Pages

Tuesday, December 30, 2014

இந்த ரோசா படுத்தும் பாட்டை என்னதான் சொல்ல !!

இந்த ரோசாப்பூ  சோகத்திலும்
பங்கு பெறுகிறதே !!!
முதலில்
பிரிட்டன் கிராமத்து  இசை.
காதரின் ரட்ஜ்.

Britten Folk Songs. Kathryn Rudge -
Mezzo Soprano


அடுத்து,
ராசாவே உன்னை நம்பி, இந்த
ரோசாப்பூ...
raasave unnai nambi
intha rosaappoo




பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண் மூடாதாம்.

இதுவும் சோகமோ ??





சோகம் போதும்.
ரோசா மையமா வச்சு
இன்னொரு பாடல்.


ரோசப்பூவாம் உன் கண்களை நான் பார்த்தேன்
ருசியாய் ஒரு கோப்பை மது அருந்தினேனா
தெரியவில்லை. மதி இழந்தேன்.

ராஜேஷ் கண்ணா
முகமது ரபி குரலில்.


Thursday, December 11, 2014

கண்ணுடையவன்

படமும் பின் வரும் வாசகங்களும் நான் இன்று படித்தது. 
 
 நன்றி: தமிழ் இந்து நாளிதழ். 


கண்ணுடையவன்

(இன்றைய தமிழ் இந்து பேப்பரில் படித்தது.) 

 

“கடவுள் எங்கும் இருக்கிறாரே?

 எல்லாம் கடவுள்தானே?

 ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?” என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.

கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?

கவனி!

அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.

இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. ‘‘தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்” என்பது முன்னோர் கொள்கை.

உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று.

 நீ, நான் முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை -

 எல்லோரும் ஒரே உயிர். 

அந்த உயிரே தெய்வம். 

ஸ ஏகஹ . தஸ்ய வாசகஹ பிரணவ 

என்னும் ப்ரும்மஸூத்ர வாக்யத்தை எப்படி எனக்குப்புரியும்படி
அந்தக்காலத்துலேயே எழுதிவெச்சுட்டு போயிருக்காரு பாரதி.

வியப்பா இருக்குல்லே !!!

Friday, November 28, 2014

குடியிருக்கும் வீட்டிற்கு .....

எனது இனிய வலை நண்பர் திரு சசி ராமா அவர்கள் வலையிலே நான் படித்த செய்தி இது.

நீங்களும் படியுங்கள்.ரசியுங்கள்.

நண்பர் சசி ராமா அவர்களுக்கு எனது நன்றி. ஆன்மீகப் பதிவாளர் சசிராம் அவர்கள் வலைக்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்.



குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். வாரியார் சுவாமிகள்

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.
அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.
வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.
ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.
வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.

Tuesday, October 21, 2014

Thursday, October 2, 2014

வரம் வேண்டும் வாணி தேவியே

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே

வரம் வேண்டும் வாணி தேவியே எனக்கு.
வாலறிவன் என்பவர் யார்?
வித்தை என்றால் என்ன?
விற்பன்னன் யார்?
 என்ற அறிவை தருவாய்
 உன்னை வணங்குவதற்கு வேண்டிய
பணிவைத் தருவாய்.
நன்றி.http://www.rangoli-sans-dots.com/2012/10/lotus-rangolis-for-poojas.html

ART OF LIVING BHAJAN
SHARADE SARASWATHI.
இன்று இந்த வீடியோவை முழுவதும் பார்த்து 
சரஸ்வதி தேவியின் அருள் பெறவும். 



SARASWATHI MANTHRA

Monday, September 29, 2014

அமைதியே உருவாக, ஆனந்த வடிவாக


www.mykolam.blogspot.com

எந்த அன்னை அவள் எனக்கு அமைதியே உருவாக, ஆனந்த வடிவாக காட்சி அளிக்கிறாரோ
அவளை நான் வணங்குகிறேன்.
yaa devi sarva bhooteshu

Saturday, September 27, 2014

நவராத்திரி நடனம்

நவராத்திரி மூன்றாம்  நாள்.
கோலம் இட்டது திருமதி வாணி முத்துகிருஷ்ணன் அவர்கள்.
நன்றி.
lalitha sahasra nama vaibhavam.
லலிதாம்பிகையின் ஆயிரம் பெயர்கள்.
ஒவ்வொரு பெயருக்கும் ஒரு  தத்துவம்.
ஒரு லக்ஷணம். ஒரு வைபவம்.


 லலிதா சஹச்ர நாம வைபவம்
சஹஸ்ர நாம பெருமையை 
எடுத்துரைக்கும் 
திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு 
நன்றி சொல்வோம். 
அவர்கள் வலைக்குச் செல்லும் 
வாயில் இதுவே.
Madam Rajarajeswari
at
http://jaghamani.blogspot.com/2014/09/shri-lalitha-shakaranamam.html

ஆண்டாள் திருக்கோஷ்டி 
நவராத்திரி நடனம்
மும்பை,செம்பூர் அரங்கில்.



Friday, September 26, 2014

நந்தினி நந்தித மேதினி

இரண்டாவது நாள் அன்று நவராத்திரி வைபவம்.

navarathri kolam.

மலைவளர் காதலி என்னும் தலைப்பில் வலை நண்பர் ஆன்மீக பதிவாளர் திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள்

+பார்வதி இராமச்சந்திரன். 
அவர்களுக்கு நன்றி.

இவர்
தாயுமானவர் அடிகளார் பாடல்கள் எட்டினையும் அழகெனத் தொகுத்து தமது வலையில் இட்டு  இருக்கின்றனர். ஒவ்வொரு பாடலுக்கும் எளிய வகையில் பொருள் சொல்கிறார்கள்.

துர்கையாக, இலக்குமியாக, வாணியாக
நாம் போற்றி மகிழும் இந்த அன்னை
நாதாந்த ரூபிணி.
ஒலியின் இலக்கே  உருவாம் இவள்.
தாயுமானவர் அடிகளின் ஒவ்வொரு சொல்லும் ஒரு சிறப்பினை எடுத்துச் சொல்கிறது.

அங்கு எட்டி பார்ப்போம்.
இன்று, 
ஞான ஆனந்த ஒளியே எனத்
துவங்கும் முதல் பாடல் அற்புதமானது.

அந்த மலை வளர் காதலியின் எல்லையில்லாப் புகழினை நாமும் பாடுவோம்.

இங்கே சொடுக்குங்கள்.

ayi giri nandhini
அயி கிரி நந்தினி நந்தித மேதினி

Thursday, September 25, 2014

துர்கையின் நாமங்கள் மூன்று.

நவராத்திரி துவக்க முதல் மூன்று இரவுகள்.
துர்கா பரமேஸ்வரி வழிபாடு.

ஒன்பது தேவிகளின் நாமங்களையும் இட்டு
அவர்கள் சிறப்புகளையும், வழிபடுதலால்
மாந்தருக்கு கிடைத்திடும் அருள் பற்றியும்
விளக்கமாக
திரு துரை செல்வராஜ் அவர்கள்  தனது பதிவில் எடுத்துச் 
சொல்லி இருக்கிறார்கள் .
துர்கையின் நாமங்கள் மூன்று.
கூத்தானுர் நவராத்திரி சிறப்புகளும் இங்கே வர்ணிக்கப்பட்டு
உள்ளன.




