Pages

Friday, October 25, 2013

ரூபி வைச்ச மோதிரமா ? தீபாவளிக்கா ? .

ரூபி வைச்ச மோதிரமா ? தீபாவளிக்கா ? 
ரூபி மோதிரம் 

 ஒரு காரட் ரூபா 12000 சொல்றான். பார்க்கறேன். ஆனா அதற்கு முன்னாடி இதெல்லாம் ஓ கே யா சொல்லு அப்படின்னு கிழவி கிட்டே கேட்டேன். 



தீபாவளிக்கு ஆல்டர்நேட்டா வீட்டுக்காரிக்கு பரிசா

என்னென்ன தருவது என்று யோசித்தேன்.

ஒன்றில்லை. அஞ்சு தரலாம்.

ஒவ்வொன்றா காண்பிச்சேன்.

ஒரு அழகான அற்புதமான காட்சி, ஓவியம்.
 தலைப்பு : GOD'S CANVAS
இந்த ஓவியத்தை கண்ட இடம்: இங்கே: ரூபன் சர்மா வலைக்கு சென்று அற்புத நிகழ்வுகளை ஓவியமாக கண்டு களியுங்கள்.

ஒரு கோலம். கண்ட இடம் : இங்கே:
திருமதி வாணி முத்துகிருஷ்ணனின் அற்புத கோலங்களை தினமும் கண்டு ரசியுங்கள்.


ஒரு புன்னகை. இங்கே: ஆயிரம் குழந்தைகளின் புன்னகை இங்கே . உங்கள் செல்வக்குழந்தையின் புன்னகையையும் நீங்கள் இணைக்கலாம்.



ஒரு கப் பாயசம். பாலாட பாயசம்.

 பத்து லட்சம் பேர் இந்த பாயசம் வெப் சைட்டுக்கு வந்து பாயசம் சாப்பிட்டு இருக்கிறார்கள்.
அதை செய்முறை விளக்கம் இங்கே:   

இல்லை, எனக்கு ஜாங்கிரி   தான் வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களுக்கு
எப்படி செய்யவேண்டும் என்றால் இங்கே செல்லுங்கள். குகன் கிச்சன்
சாப்பிட்ட திருப்தி வந்தது.

பின் என்ன ?

ஒரு பா. அதாவது கவிதை.  ஆரண்ய நிவாஸ் திரு இராம மூர்த்தி எழுதியது. எங்க ஊர்காரர்.  இவரும் என்னைப்போல் ஒரு கர்நாடாக சங்கீத பிரியர். பஜனை பாடல்கள் இவரது வலையில். இவரது வதனப் புத்தகம் ரசிக்க லாம். ரசிக்க வேண்டிய பலர் இவரது நண்பர்கள். 

வெண்பாலிட்ட அன்ன அடிசிலில் கொஞ்சம் 
நறு நெய் பெய்து முந்திரியும் மேல் தூவி,
குறு மிளகைக் கூட சேர்த்தாலும் ஒரு
வெண்பாவிற்கீடாமோ அது?


சுவையான வெண் பொங்கலை சுவைத்துக்கொண்டே ..
ஒரு பாட்டு.


பிரணயம் என்னும் படத்தில் ஷ்ரேயா கோஷால் பாடுகிறார். ஜெயச்சந்திரன் அவர்கள் இசை அமைத்தவர்.




நான் ஸ்ரேயா கோஷால் பாடுவதைக் கேட்கவேண்டும் என்று விரும்புவர் இங்கே செல்லலாம்.

குயில் நன்றாக பாடவில்லை என்று குரல் கேட்டபின் கடவுள் அனுப்பிய
இசைக்குயிலுக்கு விருதுகள் வாங்கித் தந்த கானங்கள் இவை.





இத்தனையும் நமக்கு அளித்த பெருமாள். அந்தப் பரமனை தரிசிக்க நீங்கள்
ஸ்ரீ ரங்கம் போகவெண்ண்டாம். இங்கே தினம் போங்க. ராஜேஸ்வரி அம்மா வலை.

செல்லவேண்டிய வழி. இங்கே:

தீபாவளித் திரு நாள் அன்று பெருமாளை தரிசிப்போம்.


நன்னா இருக்கு லச்சணம்.
ஒரு கல்லு மோதிரம் வாங்கி தாங்க அப்படின்னா சொர்க்கத்துக்கு வழி காட்டரீக...

No. No. No. No.  ஹூம்...ஹூம்..

எனக்கு ரூபி வச்ச மோதிரம் தான் வேணும்  இதப்பாருங்க.


அப்படின்னு அடம் பிடிக்கும் வீட்டுக்காரிக்கு என்ன சொல்லி சமாதானம் செய்யலாம் ?

அட்வைசஸ் வெல்கம். 

Sunday, October 20, 2013

அய்யோ ராமா என் மனசு கை நழுவி போச்சே..


அய்யோ ராமா ..

பால்குனி பாதக் அன்றைய இசை.

படித்துகொண்டே நீங்களும் பாடிக்கொண்டே வீடியோ பாருங்கள்.


அய்யோ ராமா  என் மனசு
கை நழுவி போச்சே..
அய்யோ ராமா  என் மனசு
கை நழுவி போச்சே..

என் ஒன்னும் புரியா வயசும்போது
ஏதோ நடந்து போச்சே.

நான் ஒண்ணும் அறியா வயசினிலே
ஏதோ நடந்து போச்சே..

அய்யோ ராமா  என் மனசு
கை நழுவி போச்சே..
அய்யோ ராமா  என் மனசு
கை நழுவி போச்சே..

நான் ஒண்ணும் அறியா வயசினிலே
ஏதோ நடந்து போச்சே..

