Pages

Saturday, April 5, 2008

And This Week, the Golden Crown Goes to....



இந்த வாரம் நான் நவரசங்களையும் சந்தித்தேன் எனச்சொன்னால் அது மிகையாகாது.
First comes
http://myviewsthroughthelens.blogspot.comவருடா வருடம் தென் பிரான்சின் நீஸ்(Nice) நகரில் நடைபெறும் Carnaval வசந்தக் களியாட்டம் பார்க்கச் சென்ற மாதம் author of the blog சென்ற போது எடுத்த படங்கள்.
bEaUtIFuL.

நவ ரசங்கள் என்று சொல்லிய உடனே எல்லோருக்கும் தோன்றுவது காதல்
அலுவலகத்திற்கு புறப்படுமுன் ஒரு காதல் பற்றிய பாடல் கேட்டால் அன்று முழுவதும் மனதுக்குள்ளேயே இருந்து பாடவும் செய்கிறதாம். அந்தப்பாட்டு " காதலின் தீபம் ஒன்று"
http://www.youtube.com/watch?v=6J4uLflEB40
(OR audio only click below)
http://www.esnips.com/doc/8e41f691-96b5-45fe-ae50-a3790a22a494/Kadhalin-Deepam-Onru

Her feeling of joy slowly turns into a feel of fear,as she nears the bus stand. A change in her emotive levels ! How well and ably described !!
பஸ் ஸ்டான்ட் வந்தபோது பயம் வந்து விட்டதாம். தன் பய உணர்வினை
"அம்மாவிடம் சொன்னபோது அம்மா சிரித்தார்கள்.
"பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்குற நீயே பயப்பட்டா எப்படி.." என்றார்களாம். இவர் என்ன சொல்கிறார்:
http://pettagam.blogspot.com/

"அதுவும் சரிதான். அதற்காகப் பயம் இல்லாத மாதிரி நடிக்க வேண்டுமானால் முடியும். பயம் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?" Nice Question indeed ! பயப்படாமல் இருக்க இவருக்கு இந்த வீடியோவைப் பார்க்கச் சொன்னேன். நீங்களும் பாருங்கள்.
இந்தக் குழந்தை போல் இருப்பது சாத்தியமா என்ன ?




fearless child
http://www.youtube.com/watch?v=1a4-jwXejc0
Not only this, she is on in a large-hearted humanitarian job. Kindly visit the blog .


நவரசங்களிலே ஒன்று குதூகுலம். உள்ளம் ஆர்ப்பரிக்கும்போது உடலும் கொம்மாளம் போடுகிறது. இந்தக் காட்சி ஒன்றை நான் துளசி டீச்சர் கிட்டே காமிச்ச போது, அவர், ஏற்கனவே இது தஞ்சையை ராஜ ராஜ சோழன் ஆட்சி செய்து கொண்டிருக்கையிலேயே, “என்னுடைய பதிவில் போட்டு விட்டேன். நீங்க பார்க்கலையா என்கிறார்கள்.” En உடைந்த மூக்கில் ரத்தம் இன்னும் நின்றபாடில்லை. இருந்தாலும் நான் ரசித்ததை இங்கு சொல்லவேண்டும் அல்லவா?
http://www.youtube.com/watch?v=HWD6SI3Orc0
super dapancute dance by a cat
அடுத்து நாம் காண இருப்பது நகைச் சுவை உணர்வு. இதை தட்டச்சு செய்யும்போது அஹமதாபாத்தில் நமது இந்திய அணி ! ayyo பாவமாக இருக்கிறது...
அதை முன்னமேயே எதிர்பார்த்து ஒருவர் இதை தன் யூ ட்யூப்பில் போட்டிருக்கிறார். பார்க்கத்தவறாதீகள்.
படா த்ரில்லர் !!!!

Indian Cricket Worldcup Comedy 2007




அடுத்து நாம காணப்போவது ஒரு சஸ்பென்ஸ் உணர்வு.
http://arisuvadi.blogspot.com/
காதலை மையமாக வைத்து ஒரு கதை.
பின் குறிப்பாக எழுதுகிறார்:

இந்த கதைக்கு உசிரோட இருக்குறவங்களோ,இல்லை உசிரோட இருந்து மண்டையை போட்டவங்களுக்கு சம்பந்தம் இல்லை.இவை அனைத்தும் என் கற்பனையே.அப்படியே இது உங்க சொந்த கதையாக இருந்தால் எல்லாமே ஒரு தற்செயல்.இது இந்த கதையைப் படிக்கிறவங்க மேல சத்தியம்.
கதையில் க்ளைமேக்ஸ்.