கோலம் போட கற்றுக்கொள்வோம்.

Wednesday, September 24, 2014

நவராத்திரி முதல் நாளன்று



நவராத்திரி முதல் நாளன்று

திருமதி வாணி முத்துகிருஷ்ணன் அவர்கள் வலையில் போட்டு இருக்கும்

கோலத்தை நாம் கண்டு மகிழ்ந்தது போல எல்லோரும் மகிழ்ந்திட இங்கு அதை காபி அடிக்கிறோம்.

நன்றி: வாணி முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு. 
அவர்கள் பதிவுக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.




Monday, September 8, 2014

Remembering Dr.Bhupen Hazarika on his Birth Anniversay.


COURTESY: RUPAN SHARMA.

NOW A SONG FROM RUDALI 1993
THE GREAT BHUPEN HAZARIKA HAS LENT HIS VOICE TO THE GREAT SONG.FIRST IS THE VOICE OF LATHA AND FOLLOWS IS THE VOICE OF
THE GREAT BHUPEN HAZARIKA.



Saturday, September 6, 2014

THIRU ONAM GREETINGS



Our Hearty Greetings to all Our Kerala Friends throughout the world.
on the eve of this 
GREAT FESTIVAL
THIRU ONAM. 

Thursday, August 28, 2014

Sunday, August 17, 2014

தாராவா ? ராதா வா ?

கண்ணன் இன்று பிறக்கிறான்.



ந்ருத்தமாடு கிருஷ்ணா நடனமாடு கிருஷ்ணா
கோபாலா

தாரா என்றால் மூலம் எதுவோ அதில் இருந்து பெருகி வருவது. 
ராதா என்றாலோ அந்த மூலப்பொருளை நோக்கி செல்வது. 

அந்த மூலவன் கண்ணன், கிருஷ்ணன் வாசுதேவன், கிருஷ்ணன், கேசவன், பரந்தாமன்.
வெங்கடேசன், கோவிந்தன். 

அவன் புகழ் பாட இன்று ஒரு நாள். 


இந்த நாள் கோகுலாக்ஷ்டமி 

ராதா அந்த கண்ணனை நினைத்து நினைத்து உருகுகிறாள். 

ராதையின் கண்களில் இருந்து கசியும் நீர் தாரையாக பெருகும் காட்சி. 
அந்த கண்ணன் எப்போது வருவான் என்று ஏங்கி நிற்கும் காட்சி ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் ஒரு இலக்கிய வாதி கேட்கிறார்.
ராதா வா ? தாராவா ?


Dhara means that which comes from the source, while ‘Radha’ means that which goes back to the source. Lord Krishna is the source and Radha is the way or path to the source. Till you become Radha, till you return to the source, you cannot attain Lord Krishna. 

Sri Sri Ravi Shankar

ஆஹா ..

ராதா ராதா என்று கதறி கதறி
தாரை தாரையாக கண்ணீர் வடிக்கும் பக்தரின் கவலை தீர்க்க
அந்த கோவிந்தன் வருவான்.







அந்த கண்ணனைத் துதிக்க, அவன் புகழ் பாட
வலை உலக கவிதாயினி கவிநயா அவர்கள் பாடல் ஒன்றினை யான் பாட
அதை நீங்கள் இங்கு சென்று கேளுங்கள். 
please click on here:


Sunday, July 20, 2014

சுப்பு தாத்தாவுக்கு பிடிக்காத சமாசாரம்



சுப்பு தாத்தாவுக்கு பிடிக்காத சமாசாரம் பலது இங்கே இருக்கு.




நன்றி:
In true love, anyone becomes a poet or a singer. Likewise, Kavya who is drenched in love, dedicates a heart dissolving song to Humpty. A song that expresses her strong affection towards him. Experience a touch of love by Samjhawan; a song voiced by Alia Bhatt.

The film stars Varun Dhawan as Humpty Sharma, Alia Bhatt as Kavya Pratap Singh.

Directed by Shashank Khaitan


பிடிச்சது ஒன்னே ஒன்னு தான்
ப்ளீஸ் நம்புங்க சார்.
அலியா பட் அவங்களோட வாய்ஸ்.

இன்னாயா அப்படி குயில் கொஞ்சறது         !!!!!

எந்த பாவத்துக்கும் ஒரு பிராயச்சித்தம் அப்படின்னு ஒன்னு இருக்குல்ல.
காயத்ரி மந்திரம் நூறு தடவை சொன்னா எந்த பாவமும் பறந்து போயிடுமாம்.
அப்பாதுரை சார் நோஸ் பெட்டர். !!

என்னவோ போங்க.
இந்த அலியா பட் பாடிய பாட்டை கேட்ட, நோ நோ ...
அதிலே கூட கூட வந்த படத்தை ரஹ்ச்யமா ஆனா சுவாரசியமா பார்த்த பாவத்தை போக்கணும் இல்லையா..

அதுனாலே.. அதுனாலே...

இதை ஒரு மணி நேரம் கேட்டுட்டேன்.




Sunday, June 29, 2014

அத லவ்வு என்பாக.

பாரஸ்மானி என்னும் படத்துலே 1963 லே வந்தது.
முகேசும் லதா அம்மாவும் பாடுறாக.




முன்னுரை.


சென்னை அடுத்த  குப்பத்து  கடற்கரையில் தனியே உட்கார்ந்து யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம, ஆனா சத்தமாக பாடிக்கொண்டிருந்தேன்.  அங்கு என்னை எதிர்கொண்ட குடிமகன் ஒருவர் தனியே 
இன்னாய்யா பாடுறே பெரிசு !! நேக்கு புரியராப்போலே சொல்லு என்று  சீறியதன்  விளைவு இந்த மொழி பெயர்ப்பு. 

சென்னைத் தமிழில் ஒரு மொழி பெயர்ப்பு 
புலவர் இராமானுசம் மன்னிப்பாராக.

பொறுங்க . இதாங்க அவுக அதாங்க டாவ் அடிக்கரவக பெசிக்கராக. 
என்றேன்.

டாவ் அடிச்ச புராணம். 

திருட்டுத் தனமா சந்திச்சதெல்லாம்
தெரிஞ்சு போயிடும் சீக்கிரம் .
தெரிஞ்சு போயிடும்.
ஊர் சனம்
கூடி கூடி
என்ன சொல்வாக .. நம்ம
மக்காஸ் என்ன சொல்வாக ?

அத லவ்வு  என்பாக.

ஊர் முழுக்க சீக்கிரமே
வம்படிப்பாக.
வாய்க்கு வாய் பேசுவாக . அவுக
என்ன  சொல்வாக ?

அத லவ்வு  என்பாக .



உன்னைப் பத்தி
என் மனசு
எப்ப நினைச்சதோ
கால் நிக்கல்லே. கையும் ஓடல்லே
காசில்லாம  க்வார்ட்டர் குடிச்ச
போதை வந்துச்சே.

