Pages

Sunday, March 9, 2008

இந்த வாரம் மலர் க்ரீடம் யாருக்கு ?


Who gets this Golden Crown This week ?

இந்த வாரம் மலர் க்ரீடம் யாருக்கு ?

சென்ற வாரங்களைப் போல் அல்லாது, இந்த வாரம் அதிக பதிவுகளைப்
படிக்க இயலவில்லை. ஒரு காரணம் எனது உடல் அயற்சி. இன்னொரு
முக்கிய காரணம் : படிக்க துவங்கியபோதே சில பதிவுகள் கண்களையும்
கருத்தையும் கவர்வதாக இருந்தன என்றால் மிகையாகாது.
அதில் சிலவற்றினை உங்களோடு முதற்கண் பகிர்ந்துகொள்வேன்.

முதலாக ஒரு ஆங்கிலப்பதிவு.
http://aaartzmuses.blogspot.com

சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் அதை ஃபோட்டோ எடுத்து போட்டவர்
பதிவுகள் ஏராளம். ஆயினும் அந்த சூரியனின் கிரணங்களுக்குப் பின்னே எவை
இருக்கும் என மனக்கணக்கு போட்டவர் வெகு சிலரே. சூரியன்
இவ்வளவு அபார சக்திதனை வெளிப்படுத்தவேண்டுமானால், இந்தக் கிரணங்களுக்குப்
பின்னே உள்ள கண்டறியாவற்றினைக் கண்டிட விழைகிறார் இந்த கவிஞர்.

//and wondered what was behind
the shimmering sun's rays

over the horizon
i knew new opportunities
unexplored ventures//
*************************************************************

அடுத்துப் படித்தது ஒரு நகைச்சுவை கடல்.
திரளாக இளைஞர்களிடையே எழுச்சியையும் வேகத்தையும் ஊக்கத்தையும்
எப்படி ஒரு தலைவர் தனது பேச்சினால் ஏற்படுத்துகிறார் என்று நான் சொன்னால்
புரியாது. நீங்களே சென்று படியுங்கள்.
சிரிப்பை அடக்க முடியாமல், உங்களுக்கு வயிற்று வலி வந்தால் நான் பொறுப்பல்ல.
http://sumasen.blogspot.com/2008/02/dynamite-speech-by-desi-
school-master.html

"மின்னல்" எனும் பெயர் கொண்ட இப்பதிவின் ஆசிரியர் ( ஆசிரியை ) தனனை எப்படி விமரிசித்துக்கொள்கிறார் பாருங்கள்.
"Sumathi.
சொல்லிக்கற அளவுக்கு பெரிய ஆளும் இல்ல, அதுக்காக ஏமாறவளும்

இல்ல.."
இவர் ஈ மைல் வந்ததை வாசிக்கும் விதமே தனி. நீங்களும் சென்று பாருங்கள்.
***********************************************************************
இந்த வாரம் ஒரு மின்னலாய் தோன்றியது.
http://photomathibama.blogspot.com/ஒளிக் கவிதை
தன் விவரங்களைத் தரும்போது பட்டிவீரன் பட்டி- பிறந்த ஊர் தற்போது -சிவகாசியில் “
சிவகாசி என்று சொன்னதால், பட்டாசு போல்
வெடிப்பாரோ என நினைத்து படிக்கத்துவங்கினேன்.
இவர் மார்ச் மாத ஃபோட்டோ போட்டிக்கு என 2 பதிவுகள் போட்டிருக்கிறார். ஒன்றின் தலைப்பு காட்டுப் பூக்கள்.
அதைப்பார்த்த நான் எழுதினேன்:
காட்டுப் பூக்களா ?
இல்லவே இல்லை.
இவை
கண்ணன் குழலூதிய
நந்தவனத்தில்
முதல் மலர்ந்த
மொட்டுக்களல்லவா !
**************************************
இரண்டாவதாக ஒரு குளம். நடுவில் ஒரு மண்டபம்.
அதைப் பார்த்தேன் என்று சொல்வதை விட பிரமித்தேன் எனச்சொல்வது தான்
பொருத்தம்.
அதைப் பார்த்த மதிப்புக்குரிய
துளசி கோபால் said...
கோயில் மண்டபம் மனசைக் கொள்ளையடிக்குது.
படங்கள் அருமை
மற்றவர்கள் எழுதியவை இவை:
1.இது வெறும் நிழல் உருவல்ல.
கற்தூண்களில் நிறவி நிற்கும்
ஓர் காவியம்.
2. நேற்று வந்த நான்
இன்றும் வந்தேன்
நில ஒளியில் இதைக் காண வந்தேன்.
என்ன ஆச்சரியம் ?
என்னைப் போல் ஆதவனும்
பிரமித்துப் போயினனோ !
அங்கேயே நிற்கிறான்.
அந்தி வேளை வந்தபின்னும்
ஆதவா ! ஏன் தங்கி விட்டாய்?
நகர்ந்து போ.
நிலாவே ! வா !
*****************************************************************