"எனக்கு என் அப்பா அம்மா சம்மதம் முக்கியம்.அது மனப்பூர்வமா கிடைக்கனும் என்றால் நீங்க எனக்கு ஏற்றவராக இருக்கனும்.அதுக்கு உங்க வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்.முயற்சி செய்தால் முடியாததுன்னு ஒன்னுமே இல்லைன்னு சொல்லுவாங்க.வாழ்க்கையில சாதிக்கனும்ன்னு ஒரு வெறி வேண்டும் விஷ்ணு.அந்த வெறி மட்டும் இருந்தால் எந்த கஷ்டம் வந்தாலும் உங்களால் சாதிக்க முடியும்.எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு"

இவர்கள் என்ன ஆனார்கள் ! ஜெயித்தார்களா இல்லையான்னு பதிவாளர்கிட்டேயே கேட்கலாம் என்று பார்த்தால் அவர் தன்னைப் பற்றி சொல்கிறார், பதிவுத்தலைப்பில்:

என்னைப் பற்றி கேட்டால் நான் பொய்யைத் தவிர வேறு எதுவும் சொல்ல மாட்டேன்.ஆனால் மத்தவங்களைப் பத்தி கேட்டால் நான் உண்மை மட்டுமே சொல்லுவேன்
இவர் எழுதும் நடை வேகத்துடன் இருக்கிறது. விவேகமும் பரிணமிக்கிறது. அவசியம் படியுங்கள்.

அடுத்ததாக,

http://womankind.weblogs.us/archives/2004_03.html#002618

நான் குறிப்பிடவேண்டிய ஒரு வலைப்பதிவு. அன்பு என்றாலே எல்லோரும் தாயன்பு, தாம் நேசிக்கும் தோழியிடம் அன்பு, டீச்சரிடம் அன்பு, தனக்குரியவரிடத்தில் அன்பு (காதல் என்றாலும் சரி), இயற்கை மேல் தான் கொண்டுள்ள அன்பு, தெய்வத்திடம் கொண்ட அன்பு பற்றிதான் சொல்கிறார்களே தவிர, உலகத்தில்
"அப்பா என்றொரு அற்புத ஜீவன்" என்று இருப்பதையே மறந்துவிடுகிறார்கள். என்னமா தன் அப்பாவைப்
பற்றி இவர் எழுதுகிறார் பாருங்கள்:

தினமும் வீட்டிற்கு வரும் போதும்
குழந்தைகளிருக்கும் வீடுகளுக்கு
போக நேரும்போதும்
வெறுங்கையோடு
செல்லத் துணியாதவர்

நான் குழந்தைகளை
அழைத்துக் கொண்டு
பார்க்க வரும் போதெல்லாம்
அவர்கள் நகங்கள்
சரியாக வெட்டப்பட்டிருகிறதா என்பதை
முதலில் பரிசோதிப்பவர்
........ .....
அம்மா சமைக்கையில்
ருசி பார்த்திருந்து
சாப்பிடும்போது
பக்கத்தமர்ந்து
சாப்பிட வைத்து
பசியாறுபவர்

படித்த புத்தகங்களை
மேசையில் அடுக்கி வைத்திருந்து
தான் அடிக்கோடிட்டு வைத்திருப்பவைகளை
எனக்கு ஆர்வமாய் விளக்குபவர்

தோட்டத்திற்கு கூட்டிப் போய்
முளைவிட்டு பூவிட்டுக் காய்விட்ட
செடியையெல்லாம்
தன் வளர்ப்புக் குழந்தைகளாய்
அடையாளம் காட்டுபவர்

எப்போதாவது
அவர் பள்ளிக்கு
நான் செல்ல நேரும் போது
அருகில் நிறுத்தி
தலையில் கைவைத்து
தன் மகளென
தன் வகுப்பு மாணவர்க்கு
அறிமுகப்படுத்துபவர்

என் குழந்தைகளை
நான் கொஞ்சும் போது
இதே மாதிரித்தான்
தானும் என்னை கொஞ்சி வளர்த்ததாய்
நெகிழ்ச்சியோடு
சொல்லி ரசிப்பவர்

தான் எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பதாய்
நான் நம்பிக்கொள்ளட்டுமென்று
ஒருநாள்.....
கண்மூடி தூக்கத்தில்
செத்துப் போனவர்.................



இந்த அன்பை வெறும் அஞ்சலியாக என்னால் நினைக்கமுடியவில்லை. இவர் மனதில் தன் aப்பாவைப் பற்றி உள்ள ஒரு தெய்வீக உணர்வுக்கு தலை வணங்கத்தான் வேண்டும். Hats Off to you !!