பேரம் பேசி
மனசைத்தந்து ஒன்
மனசை   வாங்கி வச்சேன்.

போகப்போக   சனங்களுக்குப்
புரிஞ்சு போயிடும்.
நம்ம சோலி புரிஞ்சு போயிடும். எங்க
மக்காஸ் என்ன சொல்வாக ?

அத  லவ்வு என்பாக.

இன்னா குத்தம் செஞ்சுட்டேன் நான்
உன்னை சந்திச்சேன்.
இன்னா பயம் இங்கன இருந்திச்சோ
அதுலே மாட்டிகிட்டேன்.

ஆசை பெருகிச்சு. தாகம் உண்டாச்சு.
மேகமாயிடுச்சு
மழையாய் பெஞ்சு
நெஞ்சு நனைச்சிச்சு .

நீயி நானு ஒன்னு விடாமே
உளறிப்போட்டோமே
விட்டுத் தள்ளு,
இந்த ஜொள்ளு லொள்ளு .
அந்தாண்ட
என்ன சொல்வாக - ஊர்
மக்காஸ் இன்னா சொல்வாக. ?

இத லவ்வு ன்னு சொல்வாக. 




चोरी-चोरी जो तुमसे मिली तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे
गली गली ये बात चली तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे 


तेरा ख्याल मेरे दिल में जब से आया है
क़दम स.म्भलते नहीं और नशा सा छाया है
क़रार खो के ही दिल ने क़रार पाया है
धीरे धीरे ये बात बढ़ी तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे...

कितनी ज़ालिम ये मुलाक़ात हुई
जिससे डरते थे वही बात हुई
बढ़ गई प्यास तमन्नाओं की
इस तरह प्यार की बरसात हुई
क़सम तुम्हारी मेरे दिल की बात कह डाली
छोड़ो छोड़ो ये दिल्लगी कि लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे...


Movie/Album: पारसमणि (1963)
Music By: लक्ष्मीकांत-प्यारेलाल
Lyrics By: फ़ारूक़ कैसर
Performed By: लता मंगेशकर, मुकेश



Monday, June 16, 2014

அப்பா என்று ஒரு அல்ப ஜீவன்

இன்னிக்கு அப்பா நாள். 

+Balu Sriram 
எழுதற மாதிரி பாசிடிவ் கண்ணோட்டம் தேவை தான். 
ஸோ , முதல் லே 

an inspirational song by Gary Valenciano
My dad




அப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கும் பாச உறவே தனி.

இங்கே.

அன்புள்ள அப்பா உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா !!







எல்லா பொண்ணுங்களுக்கும் அப்பா தான் HERO.
A tribute to father.






அப்பாவைக் கொண்டாடும் குழந்தைகளும் இன்று இருப்பது ஆங்காங்கே ஓரிரு பெற்றோர் செய்த பாக்கியம் புண்ணியம்.


+Chellappa Yagyaswamy மாதிரி புண்யாத்மாக்கள் இந்த காலகட்டத்துலே துர்லபம். 
  பொண்ணுங்க வூட்டுலேயும் ஒரு மனுசன் ஓஹோன்னு இருக்கணும் அப்படின்னா அவன் ஜாதகத்துலே   அஞ்சாம் இடம் வலுவா இருந்து குரு, சுக்ரன் , இல்லைன்னா, அட் லீஸ்ட் லக்னாதிபதி பார்வையாச்சும் 
  இருக்கணும். 
+Geetha Sambasivam 
   கீதா அம்மா நான் சொல்வதற்கு நோ சொன்னாலும் பரவாயில்லை

இன்னிக்கு எங்கே பார்த்தாலும் அப்பா அப்பா அப்பா அப்படின்னு அப்பா புராணம். ஹேமா, ராஜி, காவியக்கவி, தேன்மதுரத்தமிழ் கிரேஸ்  அரசி, அம்பாள் அடியாள் எல்லோருமே கச்சை கட்டிக்கிட்டு அப்பா அப்பா அப்படின்னு உருகறாங்க. 

அவங்களுக்கு அப்பாக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தாங்க்ஸ்  சொல்லித்தான் .ஆகணும். 

 திருமணமான பொண்ணுங்க, எல்லா விதமான கவலைகளையும் விட்டு விட்டு, ஈவன் .இன் லாஸ் பர்மிசன் கூட இல்லாம, புரந்த வூட்டை புகழ்  பாட இன்னிக்கு ஒரு நாள்  தான் கண்டிப்பா முடியும் . 

அப்பா இஸ் ரியலி கிரேட் யூ நோ. 
அப்படின்னு எதிர்த்த ப்ளாக் குட்டிப்பொண்ணு யூ.கே.ஜி. படிக்கிறது. சொல்லும்போது, நான் உன்மையிலேயே விக்கிச்சு போயிட்டேன். 

இங்கன, சீனா  அவங்க வலை போனேன். 

A tribute to dad
Suja's composition in the blog of VALAICHARAM EDITOR THIRU CHEENA.
SUBBU THATHA SINGS 

சுஜா அவர்கள் வியக்கத்த கவிதை ஒன்று எழுத அதை நான் உடனே பாட ,
உங்களுக்கு கேட்க பொறுமை இருக்குமா ? தெரியல்லையே !!!



இப்பாடலைக் கேட்டு அடுத்த நிமிடமே எனக்கு மடல் எழுதிய அன்பு சீனா அவர்கள் எழுதியது :

+அன்பின் சீனா .

சுப்பு தாத்தா @  சூரி சிவா 

நினைவுகளைச் சுமக்கின்ற காலத்தில் இளைப்பாற இது ஒர் நிழல். 
நிமிர்ந்து நடந்து நெஞ்சம கலங்காது செயல் புரிந்த ஓர் சிந்தனை.
உடல் தளர்ந்து ஓய்வு தேடும் காலத்து ஒர் இனிய கனவு.
இன் சொல்லும் இனிய நினைவும் மனத்திற்கு ஓர் நிம்மதி
பாவினைப் பாடலாய்த் தந்த தங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள் 

எதிர் பாராத நிலையில் மகிழ்வூட்டும் பாடல் 
மனம் மகிழ - துணவி - மகள் - மாப்பிள்ளை பேத்திகள் எனக் குடும்பமே மகிழ்ந்தது.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா:

என்னதான் சீனா சார் சொன்னாலும், தினம் தினம் கோவில்களிலும் பப்ளிக் பார்க் லேயும் ஆச்ரமங்களிலும் முதியோர் இல்லங்களிலும் நான் பார்க்கும் அப்பாக்கள் : பலரிடம் தேவையான பணம் இருக்கிறது. ஆ..ஆனாலும் ஆ..ஆதரவா பேச ஆள் இல்லையே !!


அண்மையில்
.......
ஒரு போஷ் முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கும் எனது நண்பர், 
 ஒரு 85 வயது முதியவர்  சொன்னார்.

பையன் நேரடியா அந்த ரெசிடென்சி ஆபிசுக்கு பணம் அனுப்பிச்சுடறான். 

எத்தனை ? 
நான் கேட்டு இருக்கவேண்டாம். கேட்டு விட்டேன். 

அட்வான்ஸ் 25 லட்சம். மாச மாசம் 19 ஆயிரம். 

