Pages

Monday, May 6, 2013

ஜோஹாரி ஜன்னல் வழியா அஞ்சு குட்டி கதைகள்.

ஜோஹாரி ஜன்னலுக்கு ஒரு கிளாசிக் உதாரணம் என்றால் நீங்கள் விஜய் டி.வி. லே தினசரி இரவு 11 மணிக்கு நடக்கும் கனா காணும் காலங்கள் தொடரினைப் பார்க்கவேண்டும்.

கொஞ்சம் நம்ப இயலாது தான். இதுமாதிரி எந்த அம்மாவுமே  இருப்பாங்களா.. இருக்க முடியுமா என்றெல்லாம் கேள்வி கேட்க வேண்டாம். 

அந்த சிவா வின் அம்மா. அவளும் அந்த கல்லூரி பேராசிரியர் . கண்டிப்பானவர்  ஆனாலும் தனது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கணவனை கோட்டை விட்டவள் போல் சித்தரிக்கப்பட்டு உள்ளார்  . அவளது மகன் அவள்; தன உயிராக நினைக்கும் அவள் மகன் , உனக்காகத்தான் நான் இருக்கிறேன் என்று சொல்லும் அந்த தாய் 

என்னோட அப்பா யாரும்மா என்று கண்ணீர் ததும்ப கேட்கிறான், அவளோ ரகசியங்களை உடைக்க தயார் இல்லை. 

இனி அவன் ஒரு நாள் அந்த ரகசியங்களைத் தெரிந்து கொள்வான் என்பது போலத்தான் கதை செல்கிறது. 

இந்த நிலை பாருங்கள். இவளுக்குள் இருக்கும் மன நிலைகள். தன பையனிடமும் கூட அதைப் பகிர முடியா நிலைகள்.  வாழ்வினிலே தனித்து இருக்கும் நிலை. 

பையன் இனிமேல் இவளைக் கேட்டு பிரயோசனம் இல்லை என்று தானே அது என்ன துப்பறியும் நிலை.

ஜோஹரி ஜன்னலின்  இரண்டாவது ஜன்னலின் ஒரு dimension   இது. 

*****************************************************************************************
கீழ் வரும் உதாரணங்கள் கதைகள் அல்ல முற்றிலும் உண்மைகளும் அல்ல. 
ஜோஹரி ஜன்னலின் இரண்டாவது சதுரத்தின் ஒரு விழுக்காட்டை இவை காண்பிக்கும்.

******************************************************************************************

அடுத்தது நடந்த ஒரு நிகழ்வு தான். நடந்து ஒரு பதினைந்து வருடங்கள் இருக்கலாம். 
சில உண்மைகள் மட்டும் சற்று கலர் அடிக்கப்பட்டு இருக்கிறது.  கதையின் சுவை கூட்டிட. 
அடிப்படையில் நிகழ்வு ஒன்று தான். 
 ****************************************************************************************

ஒரு நாள் கல்லூரி முதல்வர் அறையில் ஒரே சத்தம்  ஒரு யுத்தம் நடப்பது போல இருந்தது. உள்ளே சென்றேன்  சண்டை ஒன்று மில்லை. முதல்வருக்கும் ஒரு பேராசிரியருக்கும் வாக்கு வாதம் . 

என்னை பார்த்ததும் முதல்வர், வாங்க உட்காருங்க  என்றார்  .  நான் அப்போது துணை முதல்வர். 

அவர்கள் இடையே சொற்போர்   தொடர்ந்தது. 

ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.  அகில இந்திய அளவில் முதல் நிலை அலுவலர்கள் பயிற்சி நடை பெற்றுக் கொண்டு இருந்தது. எல்லா பேராசிரியர்களுக்கும் அவரவர்கள் தகுதி திறன் அறிவு அடிப்படையில் வகுப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தன  .  பயிற்சி  ஒரு ஆறு மாத காலம்.  ஒவ்வொரு பெரசிரியருக்குமே இது ஒரு சவால ஆகத்தான் இருந்தது.  ஏன்  எனின்  இந்த பேராசிரியர்கள் எடுக்கும் வகுப்புகள் ஆடியோ வீடியோ எல்லாம் செய்யப்படும், அது அவர்களுக்கே போட்டு காட்டப்பட்டு அவர்கள் பேச்சில் சொல்லித்தரும் பாணியில் இருக்கும் குறைகளை அவர்களே கண்டு பிடித்துக்கொள்ள வேண்டும். அது ஒரு sort of self assessment. 