Next comes…
கடவுளுக்கு உருவமுண்டா, குணமுண்டா என்ற சர்ச்சையில் ஈடுபடாது, கலை அழகில் பிள்ளையாரை ரசிக்கிறார் இந்த பதிவாளர். ஆஹா ! எத்தனை எத்தனை பிள்ளையார் !! "பிள்ளையார் கோவிலுக்கு குடியிருக்க வந்திருக்கும் பிள்ளையாரு, இந்தப் பிள்ளை யாரு?" Remember the song ? பாராட்ட வேண்டும்.
http://thavam.blogspot.com/
http://thavam.blogspot.com/2006/04/blog-post.html


அடுத்து வரும் பதிவு நமது மனத்தில் பதிவு செய்யும் உணர்வு சோகமா அல்லது இன்றைய சமூக யதார்த்ததின்மேல் நமக்கு வரும் கோபமா என எனக்குத்தெரியவில்லை.
http://charalmalar143.wordpress.com/சிறுவயதில் கிணற்றுக்குள் தவறி விழுந்து
குரலெழுப்ப முடியாமல் குற்றுயிராய் உயிர்பிழைத்த போதும்,
பள்ளியில் புதிதாய் வந்த ஆசிரியர்
என்னை வகுப்பில் வாழ்த்து பாடச் சொல்ல,
வகுப்பில் அனைவரும் சிரித்து நான் அழுத போதும் ,
பெண் பார்க்கும் நிகழ்வில் வாய் ஊனத்திற்கு
தனியாய் மாபிள்ளை வீட்ட்டார்
வரதட்சணைகேட்ட போதும்
இல்லாத வலி இப்போது
அழுகின்ற குழந்தைக்கு
தாலாட்டு பாட முடியாததால் ஏற்படுகிறது



NEXT
http://manasukulmaththaapu.blogspot.com/2006/12/blog-post_18.html

வரிசையாக மூன்று பதிவுகள் கிட்டத்தட்ட ஒரே டாபிக் தான். மனசு
இவர் சொல்வது கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்தே
எல்லோரும் சொல்வது தான்.

அதில் ஒரு பதிவு.

"காதல் எந்த நேரத்தில் வரும், எந்த வயதில் வரும், எப்படி வரும் என்றே தெரியாது....."
மனசே, மனசே குழப்பமென்ன.....இதுதான் வயசு காதலிக்க!!!


இன்னொரு பதிவு " மனைவியின் மனம் கவருவது எப்படி ? "
வலையுலக இளைஞர் சுமார் 100 பேர், சூப்பர் ஸ்டார் ரஜனி படத்திற்கு முதல் ஷோவுக்கு டிக்கட் வாங்கிப் போய்ப் பார்த்து ஆர்ப்பரிப்பது போல், இந்தப் பதிவிற்கு முன்மொழி, பின்னோட்டம், பின்னோட்டத்திற்கு பின்னோட்டம் எல்லாம் தந்திருக்கிறார்கள். ஒவ்வொரு பின்னோட்டமும் (கமெண்ட்) ஒவ்வொரு கோணத்தில் இருக்கிறது. எல்லா சுவைகளும் இருக்கின்றன.
சும்மா சொல்லக்கூடாது ! பின்னூட்டமும் அதற்கு பதிவாளர் தந்த விளக்கமும் அபாரம்.
ஒரு பின்னூட்டம் பின்னி எடுக்கிறது. யாரை என்று தான் தெரியவில்லை !!!!!!!!!

"கோடியில ஒரு தடவதான் மனைவி பேச்சுல கருத்துனு ஒன்னு இருக்கும் அதுக்கு முக்கியத்துவம் குடுக்காம விட்டுறுவமா??"

இதை எழுதினவர் பதிவுக்குப் போய் ஸ்பெஷல் ஆக ஏதும் பாராட்டு சொல்லவேண்டும் என நினைத்தேன்.
ஆனால், அதைக் காண இயலவில்லை. எங்கிருந்தாலும் என் வாழ்த்துக்கள். Vazhga Vazhamudan

இந்த வலைதனில் பதிவாளர் எழுதிய ஒரு வாக்கியம் பொன்னான வாக்கியம். தன் காதலுக்காக ஒரு அன்னையின் மகிழ்ச்சியில் ஒரு புள்ளி வைத்திட வேண்டாம் என்கிறார். காதலி தன் காதலனிடம் சொல்கிறாளாம்.