அப்படியா என்று கேட்டேன். 

எல்லா வசதியும் இருக்கிறது என்றார்.

அப்படி என்ன வசதி ? வீட்டில் இல்லாதது, கிடைக்காதது ? 

என்று வெகுளித்தனமாக நான் கேட்க, 

காமன் கிச்சன், ப்ரேயர் ஹால், ஜிம், இன்டர்னட், ஸ்விம்மிங் பூல், அவசர வைத்திய வசதி  24 x7  எல்லாமே இருக்கு. உடம்புக்கு வந்த அடுத்த செகண்டே, அப்பாலோ விலேந்து ஆம்புலன்ஸ் வந்துடும். 

பலே என்றேன்.

என் கண்களை கூர்ந்து பார்த்த அவர், 
தொடர்ந்து, 

"என் பையன் எப்பவுமே ப்ரோ ஆக்டிவ் ." என்றார். 

புரியல்ல என்றேன். 

"அப்படியே எதுனாச்சும் நடந்துடுத்துன்னா, பையன் நம்ம சம்பிரதாயப்படி எல்லாம் செஞ்சுடலாம், தனக்காக வைட் பண்ண வேண்டாம் என்று எழுதிக்கொடுத்து விட்டு போயிருக்கான் ஸ்டேட்சுக்கு.  
ஹி வொர்க்ஸ் யூ நோ ரௌண்ட் த கிளாக். 
ஆல்வேஸ் பிளையிங் ப்ரம் ஈஸ்ட் டு வெஸ்ட் . "

அவர் சிரித்துக்கொண்டே தான் சொன்னார். எனக்குத் தான் பாவம் என்று தோன்றியது.  

பக்கத்திலே என் இல்லாள் இருந்தாள். லேசா என் இடுப்பை இடித்தாள். அம்பது வருசத்துக்கு முன்பு ரசித்து இருந்திருக்கலாம். இப்ப வலித்தது. 

"பேசினது போதும். சும்மா இருங்கோ " 
என்று அதற்கு அர்த்தம் என்று எனக்குப் புரியும். 

"எப்பவுமே ஒரு ஜெனரேஷன் அடுத்த ஜெனெரேஷன் நன்னா இருக்கணும் என்ற நினைப்பிலே தான் தன கார்யங்களைச் செய்யணும். 
அப்படி நம்ம  நினைக்கிற பட்சத்திலே நம்ம தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகணும்.  we should always adjust  "  

இது என் பார்யாள்.

your wife is smart  
என்றார்  .வந்த  நண்பர்

ஐ ஆம் ஒன்லி ப்ராக்மாடிக் என்று இவள் அதற்கு add பண்ணினாள் .



நான் மேலே ஆகாயத்தைப் பார்த்தேன். மேகங்கள் கலைந்து கலைந்து புது தினுசான உருவங்களை உண்டு பண்ணிக்கொண்டு இருந்தன. அந்தக் காலத்து வால்யூஸ்  எல்லாம் இந்தக்காலத்துக்கு பொருந்தாதுடா  தாண்டவக்கோனே..
என்று தூரத்தில் யாரோ சதிராட்டம் போடுவது போன்று பிரமை. 

நம்ம போயிட்டா இவளை யாரு பார்த்துப்பா அப்படின்னு யோசனை பண்ணினது , எத்தனை ஃபூலிஷ் என்று புத்தருக்கு வந்த ஞானம் போல் வந்தது. 


IN THE MODERN WORLD, IT IS THE APPAs WHO are perceived by most of the present day children just as 
ammas husband and 
who continue to suffer in silence 
அம்மாக்கள்  எப்பவுமே அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போயிடுவார்கள். 




அப்பா நீ எப்படி இருக்கே ?
அந்த ஒரு வாக்கியத்துக்காக ஏங்கும்
அப்பாமாருக்கு

நீ உன் கடமையைச் செஞ்சாச்சு இல்ல..

கம்னு கிட.

வந்தவருக்கு லேசா கண் கலங்கியதை பார்த்துவிட்டு, இவள் :

கண்ணைத் துடைச்சுக்கோங்கோ . அழக்கூடாது. இன்னிக்கு அப்பாக்கள் தினம். 
இங்கே இருந்தே  ஸ்கைப்பிலே  குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்கோ. 
ஆயுஷ்மான் பவ.

Thursday, May 8, 2014

அம்மா உன் அன்பு இதுவா ?




அம்மா உன் அன்பு இதுவா ?
amma amma

உனக்கென்ன கோபம் ?



Thursday, April 3, 2014

கண்கள் இல்லாதவர் மட்டும் படிக்க



இன்று ஒரு அமுதமான பதிவு படித்தேன். அது ஆங்கில பதிவு. 

ஒரு பெண்.
பிறவியிலேயே அவள் குருடு இல்லை. எனினும் அவளுக்கு விவரம் தெரிந்தது முதல் அவள் உலகத்தைக் கண்டதே இல்லை.

அவளுக்கு, தான் குருடு என்பதாலேயே
உலகத்தார் எல்லாவற்றையும் காண்கையிலே

தான் மட்டும் காண இயலவில்லையே என்ற ஆதங்கம்.


கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை என்பதை புரியாத வயது.

தனக்கு இல்லாதது பார்வை. அது மற்றவர்களுக்கு இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் தன்னைக் காண வருபவர் அத்தனை பேரையும் வெறுத்தாள் .

ஒருவன் மட்டும் விதி விலக்கு . அவனும் அவள் வயதை ஒத்தவன்.
அவன் பேசுவது இதமாக இருந்தது. அவன் அருகாமை அவள் ஆதங்கத்தைக் குறைத்தது.

அவளுக்கு வேண்டுவது எல்லாம் அவன் மூலம் கிடைத்தது. அவன் அவள் கண்களாய் இருந்தான்.

அவனும் அவளும் ஒன்றாய் இருந்ததைக் கண்ட சுற்றம் உற்றம் அவளிடம் அவனிடம் சொல்லியது.

நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

கண்டிப்பாக செய்துகொள்கிறேன்.  மன்னவனே மனதுக்கு ஏற்ற வனே அவன் தானே .!!
ஆனால் ஒன்று
திருமணம் எனக்கு பார்வை கிடைத்த பின். என்றாள் அவள்.

அதைக் கேட்ட அவன் உலகெங்கும் சுற்றினான். தன பொருள் எல்லாம் கொட்டினான். வாரி இறைத்தான்.

அவன் பார்க்காத மருத்துவர், வணங்காத தெய்வம் இல்லை.

ஒரு நாள் ஒரு நாள் ...

அவளுக்கு பார்வை கிட்டியது.

ஆஹா என மகிழ்ந்தாள்.

என்ன ஒரு உலகம் !  என்ன அழகான உலகம். !!
என்ன அழகான வாலிபர்கள் !

உலகத்தின் அழகில் லயித்தாள் .
எதிரில் உள்ள கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.
தான் எத்தனை அழகு !!
தன் அழகிலே தானே மயங்கினாள்.

அந்த சமயத்தில், பக்கத்தில் இருந்த யாரோ ஒருவர், அவள் என்றோ இட்ட
வாக்குறுதியை நினைவு கூர்ந்தார்கள்.

