Pages

Sunday, April 13, 2008

தஞ்சாவூர் டிகிரி காபி



எங்க தாத்தா ரசிச்சு ஒரு டம்ளர் தஞ்சாவூர் டிகிரி காபி சாப்பிடுகிறார்.

காபி என்பது ஒரு தனி ஆனந்தமாம்.
அந்த ஆனந்தம் பிரும்மானந்தத்திற்கு ஈக்வல்லாம்.
நீங்களும் கேளுங்கள்.

4 comments:

  1. தாத்தாவுக்கு சுகர் இல்லையோ?
    காபி சாப்பிட்டு பேசுற மாதிரி தெரியலியே
    காபி டே கடையில் (குறைந்த விலையில் ரூ.20 க்கு )நான் காபி சாப்பிட்ட நினைவு உங்கள் காப்பியை பார்த்தபின் நினைவு வருகிறது

    ReplyDelete
  2. தஞ்சாவூர் டிகிரி காபி பற்றி மிக அதிகமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
    ஆனால் அதனைப் பார்த்ததுமில்லை.சுவைத்ததுமில்லை. :(
    அதன் செய்முறையைக் கொஞ்சம் தரமுடியுமா ?

    ReplyDelete
  3. ரிஷான் ஷெரிப் அவர்கள் வருகைக்கு முதற்கண் நன்றி.

    தஞ்சாவூர் டிகிரி காப்பிதானே !

    இப்போதெல்லாம் தஞ்சையில் எந்த ஹோட்டலில் கூட கிடைப்பதில்லை.
    அந்த கால வெங்கடா லாட்ஜ் உட்பட.

    காபி சுவை என்பது ஒரு தனி நபர் சுவை.
    உங்களுக்கு அந்த நேரத்திற்கு என்ன
    அளவில் வேண்டுமோ அந்த அளவிற்கு மட்டும் காபி கொட்டையை
    (plantation A please do not mix with other varieties. or Add chicory.)
    வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
    அதை சிக்கரி கலக்காமல் அறைத்து ஃபில்டரில் போடுங்கள்.
    ஒரு பிரமிட் மாதிரி. அமுக்கக்கூடாது.
    அதன் மேல் ஒரு சிமிட்டா சக்கரை எடுத்து தூவுங்கள்.

    இப்போது பில்டரில் கொதிக்கும் ஜலத்தை விடவும்.

    ஒரு தரம் டிகாஷன் இறங்கியதும் அதை மட்டும் எடுக்கவும்.
    ( இரண்டாம் முறை, மூன்றாம் முறை எல்லாம் டிகாஷன் செய்யக்கூடாது.)

    உயரிய பால் ஒரு அரை லிட்டர் ( தண்ணீர் விடக்கூடாது )எடுத்துக் காய்ச்சவும்.
    இரண்டு முறை பொங்கவிடவும்.

    பொங்கிய பாலை இரு முறை டம்ளர் டவராவில் ஆற்றவும்.

    கொதி நிலை சற்று குறைந்த பின் ,
    பாலுடன் டிகாஷணைக் கலக்கவும்.
    ( டிகாஷனுடன் பாலை அல்ல )
    ( பால் இருக்கும் பாத்திரத்தில் டிகாஷனை ஊற்றவேண்டும் )

    கருமை நிறம் சற்று வரவேண்டும் ஆனால் மிகவும் கறுப்பாக ஆகிவிடக்கூடாது.
    சக்கரை நீங்கள் வழக்கமாகப் போட்டுக் கொள்ளும் அளவில்
    பாதி போடவும்.

    இன்னொரு தரம் ஆற்றவும். தஞ்சாவூர் டிகிரி காபி ரெடி.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  4. அருமையான விளக்கம்.
    நன்றி சுப்பு தாத்தா.
    போட்டுப் பார்த்துட்டுச் சொல்றேன் :)

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!