எங்கிருந்தோ வந்தோர் கண்ணன்
குழல் ஊதி
கானம் பாடி தன் குரலால்
எனை மயக்கி
தீம் தீம் தீமுன்னு
தாளமும் போட்டே ..

எங்கிருந்தோ வந்தோர் கண்ணன்
குழல் ஊதி
கானம் பாடி தன் குரலால்
எனை மயக்கி
தீம் தீம் தீமுன்னு
தாளமும் போட்டே ..



நான் ஒண்ணும் அறியா வயசினிலே
ஏதோ நடந்து போச்சே..


அய்யோ ராமா  என் மனசு
கை நழுவி போச்சே..
அய்யோ ராமா  என் மனசு
கை நழுவி போச்சே..


நாணி நான் மறைந்த  மனத்திரையை அவன்
தாவியே தன் மனசாலே திறந்து விட்டானே
என் மனசோட தன் மனசை மசிச்சு விட்டானே..

அய்யோ ராமா  என் மனசு
கை நழுவி போச்சே..
அய்யோ ராமா  என் மனசு
கை நழுவி போச்சே..


நான் ஒண்ணும் அறியா வயசினிலே
ஏதோ நடந்து போச்சே..

அய்யோ ராமா  என் மனசு
கை நழுவி போச்சே..

Aiyo rama hath se ye dil kho gaya
Aiyo rama hath se ye dil kho gaya

Mujhe bali umariya mein bali umariya mein
Kuch ho gaya ha


Aiyo rama hath se ye dil kho gaya
Aiyo rama hath se ye dil kho gaya
Mujhe bali umariya mein bali umariya mein
Kuch ho gaya ha
Aiyo rama hath se ye dil kho gaya
Aiyo rama hath se ye dil kho gaya
Koi muraliya madhur bajake mithi mithi
Taal sunake

Koi muraliya madhur bajake mithi mithi
Taal sunake
Mujhe bali umariya mein bali umariya mein
Kuch ho gaya ha
Aiyo rama hath se ye dil kho gaya
Aiyo rama hath se ye dil kho gaya


Laj ka goonghat khol gaya woh
Man se man ko tol gaya woh

Laj ka goonghat khol gaya woh
Man se man ko tol gaya woh
Aiyo rama hath se ye dil kho gaya
Aiyo rama hath se ye dil kho gaya
Mujhe bali umariya mein bali umariya mein
Kuch ho gaya ha
Aiyo rama hath se ye dil kho gaya
Aiyo rama hath se ye dil kho gaya

*******************************************************************


Bliss was it in that dawn to be alive,          But to be young was very heaven!

...William Wordsorth

Saturday, October 12, 2013

யார் கதையும் இதுவல்ல




பொறி ஒன்று
தீப்பொறி ஒன்று
வெகுண்டு எழும்போது
கார்கால மழை அதை அணைக்கி றது.
கார் காலமே எனக்குள் நெருப்பு மூட்டின்
யார் வந்து அணைப்பார்..நீ சொல்.

காற்றே
தென்றல் காற்றே ..நீ  வருகையிலே
வனங்கள் வசந்தம் என மகிழ்வுறுமே.
காற்றே நீ
புயலாய் வந்துவிட்டால்
பூந்தோட்டங்கள் நிலை பெயர்ந்திடுமே


கனவில் கட்டிய கோவில் ஒன்று
என் கண்களின் முன்னே நொறுங்கி விழுந்தது.
ஏன் இந்தக்கோரம்  என கேட்டுவிடாதே.


யார் கதையும் இதுவல்ல என் பொறுப்பே இதில் அதிகம்.

எதிரி யாரேனும் என்னைப் புண்படுத்தியிருந்தால்
என் நண்பன் ஒருவன் வந்திருப்பான். மனதிற்கு ?ஆறுதல் தந்திருப்பான்.

மனதிற்கினியவனே ரணம் தந்திருந்தால்,
மாற்று மருந்து தர யார் இயலும் ?

என்ன நடப்பதெனப் புரியவில்லை
எங்கு நடந்தோம் என மட்டும் புரிகிறது.

அடிபட்டும் உயிர் வாழ்கின்றோம்
அடிபட்டால் உயிர் பிரிவதில்லை

தாகத்தால் தவிக்கையிலே தணிப்பது அந்த மதுவே
தகிப்பது மதுவே என்றால் தணிப்பது அதை யார் செய்வர் ?

சூறாவளி காலமிது. சிறிய  சத்தங்கள் எடுபடாது.


ஆடிக்காற்றைக் குறை சொல்லாதே. என்னை
ஆட்டிப்படைத்தவன் வேறொருவன்

கடுங்காற்றில் கப்பல் மூழ்கிவிட்டால்
கப்பலோட்டி நம்மை கரை சேர்ப்பான்.

மாலுமியே படகை மூழ்கடித்தால்,
மாலுமியை யார் தப்புவிப்பான்?


hum se mat poochho kaise, mandir tootaa sapanon kaa
logon kee baat naheen hai, ye kissaa hain apanon kaa
koee dushman thhais lagaaye, to meet jiyaa bahalaaye
manameet jo ghaav lagaaye, use kaun mitaye?
naa jaane kyaa ho jaataa, jaane hum kyaa kar jaate
peete hain to zindaa hain, naa peete to mar jaate
duniyaa jo pyaasaa rakhe, to madiraa pyaas bujhaaye
madiraa jo pyaas lagaaye, use kaun bujhaaye?
maanaa toofaan ke aage, naheen chaltaa zor kisee kaa
maujon kaa dosh naheen hai, ye dosh hai aur kisee kaa
majadhaar mein naiyyaa doobe, to majhee paar lagaaye
maajhee jo naaw duboye use kaun bachaaye?