ஆமாம். எனக்குப் பார்வை கிடைத்தால், எனக்கு இதுகாறும் உறுதுணையாய் இருந்தவனைத்  திருமணம் செய்வேன் என்று வாக்கு தந்தேன்.

அவன் எங்கே ?

இதோ வந்து விடுவான் என்றார் ஒருவர் .

அவன் வந்தான்.

இவள் திடுக்கிட்டாள்.

இவனையா திருமணம் செய்துகொள்வது ?
இவன் அழகில்லையே ?
எனக்கு நிகரில்லையே..!!

தன்னால் முடியாது என்று தீர்மானமாக நினைத்தாள்.
சொல்லிவிட்டாள்.
ஐ ஆம் சாரி.

அவன் சொன்னான்.

சரி. .
நீ கண்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்.

சொல்லி மறைந்தான்.

**************************************************************************
***********************************************************************
********************************************************************

.
கருத்து:
ஆவிஸ்  விச்வனாநாதன்.
http://avisviswanathan.blogspot.in/2014/04/when-you-give-give-without-expectations.html

Anything you gave, bounces back to you. What we gave, comes back to us. - Sri Sri Ravi Shankar
But not necessarily from the same person. 

Sunday, March 23, 2014

மணிராஜ்: மாங்குயிலே .. பூங்குயிலே..

(மேலே கிளிக்குங்கள். கிளி சத்தம் குயிலு சத்தம் கேளுங்க.)


என்னங்க இன்னிக்கு இந்த பாட்ட கேட்டு கிட்டு சொக்கி போயி இருக்கீக ?

அடியே... இந்த குருவி குயிலு பற்றி ராஜேஸ்வரி மேடம் இன்னிக்கு இன்னா அழகா ஒரு பதிவு போட்டு இருக்காக.

அப்படியே பிரமிச்சு போயி இருக்கேனாக்கும்.






Christina Marie Vs Nathan Amzi: Battle Performance - The Voice UK 2014 -...

Sunday, February 23, 2014

கணவன் மார்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி. சீரியல் லே முதல் எபிசொட்.

ஒரு புலிக்குக் கூட  நன்றாக பயிற்சி கொடுத்து விடலாம்.  நமது சொல்படி செய்ய வைத்து விடலாம்.

ஆனால் இந்த கணவன் மார்களுக்கு  டிரைனிங்கா ... ??ஊஹூம் ...
சுத்தமாக நம்ம வழிக்கு கொண்டு வர முடியாது என்று அலுத்துக் கொண்டாள் எதித்த வீட்டு எச்சுமி.

என்ன ஏன் அப்படி சொல்லிபோட்டே..
என்று இவள் கேட்க,
 இந்தாங்க,  முதல் லே இந்த வீடியோவை பாருங்க என்று டி.வி.டி.லே போட்டு காண்பித்தாள் 

சரிதான். நான் கொஞ்சம் சிரமபட்டால் புலியைக்கூட ட்ரைன் செய்து விடலாம். போல இருக்கே. என்றாள் இவள்.

ஆனால், ஹஸ்பன்ட் பால்ஸ் இன் எ டிப்பரண்ட் காடிகரி. இல்லையா..
 Husband falls in a different category 
அவரை டைகர் மாதிரி ட்ரீட் பண்ணி டிரைன் பண்ண முடியாது. இது எச்சுமி. 

 அப்படியா. ? ஹஸ்பண்டை டிரைன் செய்வதற்கு ரொம்ப கஷ்டபடுகிறீர்கள் என்று தோன்றுகிறது.

உங்களுக்குத் தெரியாதா என்று ஆரம்பித்த எச்சுமி , 

அடுத்த வீட்டுலே எதிர்த்த வீட்டுலே என்ன நடக்குரதுன்னெ கூட தெரியாம அப்படி என்ன தான் டி.வி. பார்ப்பீர்களோ தெரியல்ல  .

எனக் குறைப்பட்டுக் கொண்டாள் .

நானா ? டி.வி. லே காலைலே காபி சாப்பிட்டுக்கொண்டே வேளுக்குடி கேட்பேன். பத்துலெந்து பதினிரண்டு ஸ்டார் மூவீஸ். இல்லேன்னா ஏ  எக்ஸ். என். 

குக்கர்லே வைக்கறது அரிசி கழஞ்சு கொட்டறது, கறிகாய் நறுக்கி அதுலே வைக்கறது எல்லாமே  யாரு ?  அவரா ? நீங்களா ? இல்ல பிப்டி பிப்டி ஆ ?


நீங்க கேட்கிறதை பார்த்தா, ஏதோ நான் ஜாலியா இருக்கிற மாதிரி, உங்களுக்கு தோன்றது. நான் சும்மா ஒன்னும் உட்கார்ந்து இருக்கமாட்டேன். எனக்கு மட்டும் பொறுப்பு இல்லையா என்ன ?

அதானே பார்த்தேன்.

நடு நடுவிலே உப்பு புளி சாம்பார் பொடி எல்லாம் கரெக்டா இருக்கா அப்படின்னு போயி, செக் பண்ணிடுவேன். 

அப்படியா.

1 மணிக்கு லஞ்ச் வரும்.

 என்ன வருமா ?

ஆமாம். ரெடின்னு சொன்னவுடனே தான் போவேன் டேபிளுக்கு.

லஞ்ச் சாப்பிடுவீங்க..அப்பறம் ?

சாப்பிட்டபின், ஒரு தூக்கம் போட்டாத்தான், ஈவினிங் வாக் பிரிஸ்க் ஆ போக முடியும் இல்லையா.

ஸோ நைஸ் டு ஹியர். நீங்க மேன் மெனெஜ்மெண்டிலெ எம்.பி. ஏயா !!

அதெல்லாம் ஒன்னும் இல்ல. இருந்தாலும் எனக்கும் லேபர் ரூல்ஸ் எல்லாம் நன்னாவே தெரியும்.

என்ன ?

அட் நோ டயம்,  அஞ்சரை மணி நேரத்திற்கு மேலே தொடர்ந்து ஒர்க் பண்ண கூடாது என்று ஹஸ்பன்ட் கிட்டே ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லி இருக்கேன்.இந்த டொமஸ்டிக் வயலன்ஸ் மாதிரி எந்த குத்தமும் வந்துடக் கூடாது இல்லையா ??

ஹெச் ஆர் மேனேஜர் அவர் இருந்தாரா நீங்களா ?

அவர்தான். ஆனா அந்த ஹெச்.ஆர். வேற ..

இது ?

ஹௌஸ் ரிகன்ஸ்டர்க்சன் பிராசஸ்.

சாயந்திரம் ?

வாக்கிங் போவேன். அதுக்கு முன்னாடி ஸ்ட்ராங் டீ போட்டுத் தருவார் பாருங்க.. சுகமோ சுகம்.

அவர் கூட வருவாரா??