எனது நண்பர்  அவரும் அங்கே ஒரு பேராசிரியர்.  திறமை சாலி . நன்றாகவே பாடம் நடத்துபவரும் கூட 
அவர் சொல்லிக்கொண்டு இருந்தார்  :
இந்த ஒரு குறிப்பிட்ட பாடம் .  அதை நான் நன்றாக குறிப்புகள் எடுத்துகாட்டுகள் தயாரித்து இருக்கிறேன். இதே வகுப்பை பல முறை எடுத்தும் இருக்கிறேன். vp  சார்கிட்டே வேண்டும் என்றால் கேட்டு பாருங்கள்.  நான் எடுப்பதில்  என்ன குறை கண்டு பிடித்தீர்கள் ?  நான் தான் இந்த வகுப்பு எடுப்பேன் என்று சொல்கிறார். 

முதல்வரோ விடாபிடியாக அந்த பாடத்தை இன்னொரு பேராசிரியரிடம் ஒப்படைத்து விட்டார் 
தனது முடிவினை மாற்றி கொள்வதாக இல்லை.  

ஒரு அரை மணி நேர விவாதத்திற்கு பின் .

அந்த பேராசிரியர் கோபத்துடன் வெளி நடந்தார் . . தன மேல் முதல்வருக்கு நம்பிக்கை இல்லை என அவர் நினைத்து வந்ததற்கு இதுவும் ஒரு இன்னும் ஒரு சான்று என்று நினைத்து இருக்கக்கூடும் 

அவர் கோபத்திற்கு இன்னும் ஒரு காரணம் அவரும் தனது பிரமோஷனை அந்த வருடம் எதிர்நோக்கி இருந்தார்  அந்த வகுப்பை  நிறுவனத்தின் டைரக்டர் பார்வையாளராக வந்து அமர்ந்து கவனிப்பதற்கு தன்னை பாராட்டு வதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் எதிர்பார்த்தார் 

அவர் சென்ற உடன் நான் முதல்வரைக் கேட்டேன் .  என்ன காரணம்.  ஹி  இஸ் ஆல்சோ இக்வலி  குட் என்றேன் . 

முதல்வர் சொன்னார் : அவர் அந்த சப்ஜெக்டை நடத்தினால் ஒரு க்ரெடிபிலிடி (credibility ) டெவலப் ஆகாது  என்றார். 

ஏன் ?

ஒன்னரை மணி நேரம் தான் கொடுக்கப்பட்ட நேரம் ஆனால் இவரோ இரண்டு மணி நேரம் அந்த வகுப்பை தொடர்ந்து நடத்து கிறார் 

அதனால் என்ன?  ஆடியன்சு கேட்டுக்கொண்டு தானே இருக்கபோகிறார்கள் ? இன்டரஸ்டிங் சப்ஜெக்ட் .  லஞ்சு டயம் கூட அப்ப இல்லையே ?   அப்பாவியாக கேட்டேன். 

அந்த சப்ஜெக்ட் என்ன என்று தெரியுமா உங்களுக்கு ? என்றார். 

என்ன என்றேன் 

Time Management 
*****************************************************************************************

இதை அவரிடமே கூறியிருக்கலாமே என்று தோன்றாமல் இல்லை. 
சில நேரங்களில் சில விஷயங்களை மனசுக்குள்ளேயே வைத்து கொள்கிறோம் . நாம் எடுக்கும் முடிவு நன்றாக இருந்தாலும் அதை அந்த முடிவினால் பாதிக்கப்படும் நபரிடம் சொல்வதும் அவரை புரிய வைப்பதும் நல்லது . பல தருணங்களில் ஏற்படும் ஒரு தவறான புரிதலை தவிர்க்க இயலும் .