அடுத்துப் பார்த்த பதிவு. ரெளத்திரம் பழகு என சொன்னது இவருக்காகத்தானோ எனத்
தெரியவில்லை. ரொம்பவே கோபமாக இருக்கிறார்.
http://jataayu.blogspot.com/2008/03/blog-post_07.html.
அவர் எழுதியதை விட அவர் தன்னை விவரிக்கும் விதம் எனக்குப் பிடித்திருந்தது.
"கதிரவனைத் தொட விரியும் சிறகுகள். அரக்கத் தனத்தை எதிர்த்துப்
போரிடும் சிறகுகள். தருமத்தின் துணை நிற்கும் சாமானியனின்
சிறகுகள். அவையே என் ஆதர்சம்."
********************************************************************************
கடோசியாக நான் வருவது
http://manggai.blogspot.com/
இவர் எழுதிய இரண்டு பதிவுகளில் எது சிறந்தது என எனக்குத் தீர்ப்பளிக்க இயலவில்லை.
தன்னை "மங்கை " எனவும் தன்னியல்பை "......வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு " வர்ணித்திருப்பதுமே இயற்கையாக இருந்தது.
1. வலிகளை பகிர்தலின் அவசியம்
2. குழந்தைகள் குழந்தைகள்தானே
இதில் இரண்டாவது ஒரு பயணத்தைப் பற்றியது.
let us also travel along with the author to find out what happened during her journey of ...... (WAIT TILL THE LAST LINE.)
"போக நினைத்துக் கொண்டிருந்த பயணம் அது.
இந்த முறை காப்பகத்தை நடத்தி வரும் ஃபாதர் கேரமல் போவதாக சொல்லவே நானும் தொற்றிக் கொண்டேன். கேரளாவில் இருக்கும் Missioneries of
St.Thomas the Apostle ஆல் நடத்தப் பட்டு வருகிறது.
அழகான,அமைதியான இயற்கை சூழலில் அமைந்திருந்தது அந்த
காப்பகம். 5 டிகிரி குளிரை பொருட்படுத்தாமல் கிடைத்த பூவை
கையில் வைத்து கொண்டு களங்கமில்லா சிரிப்புடன் அன்பாய்
வரவேற்றார்கள்.
காப்பகம், சுத்தமாகவும், பணிபுரிபவர்கள் உண்மையான
அக்கறையுடனும், அன்புடன் இருந்தது திருப்தி அளிப்பதாக இருந்தது
எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம்.
அந்த குழந்தை என்ன தவறு செய்தது, ஏன் இவர்கள் மட்டும் இங்கே
இப்படி காப்பகத்தில், இந்த அவல நிலைக்கும்,பழிச்சொல்லுக்கும் அந்த
குழந்தைகள் எந்தவிதத்தில் காரணமாவார்கள்.உதவிகள் என்ற பெயரில்
ஏதோ என்னாலானவற்றை செய்யமுடியும். ஆனால்,
அன்புக்கும்,அரவனைப்புக்கும் ஏங்கும் அந்த பிஞ்சுகளுக்கு சக
மனுஷியாய், ஒரு தாயாய் ஏதும் செய்யமுடியாமல் வெறும்
பார்வையாளனாய் இருக்க முடிவது எத்தனை கொடுமை. ?"இயலாமை என்னை பிடுங்கித்தின்ன கனத்த மனதுடன், மௌனத்துக்குள் ....
என்னை புதைத்துக் கொண்டு ......."
மங்கை அவர்கள் அனுபவித்து எழுதிய சொற்கள் படிப்போர் மனதை உருகச்செய்கிறது.
எழுதியது தாயுள்ளமல்லவா ?
வேதனைதனை அனுபவித்து தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என
ஏக்கப்படுவது, சொற்களால் சித்தரிக்க இயலாத ஒரு உணர்வு.
உலக மகளிர் தினத்தன்று, ஒரு இந்திய மண்ணில், குறிப்பாக தமிழ் மண்ணில்
பிறந்த நங்கையின் மன உணர்வுகள் ஒரு ஆதர்ச பெண்ணின், தாயின் மன நிலையை பிரதிபலிக்கின்றன். இது போன்ற பெண்ணினத்தைதான் பாரதி புதுமைப்பெண் என வர்ணித்தானோ ?
பாரதி எழுதுகிறான்:
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்.
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கவலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்"


ஆகவே பாரதி கண்ட பெண்மணியான மங்கை அவர்களுக்கு இந்த வார மகுடத்தை அணிவித்து பெண்குலத்தினைப் போற்றிடுவோம்.
Come on ! Let us all stand to give a big ovation to Mrs.Mangai.
Madam! This Crown is yours this Week.
Congratulations.Madam! you have embarked upon a journey of DIVINE LOVE. We equally share your emotions as u see these little children.
So let us sing
CLICK BELOW: (transfer of MONEY is worldly. Transfer of LOVE is GODLY. WAIT FOR A FEW MOMENTS TILL U GET THE SONG "anbe sivam "
http://www.raaga.com/playerV31/index.asp?pick=8698&mode=0&rand=0.7795892895807275&bhcp=1

5 comments:

  1. Vanakkam Aiyaa

    Naan thaan Mangai, from Thamizmanam...Kaattaaru informed me that you have "Crowned" me this week...I am privileged so much..i am happy that i am being recognisd by you....i dont have words to express the peacefulness i get when i read your Aanmeegam posts...
    Kaattaaru had pasted your appreciating and inspiring words in her mail...thanks a lot Aiyaa

    Anbudan
    (Mangai)

    ReplyDelete
  2. The above posting is from the author of Mangai, who has been crowned for the week ended 8th March 2008. I have pasted a few lines from her email addressed to me thanking for the honour bestowed on her.
    Madam,
    you are working in an industry related to service to humanity. So, the crown bestowed on you
    for your blog is really a recognition to your noble service to humanity.
    subbu rathinam
    thanjai.

    ReplyDelete
  3. //ஆகவே பாரதி கண்ட பெண்மணியான மங்கை அவர்களுக்கு இந்த வார மகுடத்தை அணிவித்து பெண்குலத்தினைப் போற்றிடுவோம்.///

    மங்கை அக்கா சார்பாக நன்றிகள்..

    வாழ்த்துக்கள் மங்கை அக்கா

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் மங்கை.

    ( ஆகா தோழிகள் சேர்ந்தாப்பல வாங்கிட்டோம்ப்பா க்ரீடம்.. ) :-)

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!