சில நாளைக்கு கூட வருவார். இல்லேன்னா, அடுத்த நாள் என்னென்ன வேணும் அப்படின்னு கேட்டுகிட்டு சமத்தா மார்கெட்டுக்கு போயி வாங்கிண்டு வருவார்.  என்ன அவருக்கு பிடிக்குமோ அத அந்த பீல்ட் அவர் பார்த்துக்கலாம் அப்படின்னு அலௌ பண்ணிட்டேன். 

அப்ப அவரு அந்த நேரத்துலே அவர்  ஜோலியை பார்த்துக்கலாம் . இல்லையா...

எஸ். ஹீ வில் பி ஆன் ஹிஸ் ஓன் . .நோ ப்ராப்ளம். ஐ கிவ் ஹிம் புல் ப்ரீடம்.

பின்னே ?

அப்பறம் சாயந்திரம் தான் ஆறு மணிக்கு ராஜ் நியூஸ் , பின்னே, மண் வாசனை , கருத்தம்மா, தெய்வம் தந்த வீடு, ...

அதுக்கே 8 ஆகி விடுமே...

ஆமாம். நடு விலே அந்த ad  வர நேரம் பார்த்து குக்கர் லே திரும்பவும் எல்லாத்தையும் சுட வச்சுடுவேன்.  அது என்னோட ஜாப்,     ரிலேஷன் ஷிப் லே ஒரு    ஈக்விடி வேணும் இல்லையா.
சில நாளைக்கு மட்டும். இவரு பார்த்து பாரு.

அப்பறம் ?

சரவணன் மீனாட்சி, சூப்பர் சிங்கர் ...

அப்படியா...

அந்த டயத்திலே தட்டுலே இவர் எல்லாத்தையும் போட்டு கொண்டு வந்து வச்சுட்டு போயிடுவார். நான் போட்டதை , இருக்கறதை, வாயைத் திறக்காம, சூப்பர் சிங்கர் முடியறதுக்குள்ளே சாப்பிட்டு விட்டு , நானே என் தட்டை கழுவி வச்சுடுவேன். இவருக்கு ஒரு தொந்தரவு கொடுக்கக்கூட மனசு வராது. 

பிரமாதம்...என்னதான் இருந்தாலும் உங்க மனசு தங்கம் தான். அப்பறம்..?

ஆபீஸ்  சீரியல் வந்து விடும்.

கார்த்திக், ராஜி  காதல் சண்டை படு ஜோர் இல்ல.??

 ஆனா விஷ்ணு லக்ஷ்மி தான் செம நடிப்பு, போதாதா !! நடுவிலே அந்த காமெடி கூட்டம் வேற.  சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப் போயிடும்.

முடியறதுக்கு 11 ஆகிவிடுமே...

ஆமாம். ஆமாம்.  கண்ணை சுழற்றிண்டு வரும். அப்ப இவர் நான் கொஞ்சம் பி.பி.சி. பார்க்கரேனே அப்படின்னு கேட்பார்.  சரின்னு நானும் சொல்லிடுவேன்.

அப்படியா..

ஆமாம். காலைலேந்து கஷ்டப்படறார். கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னிண்டாத் தானே அடுத்த நாளைக்கு பிரிஸ்கா இருக்கலாம்.  காலைலே  6 1/2 க்கே இவருக்கு காபி வேணும். தானே போட்டுப்பார். எனக்கும் கலந்து வைப்பார்.

சரிதான்.  அப்ப  அவருக்கு நாள் முழுக்கத்தான்  வேலை அப்படின்னு சொல்லுங்க..

வீட்டிலே இருக்கும் போதுதானே   வேலை.
 நான் வாக்கிங் போனா ஒன்னும் இல்லையே.. நீங்க அந்த பாயிண்ட் பார்க்கலையா ?

ஆமாம். 

நான் தான் கரெக்டா டிரைன் பண்ணி வச்சுருக்கேனே .. அப்பறம் என்ன கஷ்டம் ?

எப்படி ? எனக்கு  இந்த டிரைனிங் எப்படி ன்னு கொஞ்சம் சொல்லி தரக்கூடாதா...

நான் சொல்லித் தரதை விட நீங்களே இந்த வீடியோவை பார்த்து கத்துக்கலாம்.

அவரையும் பார்க்கச் சொல்லணும். பெருமாள் தான் அவருக்கு நல்ல புத்தி கொடுக்கணும்.

கண்டிப்பா கொடுப்பார். ஆனா ஒன்னு மட்டும் நினைவிலே வச்சுக்கணும்.
ச்  ச்  அப்படின்னு தொட்டதுக்கெல்லாம் இச் கொட்டுவார். கண்டுக்க கூடாது.

சரி. 

என்ன ,,,  எல்லா ஹஸ்பன்ட் ம்  முதல் ஒரு வாரத்துக்கு கஷ்டம் பீல் பண்ணுவாங்க  .அதைப்பார்த்து நானே பாத்துக்கறேன் என்று மட்டும் சொல்லி விடக்கூடாது. உங்க இலட்சியத்திலே நீங்க குறியா இருக்கணும்.

சரி. 

யூ ஷுட் பி லயன் ஹாரட்டட் .you should be lion-hearted

புரியல்ல. 

 நம்ம நெஞ்சத்த  கொஞ்ச நாளைக்கு அந்த கர்பக்ரஹத்துலே இருக்கிற ஈஸ்வரன் மாதிரி கல்லா வச்சுக்கணும் அப்படின்னு சொல்றேன்.

சரி. 

கொஞ்சம் கொஞ்சமா, எல்லாமே ஒரு வாரத்துலே  அட்ஜஸ்ட் ஆயிடும். அப்பறம் அதுவே ஜாப் ஆயிடுத்துன்னா நம்ம விட நம்ம கட்டிக்கிட்டவர் நன்னாவே சமைப்பார்.

ஆஹா. இதத்தான், இதத்தான் நானும் எதிர்பார்த்தேன்.

இது கணவன் மார்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி. சீரியல் லே முதல் எபிசொட்.

நாளைக்கே இந்த வீடியோவைப் பார்த்து விடறேன். ஆனா கொஞ்சம் விட்டுப் பிடிக்கனுமோ ?



விடாதே பிடி.
தும்பை விட்டுட்டு வாலை பிடிக்கிறது வேஸ்ட் ஆப் டைம்.

ரொம்ப தாங்க்ஸ் மாமி.


Monday, February 10, 2014

அஞ்சு .கண்டத்திலேயும் அம்மா பாட்டு அதே தான் !!

நான் பாடுறேன், நீ தூங்குடா கண்ணா என்று ஏதோ ஒரு மொழிலே
தன் செல்லக்குழந்தையை பாடி தூங்கவைக்க
எல்லாம்  அம்மாவும் நினைக்கிறாங்க . ஆனா எல்லாம் தூங்குதா என்ன !!




இந்த குழந்தை மனதில் என்னவெல்லாம் தோன்றும் ?

சிரிக்கிறது என்றால் ரோஜா வருமோ ?
அழறது என்றால் சிங்கம் வருமோ ??

அம்மாவின் பாட்டுக்கு என்னவா எக்ஸ்ப்ரெஷன் தருது !!  அதன் ஒவ்வொரு சினுங்கல் நம்மை என்னவெல்லாம் செய்கிறது !!

