Pages

Saturday, March 1, 2008

Who gets the Golden Crown this Week ?




இந்த வாரம் நான் படித்தேன் ரசித்தேன் என்று சொல்வதைவிட படித்தேன் உணர்ந்தேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. சில பதிவுகள் அப்பப்படியே நிற்கின்றன. 2006, அல்லது 2007 க்குப்பிறகு சில நல்ல வலைப்பதிவுகள் தொடரவில்லை. மனதை மட்டும் தொட்டுவிட்டுச் சென்ற சில பதிவுகள் ஏன் தொடரவில்லை என்ற வேதனை மனதில் தங்கிவிடுகிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சோகம் தன்னுடைய சஹானாவை இசைத்துக்கொண்டுதான் இருக்கும்போல் ! (I cannot but recollect Ilayaraja’s introduction in MUDHAL MARIYADHAI ?)
அதுவும் முற்றுப்பெறாத சோகக் கதைகள் கேட்பவர் மனதையும் உருக்கத்தான் செய்கின்ன்றன.
அப்படிப்பட்ட ஒரு வலைப்பதிவு :எனக்குள் ஒரு ஸ்ருதி இங்கு மட்டும் நான் நானாக.
http://shruthiyudan.blogspot.com/index.html
அனுப்பப்படாத கடிதங்களில் ஒன்று என ஒரு பதிவு.
அதில் ஒரு பகுதி : (I AM NOT GIVING..U YOURSELF GO AND READ ! )
மகளிர் சக்தி என்றும் feminine power என்றும் சொல்பவர் எல்லோரும் இந்தப்பதிவினைப் பார்த்து இந்த சோகத்திற்கு வழி ஏதேனும் உண்டா என யோசித்திட வேண்டும்.
Next blog
Seriously humorous OR humorously serious. Bothways it is OK.
இரண்டாவது, பதிவு தமிழ் வலையுலக மென்பொருள் பிரும்மா எனக்குறிப்பிட்டால் மிகையாகாது. இப்பொழுது நான் எழுதும் யூனிகோட் கூட இவர் நல்கியதுதான்.
இவருடைய வலை http://www.higopi.com இலக்கணம் என்று சொன்னால்
இவருடைய வலைப்பதிவு http://higopi.blogspot.com/index.html%20இலக்கியம்.
நகைச்சுவையுடன் கூடிய இவரது பதிவிலிருந்து:
"நீயும் அசைவம் நானும் அசைவம் நெனச்சி பாத்தா எல்லாம் அசைவம்.".
சில பேர் சொல்லுறாங்க கோழி, ஆடு, மாடு, மீன் இதை சாப்பிடறவங்க எல்லாம் அசைவம்னு. எதனால அப்படின்னு கேட்டா அதுக்கெல்லாம் நம்மை மாதிரியே சிவப்பு ரத்தம். நரம்பு, வலி எல்லாம் இருக்குன்னு."
தாவர இயல் படித்தால் தாவரங்களுக்கும் உயிர், உடல், உணர்வு, எல்லாமே இருக்கிறதே. சங்கீதம் கேட்டு
நன்றாக வளர்கிறது என்றுகூட சொல்கிறார்களே ! அப்படியானால் காய்கறிகளை வெட்டி த்தின்பது முறையா?
எனக் கேட்பதோடு நிற்கவில்லை.
ஒரு காய்கறிக் கொலை எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ தனையும் சுட்டி தருகிறார். இருதய நோய் உள்ளவர்கள் இதைப் பார்க்காதீர்கள் எனவும் எச்சரிக்கிறார்.
இருந்தாலும் நீங்கள் பாருங்கள்.
http://www.vegetablecruelty.com/gallery/?show=1
இவருடைய சொல் நயமும் வாதம் புரியும் திறனும் அருமையாக இருக்கின்றன்.
Next Visuals Based Blogs

இந்த வாரம் நான் சில visuals
பதிவுகளில் கண்டேன். ஒரு படம் சொல்வதை ஓராயிரம் வார்த்தைகளினாலும் விளக்க இயலாது என்பர். அந்த வகைதனை ச் சேர்ந்தது
http://merezilla.blogspot.com/
Image and video hosting by TinyPic
I am so tired
exhaustion.

அடுத்து இவர் ஒரு சுட்டி கொடுத்திருக்கிறார் பாருங்கள். அமக்களம் போங்கள். எல்லா இளவட்டங்களும் இதில் அடக்கம்.
cupid struck me .

Next comes….
அடுத்து கலர் கலர் பாம்புகளைப் பார்க்க வேண்டுமா ? அரிய சந்தர்ப்பம்.
http://naturesphoto.blogspot.com/
snakes of various hues and colours
Please keep away from snakes, even when you

ENTER THE CAVES NOW ! THE GUIDE IS THERE FOR YOU !