இது இப்படி என்றால், சில சூழ் நிலைகளில் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது ஒரு சூழ நிலைக் கைதிகள் போன்றும் இருக்கிறோம் 
அன்று சொன்ன கதையில் ராகவேந்தர் போன்று.  என்னால் என்ன செய்ய முடியும் ? நான் சொல்
 வதை சொல்லிவிட்டேன் .  நடப்பது அவன் செயல் .  என்று வாய் இருந்து மூடிக்கொண்டும் இருப்பார்.  அது ஒரு குடும்பச் சூழல் என்பதால் பொறுப்பு அவரிடம் இன்னும் அதிகம்.  இழப்புகள் ஏற்படினும் அவரையும் பாதிக்கும்  
இப்போது விவரிக்கும்  கதை அல்ல, நடந்தது, சிறிது மட்டும் , பெயர்கள்  details மாற்றப்பட்டுள்ளன 
****************************************************************************************
*****************************************************************************************
ஏங்க ... இப்படி தொடர்ந்து மூணு மணி நேரமா வகுப்பு நடத்துவீக  ? 
ஒரு ஒரு மணி நேரம் பேசுங்க கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க ....என்று திடீர் என்று ஒரு நாள் க்வார்டர்சுக்கு லஞ்சுக்குப் போனபோது மனைவி கெட்டாள். 

எனக்கு ரெஸ்ட் எல்லாம் வேண்டாம் . தொடர்ந்து பேச முடியும். 

உங்களுக்கு இல்லீங்க. கேக்கற ஆடியன்சுக்கு வேண்டாமா 

பாதி பாடம் நடக்கும்போதே பசங்க தூங்கிடராக அப்படின்னு லே சொல்றாக 
ஒருவேளை  நீலாம்புரிலே எதுனாச்சும் தாலாட்டு பாடரீகளோ ?...
.
நல்லாத்தான் நடத்துறேன் அவுக ஏன் தூங்கராக யாரு சொல்றாக .. அப்படின்னு எனக்கு ஒன்னும் தெரியல்ல  ?

அன்னிக்கு உங்க ஸ்டூடன்ட் கேட்டு பாத்தேங்க   அவ என்ன சொல்றா தெரியுமுலே !!

யாரு ? என்ன கேட்டே ? 


அதான் . இஷிதா. அந்த  பெங்கால் காரி . நல்ல இந்தி பேசுவாளே அவ. 
எப்படி அவரு க்ளாஸ் ? பேச்சுவாக்கிலே கிண்டினேன்.


அவரு நடத்துற கிளாஸ் சூபரு. ஆனா எல்லோருக்கும்  புரியதான்னு சந்தேகம் . அப்படின்னு சொல்லுது 

ரொம்ப டெக்னிகலா இருக்கோ ? அப்படின்னு கேட்டேன் .

இல்லீங்க ஆடியன்சுக்கு   புரியற இங்க்ளிஷ்லே பேசனும்லெ . பீஹார் ஒரிசா லேந்து வந்தவங்க எல்லாமே இந்தி லே தான் புரிஞ்சுப்பாங்க  

ஏம்மா  அவருகிட்டே இதே சொல்றது. 