அத்தை அடிச்சாளோ அமுதூட்டும் கையாலே
பாட்டி அடிச்சாளோ பால் வார்க்கும் கையாலே

அம்மாக்கள்  தங்கத் தமிழ் நாட்டிலே பாடுகிறோம்.

ஆராரோ ஆரியராரோ அம்புலிக்கு நீ 
அப்பாக்களும்  அப்பப்ப பாடுகிறோம் இல்லையா ?

அன்னிக்கு பேரனை தூங்க வைக்கும் பொறுப்பு   டர்ன் சட்டப்படி தர்மப்படி  என்னோடது.

அதனாலே பேரனை தூளி லே போட்டு,  தயார் செய்யும்பொழுது

புதுசா எதுன்னாச்சும் பாடுங்க
அப்படின்னு கிழவியோட கமாண்ட் வேற.
பெட்டர் ஹாப் கொடுமை இந்த 73 வயசுலேயுமா !!
தாங்கலேடா சாமி.

அத அப்பறம் பார்ப்போம்.
இப்ப குழந்தை தூங்கணும் . நம்ம பொறுப்பு இல்லையா..

இங்கே அங்கே எங்கேயும்
இப்புவியில் இருக்கும் அஞ்சு  கண்டங்களிலும்
அன்னை தன் செல்லக் குழந்தையை என்ன பாட்டு பாடி
தூங்க செய்கிறாள் ?
அது மாதிரி ஒரு டிராக் லே போவோம் .

கூகிள் ஆண்டவா துணை என்று பிரார்த்திக்கொண்டு
முதலில் ஜப்பானுக்கு சென்றேன்.

lullaby
ஜப்பானில் டாகேடா .

வேலைக்கு இருக்கும் ஒரு சிறிய பெண் எஜமானியின் குழந்தையை முதுகில் சுமந்தபடி வேலை செய்கிறாள். தன் மனக் கவலைகள் எல்லாத்தையும் இந்த கவிதையில் கொட்டித் தீர்க்கிறாள்.



ஆபிரிக்கா என்றாலே எனக்கு ட்ரம்ஸ் தான் நினைவுக்கு வரும்.
அங்கே ஒரு கிளாசிகல் சௌன்ட் இருக்கும் என்பதை என்னால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.
ஆப்பிரிக்கா நாட்டில் என்ன மாதிரி ஒரு வாத்சல்யம். !!
african lullaby




பிரெஞ்சு நாட்டில் பாரீசில் ஒரு அம்மாவுக்காக அதன் பாட்டி பாடுகிறாள்.
இந்த அம்மாக்களுக்கு மட்டும் அவங்களோட அம்மா இருந்துவிட்டால் கவலையே இல்லை. குழந்தையைப் பத்தி தொண்ணூறு பங்கு அவங்க கிட்ட கொடுத்துட்டு, அப்பாடி ரொம்ப டயர்டு என்று படுத்துக்கொண்டு விடுவார்கள். 
பிரான்ஸ் லேயும் அதே கதி தான். 
பாவம் பாட்டி மா.


 +Ananya Mahadevan        

  நான் சொல்றதை  அனன்யா மேடம் ஒத்துப்பாங்களா அப்படின்னு பொருத்துதான் பார்க்கணும். பழனி லேந்து வீபூதி வந்திருக்கு அப்படின்னு நீங்க எழுதியது படிச்சேன். சமயத்திலே வந்திருக்கே. .கொஞ்சம் வீபுதி தாங்க மேடம். குழந்தைக்கு இட்டு விடறேன். முருகா காப்பாத்து. இன்னிக்காவது நேரத்துக்கு தூங்க வை. 


French Lullaby பாடிப் பார்ப்போம்.

LET US RELAXA



ஊஹீம். நத்திங் டூஇங்க்
எனக்கு வேற பாட்டு பாடு அப்படிங்கறது செல்லம்.
SOUTH AMERICAN LULLABY இருக்காமே. அதை பாடுங்க என்று சொல்றா  கிழவி.

மெக்சிகோ நாட்டில் தாலாட்டு எப்படி அதையும் கேட்போம்.


Arriba del cielo hicieron tamales
Arriba del cielo hicieron tamales
Lo supo San Pedro y mandó a traer los reales
Lo supo San Pedro y mandó a traer los reales

A la rorrun niño a la rorron cha
A la rorrun niño a la rorron cha
Duermete niñito de mi corazón
Duermete niñito de mi corazón

Duermete niñito que tengo que hacer
Duermete niñito que tengo que hacer
Lavar tus pañales, y ponerme a coser
Lavar tus pañales, y ponerme a coser

A la rorrun niño a la rorron cha
A la rorrun niño a la rorron cha
Duermete niñito de mi corazón
Duermete niñito de mi corazón

ஏங்க  பையன் ஊருக்கு போய்விட்டு வந்தப்போ நம்ம ஒரு அரபியன் தாலாட்டு கேட்டோமே நினைவு இருக்கா ?

அதை பாடச் சொல்றியா.  சரி பாடறேன் என்று ஆரம்பித்தேன்.

ARABIAN LULLABY அரபு நாட்டில் தாலாட்டு. 



எனக்கு தூக்கம் அசத்துகிறது. பேரன் தூங்கவில்லை.
இந்த லல்லபி பாடுவோம். அந்த லல்லபி பாடுவோம் அப்படின்னு
பாடினால்
பாருடா...
இந்த கிழவி தான் தூங்கறா ..என்னமா குறட்டை விட்டுண்டு.


கடைசியா இத டிரை பண்ணுவோம்.
INDIAN LULLABY
ஓமனத் திங்கள் கடவோ .. அந்த
சின்னக் குயில் சித்ரா குரலில் என்ன மாயமோ !!




பாம்பே ஜெயஸ்ரீ
மன்னுபுகழ் கோசலை தன மணி வயிறு வாய்த்தவனே 

தாமரைக் கண்ணனாம் உரங்கீனம் சித்ரா பாடுவாளே அது ?

என்ன பாட்டு பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை.

அடுத்தது என்ன செய்யறது புரியல்ல.
மணி ஆல்ரெடி 1 ஆயிடுத்து.
இன்னும் 4 மணி நேரம் தான் இருக்கு.
எழுந்து கிழவிக்கு காபி போட்டு தரனும்.

பேராண்டி, !!!
என் செல்லப்பேரன் கடைசியில் இந்தப்பாட்டுக்குத்தான் தூங்குவானோ !!
உங்க ஆத்தாவுக்கு  அந்தக் காலத்துலே இதாண்டா பாடினேன். என்று துவங்கினேன்.




ஊஹூம்.  தூளி லே எழுந்துண்டு உட்கார்ந்து
கண் கொட்ட கொட்ட இன்னும்.. என்னை பார்த்து என்ன சிரிப்பு !!
எப்போடா நீ தூங்கப்போறே !!

அத்தை அடிச்சாரோ !! என்று பாட ஆரம்பித்தேன்.

  'இன்னும் நீ பாடினேன்னா நானே உன்னை அடிச்சுடுவேன். 
நீ படு.. எனக்குத் தூக்கம் வரும்போது தூங்குவேன்.            '


அஞ்சு .கண்டத்திலேயும் அம்மா பாட்டு தாலாட்டு அதே பாட்டு தான்

படும் பாடும் அதே தான்.

