Pages

Sunday, September 15, 2013

ஒரு பதிவர் விழா

பதிவர் மா நாடு பற்றி எல்லோரும் எழுதி எது சரி எது சரியில்ல அப்படின்னு சொல்லிக்கிட்டு சரி, அடுத்த தடவை ஈரோட்டிலே நடக்கும்போது எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம் அப்படின்னு ஏற்பாடு பண்ணிய பிரபல பதிவர்கள் எல்லாமே சொல்லிட்டு இருக்கும்போது,

ஏன்யா பெரிசு .. உனக்கேதுனாச்சும் ஐடியா இருக்குதா அப்படின்னு +Chellappa Yagyaswamy +Balasubramaniam G.M  +Durai A  +kg gouthaman கேட்கராக. (நான் கேட்கவே இல்லயே அப்படின்னு துரை சார் சொல்றாரு.)


நாம ஒரு விழா நடத்தினா என்ன செய்யறது அப்படின்னு நினைசுக்கினே தூங்கிட்டேனா..  ஒரு விதமா

இந்த மாதிரி வரிசையா வந்துகினே கீது.


விழா நடப்பது பைவ் ஸ்டார் ஹோட்டல் தாஜ் கொரமாண்டல் மாதிரி.இருக்குது.

வர்றவங்க எல்லாம் முன்னமே சொல்லிப்புடனும்.  அப்பத்தான் வூட்டுக்கு கரெக்ட் நேரத்துக்கு இன்னோவா அனுப்பிச்சு பதிவர்களை கூட்டிக்கினு வர முடியும்  அப்படின்னு சொல்லிபோட்டாங்க போல. ஒவ்வொரு காரா போர்டிகோ விலே வந்து நிக்குது.

உள்ளே வருகையிலே ஒவ்வொருவருக்கும் ஒரு ரோஜா கொத்து தராங்க..


அதிலே வாங்கிகிட்டு உள்ளே போகும்போது அடுத்த கேட் லே , ஒரு கேள்வி கேட்கிறாங்க.

கேள்வி எதுவேணுமானாலும் இருக்கலாம்.

ஒரு சாம்பிள்:

அந்த ரோஜா கொத்திலே எத்தனை ரோஜா இருக்கிறது ?

உங்க வலைப்பதிவிலே இதுவரைக்கும் எத்தனை பேரு பின்னூட்டம் போட்டு இருக்காங்க ?
முள்ளும் மலரும் படத்திலே முதல் பாட்டு யாரு பாடறாங்க ?
போன பதிவர் மா நாட்டிலே மேடை ஏறி பேசினவங்கள் லே அதிக நேரம் பேசினது யாரு ?

சரியா சொல்றவங்க அடுத்த ரிஜிஸ்ட்ரேஷன் மேடைக்கு நேரே போவாங்க.. அங்கே உங்களுக்கு ஆரஞ்சு ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், எது வேணுமானாலும் எடுத்து குடிங்க..உங்கள் சாய்ஸ்.




உங்களுக்கு எதுவேணுமானலும் எடுத்துக்கிட்டு  விழா மேடையில்?இரண்டாவது வரிசைலே போய் உட்காருவாங்க.



எல்லா கேள்விக்கும் கரெக்ட் பதில் சொல்றவங்க விழா மேடை முதல் ரோ விலே இருப்பாக.

தப்பா சொல்றவங்க எல்லாரும் அடுத்த ஹாலுக்கு ஒரு மெடல் டிடெக்டார் வழியே போறாங்க..   ஏங்க நான் இது வழியா போகனும் அப்படின்னு ஒருவர் கேட்கறாரு. அவரை சுரேகா சார் கட் பண்ணி நீ என்னோட வலைப்பதிவு படிச்சப்பறம் வாங்க அப்படின்னு அன்போட சொல்றாரு.

அவரு சரியாத்தாங்க சொல்றாரு. புறம் ஒழிஞ்சாத்தான் அகம் சிறக்க முடியும்.
அப்படின்னு ரஞ்சனி அம்மா காதுக்கு பக்கத்திலே வந்து சொல்றாங்க.

ரமணி , பித்தன், சீனா எல்லாரும் ஆமா, ஆமா, அப்படின்னு ஜில், ஜில், அப்படின்னு ...

ஒத்துகிட்டு அது வழியா போறவங்களுக்கு, அங்கே

அவங்களுக்கு அங்கே டாடா டீ நிறுவனத்தாரின் துளசி, ஜிஞ்சர், போட்ட சூடான டீ  ஒரு கப்பிலே தர்றாங்க.    டீ  வாணாம் அப்படின்னு சொல்றவங்களுக்கு வசந்த பவன் காரங்க ஒரு டிகிரி காபி தர்ராங்கா.