அடுத்து நான் சந்தித்த யாத்திரிகன் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்தவர் தான்.sirpa
கலைகளை ஆராதிக்கிறார். அழகான இனிமையான சொற்களில் போற்றுகிறார்.
கைலாச நாதர் குகை இவர் வர்ணிக்கும் விதம் அபாரமாக இருக்கிறது.
என் போன்ற கிழங்கள் இந்த பதிவுக்குச் சென்றுதான் கைலாச நாதரையும்
அவரைச் சூழ்ந்திருக்கும் தேவியர், கணங்களையும் சந்திக்கவேண்டும். இல்லையென்றால்
அடுத்த ஆப்ஷன் கைலாசத்திற்கே போவது தான். I do not really know where and when
He would like to meet me !
http://yaathirigan.blogspot.com/2008/01/5.html
kailasanathan temple. architecture and sculpture..caves

NEXT before us

http://jayabarathan.wordpress.com/2008/02/22/asteroids/

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் விழும் அகிலக் கற்கள் ! (Asteroids - The Cosmic Bombs) Indeed a Treasure House for those who want to know more about Universe.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear),
பிரபஞ்சத்தைப பற்றி இவர் தரும் தகவல்கள் அரியவை மட்டுமன்றி அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றன்.
ஒரு சுனாமியின் கோர விளைவுகளைப் பார்த்தோம். அங்கங்கே நிகழும் பூமி அதிர்ச்சியின் விளைவுகளையும்
அவை ஏற்படுத்தும் நாசத்தினையும் காண்கிறோம். ஆனால் இவை எல்லாமே இப்புவியைச் சார்ந்தவை.
பிரபஞ்சத்திலிருந்து நமக்கு எந்தந்த அதிர்ச்சிகள் வரக்கூடும். ஓசோன் ஓட்டை எல்லாம் இவர் சொல்லும்
அகிலக் கற்கள் முன்னே அற்பம். ஒரு சின்ன கல் விழுந்தாலே என்னமா வலிக்கிறது ! ஒரு 500 சதுர மைல் கொண்ட ஒரு நிலப்பரப்பே வான வெளியிலிருந்து பூமியைத்த்தாக்கினால் என்ன ஆகும் ?
மனித இனமே அழிந்து போம் ! தாக்கப்பட்ட பின் பூமி எவ்வாறு இருக்கும்?
எல்லோரும் படிக்கவேண்டிய பதிவு. ஒரு முறை அல்ல..வாரம் ஒரு முறை இவர் என்ன சொல்கிறார்
எனக் கவனியுங்கள். மனித இனம் முற்றிலும் அழியுமுன்னே அறம் செய்ய அப்பவாவது மனம் வரட்டும் !

NEXT…NEXT…NEXT…..!!!!!

என்ன இந்த வாரம் வடகலை அய்யங்கார் வீட்டு சாப்பாடு போல விதவித மாக கிடைக்கிறதே என பிரமித்துக்கொண்டிருந்தவன் கண்களிலே ஒரு பதிவு.
நமக்கெல்லாம் ரொம்பவே நெருங்கியவர் பதிவுதான் அது.
http://thanglish.blogspot.com/2008/02/5-keys-to-better-personal.html

தவறு செய்தபின் மன்னிப்பு கோருவது எப்படி இருக்கவேண்டும் ? மன்னிப்பு கோருவது என்பது கலை அல்ல அது ஒரு விஞ்ஞானம் என்கிறார் பாஸ்டன் பாலா. சும்மானாச்சும் ஸாரி ஸார், இல்லை, ஸாரி என்று சொன்னால் போதுமா என்ன ? அதில் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன ?
The science is "the list of ingredients you need to combine when crafting the most effective apology for your case." It includes a detailed account of the situation, acknowledgement of the damage done, taking responsibility for the situation, recognition of your role in the event, a statement of regret, asking for forgiveness, a promise that it won't happen again, and, when possible, restitution. The art side of apologizing is how you present and deliver your apology. "In other words, although every apology should include the same elements," they say, "the level of playfulness, formality, or romance you bring to it should be dictated by the recipient, the relationship that you have with them, and the nature of the infraction."
இதை எல்லாரும் படிக்கவேண்டும் என்றாலும், தாய்க்குலம் முக்கியமாய் நோட் பண்ணி வச்சுக்கங்க. அடுத்த வேளை உங்ககிட்ட, யாராவது " ஸாரி " எனச் சொன்னால், (your hubby included) இத்தனை ingredients அதிலே இருக்கான்னு பாத்துக்கங்க..

