Pages

Monday, May 26, 2008

அந்த அன்னையின் அழகுக்கு, அன்புக்கு, அருளுக்கு ஈடேது ?




புதுப்புது வலைப்பதிவுகளைப் படிக்கையிலே ஒரு உற்சாகம் தோன்றுகிறது.
அண்மையில் நான் படித்த நானோ சயின்ஸ் என்னும் பதிவு ஆழ்ந்த கருத்துக்களைக்
கொண்டதாக அமைந்திருக்கிறது. நம்மில் பலரை கலை உணர்வு அதிகம் உள்ளவரென்றும் பலரை தர்க்கரீதி ( logic ) யானவர் எனவும் கண்டிருக்கிறோம். மூளையில் ( எங்கே இருக்குன்னு கேட்பீர்களோ ! ) வலது பக்கம் புதுப்புது படைப்புகளைக் கற்பனைத்திறன் கொண்டு ஆக்குவதிலும் இடது பக்கம் எந்த ஒரு பொருளையும் தர்க்கரீதியாக அணுகுவதிலும் செயல் படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். எவருமே இடது பக்கம் ஒன்றே அல்லது வலது பக்கம் ஒன்றே என ஒரு பக்க மூளை செயல்பாடு உடையவர் இல்லை. நம்மில் ஒரு 90 விழுக்காடு இரண்டும் கலந்தவர் எனினும் எந்த பக்க மூளைதனை அதிகம் செயல் படுத்துகிறோம் என்பதை சில பரீட்சைகள் மூலம் தெரிந்து கொள்ள இயலும். நாட்டியம், பாட்டு, ஓவியம் பொதுவாக கலைகள் உணர்வு மிக்கவர் தமது வலது பக்கத்தினை அதிகம் செலவு செய்கிறார்கள் எனினும் ஒரு பரத நாட்டிய நிகழ்வினையோ, ஒரு கர்னாடக சங்கீத இசை நிகழ்ச்சிதனையோ தர்க்க ரீதியாக இலக்கண ரீதியாக ( critic ) அணுகுபவர் இடது பக்க மூளை அதிகம் பயன் படுத்து கின்றனர். நாம் யார் எப்படி என நமக்கே உணர்த்தும் இவரது அறிவு பூர்வமான வலைப்பதிவுகள் வலை உலகத்திற்கு ஒரு வரப்பிரசாதம்.
இந்த வாரம் இப்பகுதியில் " ஓம் எனும் பிரணவத்தில் துவங்கும் காயத்ரி மந்திர மந்திரம் " ஒரு அண்டத்தில் நிகழும் ஒலி அதிர்வுகளைப் பற்றி (நமக்குத் தெரிந்ததும் இருக்கிறது , தெரிந்ததாக நினைப்பதும் ) விலா வாரியாக எடுத்துச்சொல்லி கேள்வி மேல் கேள்வியாக கேட்கிறார்கள்.
http://nonoscience.wordpress.com/2006/04/30/critique-on-gayatri-mantra-a-scientific-view-by-dr-tanmaya/#comment-5784

பிஸிக்ஸ் படித்த ஆன்மீக வாதிகள்
சண்டை போன சரியான இடம். சபாஷ் ! சரியான போட்டி !!

தமது படைப்புகளால் தம்மைச் சுற்றி இருப்போரைக் கவர்வதும் ஒரு கலை தான். சாதாரண ஒரு விஷயத்தைக் கூட சுவையுடன் சொல்வதில் அதே சமயம் அரிய தகவல்களையும் அளித்து தனது வலைதனை ஒரு அறிவுக்கூடம் மட்டுமல்ல, ஒரு ஆய்வுக்கூடமாகவும் ஆக்குகிறார் ந்யூ சீ பதிவாளர்.