"உன் வாழ்க்கையில்
இப்போ உதித்த
எனக்காக,
உலகில் உன்னை
உதிக்க வைச்ச
தாயை தள்ளிடாதே!!பொறுமையுடன் புரிய வைப்போம்,"

இவருக்குத்தான் இந்த வார க்ரீடத்தை அணிவிக்கவேண்டும் என நான் உறுதியாகவும் இறுதியாகவும் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், இந்தப்பதிவின் ஒரு பின்னூட்டம் கண்டேன். அதை எழுதியவருக்கு சொந்தமான வலைப்பதிவு.

http://simplycvr.blogspot.com/

உங்கள் முகத்தில் புன்னகை மட்டுமே பார்க்க விரும்பும் ஒரு எளிய நண்பன்!
His comments are:
"You should be angry when an eighth standard boy comes home one fine day and says “Mom there is this girl who is kinda cute, all my friends say we will make a perfect match, so I think i am in love with her”. You should be worried when a college kid returns home and says “mom I saw a girl yesterday in the college balcony, I will kill myself if I don’t get her”
“But when two intelligent adults happen to fall to love and decide to share their life and when your son comes home and says Mom I am sure this girl will make a perfect wife and I want to live with her ,
then You should be happy."


இதை எனது நடையில் எழுதினால்... ( சிவிஆர் அனுமதியுடன்) (anticipating permission from Mr.CVR)( I am just visualising a dialogue for the story.)
8ம் வகுப்பு மாணவன் வீட்டுக்கு வருகிறான். ஒரு excitement உடன்.
" மாம் ! என்னோட gal friend கீதா இருக்காள்லே தெரியுமா !"
" தெரியும்டா என் செல்லம் ! "
" என்னா க்யூட் ! ஸிம்ப்லி சூபர் மாம் ! "
" அதுக்கென்னடா இப்ப.."
" மாம் ! எல்லா friends ம் சொல்றாங்க... டேய் ! நீங்க ரண்டு பேரும்தான்டா சரியான மேட்ச் ...மாம் ! அவள நான் லவ்வரேன் !"
"அடி செருப்பாலே ! "

கல்லூரியில் படிக்கும் மாணவன் வருகிறான். ஒரு ஏக்கமும் எதிர்பார்ப்பும் அவன் முகத்தில்.
" அம்மா ! அம்மா ! இந்த அம்மா எங்கே இருக்கே ...? "
" இங்கேதான் இருக்கேன்...என்ன விசயம்.. என்னவோ மாதிரி இருக்கே ! என்னவாவது வேணுமா ..
" அம்மா ! நேத்திக்கு எங்க காலேஜ் பால்கனிலே ஒரு பொண்ணு பாத்தேம்மா.."
" அதிலே என்னடா இருக்கு.. காலேஜ்லே ஆயிரம் பொண்ணுங்க பால்கனிலே இருக்காங்க.. "
" அது இல்லேம்மா ! அவ இல்லேன்னா நா இல்லைம்மா...அவ்வளவு தான் நா சொல்லுவேன்.! "
" டேய்..டேய்..டேய்..! நான் என்னாத்த சொல்லுவேன் ! எங்க போய் முட்டிப்பேன் !
எவளோ ஒத்தி, படிக்கப்போன குழந்தைய முந்தானையிலே முடிச்சு போட்டு வச்சுட்டாளே !
ஏங்க.. எங்கங்க போனீக .. அடேய் ! உங்கப்பன் தேவலாம்னு ஆக்கிட்டயேடா... !!!! "
(விசும்பலுடன் அழுகை)

அலுவலகத்திலிருந்து மகன் (25) வருகிறான். கூடவே அவனது வெகு நாள் நண்பியும் வருகிறாள்.
" என்ன கிஷோர் ! இன்னிக்கு வரும்போதே ஸ்வேதாவும் வராளே ! ஓகோ .. என் birth day ந்னு தெரியுமா.... வா ஸ்வேதா...எப்படி இருக்க.. நல்லா இருக்கயா..என்ன சாப்பிடற ? "
" அம்மா உனக்கு ஒரு ஹாப்பி ந்யூஸ்.. ரொம்ப தீவிரமா யோசனை செஞ்சப்பறம் நானும் ஸ்வேதாவும் மணம் செஞ்சுகறதா முடிவு பண்ணிட்டோம்.. "
" நீ என்னடா முடிவு பண்றது ! நாந்தான் அத போன வருசமே முடிவு பண்ணிட்டேனே ! " (here and there, I have moved away from the story,as it happens in any film production ! )

http://simplycvr.blogspot.com/2005/06/in-law-issues.html

இவரது வலைப்பதிவு மூன்றில் ஒன்று.
http://buddywishes.blogspot.com/2008/01/dear-friend.html