Now, finally,
All the blog posts described are GEMS. But there is one more gem, a diamond one, dazzling in all its brilliance.
And Amongst the Gems..I find this one as the one which compels you to reflect and introspect. Yes.
நான் எனது பல நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.." என் பெண்ணுக்குத் தேடாத இடம் இல்லை. 3, 4 வருஷமாத் தேடிட்டே இருந்தோம்..கடைசியா பார்த்தா எங்கள் வீதியிலே இருக்கிறார் எனக்கு வந்த மாப்பிள்ளை..இத்தனை நாள் என் கண்களில் படாது எங்கே ஒளிந்திருந்தாய் ? " என்று கேட்டுவிட்டேன், என்பார்கள்.

அப்படிப்பட்டது. இந்த வார ஸ்டார் பதிவு நமது ஸோலார் வட்டத்திற்குள்ளேயே இருக்கிறது.
அதுதான் ! மரணம் என்று ஒன்று நிகழும்போது அதன் அருகில் இருப்போர்தம் உணர்வுகளை எத்தனை தெளிவாகவும், மெலிதாகவும், யதார்த்தமாகவும் எடுத்துச் சொல்கிறார் இவர் !

Death is not the greatest loss in life. The greatest loss is what dies inside us while we live.”
-- Norman Cousins quotes (American Essayist 1912-1990)

ஒரு மர வண்டிச்சக்கரத்தினைப் போட்டு symbolic ஆக இது சுழல்வது போலத்தான்பிறப்பும் மரணமும் என்கிறார். (birth-death.jpj)
ஆதி சங்கரர் வேறா சொன்னார் ?
புன்ரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்.

பயம், கருணை, சோகம்,தனிமை, ஆறுதல், கடைசியில் யதார்த்த நிலை இதுதான் என ஒப்புக்கொள்ளுதல், (reconciliation )இப்படிப்பட்ட பற்பல நிலைகளில் மனித மனத்தினை ஒரு அலசு அலசியிருக்கிறார் பாருங்கள்! ஒரு மன இயல் மருத்துவராகவோ அல்லது கெளன்சலராகவோ (தமிழ் வார்த்தை தெரியவில்லை) இருப்பார் என்று பார்த்தால், இவர் ஒரு மென் பொருள் பொறியாளர்.

நான் இந்த வாரம் சந்தித்த வலைப்பதிவுகளின் ஆசிரியர் பலர் நம்மில் வெளியே நடப்பதைக் கூறும்பொழுது இவர், நம்மின் உள்ளே நடப்பதைக் கூறுகிறார். நமக்கே தெரியாமல், நமக்குள் நடப்பவைதனை எத்தனை கச்சிதமாக சொல்லுகிறார் !
ஆக, இவருக்குத்தான் இந்த வார மகுடம், ஸ்டார் பதிவு நிலை எல்லாம்.
வாருங்கள். காட்டாறு ! இதோ உங்களுக்கான மகுடம் ! Let us all give a big clap.
http://kaattaaru.blogspot.com/
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்.

5 comments:

  1. வாழ்த்துகள் காட்டாறு..

    பல புதிய பூக்களின் அறிமுகம் மற்றும்
    பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  2. அட...

    அய்யா, இது நல்லா இருக்கே...!!

    /பல புதிய பூக்களின் அறிமுகம் மற்றும்
    பகிர்வுக்கு நன்றி../

    அதான... நன்றி!

    மீண்டும் ஒரு முறை...
    வாழ்த்துகள், காட்டாறு!!

    ReplyDelete
  3. \\\வாருங்கள். காட்டாறு ! இதோ உங்களுக்கான மகுடம் ! Let us all give a big clap.
    http://kaattaaru.blogspot.com/
    தொடர்ந்து எழுதுங்கள்
    வாழ்த்துக்கள்.\\


    ஆகா ..கட்டாறு அக்காவுக்கு வாழ்த்துக்கள் ;))

    \\பாச மலர் said...
    வாழ்த்துகள் காட்டாறு..

    பல புதிய பூக்களின் அறிமுகம் மற்றும்
    பகிர்வுக்கு நன்றி..\\

    அதே..அதே...நன்றி ;))

    ReplyDelete
  4. தத்துவமும் கவிதையும் ஒன்னா காட்டாறா பெருகிவருமே.. அம்மணிகிட்ட..

    ReplyDelete
  5. அருமையா கோர்த்திருக்கிறீங்க அய்யா! உங்கள் வார்த்தைகள் வெகு நேர்த்தியாக அமைக்கப்பட்டு, வெறும் லிங்க் மட்டும் கொடுக்காமல், அந்த பதிவின் கருவையும் கொடுத்தது ரொம்ப அருமை. எல்லா பதிவுகளும் எனக்கு புதியன. வாசித்து திரும்பவும் இங்கே வர தாமதம் ஆகிவிட்டது.

    நீங்க தந்த மகுடத்திற்கு நான் தகுதியானவளான்னு எனக்கு தெரியாது அய்யா. ஆனாலும் உங்க பாராட்டுக்கும், ஊக்குவித்தலுக்கும் நன்றி தெரிவிச்சிக்கிறேன்.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!