Pages

Sunday, October 28, 2012

ஹை பிளட் பிரஷர் கண்ட்ரோல் பண்ணுவதற்கு இந்த ராகத்தைப் பாடுங்க

ஹை பிளட் பிரஷர் கண்ட்ரோல் பண்ணுவதற்கு இந்த ராகத்தைப் பாடுங்க இல்லேன்னா கேளுங்க என்று சொல்கிறார்கள்

ராகம் ரொம்ப சுகமாகத் தான் இருக்கிறது.  ராகம் போபாலி .
ஐயம் இல்லை
ஆனாலும்,
ஐயம் இருக்கிறது இந்த ராகத்தை பாடினால் அல்லது கேட்டால் போதுமா ?
டாக்டர் கொடுத்த மருந்தை நிறுத்தி விடலாமோ ?
துளசி அம்மா பக்கத்திலே இருந்தால் கேட்கலாம் என்றால் அவங்க நயு ஜீ போயிட்டாங்க

Blood Pressure  க்காக மருந்து

 டாக்டர் ஜெயச்சந்திரன் எம். டி. கார்டியாலஜிஸ்ட் கொடுத்தது.  நானும்
சும்மா சொல்லகூடாது பதினைந்து வருசமா சாப்பிட்டு கொண்டு இருப்பது
கார்லாக் காலை லே அம்லோடபைன் நைட்லே .     சாப்பிட வேண்டுமா ? இல்லை , பாட்டை மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தால் போதுமா ?

 இன்று கேட்டேன்  

ஞாயிறு ஆயிற்றே. டிஸ்டர்ப் பண்ணுவது சரியா? தெரியவில்லை  என்றாலும் கேட்டேன்.

என்ன சூரி என்ன விஷயம் என்றார் மூடிலே தான் இருக்கார் .கேட்டேன்.

இந்த பாட்டை மத்தியானமா கேளுங்க ... மருந்தை காலையிலும் இரவிலும் தானே சாப்பிடச் சொல்லி இருக்கிறேன். பாட்டு   கேட்கும்போது மருந்து சாப்பிடவேண்டாம் என்று சொல்கிறார்.









Wednesday, October 24, 2012

வலைப்பதிவு என்பது கிறுக்குபவர்கள் இடமா ? இல்லை..கிறுக்கர்கள் இடமா ?

கிறுக்குபவர்களுக்கு இது ஒரு இடம். அதாவது சொல்லப்போனால் இந்த வலை யெல்லமே ஒரு ரஃப் புக் மாதிரி. எதை வேணாலும் எழுதலாம், அதற்கும் சில சமயம் மதிப்பும் இருக்கும் பொல்லாப்பும் இருக்கும். என்று எழுதியிருக்கிறார் ஆர்.வி.எஸ். என்னும் வலை நண்பர்.


 கிறுக்குபவர்களுக்கு என்று வலையைச் சொல்ல முடியாது . என்று நான் திட்ட வட்டமாகச் சொன்னேன். ஏன் என்று தன் புருவங்களைத் தூக்கினார். இது கிறுக்குகளின் இடம் என்று சொன்னேன். அவரால் மறுத்துப்பேசவும் முடியாது. ஒத்துக்கொள்ளவும் முடியாது

 நல்லாதான் அனலைஸ் பண்ணி இருக்காரு. அதுக்கும் உடனேயே அவர் சொல்றாப்போலேயே அடடா !! அருமை !! என்று அஞ்சு பத்து பின்னூட்டங்கள்

. யோசிச்சு பார்த்தேன். உலகமே கிறுக்குபவர்களுக்காகத்தான் இருக்கிறது என்று தோன்றியது. கிறுக்குகளுக்காகவும் இருக்கிறது.

 கிறுக்குகள் பலரை அந்தந்த கால கட்டத்தில் கிறுக்குகள் என்று சமூகம் ஒதுக்கி வைத்தாலும் பிற்காலத்தில் அவர்களை அடடா !! இவர்களைப்போன்ற பிலாசபர் கிடையாது என்றது.

 புதிய மத ஸ்தாபகர் யாருமே அவரவர்களுடைய கால கட்டத்தில் ஒரு சிலரைத் தவிர‌ போற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

 பல இடங்களில் கிறுக்குபவர்களுக்கும் கிறுக்குகளுக்கும் மதிப்பும் கௌரவமும் மரியாதையும் செல்வாக்க்கும் தகுதிக்கும் மீறிய புகழும் பணமும் ஆதரவும் கிடைக்கிறது.