நான் சொல்லி அவரு என்ன செய்வாரு ? அவரு இங்க்லீஷ் லே தான் பேசியாகணும். அது தான் இங்கே மீடியம்
 ***********************************************************************************
சம்மட்டியால் என் தலையில் ஓங்கி ஒரு அடி விழுந்தாற்போல் இருந்தது
நான் இருட்டில் இருக்கிறேனா அல்லது என் மாணவர்கள் இருட்டில் இருக்கிறார்களா ?
********************************************************************************************
 THIS IS A CONVERSATION THOUGH NOT VERBATIM  BETWEEN ME AND MY WIFE IN 1998. 
I had the same feeling when we held  classes for Marketing Officials who were high performers . They came from Both Tamil Nadu and Kerala. A good many among them could not follow us, though they could understand English somewhat. . We felt helpless before an audience which lacked due response.  People who sponsored thought that being high performers they should be well up in English also, which was not the case.
I could not help but feel what is the purpose of talking if there is no listening.  
At times, we also keep our listeners blind.  
.**********************************************************************************
   Johari region 2 is what is known about a person by others in the group, but is unknown by the person him/her self. By seeking or soliciting feedback from others, the aim should be to reduce this area and thereby to increase the open area (see the Johari Window diagram below), ie, to increase self-awareness. This blind area is not an effective or productive space for individuals or groups. This blind area could also be referred to as ignorance about oneself, or issues in which one is deluded. A blind area could also include issues that others are deliberately withholding from a person. We all know how difficult it is to work well when kept in the dark. No-one works well when subject to 'mushroom management'. People who are 'thick-skinned' tend to have a large 'blind area'.
*********************************************************************************
இன்னும் ஒரு நிகழ்வு.  And this is not fictitious.

ஒரு சில நிறுவனங்கள் குறிப்பிட்ட காரணத்துக்காக சில முறைகளை பின் பற்றுகின்றன .  அண்மையில் ஒரு கம்பெனியில் எனக்கு இருக்கும் fixed deposit எப்.டி. முதிர்வுத்தொகை கெடுவாகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி இருந்தது.
எதேச்சையாக இது தெரிந்தது
கம்பெனிக்கு தொலைபேசினேன். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால், திரும்பவும் முதலீடு செய்வதாக இருந்தால், இன்று முதல் இன்றைய தேதி வட்டி விகிதத்தில் செய்து கொள்ளளலாம் என்றார். முதிர்வான தேதி முடிந்து மூன்று மாதம் ஆகிவிட்டது. அந்த மூன்று மாதங்களுக்கு வட்டி ? என்றேன் .
மத்திய வங்கி சட்டப்படி 15 நாட்களுக்கு உட்பட்டு புதுபிக்கபட்டால் தான் அந்த வட்டி தர முடியும் என்றார்கள்.
அது சரி, ஒரு நோடீஸ் எனக்கு அனுப்பி இருக்கலாம் இல்லையா என்றேன்.
எங்கள் நிறுவனத்தில் அனுப்புவதில்லை என்றார்.
ஏன் என்றேன். நான் சந்தித்த நபர் அந்த கம்பெனியின் டைரக்டர்.  எனது பழைய
தஞ்சை காலத்து நண்பர்
சூரி, எங்க கம்பெனிலே House wives அதிகம் பேர் முதலீடு செய்கிறார்கள். அவர்களுக்கு இதுபற்றி தபால் போட்டால் தேவை இல்லாத பிரச்னைகள் வருகின்றன என்றார்.

சன்ன குரலில், ஒரு பர்டிகுலர் கேசில் ரொம்ப சீரியஸ் ஆக போய் விட்டது. 
மனைவிக்கு அத்தனை பணம் எப்படி வந்தது அப்படின்னு கணவனுக்கு சந்தேகம்.  மனைவி சொன்னதெல்லாம் கணவன் நம்ப தயார் ஆக இல்லை. 

I was more worried about the customers who are illiterate or have lost the deposit receipt. 
கஸ்டமரே மறந்து போயிட்டார் அப்படின்னா அந்த டெபாசிட் என்ன ஆகும் ?
He shot back.
அஞ்சு வருஷம் வரைக்கும் எப்ப வேணாலும் வாங்கிக்கலாம்.
அதுக்கப்பரம் என்ன ஆகும்.
write off  ஆகிடும். என்று சொன்னவர் தொடர்ந்து 

. Any way this is company policy i cant talk much என்று சொல்லிவிட்டு டீ  ஆரிபோறது சாப்பிடு,  ஆத்துக்கு ஒரு நாள் கண்டிப்பா லஞ்சுசுக்கு வா என்று சொன்னார்

அந்த கம்பெனியின் ஆண்டு அறிக்கை பார்த்தேன். 
குறைச்சலாகத்தான் இருந்தது தொகை.   
உரிமை கோரப்படாத தொகைகள் (unclaimed domestic deposits ) கிட்டத்தட்ட 15 லட்சம் .