சாப்பிட்டுட்டு, நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க.

{சார், நான் புதிய பதிவர் இந்த வருஷம் தான், சொல்லப்போனா போன மாதம் தான் முதல் பதிவே போட்டு இருக்கிறேன் என்று ஒரு ஜீன்ஸ் சொல்ல,  . அப்ப இவருக்கு காம்ப்ளான் கொடுப்பா என்று உத்தரவு மைக்கில் வந்தது. }


நானும் ஒரு சேர்லே உட்கார்ந்து டீயை குடிப்போம், அதுக்கு முன்னாடி, பேன் எங்கே அப்படின்னு பார்த்து உட்காரணும் அப்படின்னு யோசிச்சு,பாத்தா ஒரு பேன் fan  கூட இல்ல. என்னடா இது. அப்படின்னு மூளை காஞ்சு போனப்பறம் தான் ஞாபகம் வருது. அட ஏ சி. ஹால் லே இது. இங்கே எதுக்கு fan.

 தலைக்கு பின்னாடி கொஞ்சம் தட்டி விட்டுப் பின், மேலே பார்த்தா, அங்க ஒத்தரு ஆகாசத்துலேந்து வந்துக்கினு இருக்காரு.

வந்தவர் சும்மா சிவனேன்னு உட்காராம, நான் கொஞ்சம் கூட எதிர்பாராத நிலையிலே, "என்னைச் சிலுவையில் அறைந்தால் உயிர்க்கத்தேரியாது. விட்டு விடு என அவர்  அலற ஆரம்பிக்க, நான் அப்ப தான் கவனிச்சேன். மனுஷன்  சாக்ஷாத் பரமேச்வரன் சவாரி செய்த வாகனத்தில் வந்திருக்கிறார்.

விடமாட்டேன் என்று வெளிநாட்டில் இருந்து வந்த அவரது ரசிகை ஒரு தொல்காப்பிய நூலே பின்னூட்டமாக  எழுதி இல்லை, பேசிக்கொண்டு இருக்கிறார்.

அவர் என்னதான் பேசுகிறார் என்று பார்த்தேன். இல்லை. கேட்டேன்.

மஞ்சு பாஷிணி  எனக்கு குவைத் லே கிடைக்கிற  டீ தாங்க புடிக்கும் அப்படின்னு சொல்லிடராக.  அட, இதுக்கா இவ்வளவு பேசுறீங்க.. நீ ஒண்ணும் கவலைப்படாதே மஞ்சு, நான் மா நாடு நடத்தும்போது கம்ப ராமாயணத்தைப் பத்தி விரிவா பேசப்போறேன். அப்ப எல்லாருக்கும் பத்து நிமிசத்துக்கு ஒருகுவைத்  டீ தருவேன். என்கிறார் ஷைலஜா மேடம். 

  ஆஹா, இவர் மட்டும் கம்பனுக்காகவே ஒரு விழா எடுப்பதாக இருந்தால், அந்த விழாவுக்கு வரும் அத்தனை பேருக்கும் அறுசுவை உண்டி அந்த நடராசன் கையால் செய்து தரலாமே என நானும் அவருக்கு செல்லினேன்.

டீயை ஜூசை  சாப்பிட்டுட்டு எல்லோரும் அவங்களும் அடுத்த அடுத்த சீட்டிலே போய் நேரடியா உட்காராம,

தனக்கு ஏற்கனவே தெரியாத ஒரு ஐந்து பேரோட ஒரு ஐந்து நிமிஷம் பேசி அவங்க விவரம் எல்லாம் புரிஞ்சுக்கணும்.அப்படின்னு ஒலி பெருக்கிலே ஒரு அனௌன்ஸ் மென்ட் வருது.



 இந்த அஞ்சு பேரும் ஒரு குழுவா அறிமுகம் நேரம் வரும்போது மேடைக்கு போகணும்.

விழா துவங்கி வரவேற்புரை முடிஞ்சப்பறம் அஞ்சு அஞ்சு பேரா போகும்போது, ஒவ்வொருவரும் தன்னோட அறிமுகம் பண்ணாம, இன்னொருவருடைய அறிமுகம் செய்யணும். அவங்களோட சிறப்பு என்ன அப்படின்னு சொல்லணும். ஒரு நிமிஷம் தான் நேரம் தராங்கா.  ( அது சரிதானா என்று அறிமுகம் செய்யப்பட்டவர் சொல்லிவிட்டு, தான் அடுத்த இன்னொருவர் அறிமுகம் செய்யவேண்டும் )


விழாவிலே நீராரும் கடலுடுத்த பாடறாங்க.