தவிடு முதல் தங்கம் வரை இவர் எழுதும் பொருள்கள் ( subjects ) கணக்கிலடங்கா. ஒரு நாள் சூரியன் உதிக்க மறந்தாலும் இருக்கலாம். ஆனால் இவர் பதிவு எழுதா நாள் இல்லையெனச் சொல்லும் அளவிற்கு அளவு கடந்த உற்சாகத்துடன் செயல்படுவதில் இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டி. தொய்வு, சோர்வு என்பதே இவர் அகராதியில் இல்லை போலும். நானும் அவரை அவ்வப்போது ஒரு குண்டூசியால் குத்திப்பார்ப்பேன். ஏற்ற வகையில் பதிலளிப்பார். இவரிடம் அதிகம் நான் காணுவது receptivity as well as balanced approach. "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பார் வள்ளுவர். உலகெல்லாம் அறிவு பரந்து கிடக்கிறது. அதை உள்வாங்கிக்கொள்ள ஒரு அகந்தை இல்லாத மன நிலை வேண்டும். அப்படிப்பட்டவர் தான் இதுபோன்ற புதியவனவற்றை ஆக்க இயலும் இவர் யார் என உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அப்படியும் தெரியாமல் போனால், பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்றால் இவரைப் பார்க்கலாம். பரந்தாமனின் மேனியெல்லாம் மாலையாக மணம் வீசுவார். இந்தப் பெருமாள் கோவிலிலே வருடம் முழுவதும் வைகுண்ட ஏகாதசிதான்.
காதோடு ஒரு விஷயம்.

உத்சவத் திரு நாட்களில் கூட்டத்தோடு கூட்டமாக நாமும் காத்திருப்போம்.
அர்ச்சகர் எல்லோருக்கும் தீர்த்தம் கொடுத்து, சடாரி சாத்தி, துளசி தருவார்.
ஒன்றிரண்டு முறை நம் நீட்டிய கைகளைத் தாண்டிச் சென்று விடுவார்.
பக்தர்கள் சோர்வ‌தில்லை. அவர் பிரசாதம் தரும்வரை அங்கிருந்து நகர்வதில்லை.

வலை உலகில் கவிதை எழுதும் கலைஞர் பலர். அவர் சிலரின் கவிதைகள் முதன் முறை படிக்கும்போதே மிகவும் கவர்ந்து விடுகின்றன. சொல் நயம், பொருள் நயம். சொற்கோர்வை, சந்தம், எதுகை, மோனை, உபமானம், உபமேயம், ஆகியவையும் இன்ன பிறவற்றையும் கவிதைக்கு இலக்கணம் கூறுவோர் பகர்வினும் இவையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டபின் கவி பாடுவதில்லை கவிஞர்கள். கவிஞர் தம் வாய் திறந்தாலே மடை போல் பெருக்கெடுத்து ஓடும் பெருவெள்ளத்தில் சந்தமும் எதுகையும் அனந்தம். பாரதி முதல் கண்ணதாசன் வழியே வாலி வந்து இன்றைய யுக பாரதி வரை பாடிய கவிதைகள் அனைத்தும் அவர்தம் உள்ளத்திலிருந்து பெருகிய கங்கைப்பிரவாகம். இலக்கணம் இவர்களுக்கு கைகட்டி நிற்கும். இன்னிசையும் தன்னை மறந்து தாளம் போடும்.


http://kavinaya.blogspot.com/

அவ்வப்போது இதுபோன்ற கவிதைகள் என் கண்ணில் படும். உடனே ஒரு வேகத்துடன் ஆர்வத்துடன் அதற்கு ஒரு மெட்டு போடவேண்டும் என எண்ணுவேன். எனக்குத் தெரிந்த இசை ஞானத்தின் துணையுடன் அக்கவிதைகளைப் பாடிடும்போது நான் காணும் மன நிறைவு சொல்லில் அமையாது. " ஸ்வாந்தஸ் ஸுகாய " என்று சொல்வார்கள், துளசி எதற்கு ராமாயணம் எழுதினார் என்று. ஏதோ லட்சாதி லட்சம் நேயர் படிப்பார்கள் என்றா ? தன் மன நிறைவுக்காக எழுதினார் என்று சொல்வார்கள்.

