Pages

Friday, October 25, 2013

ரூபி வைச்ச மோதிரமா ? தீபாவளிக்கா ? .

ரூபி வைச்ச மோதிரமா ? தீபாவளிக்கா ? 
ரூபி மோதிரம் 

 ஒரு காரட் ரூபா 12000 சொல்றான். பார்க்கறேன். ஆனா அதற்கு முன்னாடி இதெல்லாம் ஓ கே யா சொல்லு அப்படின்னு கிழவி கிட்டே கேட்டேன். 



தீபாவளிக்கு ஆல்டர்நேட்டா வீட்டுக்காரிக்கு பரிசா

என்னென்ன தருவது என்று யோசித்தேன்.

ஒன்றில்லை. அஞ்சு தரலாம்.

ஒவ்வொன்றா காண்பிச்சேன்.

ஒரு அழகான அற்புதமான காட்சி, ஓவியம்.
 தலைப்பு : GOD'S CANVAS
இந்த ஓவியத்தை கண்ட இடம்: இங்கே: ரூபன் சர்மா வலைக்கு சென்று அற்புத நிகழ்வுகளை ஓவியமாக கண்டு களியுங்கள்.

ஒரு கோலம். கண்ட இடம் : இங்கே:
திருமதி வாணி முத்துகிருஷ்ணனின் அற்புத கோலங்களை தினமும் கண்டு ரசியுங்கள்.


ஒரு புன்னகை. இங்கே: ஆயிரம் குழந்தைகளின் புன்னகை இங்கே . உங்கள் செல்வக்குழந்தையின் புன்னகையையும் நீங்கள் இணைக்கலாம்.



ஒரு கப் பாயசம். பாலாட பாயசம்.

 பத்து லட்சம் பேர் இந்த பாயசம் வெப் சைட்டுக்கு வந்து பாயசம் சாப்பிட்டு இருக்கிறார்கள்.
அதை செய்முறை விளக்கம் இங்கே:   

இல்லை, எனக்கு ஜாங்கிரி   தான் வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களுக்கு
எப்படி செய்யவேண்டும் என்றால் இங்கே செல்லுங்கள். குகன் கிச்சன்
சாப்பிட்ட திருப்தி வந்தது.

பின் என்ன ?

ஒரு பா. அதாவது கவிதை.  ஆரண்ய நிவாஸ் திரு இராம மூர்த்தி எழுதியது. எங்க ஊர்காரர்.  இவரும் என்னைப்போல் ஒரு கர்நாடாக சங்கீத பிரியர். பஜனை பாடல்கள் இவரது வலையில். இவரது வதனப் புத்தகம் ரசிக்க லாம். ரசிக்க வேண்டிய பலர் இவரது நண்பர்கள். 

வெண்பாலிட்ட அன்ன அடிசிலில் கொஞ்சம் 
நறு நெய் பெய்து முந்திரியும் மேல் தூவி,
குறு மிளகைக் கூட சேர்த்தாலும் ஒரு
வெண்பாவிற்கீடாமோ அது?


சுவையான வெண் பொங்கலை சுவைத்துக்கொண்டே ..
ஒரு பாட்டு.


பிரணயம் என்னும் படத்தில் ஷ்ரேயா கோஷால் பாடுகிறார். ஜெயச்சந்திரன் அவர்கள் இசை அமைத்தவர்.




நான் ஸ்ரேயா கோஷால் பாடுவதைக் கேட்கவேண்டும் என்று விரும்புவர் இங்கே செல்லலாம்.

குயில் நன்றாக பாடவில்லை என்று குரல் கேட்டபின் கடவுள் அனுப்பிய
இசைக்குயிலுக்கு விருதுகள் வாங்கித் தந்த கானங்கள் இவை.





இத்தனையும் நமக்கு அளித்த பெருமாள். அந்தப் பரமனை தரிசிக்க நீங்கள்
ஸ்ரீ ரங்கம் போகவெண்ண்டாம். இங்கே தினம் போங்க. ராஜேஸ்வரி அம்மா வலை.

செல்லவேண்டிய வழி. இங்கே:

தீபாவளித் திரு நாள் அன்று பெருமாளை தரிசிப்போம்.


நன்னா இருக்கு லச்சணம்.
ஒரு கல்லு மோதிரம் வாங்கி தாங்க அப்படின்னா சொர்க்கத்துக்கு வழி காட்டரீக...

No. No. No. No.  ஹூம்...ஹூம்..

எனக்கு ரூபி வச்ச மோதிரம் தான் வேணும்  இதப்பாருங்க.


அப்படின்னு அடம் பிடிக்கும் வீட்டுக்காரிக்கு என்ன சொல்லி சமாதானம் செய்யலாம் ?

அட்வைசஸ் வெல்கம். 

1 comment:

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!