மைக் அட்ஜஸ்ட் செய்யற வரைக்கும் பொறுமையா இருங்க.
குழந்தைங்க பாடுறாக இல்லையா..



அடுத்தபடியா, +Rajeswari Jaghamani அம்மா வந்து விநாயகன் பெருமை சொல்லும் அகவல் பாடுறாங்க.
விழா துவங்குது.

முன்னமே சொன்னது போல அஞ்சஞ்சு பேரா மேடைக்கு வந்து இன்னொருவருடைய சிறப்புகளை, பெருமைகளை ஒரு இரண்டு நிமிஷத்திலே எடுத்து சொல்றாக.

திண்டுகல் தனபாலன் பத்தி சுப்பு தாத்தா சொல்றாரு.
நீ உன்னை அறிந்தால் என்று சொல்லும்போது நம்ம  எம்.ஜி. ஆர். பாட்டு. எடுத்து விட்டேனா..அதுவே back ground லே கேட்குது. 



இது போல அறிமுக நிகழ்ச்சி அட்டகாசமா போவுது.

சில பேரு தன்னோட சாதனைகளை சொல்லணும் அப்படின்னு எந்திருச்சு  சொல்றாக. ஒவ்வொருவருக்கும் பத்து நிமிஷம் டைம் தறாங்க.














சுப்பு தாத்தாவுக்கு போர் அடிக்குது. ஒரு நாலு பேரை கூட்டிக்கிட்டு பக்கத்து ஹோட்டலுக்கு போயி, இன்னொரு காபி குடிச்சுட்டு வரலாம் அப்படின்னு போறாரு.

கூட வரும்   வேங்கட நாகராஜ் சார் எல்லாரையும் போடோ எடுக்கறாரு.

மஞ்சு பாடப்போறாங்க அப்படின்னு மைக்கிலே சொல்றாக.


{எங்கள் ப்ளாக்...லே பாடியிருக்காங்க.. அங்கேயிருந்து மைக் கனெக்ட் பண்ணியாச்சு.)


நேரம் பதினிரண்டு மணி ஆகப்போகிறதே...இன்னும் விழா நாயகர்  காணோமே என்று பார்த்தால், அவர் கரெக்டா நேரத்துக்கு வர்றாரு.

புத்தக ரிலீஸ் செய்யறாரு.




அதுக்குப் பின்ன, வலைப் பதிவாளர்களின் அன்புக்கு பாத்திரமான திருமதி துளசி கோபால் அவர்கள் கைங்கர்யமாக , ஒரு லஞ்சு ஏற்பாடு பண்றாங்க.
நாங்க மலேசியா பயணத்திலே இருக்கோம், இருந்தாலும், எங்க பெஸ்ட் பிரண்டு வல்லி அம்மா அரேஞ்சு செய்வாங்க அப்படின்னு போன் போட்டு பால கணேஷ் சார்கிட்டே சொல்றாங்க.

பால கணேஷ் மின்னல் போல துள்ளித் துள்ளி வேலை பார்க்கிறாரு.


ஆரூர் மூனா செந்தில் கையை மடிச்சுட்டு கிட்டு வராரு.

 என்ன விஷயம் அண்ணே அப்படின்னு kG கௌதமன்  கேட்கும்போ, அடுத்த ரூமிலே சுரேகா அண்ணன் ரத்த அன்பளிப்பு முகாம் ஒண்ணு ஏற்பாடு பண்ணி இருக்காரு இல்ல. அதுக்கு நான் ரத்தம் கொடுத்துட்டு வாரேன். என்கிறார்.

அப்ப நாங்க எல்லாரும் தர்றோம் அப்படின்னு ஒரு நூறு பேரூ அங்க கூட்டமா நுழையறாங்க.

லஞ்ச்சு முடிஞ்சப்பின்னே விழாவுக்கு இரண்டு சிறப்பு பேச்சாளர்கள் வர்றாங்க.

Solomon Pappiah




suki sivam Time Management



விழா முடியல்ல.

+Sasi Kala
மேடம் சசிகலா அவங்க தான் வெளியிட்ட புத்தகத்தை எல்லோருக்கும் ஒரு நினைவுப்பரிசாக தர்றாங்க..