பணம் சம்பந்தமான தகவல்கள் மட்டு மல்ல பல குடும்பங்களில் மன சம்பந்தமான தகவல்களும் அவரவர் மனங்களிலே முழுகிக்கிடக்கின்றன
அவர்கள் இறக்கும்போது அவர்களுடன் அவர்கள் ரகசியங்களும் மரிக்கின்றன

அதற்கு இது ஒரு உதாரணமாக சொல்ல லாமா ?  நீங்கள் தான் சொல்லவேண்டும் 

vijay TV. Serial AVAL.

இந்த தொடர் நின்று போனதே ஏன் என்று தெரியவில்லை. 

அந்த நடுத்தரவயது பெண்மணி ஒரு சமூக அந்தஸ்து உள்ள பெண்மணியாக சித்தரிக்க படுகிறாள். அவள்  சட்டென்று நினைவுக்கு வரவில்லை ஜானகி என
அழைப்போம். 
ஜானகியின்  பெண் திருமணமாகி செல்லும் இடத்தில் இன்னொரு  பெண். இருக்கிறாள்.  அவள் பெயர் ஷாலினி  . ஷாலினி  இவளது மருமகனின் வளர்ப்புத் தங்கை ஆக அறிமுகம் செய்கிறார்கள். . 
ஜானகியின் பெண்ணுக்கு தன கணவன் மேலும் அந்த ஷாலினியின் மேலும் சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது 
ஜானகிக்கே இது சரியில்லை இந்த அண்ணன் தங்கை உறவு என்று படுவதால் அவளைப்பிரிக்க முயல்கிறாள். 
ஷாலினியைக் காப்பாற்ற ஜானகியின் தந்தை ஒரு கிழம் தடுமாறுகிறது. ஷாலினியின் பிறப்பு பற்றி இருக்கும் ஒரு நிஜத்தை ஒரு இருபது வருடம் கழித்து வெளியிட முடியவில்லை. உண்மையிலே அந்த பெண் ஜானகியின் 
பெண்தான் . திருமணத்திற்கு முன்பே இன்னொருவனால் காதலிக்கப்பட்டு 
காதலன் வெளி நாடு செல்வதாக ஏமாற்றி செல்கிறான். இவளுக்கு குழ்ந்தை 
பிறக்கிறது. அதை இறந்தே பிறந்தது என்று ஜானகியை நம்பச் செய்து விடுகிறார்கள். 
அந்தக் குழந்தை இருபது வருடம் கழித்து எதிரே வந்து நிற்கிறது 
இதலாம் சாத்தியமா என்று கேட்காதீர்கள்  .
இது டிவி சீரியல். 
நம்மை பொறுத்த அளவில் ஜானகியின் தந்தை ஒரு ரகசியத்தை மனதில் வைத்துக்கொண்டு தன்னையும் சிதைத்துக்கொண்டு ஜானகி வாழ்வை மட்டு மல்ல, ஷாலினி, ஜானகி யின் மகள் யாவருக்குமே உண்மையைச் சொல்லாமல் காலத்தை போக்குகிறார்  

தனக்கு மட்டும் தான் தெரியும் என்ற நினைத்த ரகசியம், இன்னொருவருக்கும் 
தெரிகிறது என்பது பின்பு தான் அவருக்கு புரிகிறது  
ஏகப்பட்ட குழப்பங்கள் 

இதுவும் ஒரு உதாரணம்  
ஜோஹரி ஜன்னலின் இரண்டாவது சதுரம்
தன் குடும்பத்தையே சரிவர நிர்வகிக்க தவறிவிட்டார் அந்த பெரியவர் 
CLEAR CASE OF MUSHROOM MANAGEMENT. 


 ஜோஹாரி ஜன்னல் வழியா அஞ்சு குட்டி கதைகள். 






   

No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!