நீங்க படுங்க.. அவன் தூக்கம் வந்தா தானா தூங்குவான் என்கிறாள் கிழவி.

அத 10 மணிக்கே சொல்லி இருக்கலாம் இல்லையா...




Friday, February 7, 2014

சைலென்ட் மோடில் மனசை வச்சுக்கய்யா


மௌனம் என்பதை சொல்ல ஒவ்வொரு மொழியிலும் அழகான வார்த்தைகள்.
நெஞ்சம்  மௌனம். ஆயினும் பேசுகிறது.

நெஞ்சம் பேசியதை நா உரைத்தது எப்படி !!

முதலில் மலையாள மொழியில்




நம் தாய் மொழியாம் தமிழில்








இந்தியில்
நிலவு, வானம் , சூரியன், சந்திரன் ,நக்ஷத்திரம் எல்லாமே மௌனம் ஆனதே
என் மனம் மட்டும் ஆக வில்லையே...
வருந்துவது படத்தில் தேவ ஆனந்த்
பின் அணியில் பாடுவது எஸ்.டி. பரமன்.
ALL HAVE GONE SILENT
 .BUT NOT MY MIND. SINGS S.D.BURMAN.






ஆங்கிலத்தில்
the sound of silence



அதெல்லாம் இருக்கட்டும்.

நெஞ்சில் மௌனத்தை எப்படி கொணர்வது ?




மனதிற்குள் இருக்கும் செல்லை சைலென்ட் மோடில் போட்டு விடுங்கள்.

PRACTISE SILENCE AS AN ART TO CONSERVE YOUR ENERGY.

Tuesday, January 21, 2014

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன





இன்னிக்கு கல்யாண சாப்பாடு, 


காரட் பொரியல் , கதம்ப சாம்பார், சௌ சௌ கூட்டு, ஆப்பிள் பச்சடி, சேமியா பாயசம், மெது வடை,, அப்பளம், மைசூர் ரசம், பொடடோ சிப்ஸ், சோன் பப்டி, எல்லாமே 

கிழவி , உண்ட மயக்கம் ரொம்ப இருக்குது போல. கொஞ்சம் தூங்கிட்டு வரேன் என்று கிளம்பினாள் 

என்ன அவசரம் !!

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன 

என்று பாட ஆரம்பித்தேன். 

என்ன இது ? எழுபத்தி இரண்டு முடிஞ்சுடுத்து. 22 ஞாபகம் வருதோ ??
என்று சிரித்தாள் கிழவி. 

இல்லேடி, இந்த சரத் பாடினதை சொன்னேன். 




காலிங் பெல் அடிக்குது.  டிரிங்....டிரிங்.....


ஹாப்பி வெட்டிங் டே  

அப்படின்னு பாடிக்கினெ
தாத்தா பாட்டி 46வது திருமண நாள் அப்படின்னு நினைவு வச்சுக்கிட்டு,
சோனியா வும் சரத் சந்தோஷும்  வர்றாங்க.



தாத்தா பாட்டி, 

நாங்க உங்களுக்காக ஒரு பாட்டு பாடப்போறோம் 



அடடா // இன்னிக்கு ஒரு கச்சேரி வேறயா ...

ஜமாயுங்க. என்றேன் நான். 


அதுக்கு முன்னாடி இந்த ஐஸ் சாக்கலேட் கேக் சாப்பிடுங்க என்றேன்.






sonia and
sarath santhosh.
together
தில்லானா தில்லானா  




சரத், சோனியா. உள்ளிட்ட 

சூப்பர் சிங்கர் 4 லே தேர்ந்து எடுக்கப்பட்ட பைனலிஸ்ட் ஐந்து பேருக்கும்  


எங்களது இதயங்கனிந்த பாராட்டுக்கள்.  நல வாழ்த்துக்கள்


திவாகர் , பார்வதி, சுபான், சரத், சோனியா 

இவர்கள் எல்லோருமே 

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இசை வானில் 

மின்னப்போகும் 

நட்சத்திரங்கள்


ஆனா இதிலே பைனல்சிலெ யார் பர்ஸ்ட் வருவாங்க..யார் செகண்ட் ? 

எல்லாமே மக்கள் கையிலே தான் இருக்கு. 

இருந்தாலும் ...அப்படின்னு வூட்டு கிழவி  இழுக்குது. 


நான் சொன்னேன்;

பைனல்ஸ் லே 
என்னோட  சாய்ஸ். 


சோனியா, பார்வதி, சரத் .  

நோ. நோ. அப்படின்னு சத்தம் போட்டாள்  கிழவி.  

பின்னே எப்படி? உன்னோட  சாய்ஸ் என்ன ?  என்றேன் நான்  

சரத், பார்வதி, சோனியா. 

இல்லேன்னா 

சரத், பார்வதி, சுபான். 

என்றாள் இவள். 

அப்ப திவாகர் ?

அவரு தனி உலகம் ..  அதுக்கு யாருமே நிகர் இல்லைங்க.

அன்னி தேதி சி.எஸ்.ஜெயராமன், பி.யூ.சின்னப்பா  போல குரலுங்க... அதுக்கு ஒரு 
ஸ்பெசலா அவார்டு தரனுங்க.  ரஹ்மான் சார் மனசு வச்சார் அப்படின்னா இவரு எங்கேயோ போயிடுவாரு.  இவரோட உழைப்புக்காகவே இவருக்கு ஒரு தனி ரிகக்னிஷன் தரனும். 

அப்ப சோனியா என்ன ஆறது ? என்று இறைந்தேன் நான். 

சோனியாவுக்கு நோ சான்ஸ். என்று உள்ளே நுழைந்தார் என் நண்பர் வெங்கடராமன்.

அவர் சொல்ற சோனியா வேற சோனியா என்று கிசு கிசுத்தாள் வூட்டுக் கிழவி.

என்ன சண்டை இன்னிக்கு என்று உள்ளே நுழைந்தார் வெங்கடராமன், என் பிரண்டு. 

நீங்க சொல்லுங்க நியாயத்தை என்று ஆரம்பித்தேன். 
ஆதியோட அந்தமா அரை மணி நேரத்திற்குள்ளாகவே என் பிரசங்கத்தை .
முடித்தேன்.என் வாதத்தை.

நோ நோ.  இதெல்லாமே இல்லை. என்றார் காலனி பிரண்டு. 

பின்னே எப்படி ?

பேப்பர் லே வேற இல்ல போட்டு இருக்கு என்று ஹா ஹா என்று சிரித்தார். 

என்ன ?

நாடு முழுக்க சர்வே பண்ணினதிலே 
இன்னிக்கு தேதியிலே 

மோடி, கஜ்ரிவால், சோனியா தான். 

அப்படித்தான் இல்லையா 
எல்லா டி.வி. யும் சொல்லுது. 
முக்கியமா ஐ.பி. என். டி.வி. சொல்லுது. 

சரிதான். 
ஆனா இது நமக்கு வேணாம் ங்க  ...

நம்ம இந்த இசை உலகத்துலேயே இருந்துடுவோம்.