Pages

Saturday, February 23, 2008

And this week, the Golden Crown Goes to...


இந்த வாரம் கிட்டத்தட்ட 70 முதல் 80 வலைபதிவுகள் பார்த்தேன். இவைகளில் ஒரு பதினைந்து வலைப்பதிவுகள் நான் கடந்த 3 அல்லது 4 மாதங்களாக almost as a routine பார்ப்பவை ஆகும். புதியதாக முதன்முதலாக பார்த்தது சுமார் 50 பதிவுகள் இருக்கும் (தமிழ் மட்டும்) அன்னிய மொழிகளில் எழுதப்பட்ட பதிவுகள் முக்கியமாக ஆங்கிலம் ஒரு 30ம் ஹிந்தி 10 ம் பார்த்தேன்.

இதில் இரண்டு பதிவுகள் (ஆங்கிலத்தில்) கருத்துச் செறிவுடன் அமைந்திருந்தன்.
ஒன்று http://letsbefriends.blogspot.comமுற்றிலும் குணங்களில் மாறுபட்ட, ஒன்றுக்கு மற்றது எதிரியாக நினைக்கப்படும் விலங்கினங்களை ( நாயும், பூனையும் )(தவளையும் எலியும்) ஏதோ ஆப்த நண்பர்கள் மாதிரி உறவாடச்செய்து படமெடுத்திருக்கிறார்கள். அதோடு விடாமல், படமெடுத்தவர்
ஒரு கேள்வி கேட்கிறார். IF THEY CAN DO IT, THEN SO CAN WE ! A bold question indeed !!

இந்த வலைப்பதிவுக்கு தனியாக செல்லாதீர். துணைவர்/துணைவியுடன் சென்று ரசியுங்கள். அல்லது அலுவலகத்தில் உங்கள் பாஸுடன் சேர்ந்து பாருங்கள்.!!

அடுத்த வலைப்பதிவு http://rathna.blogspot.comஎந்த அளவுக்கு நாம் கேட்பார் பேச்சைக் கேட்டு, நம் சுயமாக சிந்தனை செய்யாது
இருக்கிறோம் .. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொருவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு, கடைசியில், நம்முடைய பாதை என்ன என்றே தெரியாமல் இருக்கிறோமே? இந்த வலைப்பதிவு நம்மை சிந்திக்க வைக்கிறது.
//So many people try to influence our lives for some benefit of theirs or for no reason at all. Try to give our life their meaning and also make us believe it as ours! Though it is a positive or negative influence, the ultimate decision should be ours. Only we can give our life a meaning//

இவ்விரண்டு வலைப்பதிவுகளையும் விட, மற்றுமோர் வலைப்பதிவு என்னை நிமிர்ந்து உட்கார வைத்தது. Valentine day அன்று காதல் பற்றி
கொச்சையாகவும் பச்சையாகவும் எழுதாமல், பெண்மையை ஏன் நாம் போற்றவேண்டும் என அருமையாக எழுதியிருக்கிறார். இவர் "ஏன் நான் intha விஷயத்தில் எழுதுகிறேன்" என்று சொன்னது இவருடைய நேர்மையை பிரதிபலிப்பாக இருந்தது.
What he says is just as simple as it is revealing and equally unpretending : I adore women, as a woman is my mother, a woman is my sister, a woman is my wife, a woman is my friend, a woman is my teacher, a woman is my guide, a woman is my philosopher, a woman is my counsellor, last, but not the least, a woman is my God, as she is my mother.
தாய்க்குலம் எல்லோரும் கண்டிப்பாக படிப்பது மட்டுமல்ல, ஒரு நகல் எடுத்து தனது அலுவலக மேசைக் கண்ணாடிக்கு அடியில் வருவோர் பார்க்கும் வண்ணம் வைத்திட வேண்டும்.
http://broadcastcism.blogspot.com/10 Things i Love about women
இந்த வார ஸ்டார் பதிவு இவருக்கு தர இயலாமல் போனதிற்கு காரணம் கடைசி வினாடியில் எங்கிருந்தோ வந்த ஒரு dark horse இந்த பதிவினை ஒரு whiskerல் ஜெயித்துவிட்டது.