நண்பர்கள் தமக்குள்ளே வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ள வசதி தந்திருக்கும் இவர், தனது பதிவின் தலைப்புக் கருத்தினை எவ்வளவு அழகாக, எளிதாக, மென்மையாக அதே சமயத்தில அழுத்தமாகவும் எடுத்துரைக்கிறார்..
//The vitality of Friendship lies, not in enjoying the similarities, but in honouring the differences…//
நட்பின் வலிமை, ஒற்றுமைகளில் களித்திருப்பதைவிட, வேற்றுமைகளைப் புரிந்து மதிப்பதுவே // இவரது வாழ்த்துசெய்தி மடல் வசதி உலகத்தில் ஒரு புதிய நட்புப் பாலமாகத் திகழ்கிறது.

"நவில்தொறும் நூல் நயம் போலும் பயில் தொறும்
பண்புடை யாளர் தொடர்ப என்பார் வள்ளுவர்.

அது மட்டுமல்ல, நண்பனுக்கு ஒரு மாற்றுக் கருத்து உள்ளென்றின்
அதை மதித்து நடப்பதே நட்பின் இலக்கணமாம். இதைச் சுட்டிக்காட்டிய
வள்ளுவர் சொல்லுவார்:

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை.

ஆகவே, நட்பினை ஓங்கி உயர்த்திச் சொன்ன சிவிஆர் அவர்களை
பாராட்டுவோம்.
ஐந்து கண்டங்களுக்கும் ஆழிகட்கும் நடுவே நட்புப்பாலம்
அமைத்திட்ட திரு . சி.வி. ஆர். அவர்களுக்கு
இந்த வாரம் தங்க க்ரீடம் சூட்டி மகிழ்வோம்.

இந்தப் பதிவினைத் துவங்கியது இம்சை அரசி எனும் நண்பர் என‌
சற்று நேரம் முன் திரு சி.வி.ஆர். அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
அவருக்கு என் நன்றி.

ஆக, இந்த பாராட்டுதல்களும் க்ரீடமும் திரு.சிவிஆர்,மதிப்புற்குரிய இம்சை அரசி மற்றும் இப்பதிவினை வழிநட‌த்தும் குழுவினருக்கும் உரித்தாக்குவதில் பெருமகிழ்வு
அடைகிறேன்.

இம்சை அரசிக்கும் அவரது குழுவினரையும் மனமுவந்து பாராட்டுவோம்.

வாழ்க வளமுடன்


வாருங்கள் ! !!!!
உங்கள் இலக்கிய, சமுதாய நல்லுறவுப் பணி தொடரட்டும் !
எனது வாழ்த்துக்கள்.

3 comments:

  1. உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்!!

    இத்தனை சுட்டிகளை சேகரித்து ஒழுங்காக பதிவு ஒன்றை தயார் செய்யவே நிறம்ப நேரம் மற்றும் உழைப்பு தேவை!! அதனால் உங்களின் இந்த முயற்சிக்கு என் பாராட்டுக்கள்!! :-)

    தங்களுக்கு என் "In law issues" கதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி!! இதை படித்து இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெளிவு பிறந்தால் சந்தோஷம்!

    Dear friend எனும் வலைத்தளம் இம்சை அரசி எனும் பதிவரால் தொடங்கப்பட்ட ஒரு கூட்டு வளைத்தளம்! நான் அதில் ஒரு உறிப்பினர் மட்டுமே!! :-)
    அந்த தளத்தை பற்றிய உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! அதை அவரிடம் சேர்த்து விடுகிரேன்!! :-)

    ReplyDelete
  2. தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. பதிவினில் உரிய திருத்தங்களை உடன் செய்து
    விட்டேன்.
    நட்பு என்பது வெற்றுப்புகழ்ச்சி மட்டும் அல்ல, தவறுகள் ஏதேனும் இருப்பின்
    முன்னின்று அவற்றை இடித்துக் காட்டுவதே என வள்ளுவன் கூற்றினைத்
    தங்கள் வரவும் சொல்லும் மெய்ப்பிக்கின்றன்.
    " நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண்
    மேற்சென்று இடித்தல் பொருட்டு "
    மீண்டும் நன்றி.

    இம்சை அரசி அவர்களையும் அவரது குழுவினரையும் மனமுவந்து பாராட்டுவோம்.
    வாழ்க வளமுடன் !!!

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  3. கிரீடம் சரியாகத்தான் போயிருக்கு.
    அந்த மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தது.
    பையன் சொல்லும் போது அக்கால அம்மாவாக இருந்தா அடிவயிற்றில் இருந்து குப்பென்று தீ கிளம்பியிருக்கும்.
    :-)

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!