 பிரபல கார்ட்டூனிஸ்டுகளை ஒரு பக்கம் பார்த்தால் கிறுக்கத்தான் செய்கிறார்கள். அந்தக் கிறுக்கல்களிலே சுருக்கமாக ஒரு சங்கதியை உலகத்தோருக்கு உணர்த்துகிறார்கள்.

 பிரபல நகைச்சுவை நடிகர்கள் கோமாளித்தனமாக பல செய்கிறார்கள். அது வழியாகத்தான் இவ்வுலகத்தோருக்கு நேரடியாகச் சொல்ல இயலாததை சொல்கிறார்கள்.

 கிறுக்குபவர்களும் கிறுக்கர்களும் உலகிற்கு இன்றியமையாதவர்கள் என்றே நினைக்கிறேன்.


 இன்று நான் பார்த்த படமும் ஒரு நடிகரின் சுய புராணமும் இங்கே.



 
Courtesy: www.arvindsdad.blogspot.in


Tuesday, October 23, 2012

PLEASE DO NOT READ THIS IF YOU DO NOT WANT TO LIVE

PLEASE DO NOT READ THIS
IF YOU DO NOT WANT TO LIVE 

IF YOU WANT TO LIVE 
PLEASE CLICK HERE.

  குண்டாய் இருப்பவர்களுக்கு ரிஸ்க் அதிகமாம்.

     எந்தெந்த கறிகாய் சாப்பிட்டால் தொந்தியைக்குறைக்கலாம் 

    அப்படின்னு சொல்வதற்கு ஒரு ஸ்லைட் ஷோ .

    யோவ் !!  அ நியாயத்திற்கு நான் ஒல்லியாயிட்டேன் அய்யா !!

    சதை போடுவதற்கு எதுனாச்சும் வழி இருக்கா அப்படின்னு சொல்லு ராசா ..


Sunday, October 21, 2012

காற்றில் எந்தன் கீதம் காணாத உன்னைத் தேடுதே !!


KAATRIL ENTHAN GEETHAM KAANAATHA UNNAITH THEDUTHE...

காற்றில் எந்தன் கீதம் காணாத உன்னைத் தேடுதே !!

என்ன ஒரு அற்புதமான குரல் ?

இசைத்த ஸ்ரியா கொசாலைப் பாராட்டுவதா ?
இசை ஞானி இளைய ராசாவைப் பாராட்டுவதா ?

 

Friday, October 19, 2012

Anantha Padhmaswamy Temple Adayar


Today despite our eagerness to go and worship at the Adayar Anantha Padmanabhaswamy temple , we could not do so because of incessant rains. Rains do make us happy but the pity is roads become sewage canals with no room for walking for pedastrians.

ஹே பத்மனாபா

ஹாய்யா உன்னைப்பார்த்து சேவிச்சுட்டு வரல்லாம்னு பார்த்தா
இன்னிக்கு கொட்டு கொட்டு ன்னு மழை கொட்டுறது

அதனாலே துளசி அம்மா பதிவுலே இருக்கிற எல்லா படத்தையும் இரவல்
வாங்கிண்டு அதே சமயம் எங்க ஸ்வாமிநி பாடற பாடலையும் இணைத்து
போட்டு இருக்கேன்

நான் வல்லையே அப்படின்னு எனக்கு வருத்தமாகத் தான் இருக்கிறது
துளசி அம்மா சொன்னப்பறம் தான் இது போல ஒரு அழகான கோவில் இருக்கிறது  என்றே தெரிய வருகிறது

துளசி அம்மாவுக்கு ஒரு தாங்க்ஸ்

நாராயண நாராயணா !!!
நாராயணனைக் கொஞ்சம் பாருப்பா !!
காப்பாத்துப்பா !!









Thursday, October 11, 2012

Classical Song - Devotional - by Vani Jayaram. (Sanskrit Hymn) Smt.Valli narasimmahn I am sure will listen to this




A classical Sanskrit Hymn sung by Smt.Vani Jayaram. Raag Revathi. Devi Mahatmeeyam.

Monday, October 8, 2012