அக்கா மகளே ரோசாப்பூ அப்படின்னு ஒரு கவிதை படிக்கராக. அப்படியே வரிக்கு வரி கர கோஷம். கை தட்டு.



நல்லாவே  இருக்கு அப்படின்னு புலவர் இராமானுசம் ஐயாவே சொல்றாரு. 

ஐயா உங்க மரபு கவிதையை படிச்சு பேச எனக்கும் ஒரு நாள் வேணுமுங்க.அத்தனை கருத்து அதுலே இருக்குல்ல என்கிறார்.
+கவிஞா் கி. பாரதிதாசன்

வாசல் கேட்டையே பார்த்துக்கொண்டு ஒருவர் இருந்தாற்போல் இருந்தது. அவரிடம் போய் கேட்டேன்.  உங்கள் பதிவின் பெயர் எனக்கு மறந்து போய் விட்டது. நீங்கள் தானே அந்த கம்பெனி லா எல்லாம் பற்றி கூட்டங்களிலே பேசுகிறீர்கள் என்றேன்.

ஆம்.ஆம். உங்களுக்கும் கம்பெனி லா தெரியுமா ? என்று கேட்க,
என்ன இது சரியாக மாட்டிக்கொண்டு விட்டோமே, அதெல்லாம் மறந்து போய், ஒரு பதினைந்து வருடம் ஆயிற்றே என்று நினைத்துக்கொண்டு, 
சார், எனக்கு என் மதர்  இன் லா ஒருவரைத் தான் தெரியும்.அது கிடக்கட்டும்.  நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.  என்றேன்.

நான் அறம் பொருள் இன்பம் மூன்றும் கண்டுவிட்டேன். இப்போ.....என்று இழுத்தார்.  

ஆஹா..இவர் நம்ம மோஹன் குமார் சார் அல்லவா என்று அதிசயித்தேன்.

அப்பைக்கினு பார்த்து இடி இடிக்குது, மின்னலோ மின்னல், மழையோ கொட்டு கொட்டு ன்னு கொட்டுது.  எங்க்கெந்தோ வந்த சுனாமி வெள்ளம் அப்படியே பதிவர்கள் இருந்த மா நாடு நடக்கும் இடம் எல்லாம் தண்ணீர் வெள்ளம். 

கரெண்ட் கட் ஆயிடறது. ஒரு பத்து செகண்டுக்கு எல்லாம் இருட்டு. .

அமைதி...அமைதி..அமைதி. அமைதி. அமைதி. அமைதி. அமைதி. அமைதி. 

  திடீர் அப்படின்னு ஒரு ஒளி வெள்ளம் ஆகாசத்துலே...   என்னன்னு பார்த்தா...

ஒரு சர்ப்ரைஸா,சூப்பர் ஸ்டார்  ரஜினி சார் மகள் சௌந்தர்யா வர்றாங்க.

 தமிழ் பதிவர்கள் எல்லோருக்கும் தனி ஷோ ஒண்ணூ கோச்சடையான் படத்துக்கு ஏற்பாடு பண்ணப்போறோம் என்று சொல்றாங்க.
கை தட்டு சத்தத்திலே ஹாலே அதிருது.

இப்போதைக்கு இந்த படத்தோட டிரைலர் பாருங்க. அப்படின்னு சொல்லிபோடராக.



  ஹாலே
சும்மா அதிருதுல்ல.

எல்லோரும் தேசீய கீதம் பாடராக.

எல்லோரும் கிளம்ப பார்க்கறாங்க. அப்ப மேடை லே வெளுப்பு புகை புகையா வருது. எல்லாருமே பயந்து போயிட்டாக.  எங்கனாச்சும் fire ஆயிடுச்சோ ?

அப்ப ஒரு சௌண்ட் மட்டும் வரது.

கோவை ஆவி வர்றாரு.  மேடைலேந்து ஒரு அனௌன்ஸ் பண்றாரு.

காரு, பைக் லே வராதவங்களுக்காக, நான் வேன் ஒன்னு ஏற்பாடு பண்ணி இருக்கேன். அதுலே போவலாம்.அப்படின்னு சொல்றாரு.  நான் இப்ப வலைச்சரத்திலே உலா வந்திட்டு இருக்கேன். எல்லோரும் அங்க வாங்க என அன்போடு அழைக்கிறார்.

சுப்பு தாத்தா அப்ப திடீர்னு கண்ணை முழிச்சு பார்க்கறாரு.

அடே கனவா இது ?

ஒரு பதிவர் விழா 

No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!