Pages

Friday, May 31, 2013

என்னது !! உளர்றீங்களா ? ரஹ்மான் சார் காப்பி அடிச்சு இருக்காரா ?

என்னது !! உளர்றீங்களா ?  ரஹ்மான் சார் காப்பி அடிச்சு இருக்காரா ?

   ஆமாம். சார்.  ஆமாம்.

   சித்தம் போக்கு சிவன் போக்கு அப்படின்னு வாய்க்கு வந்ததை எல்லாம்
   உண்மை அப்படின்னு சொல்லக்கூடாது. 
  பிச்சு பிச்சு பிச்சு போட்டுடுவேன்        ஜாக்கிரதை...

   நான் ஆதாரத்தோடு தான் சொல்றேன்.
   இந்த பாட்டை கேளுங்க....




   கேட்கறேன்.  
   ஆஹா..  என்ன அற்புதமான ராகம் !!  ஹிந்துஸ்தானி க்ளாசிகலா ?

   ஆமாம்.  சார்... பூரியா தனச்ரீ என்னும் ராகம்.

   இதை அப்படியே சுத்தமா சாஸ்திர இலக்கணப்படியே பூரியா தனஸ்ரீ ராகத்திலே   ரங்கீலா படத்துலே ...இசை அமைச்சிருக்கார் பாருங்க...
ஹரிஹரன் ஸ்வர்ணலதா என்னமா இழையாருங்க பாருங்க...

   சார் !!
   உண்மையைச் சொல்லட்டுமா சாரே !!

   சொல்லுங்க...

 விடிந்தும் விடியாத வைகறைப்பொழுதிலே அப்பத் தான் மலர்கின்ற பவள மல்லித் தோட்டத்திலே இருக்கற மாதிரி    ஒரு சுகம் உடம்பு முழுக்க பரவுறதுங்க...

    அதுதான்யா எனக்குத் தெரிஞ்ச உண்மை..  ஆனந்தம் எல்லாம். ...

    நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்
 
     அப்படி சொல்லிட்டு ஓடிடாதீங்க...

     ராகத்தை புரிஞ்சுக்க இங்கே போங்க. 
ராகத்தை புரிஞ்சுக்க இங்கே போங்க. 

     போறேன் சார்.  ஆனா ஒண்ணு சொல்லணும் சார்.

     சொல்லுங்க.. 

      சாஸ்த்ரீய இலக்கண அடிப்படையிலே ஒரு சினிமா சங்கீதத்தை அமைச்சிருக்கறதை காப்பி அடிச்சிருக்காரு அப்படின்னு சொல்லிட்டீகளே !!

       எல்லா பாடல்களும் ராகங்கள் அடிப்படையிலே அமைஞ்சது  
      அந்த 72 மேளங்களை அடிப்படையாக கொண்டது தான்.

       அந்த மேளங்கள் அடிப்படையிலே ஒரு பாட்டு போட்டா
       அத காப்பி அடிச்சா அப்படின்னு சொல்லாதீங்க..

        அந்த நாத ரூபமான இறையை புரிஞ்சுண்டவரு
       அப்படியே அதையே பிரதிபலிப்பவரு
       நம்ம கண்ணுக்கு முன்னாடி கொண்டு நிறுத்துபவரு
       
       அப்படின்னு சொல்லுங்க..

        அடே !! ஆமாம். 
         ஒத்தருக்கு ஒரு உண்மை புலப்பட்டுது அப்படின்னா
         அந்த உண்மை இன்னொருவருக்கும் அதே போல 
         புலப்படும் அப்படின்னு சொல்ல முடியாதுங்க...

         ஏன்னா உண்மை புரியறதுக்கு ஒரு விசயம் வேணுமுங்க..

         என்னங்க...

          தன்னை இழக்கணுங்க....
          தான் அப்படிங்கறது அழியணுங்க..
          அடக்கம் வரணும்ங்க..
         அப்பதான் ஆன்மீகம் புரியுமுங்க..

         

No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!