அந்த பதிவின் சொந்தக்காரர் வேறு யாருமல்ல. நமக்கெல்லாம் பரிச்சயமான கபீரான் அவர்கள்தான்.

நானும் தான் கடந்த ஒரு 4 அல்லது 5 மாதங்களாக கவனித்து வருகிறேன். இவரது சொற்களில் எங்கிரு ந்துதான் இவ்வளவு இனிமையும் கனிவும் இழைகிறதோ தெரியவில்லை.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற =
என்னும் வள்ளுவரின் வாக்கினை

கபீரின் ஒரு பாடல் மூலம் நம் மனதில் பதிய வைக்கிறார்.

ஒரு குழந்தை ஏன் எல்லோராலும் நாடப்படுகின்றது? என ஒரு கேள்வி எழுப்பி அவருக்கே உரித்த பதில் ஒன்றையும் தருகிறார்.

//ஈர்ப்பு குழந்தைகளிடத்தில் எப்படி ஏற்படுகிறது ? யாவரும் சொல்வது அவர்களின் கள்ளம் கபடம் அற்ற மனதே காரணம் என்பதே. அவர்களோடு இருக்கும் பொழுது பெரியவர்களும் குழந்தைகளாகி விடுகிறோம். நம்மை மறக்கும் அந்த கணங்களிலே நம் இதயமும் தூய்மையாய் இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.//

ஞானிகளும் குழந்தைகளும் ஒன்று எனச்சொல்லி அவர்கள் இருப்பிடமும் கடவுள் இருப்பிடமும் ஒன்றுதான் எனத்திண்ணமாகச் சொல்கிறார்.

அவர் மேற்கோள் காட்டும் கபீர் தோஹா எத்தனை தடவை வேண்டுமானாலும் படிக்கலாம்.
கங்கை நீர் போன்ற பவித்திரமான புனிதமான நிர்மலமான மனம் ஆண்டவனின் இல்லம். அப்படிப்பட்ட மனதை உடையவன் ஆண்டவனை நோக்கிப் போகவேண்டியது
இல்லை. ஏன் ?

ஆண்டவன் அல்லவா அப்படிப்பட்ட பக்தனைச் சுற்றிச் சுற்றித் திரிகிறான் ?
என்னே அற்புதமான கருத்து !! வாவ் !!!

http://kabeeran.blogspot.com

ஆகவே இந்த வார ஸ்டார் பதிவு என்பதில் அடுத்ததொரு கருத்து இல்லை.
அவருக்கே இந்த வாரம் முடி சூட்டுவோம்.!!
So Kabeeran gets the Golden Crown This Week.
Congratulations.
OUR ASSESSMENT SCORE *****

3 comments:

  1. அன்பர் கபீரன் எப்போதுமே சுடர்விடும் விண்மீன் தான் - அவரைத் தெரிவு செய்தது சாலத் தகும்.
    நிறைய வலைப்பதிவுகளை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். அனைத்தும் சிறப்பானதாக இருக்கும் என நினைக்கிறேன். நேரம் கிடைக்கும்போது சென்று பார்க்கிறேன்.

    புதிதாக இன்னும் ஒரு வலைப்பதிவு!
    அனைவருக்கும் பயனாக இருக்கும்!

    ReplyDelete
  2. ஸர்வம் வாசுதேவார்பணமஸ்து. அனைவருக்குள்ளிருந்தும் ஆட்டுவிக்கும் அவனே தங்கள் மூலம் இதை செய்விக்கிறான். நன்றி.
    வேறென்ன சொல்லமுடியும்!

    ReplyDelete
  3. கலெக்ஷன் கலவையா இருக்குது அய்யா!

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!