அது போலத்தான். அன்று நடந்தது. கவி ஒருவர் நயத்துடன் புனைந்த கவிதையை நானும் என் மனைவியும் யதுகுல காம்போதி எனும் ராகத்தில் மெட்டமைத்து பாடினோம். யூ ட்யூபிலும் அரங்கேற்றினோம். எங்கேயோ இருக்கும் என் தங்கை ( அவள் ஒரு க்ளாசிகல் இசை வித்தகர் ) எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். பாடலைத் தானும் ஒரு முறை பாடிக் காண்பித்துப் பெருமிதம் கொண்டார். அப்படியே " உன் வாயைத்திற " என்றார். எதற்கு என்றேன். அம்பிகையின் அழகைப் பற்றிச் சொன்ன வாய் இனிக்க வேண்டாவோ ? இந்தா ஒரு கல்கண்டு என்றார். தொடர்ந்தார்: " அம்பிகையின் அழகை வர்ணிப்பதற்கும் அன்னையின் அருள் வேண்டும்.
http://www.youtube.com/watch?v=-Kg9mQxLpd4pd4


ஆதிசங்கரர் தனது ஸெளந்தர்ய லஹரியில் 100 பாக்கள் அந்த அம்பிகைதனை பாதார கேசம் வர்ணித்து அவளது அருள் வெள்ளத்தினைத் தனது கவிதைகளினூடே பொழிகிறார். 100 பாடல்கள் எழுதியபின்னே அந்த அன்னைக்கு அம்பிகைக்கு, இத்துணை ஆற்றல் எனக்களித்தனையே ! கவி பாடும் திறனை அளித்தாயே ! உனக்கு நைவேத்தியமாக என்ன தருவேன் என்ற கேட்டு அதற்கான விடைதனையும் நூறாவது பாடலிலே முடிவாகத் தருகிறார்.

எந்த உன் அருளால் இத்தனை பாடல்களையும் யான் இயற்ற இயன்றதோ, அந்த ஆற்றலையே உன் பாதங்களிலே சமர்ப்பிக்கிறேன், நைவேத்தியமாக. பெற்று எனக்கருள்வாய் என்கிறார் சங்கரர்.

யார் நம்மைப் பாடலமைக்குமாறு, பாடுமாறு ஊக்குவிக்கிறாரோ, அவர் அன்னையே.
யார் பாடலைப்பாடுகிறாரோ அவரும் அன்னையே.
எது பாடலோ, எது இசையோ அவரும் அன்னையே.
அந்த அன்னையின்
அழகுக்கு, அன்புக்கு, அருளுக்கு
ஈடேது ?

Monday, May 12, 2008

தோன்றியதை எழுதுகிறேன்.

இந்த வலைப்பதிவு துவக்கத்தில் நான் குறிப்பிட்டது " வலைப்பதிவாளர்களின் அதிசய வளர்ச்சி, அவர்தம்
முயற்சி, எழுதவேண்டும் என்ற ஆவல், தமக்குத் தெரிந்தவற்றை சமுதாயத்தின் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற உந்தல்" எல்லாமே.

அடுப்பங்கரை முதல் ஆன்மீகம் வரை, இசையில் துவங்கி ஈசன் வரை இவர்தம் கவனிப்பும் கணிப்பும்
ஒரு பக்கம் பாராட்டத்தகுந்ததாக இருப்பினும், இன்னொரு கோணத்தில், இவர்கள் எல்லோருமே
சில சில குழுக்களில் ஒரு குறிப்பிட்ட வட்டங்களில் மட்டுமே செயல் படுகின்றனர் என்றுமே தோன்றுகிறது.
கடந்த ஒரு ஆறு மாதங்களில் நான் பார்த்த, படித்த வலைப்பதிவுகள் எல்லாமே ஏறத்தாழ இவ்வகைதனைச்
சார்ந்தவையாகவே இருக்கின்றன. ஒரு பதிவுக்கு 100 பின்னூட்டங்கள், முன்மொழிகள், அல்லது விமர்சனங்கள், வருவதாக இருப்பினும், அதில் ஒரே நபர் பல முறை வருவதையும், ஒவ்வொரு முறையும் அவருக்கு பதிவாளர் பதில் எழுதுவதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், எந்த ஒரு பதிவுக்கும் அதிக பட்சமாக ஒரு 25 நபர்களுக்கு மேல் வருகை தருவதில்லை எனவே தோன்றுகிறது. MOST OFTEN MUTUALLY APPRECIATIVE OF ONE ANOTHER, WHATEVER BE THE CONTENT OF THE BLOG. MOST TIMES, THEY JUST MARK THEIR PRESENCE AND GO AWAY. THE WORLD IS SO FAST, YOU KNOW. இந்த நிலை ஏன் என எல்லா பதிவாளர்களும் சிந்திக்கவேண்டும். So there is not much to say about NUMBER OF VISITORS so long as the material published does not attract a new audience.
மாறாக, நல்ல புதிய கருத்துக்களைச் செவ்வனே எடுத்துச்சொல்லும் திறமை வாய்ந்த சில பதிவாளர்கள் தமது பதிவுகளை யாரும் படிப்பதில்லையே என்ற ஒரு ஏமாற்றத்தில், சோகத்தில் பதிவு எழுதுவதைத் தவிர்த்து விடுகின்றனர். ஒருவரின் சிந்தனை ஓட்டங்கள் அவனிருக்கும் சமுதாய சிந்தனை ஓட்டங்களுக்கு முன்னிருக்கும் நிலையில் அவனைத் தொடரும் நபர்கள் அவனது கால கட்டத்தில் அதிகம் இருப்பதில்லை. சரித்திரத்தில் மிகவும் திறனும் வலிவும் கொண்ட எழுத்துக்களுக்கு contemporary readership value
இருந்ததா என்பது கேள்விக்குறியே. ஆகவே உங்கள் கருத்துக்களில் ஆழம் இருப்பதாக நீங்கள் உணரும்
பட்சத்தில் தொடர்ந்து எழுதுங்கள். தமது பதிவினை யாரும் படிக்க வரவில்லையே என வருத்தப்பட வேண்டாம்.
நெல்லில் உமி எது அரிசி எது என காலம் சொல்லும். கவலை வேண்டாம்.

