
धीरे धीरे ये बात बढ़ी तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे...

कितनी ज़ालिम ये मुलाक़ात हुई
जिससे डरते थे वही बात हुई
बढ़ गई प्यास तमन्नाओं की
इस तरह प्यार की बरसात हुई
क़सम तुम्हारी मेरे दिल की बात कह डाली
छोड़ो छोड़ो ये दिल्लगी कि लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे...


Movie/Album: पारसमणि (1963)
Music By: लक्ष्मीकांत-प्यारेलाल
Lyrics By: फ़ारूक़ कैसर
Performed By: लता मंगेशकर, मुकेश



Monday, June 16, 2014

அப்பா என்று ஒரு அல்ப ஜீவன்

இன்னிக்கு அப்பா நாள். 

+Balu Sriram 
எழுதற மாதிரி பாசிடிவ் கண்ணோட்டம் தேவை தான். 
ஸோ , முதல் லே 

an inspirational song by Gary Valenciano
My dad




அப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கும் பாச உறவே தனி.

இங்கே.

அன்புள்ள அப்பா உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா !!







எல்லா பொண்ணுங்களுக்கும் அப்பா தான் HERO.
A tribute to father.






அப்பாவைக் கொண்டாடும் குழந்தைகளும் இன்று இருப்பது ஆங்காங்கே ஓரிரு பெற்றோர் செய்த பாக்கியம் புண்ணியம்.


+Chellappa Yagyaswamy மாதிரி புண்யாத்மாக்கள் இந்த காலகட்டத்துலே துர்லபம். 
  பொண்ணுங்க வூட்டுலேயும் ஒரு மனுசன் ஓஹோன்னு இருக்கணும் அப்படின்னா அவன் ஜாதகத்துலே   அஞ்சாம் இடம் வலுவா இருந்து குரு, சுக்ரன் , இல்லைன்னா, அட் லீஸ்ட் லக்னாதிபதி பார்வையாச்சும் 
  இருக்கணும். 
+Geetha Sambasivam 
   கீதா அம்மா நான் சொல்வதற்கு நோ சொன்னாலும் பரவாயில்லை

இன்னிக்கு எங்கே பார்த்தாலும் அப்பா அப்பா அப்பா அப்படின்னு அப்பா புராணம். ஹேமா, ராஜி, காவியக்கவி, தேன்மதுரத்தமிழ் கிரேஸ்  அரசி, அம்பாள் அடியாள் எல்லோருமே கச்சை கட்டிக்கிட்டு அப்பா அப்பா அப்படின்னு உருகறாங்க. 

அவங்களுக்கு அப்பாக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தாங்க்ஸ்  சொல்லித்தான் .ஆகணும். 

 திருமணமான பொண்ணுங்க, எல்லா விதமான கவலைகளையும் விட்டு விட்டு, ஈவன் .இன் லாஸ் பர்மிசன் கூட இல்லாம, புரந்த வூட்டை புகழ்  பாட இன்னிக்கு ஒரு நாள்  தான் கண்டிப்பா முடியும் . 

அப்பா இஸ் ரியலி கிரேட் யூ நோ. 
அப்படின்னு எதிர்த்த ப்ளாக் குட்டிப்பொண்ணு யூ.கே.ஜி. படிக்கிறது. சொல்லும்போது, நான் உன்மையிலேயே விக்கிச்சு போயிட்டேன். 

இங்கன, சீனா  அவங்க வலை போனேன். 

A tribute to dad
Suja's composition in the blog of VALAICHARAM EDITOR THIRU CHEENA.
SUBBU THATHA SINGS 

சுஜா அவர்கள் வியக்கத்த கவிதை ஒன்று எழுத அதை நான் உடனே பாட ,
உங்களுக்கு கேட்க பொறுமை இருக்குமா ? தெரியல்லையே !!!



இப்பாடலைக் கேட்டு அடுத்த நிமிடமே எனக்கு மடல் எழுதிய அன்பு சீனா அவர்கள் எழுதியது :

+அன்பின் சீனா .

சுப்பு தாத்தா @  சூரி சிவா 

நினைவுகளைச் சுமக்கின்ற காலத்தில் இளைப்பாற இது ஒர் நிழல். 
நிமிர்ந்து நடந்து நெஞ்சம கலங்காது செயல் புரிந்த ஓர் சிந்தனை.
உடல் தளர்ந்து ஓய்வு தேடும் காலத்து ஒர் இனிய கனவு.
இன் சொல்லும் இனிய நினைவும் மனத்திற்கு ஓர் நிம்மதி
பாவினைப் பாடலாய்த் தந்த தங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள் 

எதிர் பாராத நிலையில் மகிழ்வூட்டும் பாடல் 
மனம் மகிழ - துணவி - மகள் - மாப்பிள்ளை பேத்திகள் எனக் குடும்பமே மகிழ்ந்தது.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா:

என்னதான் சீனா சார் சொன்னாலும், தினம் தினம் கோவில்களிலும் பப்ளிக் பார்க் லேயும் ஆச்ரமங்களிலும் முதியோர் இல்லங்களிலும் நான் பார்க்கும் அப்பாக்கள் : பலரிடம் தேவையான பணம் இருக்கிறது. ஆ..ஆனாலும் ஆ..ஆதரவா பேச ஆள் இல்லையே !!