அகல உழுவதிலும் ஆழ உழவேண்டும், எடுத்துக்கொண்ட பொரூளை விவரிப்பதோடு நிற்காமல், ஆராய முற்படவேண்டும், அப்பொருளில் மற்றோர் கருத்துக்களுடன் உரசிப்பார்த்துடன் நில்லாது தன்னையும் ஒரு சுய விமர்சனத்திற்கு உட்படுத்தித் தான் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதாரங்களையும் எடுத்துச் சொல்லும்போது தான் அறிவின் எல்லைகள் நீள்கின்றன.

ஒரு தனி மனிதனின் அறிவு வளர்ச்சியும் முதிர்ச்சியும் அவன் சார்ந்துள்ள சமூகத்தின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது. ஒரு பதிவு அழுத்தமாக ஒரு செய்திதனை விளக்கிச் சொல்கையில், அதுபோன்று நாமும் ஒரு கருத்தினைச் சொல்லவேண்டும் என்கிற எண்ணம் மற்ற பதிவாளர்களிடையே ஏற்படுகிறது.

ஆக, பதிவுகள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியில் ஒரு தூண்டுகோலாக அமைதல் அவசியம்.
பல தினசரி, வார, மாத இதழ்களைப் படிக்கிறோம், ரசிக்கிறோம் என்றாலும் அவற்றினில் மனதில் நிற்கும்படியான கருத்துக்கள், கட்டுரைகள் இருக்கும்போது தான் அவற்றினை த் தொடர்ந்து படிக்கிறோம்.
ஆகவே பதிவுகளும் passing clouds போலன்றி ஒரு சமுதாய அறிவு வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையவேண்டும்.

அண்மையில் நான் படித்த நானோ சயின்ஸ் எனும் பதிவு இவ்வகையில் என்னை மிகவும் ஈர்த்தது.


http://nonoscience.info/2008/05/08/cat-crossing-and-magnetoreception/

ஒரு பூனை குறுக்கே போனால் அதை கெட்ட சகுனம் என்று சொல்லி வீட்டுக்கு திரும்பி விடுகிறோம். இதை ஒரு மூட நம்பிக்கை என்று மட்டும் சொல்லி எள்ளி நகையாடாது, மேலும் இந்த நம்பிக்கையில் அறிவு பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக ஏதேனும் இருக்கிறதா என அலசி எடுத்திருக்கிறார் இந்த
பதிவாளர். Cat Crossing and Magnetoreception

உண்மையாகவே, வானியல் பற்றி எழுதும் ஜெயபரதன் பதிவுகளுக்குப் பின் நான் படிக்கும் ஒரு அர்த்தமுள்ள பதிவு இது.

Congratulations to the writer of nonoscience.

Saturday, May 3, 2008

Sounds of birds and a lot of relaxation





type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355">



Havasupai Indian Waterfall Relaxation



Gentle Rain,Soothing Sounds of Nature