அண்மையில்
.......
ஒரு போஷ் முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கும் எனது நண்பர், 
 ஒரு 85 வயது முதியவர்  சொன்னார்.

பையன் நேரடியா அந்த ரெசிடென்சி ஆபிசுக்கு பணம் அனுப்பிச்சுடறான். 

எத்தனை ? 
நான் கேட்டு இருக்கவேண்டாம். கேட்டு விட்டேன். 

அட்வான்ஸ் 25 லட்சம். மாச மாசம் 19 ஆயிரம். 

அப்படியா என்று கேட்டேன். 

எல்லா வசதியும் இருக்கிறது என்றார்.

அப்படி என்ன வசதி ? வீட்டில் இல்லாதது, கிடைக்காதது ? 

என்று வெகுளித்தனமாக நான் கேட்க, 

காமன் கிச்சன், ப்ரேயர் ஹால், ஜிம், இன்டர்னட், ஸ்விம்மிங் பூல், அவசர வைத்திய வசதி  24 x7  எல்லாமே இருக்கு. உடம்புக்கு வந்த அடுத்த செகண்டே, அப்பாலோ விலேந்து ஆம்புலன்ஸ் வந்துடும். 

பலே என்றேன்.

என் கண்களை கூர்ந்து பார்த்த அவர், 
தொடர்ந்து, 

"என் பையன் எப்பவுமே ப்ரோ ஆக்டிவ் ." என்றார். 

புரியல்ல என்றேன். 

"அப்படியே எதுனாச்சும் நடந்துடுத்துன்னா, பையன் நம்ம சம்பிரதாயப்படி எல்லாம் செஞ்சுடலாம், தனக்காக வைட் பண்ண வேண்டாம் என்று எழுதிக்கொடுத்து விட்டு போயிருக்கான் ஸ்டேட்சுக்கு.  
ஹி வொர்க்ஸ் யூ நோ ரௌண்ட் த கிளாக். 
ஆல்வேஸ் பிளையிங் ப்ரம் ஈஸ்ட் டு வெஸ்ட் . "

அவர் சிரித்துக்கொண்டே தான் சொன்னார். எனக்குத் தான் பாவம் என்று தோன்றியது.  

பக்கத்திலே என் இல்லாள் இருந்தாள். லேசா என் இடுப்பை இடித்தாள். அம்பது வருசத்துக்கு முன்பு ரசித்து இருந்திருக்கலாம். இப்ப வலித்தது. 

"பேசினது போதும். சும்மா இருங்கோ " 
என்று அதற்கு அர்த்தம் என்று எனக்குப் புரியும். 

"எப்பவுமே ஒரு ஜெனரேஷன் அடுத்த ஜெனெரேஷன் நன்னா இருக்கணும் என்ற நினைப்பிலே தான் தன கார்யங்களைச் செய்யணும். 
அப்படி நம்ம  நினைக்கிற பட்சத்திலே நம்ம தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகணும்.  we should always adjust  "  

இது என் பார்யாள்.

your wife is smart  
என்றார்  .வந்த  நண்பர்

ஐ ஆம் ஒன்லி ப்ராக்மாடிக் என்று இவள் அதற்கு add பண்ணினாள் .



நான் மேலே ஆகாயத்தைப் பார்த்தேன். மேகங்கள் கலைந்து கலைந்து புது தினுசான உருவங்களை உண்டு பண்ணிக்கொண்டு இருந்தன. அந்தக் காலத்து வால்யூஸ்  எல்லாம் இந்தக்காலத்துக்கு பொருந்தாதுடா  தாண்டவக்கோனே..
என்று தூரத்தில் யாரோ சதிராட்டம் போடுவது போன்று பிரமை. 

நம்ம போயிட்டா இவளை யாரு பார்த்துப்பா அப்படின்னு யோசனை பண்ணினது , எத்தனை ஃபூலிஷ் என்று புத்தருக்கு வந்த ஞானம் போல் வந்தது. 


IN THE MODERN WORLD, IT IS THE APPAs WHO are perceived by most of the present day children just as 
ammas husband and 
who continue to suffer in silence 
அம்மாக்கள்  எப்பவுமே அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போயிடுவார்கள். 




அப்பா நீ எப்படி இருக்கே ?
அந்த ஒரு வாக்கியத்துக்காக ஏங்கும்
அப்பாமாருக்கு

நீ உன் கடமையைச் செஞ்சாச்சு இல்ல..

கம்னு கிட.

வந்தவருக்கு லேசா கண் கலங்கியதை பார்த்துவிட்டு, இவள் :

கண்ணைத் துடைச்சுக்கோங்கோ . அழக்கூடாது. இன்னிக்கு அப்பாக்கள் தினம். 
இங்கே இருந்தே  ஸ்கைப்பிலே  குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்கோ. 
ஆயுஷ்மான் பவ.